Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோள் கொடுப்பான் தோழன் ..........

 

ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை  எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய  கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய  செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். 

 

தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய்   காத்திருந்தாள். கணவன் அப்போது  தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை . வயது  முப்பதாக  போகிற எனக்கு ஒரு வழி காட்டு . என  பிரார்த்தனை செய்துவிட்டு  வந்து    சமையலறையில்  , தந்தையின் சாப்பாட்டு பெட்டியை கழுவி வர  உலர  வைத்தாள்  . சேகரம் ஐயா கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் மிகவும்  கட்டுப் பாடானவர் ,மது புகை போன்ற எந்த  கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் ..இடையில் வெற்றிலை போடுவார்.. ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகளை பெற்று வளர்த்து தனது  வசதிக்கு  ஏற்ப வேண்டிய கல்வியை கொடுத்து ஆளாக்கி விட்டவர். மூத்தவள் பெண் அந்த ஊரின் கல்லூரியில் ஆசிரியையாக்கி பார்த்தவர். இளையவன் ராஜேந்திரனை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டிட நிர்மாணத்துறை அதிகாரியாக்கினார் .சுந்தரத்தின் க டின் உழைப்பு இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியதோடு ஒரு கல்வீட்டுக்கும் சொந்தக்காரர் ஆகி இருந்தார். சாப்பிட உட்கார்ந்தவர் மகன் ராசேந்திரன் பற்றிக் கேட்டார். சாப்பிட்டு முடித்தவர். உடல் அசதியால், சற்று சாய்வு  நாற்காலியில்அ உட்க்கார்ந்து சென்ற வாரம் வந்த வரனைப் பற்றிய  யோசனையில் ஆழ்ந்தார். 

 

என் மகளுக்கு இந்த வரனாவது கை கூட வேண்டும். வீடும் ரொக்க்முமாய் கேட்கிறார்களே ....வீட்டை சீவிய உரித்து  வைத்து கொடுத்து விடலாம். நகை நட்டு கொஞ்சம் கமலா சேகரித்து  வைத்திருக்கிறாள் .செலவுக்கு கடனோ உடனோ வாங்கி சமாளித்து விடலாம்.  ரொக்கத்து க்கு என்ன செய்வது . பொருட்கள் விற்கும் விலைவாசியில் நாளாந்த சீவியமே  அப்படியும் இப்படியுமாய் போகிறது . என்று ஆழ்ந்த் சிந்தையில்  அப்படியே உறங்கிவிடடார் .

 

மதகின் மீதிருந்த இந்திரன். தேநீர் பருகியவாறே ..இருக்கையில் ..தூரத்தே மோட்டார் சைக்கிளில்  .கறுப்புக் கண்ணாடியுடன் வருபவர்  இவனை நோக்கி வேகத்தை மெதுவாககினார். எதோ வழி கேட்பவர் போலும் என்று எண்ணியவன்..சற்று அருகே வந்ததும் ..அட இவன் நம்ம கதிரேசன் போல் இரு க் கிறதே என் எண்ணினான். அதற்கிடையில் ..மாப்பிள ....என்னடா யோசினை ... ..........என்றான். அட டா ...நாம் கதிரேசு .....எப்படா வந்தாய் மிடில் ஈஸ்ட்இல் இ ருந்து ..சென்ற வாரம் தானடா ..என்று பலதும்பத்தும் கதைத்தவர்கள் , . இறுதியில் சகோதரியின் கலியாணபேச்சுக்கு   கதையில்  வந்து நின்றது . கதிரேசுவுக்கு மூன்று பெண் சகோதரிகள்.  மூத்த    ஆண்  பிள்ளையான இவனை கடன்  உடன் எல்லாம் பட்டு மத்திய கிழக்குக்கு அனுப்பிய தந்தை ..இரு வருடத்தில்  கடனும் முடிய , தன் கடமை  முடிந்த்து என மேலுலகம் சென்று விடடார்  மூத்தவனான் இவருக்கு  குடும்ப  பொறுப்பை ஏற்க வேண்டிய கடடாயம்.  தங்கை மார் படித்துக் கொண்டு இருந்தார்கள்   .நண்பர்கள் பேசிய வாறே சென்றனர் . ராஜேந்திரனை   வீட்டில்  இறக்கி விட்டவன். உள்ளே வரும்படி அழைத்தும்  கா லையில்  வருகிறேன் என் கதிரேசு சென்று விடடான் 

 

மறு நாள் காலை ராஜேந்திரன் வேலைக்கு புறப்ட்டுக் கொண்டு இருந்தான். மாலாவும் தந்தையும் பஸ் க்கு  சென்று விட்டனர். வாயிலில் மோட்டார்  சைக்கிள்  ....கதிரேசு வந்திருந்தான் .... கிளம்பிடடாயா  மாப்பிள்ளை ..இந்தா இதைக்கொண்டு உள்ளே வை என்று பணம் நிரம்பிய பார்சல் ஒன்றை நீட்டினான்.  என்னடா இது ..... .   இன்று  லீவு  எடுக்கவா என்று கேட்டான்  போக மனமின்றி .. மாலையில் பேசலாம் டா நீ புறப்படு ..   சென்று வா என்று விடை கொடுத்தான் நண்பன். . ராஜேந்திரன்நே ரே சென்று சாமி அறையில் வைத்தவன். அதில் பணம் பத்து லட்சம் இருக்க கண்டு  ஆச்சரியம்  அடைந்தான் ,  அலமாரியில் வைத்து பூட்டி திறப்பை தாயிடம் கொடுத்து   மாலையில்  வந்து பேசுவதாக சொன்னான்.  கதிரேசு கமலா ம்மா வு  டன் பேசிக் கொண்டு இருந்தாள் 

 தன மக ளுக்கு இந்த இடமாவது சரி வரவேண்டும்   இவர்களது வயதுடையவர்கள்  கையிலே குழந்தையுடன்   இருக்கிறார்கள் என் சொல்லி  ஆதங்கப்பட்  டாள்  . நல்ல  காரியம்  நடை பெற வேண்டுமேன்று மிகவும் விரும்பினாள். தேநீரை பருகி முடித்தும்  கவலைப் படாதீர்கள்  அம்மா .எல்லாம் சுபமே நடக்கும் என் விடை பெற்றான். 

 

 மறு நாள் மாப்பிள்ளை   வீட்டுக்கு   சேதி பறந்தது.  இவர்கள் கலியாண விடயமாக கலந்தாலோசிப்பதற்கு வர இருப்பதாக . பேச்சின் முடிவில் அடுத்த மாதம்  வரும் நல்ல நாளில் மண மக்கள் திருமணம் நடை பெற  வேண்டிய ஆயத்தங் களை   செய்ய தொடங்கினார்கள் 

 

மாலையில் நண்பர்கள் மீண்டும் சந்தித்தார்கள். கதிரேசு ...என்று கண் கலங்கினான்......... உனக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள் இந்த நிலையிலும்   எனக்கு இவ்வளவு உதவி செய்கிறாய் .. என் அவனது  நல் உள்ளத்தை பாராட்டினான் .   திருமணம் இனிதே  நடந்தது  

 

தருணம் அறிந்து உதவுபவர்கள் உலகில் மிகச்சிலர் தான் .  இத்தகைய சில   தக்க தருணத்தில்  உதவும் நட்புகளால் தான் பல  பெண்களின் வாழ்வு வளம் பெறுகிறது . உண்மையான நட்பை ஆபத்தில் அறியலாம் . .

 

 

ஒரு குட்டிக் கதை சொல்ல  வந்தேன்    

 .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாய் இருக்கு சகோதரி.....!மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகிறவர்கள் பெரும்பாலும் கடன் கிடன் வாங்கித்தான் போறது. அதிலும் தன் கடனையும் தீர்த்து நண்பனுக்கும் உதவுவதற்கு நல்ல மனம் வேண்டும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் என்ற கொடிய நோய் எமது இனத்துக்கு ஒரு சாபம்.புலிகளின் காலத்தில் சிறிது கட்டுக்குள் இருந்தது இப்போ மீண்டும் தலைவிரித்தாடுகிறது.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்க...நிலாக்காவின் வலைத்தளத்து நினைவு வந்து போனது!

உங்கள் எழுத்து நடை...மீண்டுமொரு முறை...பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

தொடர்ந்தும் எழுதுங்கள்...!

 

Link to comment
Share on other sites

On 1.4.2017 at 7:35 AM, நிலாமதி said:

நண்பர்கள் பேசிய வாறே சென்றனர் . ராஜேந்திரனை   வீட்டில்  இறக்கி விட்டவன். உள்ளே வரும்படி அழைத்தும்  கா லையில்  வருகிறேன் என் கதிரேசு சென்று விடடான் 

நிலாமதி நல்லா இருக்கிறது.

ஆனால் என்னைத்தான் ஏமாத்தி விட்டீர்கள்.

தமிழ் படம் பாத்து + தமிழ் கதைகள் வாசித்து பழகிய மனசு அடுத்தநாள் கதிரேசு மாலாவை ப்ரொபோஸ் பண்ணும் என்று எதிர்பார்த்தது:grin:.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நண்பன் தேவை அறிந்து தோள் கொடுப்பான்.
நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியகிழக்கு நாடுகளுக்கு நேர்மையான விசாவில் வந்து, கொடும் வெயிலில் 12 மணிநேரம் உழைத்து, பணம் சேமித்து தன் இரத்த உறவுகளை காப்பாற்றும் பலருமுள்ள நிலையில், நண்பனுக்காக சேமித்த பணத்தை தக்க தருணத்தில் கொடுத்துதவ பெரிய மனது வேண்டும்..

பகிர்விற்கு நன்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதிய விதம்,  உடனே புரியும் படியாக...  இலகுவாக  உள்ளது நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

உதவும் மனம்...! அது அவரவர் மனதைப் பொறுத்தது. இருந்தும் உதவி செய்வதற்கு மனத்தில் துணிவும் வேண்டும். நிலாமதி அவர்களின் கதை துணிவுக்கு மேலும் பலமூட்டுகிறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நண்பர்கள் அமைவது மிகவும் கடினம் .....கதைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80 களில்  எனது மைத்துணர் ஒருவரும் மத்திய கிழக்கு நாடொன்றில்  வேலை செய்தார்

வேலை செய்த இடத்தில் ஒரு 10 பேர் நல்ல நட்பாக பழகினார்கள்

விடுமுறைக்கு இருவர் இருவராக வருவார்கள்

மற்றவர்களது கடும்பங்களை  சந்திப்பார்கள்

உதவிகள் தேவைப்படும்  குடும்பங்களுக்கு உதவுவார்கள்

அவ்வாறே அவர்களது நண்பரின்  தங்கை  ஒருவருக்கு சீதனப்பீரச்சினை  வந்தபோது

போட்டி போட்டு உதவி  செய்தார்கள்

அந்த நேரத்தில் மிகவும்  போற்றப்பட்ட விடயமது..

நன்றி  பாட்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலத்தில் இது நடப்பது குறைவு 

ம் கதை  கதைக்கு அழகாக :104_point_left:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.