Jump to content

திரை விமர்சனம்: கவண்


Recommended Posts

திரை விமர்சனம்: கவண்

 

 
kavanreview_3150026f.jpg
 
 
 

ஊடக அறத்தையும் உண்மையையும் முக் கியமாக நினைக்கும் இளைஞனுக்கும் தரக்குறைவான சித்து விளையாட்டுகளால் ஊடக நிறுவனத்தை வளர்க்க விரும்பும் முதலாளிக்கும் நடக்கும் மோதல் தான் ‘கவண்’.

முன்னணித் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் திலக் (விஜய் சேதுபதி) ஊடக அறத்தோடு செய்திகளை வழங்குகிறார். ஆனால், முதலாளி கல்யாண் (அகாஷ்தீப் சைகல்) அந்தச் செய்திகளைப் பல வாறாகத் திரித்துப் பயன் படுத்திக்கொள்கிறார். அரசியல் வாதி தீரன் மணியரசுவின் (போஸ் வெங்கட்) தொழிற்சாலைக் கழி வால் ஏற்படும் மோசமான பாதிப்பு களுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தையும் தொலைக் காட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. போஸ் வெங்கட்டின் மதிப்பைத் தொலைக்காட்சி மூலம் கூட்டு வதற்கான ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்கிறது.

இதையெல்லாம் எதிர்த்து வெளியேறும் விஜய் சேதுபதி யும் அவரது நண்பர்களும் ஊடக முதலாளியின் முகத் திரையைக் கிழிக்க என்ன செய்கிறார்கள் என்பதே மீதிக் கதை.

காட்சி ஊடகத்தின் பின்னே இருக்கும் கார்ப்பரேட் - அரசியல் கூட்டுச் சதியை அழுத்தமாகக் காட்டுவதற்காக கே.வி.ஆனந் தைப் பாராட்டலாம். ரியாலிட்டி ஷோக்களில் நடைபெறும் மலின மான நாடகங்களையும் கூத்து களையும் அம்பலப்படுத்துகிறார். பிரேக்கிங் நியூஸுக்கான தவிப் பும், பரபரப்புப் பசியும் தொலைக் காட்சிகளின் அணுகுமுறை களைப் பாதிப்பதைத் தோலுரித் துக் காட்ட முனைந்திருக்கிறார். போராட்டத்தையோ அரசியல் வாதியையோ மகிமைப்படுத் தவோ, கொச்சைப்படுத்தவோ ஊடகங்களால் முடியும் என் பதையும் காட்டுகிறார்.

ஆனந்த், கபிலன் வைரமுத்து, சுபா ஆகியோர் இணைந்து எழுதி யுள்ள திரைக்கதையும் வசனங் களும் ஊடகங்களின் செயல்பாடு களை நுட்பமாகக் காட்டுவ தோடு அவற்றின் இருண்ட முகங் களையும் அம்பலப்படுத்து கின்றன. இசை நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துக்களும் போராட்டக் குழுவில் இருக்கும் பெண்ணின் பேச்சைப் பயன்படுத்திய விதமும் இந்த அம்சத்தைச் சரியாகக் கையாள்கின்றன. ஆனால், பல காட்சிகள் மிகையான அழுத்தம் காரணமாகப் பலவீனமாக இருக் கின்றன. உதாரணமாக, போஸ் வெங்கட்டின் நேர்காணல். மிகத் தீவிரமாக அமைந்திருக்க வேண் டிய இந்தக் காட்சி கேலிக் கூத்தாகிவிடுகிறது. அரசியல்வாதி யின் புகழைக் கூட்டுவதற்காகவே ஏற்பாடு செய்யப்படும் நேர் காணலை நேரலையாக ஒளிபரப்ப யாரும் திட்டமிட மாட்டார்கள்.

டி.ஆர்.பி-க்கான போட்டியில், ஊடக அறம் மறக்கப்படுவதைச் சொல்வதற்குப் பதிலாக, ஊடகத் தில் இருப்பவர்களே அரசியல் வாதியுடன் சேர்ந்துகொண்டு வெடிகுண்டு வைத்து, செய்தி களை உருவாக்குகிறார்கள் என்று காட்டுவதெலாம் சுத்த அபத்தம். சுற்றுச்சூழல் போராட்டம், தீவிர வாதியாகச் சித்தரிக்கப்படும் இஸ்லாமிய இளைஞன் படும் கஷ்டங்கள் எனப் பல முக்கியமான பிரச்சினைகள் ஊறுகாய்போலப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊட கங்களின் விபரீதப் போக்கை அம்பலப்படுத்த இத்தனை விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமா? திரைக் கதை என்னும் வண்டியில் எவ்வளவு மூட்டையைத்தான் ஏற்றுவீர்கள்?

காட்டில் நடக்கும் காட்சிகளைத் தூரத்திலிருந்து துல்லியமாகப் படம் பிடிப்பது, பெரியதொரு ஊடக நிறுவனத்தில் ஓரிருவர் உட்கார்ந்துகொண்டு தங்கள் இஷ்டத்துக்குச் செய்திகளை மாற்றிக் காட்டுவது போன்ற காட்சி களில் லாஜிக் இல்லை. இழுத் துக்கொண்டேபோகும் கிளை மாக்ஸ் காட்சிகளும் சலிப்பை வரவழைக்கின்றன. இத்தனை களேபரங்கள் நடக்கும்போது தமிழ்நாட்டில் இரண்டு டி.வி சேனல்களைத் தவிர வேறு எந்த ஊடகமும் இல்லாததுபோலவும் மாற்றுச் செய்திகளுக்கான வழி களே இல்லை என்பதுபோலவும் அமைந்திருக்கும் சித்தரிப்பும் திரைக்கதையைப் பலவீனப் படுத்துகிறது

ஊடக அறத்தை வெளிப் படுத்தும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பிரகாசிக்கிறார். கை விட்டுப் போகும் காதலை மீண்டும் பெற முயற்சிப்பது, தார்மீக ஆவேசம் கொள்வது, ஆற்றாமையால் துடிப்பது, அலட்டிக்கொள்ளாமல் செயல் படுவது என எல்லா அம்சங்களிலும் அக்மார்க் நடிப்பைத் தந்திருக் கிறார். பாராமுகமாக இருக்கும் காதலியின் பாராட்டைப் பெற ஏங்குவதையும், அது கிடைக் கும்போது அடையும் நிறைவை யும் மிக நுட்பமாக வெளிப் படுத்துகிறார். இயல்பான பேச்சு, உடல்மொழி என அவரது நடிப்பு எப்போதும்போல சிறப்பு.

மடோனா செபாஸ்டியன் நிறை வான பங்களிப்பை வழங்கி யிருக்கிறார். கோபப்படும் போதும், விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும்போதும் அவர் நடிப்பு யதார்த்தம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய திரையில் முகம் காட்டியிருக்கும் டி.ராஜேந்தர் வழக்கமான தன் னுடைய பாணியில் பேசி நடித்திருக்கிறார். சில காட்சிகள் எடுபடுகின்றன. ஆகாஷ்தீப்பின் நடிப்பு கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் ஒரே மாதிரி இருக்கிறது. பாண்டியராஜன், ஜெகன், விக்ராந்த், போஸ் வெங்கட், பவர் ஸ்டார் சீனிவாசன், நாசர், தர்ஷனா ராஜேந்திரன், கிருஷ்ணா ஆகியோர் தத்தமது பாத்திரங்களில் நன்கு பொருந்து கிறார்கள்.

தொலைக்காட்சி நிறுவ னத்தை அபிநந்தன் ராமா னுஜத்தின் கேமரா அழகாகக் காட்டியிருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையில், கண்ணம்மா ராக் பாடல் மட்டும் கவர்கிறது.

கவணின் இலக்கு (ஊடகங் களின் தவறான போக்கை அம்பலப்படுத்துவது) தெளிவாகத் தான் இருக்கிறது. ஆனால், வழியில் எக்கச்சக்கமான விஷயங் களை இழுத்துப் போட்டுக் கொண்டதால் குறி தவறி விட்டது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-கவண்/article9612128.ece?homepage=true

Link to comment
Share on other sites

திரைப்பட விமர்சனம்: கவண்

திரைப்படம்: கவண்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர், போஸ் வெங்கட், ஜெகன், பாண்டியராஜன், விக்ராந்த், ஆகாஷ் தீப், நாசர்

இசை: ஹிப்ஹாப் தமிழா

இயக்கம்: கே.வி. ஆனந்த்

கோ படத்திற்கு அடுத்து, கே.வி. ஆனந்த் ஊடகப் பின்னணியில் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது.

திரைப்பட விமர்சனம்: கவண்படத்தின் காப்புரிமைKAVAN FILM

ஊடகங்களில் வர்த்தக நோக்கத்தில் நடக்கும் அநியாயங்களை பார்த்து கோபமடையும் பத்திரிகையாளன், அந்த அநியாங்களை எப்படி அம்பலப்படுத்துகிறான் என்பதுதான் படத்தின் 'ஒன் - லைன்'.

முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிக்குச் சேரும் திலீப் (விஜய் சேதுபதி), அந்த சேனலின் உரிமையாளர் (ஆகாஷ் தீப்) ரியாலிட்டி ஷோவிலும், செய்திகளிலும் வர்த்தக நோக்கத்திற்காக செய்யும் மோசடிகளைப் பார்த்து அதிர்ந்து போகிறார். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் அவர், மற்றொரு சிறிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து, இந்த மோசடிகளை அம்பலப்படுத்துகிறார்.

 

கே.வி. ஆனந்த் ஒரு படத்தின் மையப்புள்ளியாக எதை எடுத்துக்கொள்கிறாரோ, அதை முடிந்தவரை துல்லியமாகத் தர முயற்சிக்கும் ஓர் இயக்குனர். அவரது முந்தைய படங்களான கனா கண்டேன், அயன், கோ, அநேகன் ஆகிய படங்களில் வரும் அலுவலகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் இதற்கு ஒரு உதாரணம். இந்தப் படத்திலும் நிஜமாகவே ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தை கண்முன் கொண்டு வர முயல்கிறார் கே.வி. ஆனந்த். படத்தின் துவக்கத்திலேயே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப அம்சங்களை விளக்கி கதைக்குள் அழைத்துச் செல்வதும் நல்லதொரு முயற்சி.

 

ஆனால், சாதாரணமாகப் புரிந்துவிடக்கூடிய விஷயங்களையும் மிக விளக்கமாக வெகுநேரத்திற்கு திரும்பத் திரும்ப சொல்வது அலுப்பூட்டுகிறது. சிறந்த கலைஞர்களைத் தேர்வு செய்யும் ஷோவில் நடுவர்கள், சேனல் முதலாளி சொல்வதைச் செய்கிறார்கள் என்பதைக் காட்ட கிட்டத்தட்ட அரைமணி நேரம் செலவாகிவிடுகிறது.

கவண்படத்தின் காப்புரிமைKAVAN FILM Image captionசிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள விஜய் சேதுபதி

முற்பகுதியில் விறுவிறுப்பு; பிற்பகுதியில் தொய்வு

அதேபோல, அரசியல்வாதி தீரனுக்கும் (போஸ் வெங்கட்) சேனல் உரிமையாளருக்கும் இடையில் "டீல்" இருக்கிறது என்பதை பல காட்சிகளில் காட்டுவது அயரவைக்கிறது. பல தருணங்கள் 80களில் வந்த திரைப்படங்களை ஞாபகப்படுத்துகின்றன. அரசியல்வாதியை பிரமோட் செய்வதற்காக ஒளிபரப்பப்படும் பேட்டியை நேரலையாக பதிவுசெய்வது போன்ற லாஜிக் மீறல்களும் படத்தில் உண்டு.

 

முற்பாதியில் சற்று விறுவிறுப்பாக நகரும் படம் பிற்பாதியில் மிக தொய்வாக நகர்கிறது. படத்தின் உச்சகட்ட காட்சி கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குச் செல்வது இதற்கு முக்கியமான காரணம்.

 

ஊடகங்களில் உள்ள மோசடி, சுற்றுச்சூழல் பிரச்சனை, அரசியல்வாதியின் அராஜகம், காவல் துறையின் மோசமான செயல்பாடு என பல பிரச்சனைகளை பிற்பாதியில் பேச நினைப்பதால், இலக்கு தவறியிருக்கிறது.

 

படத்திற்குப் படம் மெருகேறும் விஜய் சேதுபதியின் நடிப்பு, இந்தப் படத்திலும் சிறப்பாகவே இருக்கிறது. சில இடங்களில் மட்டும் மிகை நடிப்பின் எல்லையைத் தொட்டுள்ளார். மடோனா செபாஸ்டியனுக்கு தமிழில் இரண்டாவது படம். குறை சொல்ல எதுவுமில்லை. இரண்டாவது பாதியில் வரும் டி. ராஜேந்தர், இடைவேளைக்குப் பிறகு வரும் தொய்வை மறக்க வைக்கிறார்.

 

ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை ஓகே என்றாலும் பாடல்களில் "தீராத விளையாட்டுப் பிள்ளை" மட்டுமே மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

திரைப்பட விமர்சனம்: கவண்படத்தின் காப்புரிமைKAVAN FILM

ஊடகங்களின் அரசியல், வர்த்தக நோக்கம் ஆகியவற்றைப் பேசவிரும்பும் இந்தப் படம், அவற்றை நல்லவன் - கெட்டவன் என கறுப்பு-வெள்ளையாகக் காட்ட முயல்கிறது. இன்னும் சற்று நேர்த்தியாகவும், நீளம் குறைவாகவும் இருந்திருந்தால் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகியிருக்கும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39478886

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.