Jump to content

ப்ளூடூத் V5... வயர்லெஸ் சார்ஜிங்... நீளமான திரை... சறுக்குமா சாதிக்குமா சாம்சங் S8? #GalaxyS8


Recommended Posts

ப்ளூடூத் V5... வயர்லெஸ் சார்ஜிங்... நீளமான திரை... சறுக்குமா சாதிக்குமா சாம்சங் S8? #GalaxyS8

சாம்சங்

டெக் உலகம் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியது சாம்சங். கடந்த இரு மாதங்களாகவே இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவம் பற்றி புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் நியூயார்க், லண்டன் என இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்

தனது வழக்கமாக வடிவமைப்பில் இருந்து சற்று அதிகமாகவே மாறுபட்டு S8 ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல பல வசதிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் S8 மற்றும் S8+  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

5.8 இன்ச் OLED 2960 x 1440 (570 ppi)2K டிஸ்பிளே

கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி

குவால்காம் ஸ்நாப்டிராகன் 835 64பிட் ஆக்டாகோர் பிராசசர்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி

12 மெகா பிக்ஸல் பின்புற மற்றும் 8 மெகா பிக்ஸல் முன்புற கேமரா.

3000 mAh பேட்டரி திறன் வயர்லெஸ் சார்ஜிங்.

IP68 நீர்புகாத்தன்மையுடைய வடிவமைப்பு.

3.5 mm ஹெட்போன் ஜாக்.

ஆண்ட்ராய்டு 7 நொளகட் இயங்குதளம்.

ஒரே போல வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 6.2 இன்ச் டிஸ்பிளே மற்றும் 3500 mAh பேட்டரி மட்டும் S8+ ல் கூடுதல். இதுவரை சாம்சங் ஸ்மார்ட்போன்களின் அடையாளமாக இருந்த அழுத்தும் வகையிலான பிஸிக்கல் ஹோம் பட்டன் இதில் இல்லை. மூன்று பட்டண்களும் ஸ்கீரினிலேயே தான். கைரேகை,கருவிழி, முகம் என பல வழிகளில் S8 ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்யலாம். புளூடூத்தின் அடுத்த பதிப்பான  Bluetooth v5.0 இந்த ஸ்மார்ட்போன் மூலம் அறிமுகமாகிறது.

வழக்கமான மொபைலை விட சற்று நீளமாக தெரிகிறது எஸ்8. இதன் வீடியோ ஆஸ்பெக்ட் ரேஷியா காரணமாக இருக்கலாம். 18.2:9 ரேஷிதோ, வீடியோ பார்க்கும் அனுபவத்தை பன்மடங்கு அதிகமாக்கியிருக்கிறது எனலாம். 

சிறந்த கிராபிக் டெக்னாலஜி கொண்ட மொபைல் என்பதால், கேமிங் பிரியர்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ் ஆக அமையும் என்கிறார்கள் மொபைல் எக்ஸ்பெர்ட்ஸ்.

கூகுளின் சிரி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள "பிக்ஸ்பி" உங்களின் வாய்ஸ் கமெண்டுகளுக்கு ஏற்ப வேலை செய்யும். ஏற்கனவே 3.5mm ஹெட்போன் ஜாக் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 ஐ வெளியிட்ட போது வந்த அதிருப்தி காரணமாக உஷாரான சாம்சங் அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. $750 அமெரிக்க டாலர்களாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள  இது ஏப்ரல் 21 முதல் விற்பனைக்கு வருகிறது.

நோட் 7 மாடல் தீப்பிடித்ததில் பிரச்சினை,ஆப்பிளோடு காப்புரிமை பிரச்சினைகள், தனது நிறுவனத்தின் துணைத்தலைவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது முதல் கடந்த வருடம் சற்று தடுமாறியது சாம்சங் ஆனால் போட்டியாளரான ஆப்பிளும் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பிறகு உருப்படியாக எதையும் செய்வது மாதிரி தெரியவில்லை என்பதால் புதிய வடிவமைப்பு, புதிய வசதிகள் என களத்தில் இறங்கியிருக்கிறது சாம்சங் வெற்றி பெறுமா S8 ன் விற்பனை பதில் கூறலாம்..

கொஞ்ச காலமாக நெட்டில் சாம்சங்கை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ், இந்த மாடலுக்கு நேற்று அமோக ஆதரவு அளித்து, பாசிட்டிவ் ட்வீட்களால எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

சாம்சங் S8 ன் அறிமுக வீடியோ..

 

 

http://www.vikatan.com/news/information-technology/84958-new-samsung-s8-mobile-release-date-and-its-key-features.html

Link to comment
Share on other sites

சாம்சங் S8, S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் (Video)

 


சாம்சங் S8, S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் (Video)
 

சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்ஃபோன்கள் நேற்றிரவு அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

சாம்சங் S8 மற்றும் S8+ என இரு ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனையும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்ஃபோன்கள் ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் அந்நிறுவனத்தின் குரல் சார்ந்த வெர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிக்ஸ்பி (Bixby) என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை முதன் முதலாக சாம்சங் S8 சீரிசில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று சாம்சங் பிக்ஸ்பி அப்பிளின் சிரி, கூகுள் அசிஸ்டண்ட், கார்டனா மற்றும் அமேசானின் அலெக்சா உள்ளிட்ட சேவைகளுக்குப் போட்டியாக அமைந்துள்ளது.

கேலக்ஸி S8 ஸ்மார்ட்ஃபோன்களில் பிக்ஸ்பி சேவையை சப்போர்ட் செய்யும் செயலிகளும் வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்களில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வசதி கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ஐரிஸ் ஸ்கேனர் இருப்பதால் பல்வேறு சேவைகளைப் பாதுகாப்பாக இயக்க உங்களது கண் பார்வை மட்டுமே போதுமானது. இத்துடன், கூடுதல் பாதுகாப்பு வழங்க இரு மாடல்களிலும் கைரேகை ஸ்கேனரும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மைக்ரோசொப்ட் காண்டினியம் போன்ற வசதியை புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் சாம்சங் வழங்கியுள்ளது. சாம்சங் டெக்ஸ் (Samsung Dex) என அழைக்கப்படும் இந்த சாதனம் உங்களது ஸ்மார்ட்ஃபோனை கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்த வழி செய்யும். சாம்சங் டெக்ஸ்-இல் புதிய S8 ஸ்மார்ட்போனினை வைத்தால் கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம்.

முந்தைய கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களைப் போன்றே புதிய ஸ்மார்ட்ஃபோனிலும் Water and dust proof வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்ஃபோன்களும் அண்ட்ரோய்ட் 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த சாம்சங் UI கொண்டு இயங்குகிறது.

சிறப்பம்சங்களைப் பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்ஃபோனில் 5.8 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயும், S8+ ஸ்மார்ட்ஃபோனில் 6.2 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளேயும் வழங்கப்பட்டுள்ளது. இவை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

இத்துடன், இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சந்தையில் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் இதர சர்வதேச சந்தைகளில் எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெமரியைப் பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியைக் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஒப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்ஃபோன்களில் Fast Charging வசதி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும், S8+ ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8 விலை 750 டொலர்கள் எனவும் S8+ ஸ்மார்ட்ஃபோன் விலை 850 டொலர்கள் எனவும் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

http://newsfirst.lk/tamil/2017/03/சாம்சங்-s8-s8-ஸ்மார்ட்போன்கள/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.