Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் அன்று 

பரிசிலிருந்து 100  கிலோமீற்றரிலுள்ள  Chartres தேவாலயத்துக்கு குடும்பமாக செல்வது

கிட்டத்தட்ட 30 வருடப்பழக்கம்.

 2016 நத்தார்  அன்றும் அப்படித்தான் 

மக்கள்  எல்லோரையும் கூட்டிக்கொண்டு தேவாலயத்துக்கு போனோம்

சுத்தி வணங்கி

மெழுகு திரியை  கொழுத்திவிட்டு

வெளியில் வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு

அடுத்த புரோக்கிறாம்  என்ன  என்று கேட்டபோது

மக்கள் சொன்னார்கள்  இன்று நீங்க எங்களுக்கு பின்னால வாருங்கள் என்று.

கூட்டிக்கொண்டு ஒரு உணவகத்துக்குள்  நுளைந்தார்கள்

அங்கு ஏற்கனவே எமக்காக  மேசை  ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது

அது ஒரு பிரேசில் உணவகம்

சாப்பிட்டு விட்டு பில் வந்தபோது மக்கள் அதை எடுத்துக்கொண்டு 

காசாளரிடம் போனார்கள்

நானும்  போனேன்

எல்லோரும்  ஆளாளுக்கு ஒவ்வொரு தொகையை  எடுத்து வைத்தார்கள்

நானும் வைத்தேன்

வெளியே  வந்த போது ஒரு மன மகிழ்வும் அமைதியும்  குடி கொண்டது

இதுவரை தனியனாக செலவளித்து  செலவளித்து

மூச்சிறைத்து வந்த எனக்கு ஏதோ ஒன்று என்னிடமிருந்து 

வேறு தோள்களுக்கு  மாறுவதும் அது எனக்கு பெரும் உதவியாக இருப்பதும் தெரிந்தது.

இந்த பங்கீட்டு முறை புலத்திலுள்ள நல்லதொரு பழக்கம்

அதை எம்மவர்  பின் பற்றணும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமை குறையும் போது அது சந்தோசமே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

இந்த பங்கீட்டு முறை புலத்திலுள்ள நல்லதொரு பழக்கம்

குடும்பத்திலுமா?

நோ நோ நோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முனிவர் ஜீ said:

சுமை குறையும் போது அது சந்தோசமே  

அதை  முதன்முதலாக உணர்தல் என்பது....

நன்றி ராசா

வரவுக்கும்நேரத்துக்கும்..

6 minutes ago, ஈழப்பிரியன் said:

குடும்பத்திலுமா?

நோ நோ நோ

ஏனண்ணா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் நிறைய சந்தோசங்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கு. நாம்தான் எமது வேலைப்பளுவில்  கவனிக்க மறந்து விடுகிறோம் விசுகு .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஏனண்ணா

மனதாலேயே பிரித்து பார்க்க முடியல விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மனதாலேயே பிரித்து பார்க்க முடியல விசுகு.

அது ஒரு  நல்ல பழக்கமண்ணா

எவரையும் அது பாதிக்காது

மனம்கோண   சலிப்படைய  வைக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள், கூட வேலைசெய்பவர்களுடன் போனால் பங்கிட்டுத்தான் செலவளிப்பது. இதுதான் காலாகாலத்திற்கும் பழக்கத்தில் உள்ளது. ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இன்னும் பங்கிட ஆரம்பிக்கவில்லை!

 

Link to comment
Share on other sites

என் யேர்மனி நண்பன் ஒருவனுடன் சாப்பிடப்போனேன் அவன் காதலியும் கூட வந்திருந்தாள். நாங்கள் சாப்பிட்டோம். அவள் சாப்பிடவில்லை. ஏன் என்று கேட்டேன். தன்னிடம் பணமில்லை என்றாள். இப்படி ஒரு சம்பவத்தை ஊரில் நினைத்துப்பார்க்கவும் முடியுமா...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. ம்... ம் ..விளங்குகின்றது.:100_pray:

இருந்தாலும் தகப்பன் வேலைக்கும் தாய் வீட்டில்
இயலாத நிலைமையிலும் இருக்கும்போது

அந்தத் தாயின் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தன் தொழில் சுமந்து,

உப்புப் புளி இல்லாவிட்டாலும் தாய் தந்தையருக்குச்

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்

பிள்ளைகள்  சமைத்த உணவை உண்ணும்போது இருக்கும்

சுவையே ஒரு தனியான சுவையாக இருக்கும்.

இருக்கும்போது பங்கிட்டு செய்வதில் தப்பில்லை
பெற்றோரிடம் இல்லாதபோதும் பங்கிட்டுச்  செய்வார்களாக இருந்தால்
அவர்கள்தான் உண்மையான செல்வங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடம்.....பிரிக்ஸ்ரனில் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம்!

வாடிக்கையாளர்  இருவர்..! ஒருவர் கழுத்தில் பல சங்கிலிகளும், பத்து விரல்களில் மோதிரங்களும்..தலையில் ஒரு ரஸ்தா தொப்பியும் போட்ட ஒரு கறுப்பினத்தவர்! அடுத்தவர்....ஒரு சிம்பிளான வெள்ளை இனத்துப் பெண்மணி!

கறுப்பினத்தவர்.. இரண்டு பக்கற் பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் வாங்கிக்கொண்டு போகிறார்! 

வெள்ளையினத்தவர்..காசாளரிடம் போய்...உன்னால் எனக்கு ஒரு சிகரட் கடனாக எனக்குத் தர முடியுமா...நாளை நிச்சயம் திருப்பித் தருவேன்!

காசாளர்....நீங்கள் இருவரும் ஒரே காரில் தானே வந்தீர்கள்! உன் காதலனிடம் கேட்பது தானே!

அவள்....அவர் தர மாட்டார்! அவரிடம் கேட்பது நியாயமுமல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

 

சுத்தி வணங்கி

 

 

 

 

 

எனக்கும்  தேவால‌யத்துக்கு போனால் சுத்தி வணங்கிற பழக்கமிருக்கு.......பங்கீடு நல்லம் தான் ஆனால் குடும்பத்தில்  பங்கீடு என்பது அதி அதி அதி உயர் ஜனநாயகமாக.... சோசலிசமாக  எனக்கு படுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்களுக்கு இடையில் பங்கிட்டு செய்வது ஒருவரை ஒருவர் அதிகம் பாதிக்காது..மேலைத்தேய நாட்டில் வாழ்கிறோம்  என்பதற்காக   எல்லாம் அவர்களை பின்பற்றித் தான் வாழ வேண்டும்  என்று  இல்லைத் தானே..குடும்பங்களுக்குள் பங்கீடு அதுவும் சாதரணமாக ஒரு உணவகத்திற்கு போய் விட்டு செய்வது என்பது அது ஒரு வேண்டத்தகாத செயல்.சொல்லப் போனால் வயோதிபர்கள் ௯ட வெள்ளையினத்தவர்கள் போல் பில் பேமன்ற் செய்யப் பழகி இருக்கிறார்கள்..

அதாவது வீட்டில் உள்ள எல்லாருக்காகவும் பொருட்களை எடுக்கும் போது நீர் ௯டிய விலைக்குரியதுக்கு பணம் கொடும்; நான் குறைந்ததுக்கு பணம் கொடுக்கிறன் என்று மனிதர்களை பிரித்துப் பார்ப்பது..அல்லது தாங்கள் எடுக்கும் பொருட்களுக்கு மட்டும் மற்றவர் கையில் பணத்தை திணித்து விட்டு மாறுவது.நானும் இப்போ இவ்வாறன சங்கடங்களை சந்திக்கின்றேன்...ஆனால் யார் மனதையும் நோகப் பண்ணக் ௯டாது என்பதற்காக எதுவும் பேச மாட்டன்..மனதுக்குள் என்ன பழக்க வழக்கங்கள் என்று மனம் சீ என்று போய் விடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 29/03/2017 at 6:42 PM, suvy said:

காலம் அவ்வப்பொழுது சின்ன சின்னதாய் நிறைய சந்தோசங்களை அள்ளித் தந்து கொண்டுதான் இருக்கு. நாம்தான் எமது வேலைப்பளுவில்  கவனிக்க மறந்து விடுகிறோம் விசுகு .....!  tw_blush:

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 29/03/2017 at 9:35 PM, கிருபன் said:

நண்பர்கள், கூட வேலைசெய்பவர்களுடன் போனால் பங்கிட்டுத்தான் செலவளிப்பது. இதுதான் காலாகாலத்திற்கும் பழக்கத்தில் உள்ளது. ஆனால் நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இன்னும் பங்கிட ஆரம்பிக்கவில்லை!

நண்பர்களுடன்  முதலில் நாம் பங்கிட்டதில்லை கிருபன்

வசதிக்கேற்ப

உழைப்புக்கேற்ப  தானே கொடுத்தோம்....

அடுத்ததாக  அதுவும் வரும்

வரணும்

நன்றி கிருபன் ஐயா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 29/03/2017 at 9:48 PM, Paanch said:

என் யேர்மனி நண்பன் ஒருவனுடன் சாப்பிடப்போனேன் அவன் காதலியும் கூட வந்திருந்தாள். நாங்கள் சாப்பிட்டோம். அவள் சாப்பிடவில்லை. ஏன் என்று கேட்டேன். தன்னிடம் பணமில்லை என்றாள். இப்படி ஒரு சம்பவத்தை ஊரில் நினைத்துப்பார்க்கவும் முடியுமா...??

இது போன்ற  அசாதாரண நிலைகளில்  

மற்றவர்கள்  பங்கிடுவது தானே முறையண்ணா......?

ஒருவர் மட்டுமே 

இரக்கவாளிவாளியாகவோ

தொடர் கொடுப்பனவை  செய்பவராகவோ இருப்பது 

ஒரு காலப்போக்கில்  அவரின் வாழ்வில்   பெரும்  தாக்கங்களை  உண்டு  பண்ணும்

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 30/03/2017 at 0:08 AM, வாத்தியார் said:

ம்.. ம்... ம் ..விளங்குகின்றது.:100_pray:

இருந்தாலும் தகப்பன் வேலைக்கும் தாய் வீட்டில்
இயலாத நிலைமையிலும் இருக்கும்போது

அந்தத் தாயின் சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தன் தொழில் சுமந்து,

உப்புப் புளி இல்லாவிட்டாலும் தாய் தந்தையருக்குச்

சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்

பிள்ளைகள்  சமைத்த உணவை உண்ணும்போது இருக்கும்

சுவையே ஒரு தனியான சுவையாக இருக்கும்.

இருக்கும்போது பங்கிட்டு செய்வதில் தப்பில்லை
பெற்றோரிடம் இல்லாதபோதும் பங்கிட்டுச்  செய்வார்களாக இருந்தால்
அவர்கள்தான் உண்மையான செல்வங்கள் 

அதே..

நன்றி தம்பி வாத்தியார்

வருகைக்கும்  நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/03/2017 at 0:35 AM, புங்கையூரன் said:

இடம்.....பிரிக்ஸ்ரனில் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையம்!

வாடிக்கையாளர்  இருவர்..! ஒருவர் கழுத்தில் பல சங்கிலிகளும், பத்து விரல்களில் மோதிரங்களும்..தலையில் ஒரு ரஸ்தா தொப்பியும் போட்ட ஒரு கறுப்பினத்தவர்! அடுத்தவர்....ஒரு சிம்பிளான வெள்ளை இனத்துப் பெண்மணி!

கறுப்பினத்தவர்.. இரண்டு பக்கற் பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் வாங்கிக்கொண்டு போகிறார்! 

வெள்ளையினத்தவர்..காசாளரிடம் போய்...உன்னால் எனக்கு ஒரு சிகரட் கடனாக எனக்குத் தர முடியுமா...நாளை நிச்சயம் திருப்பித் தருவேன்!

காசாளர்....நீங்கள் இருவரும் ஒரே காரில் தானே வந்தீர்கள்! உன் காதலனிடம் கேட்பது தானே!

அவள்....அவர் தர மாட்டார்! அவரிடம் கேட்பது நியாயமுமல்ல!

உண்மை தான்அண்ணா

ஆனால்   நான் சொல்வது  பங்கீடு

நீங்கள்  சொல்வது கஞ்சத்தனம்  அல்லது ஒவ்வாமை

இந்நிலை  இருந்தால்  பங்கீடே வராதே..

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

On 30/03/2017 at 7:57 AM, putthan said:

எனக்கும்  தேவால‌யத்துக்கு போனால் சுத்தி வணங்கிற பழக்கமிருக்கு.......பங்கீடு நல்லம் தான் ஆனால் குடும்பத்தில்  பங்கீடு என்பது அதி அதி அதி உயர் ஜனநாயகமாக.... சோசலிசமாக  எனக்கு படுகிறது...

உண்மை  தான் புத்தர்

எனக்கு அடிக்கடி ஐரோப்பிய கார்ப்பயணம்வரும்

உறவுகள் எல்லா  நாடுகளிலும்  இருப்பதால்...

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனியே  தான் காருக்கான  செலவு

வீதிச்செலவு

பயணச்செலவு  என செலவிட்டு வருவது வழக்கம்

மக்களும்  வாகனத்தை செலுத்தினாலும் எனது வங்கி  காட்டை முன்னுக்கு வைத்து விடுவேன்

திரும்பி  வந்து குத்துவிளக்கில் கணக்கு பார்த்து தலையிடி வந்த நாட்களும் உண்டு

ஆனால் இப்பொழுதெல்லாம்  அப்படி செலவுகள் கட்டுக்குள் வந்து  விடுகின்றன

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு செலவை  பார்த்துக்கொள்கிறார்கள் (அவர்களாகவே)

இது குடும்பத்துக்கும் நல்லது தானே..?

 

நன்றி  புத்தர் அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

நட்புக்களுக்கு இடையில் பங்கிட்டு செய்வது ஒருவரை ஒருவர் அதிகம் பாதிக்காது..மேலைத்தேய நாட்டில் வாழ்கிறோம்  என்பதற்காக   எல்லாம் அவர்களை பின்பற்றித் தான் வாழ வேண்டும்  என்று  இல்லைத் தானே..குடும்பங்களுக்குள் பங்கீடு அதுவும் சாதரணமாக ஒரு உணவகத்திற்கு போய் விட்டு செய்வது என்பது அது ஒரு வேண்டத்தகாத செயல்.சொல்லப் போனால் வயோதிபர்கள் ௯ட வெள்ளையினத்தவர்கள் போல் பில் பேமன்ற் செய்யப் பழகி இருக்கிறார்கள்..

அதாவது வீட்டில் உள்ள எல்லாருக்காகவும் பொருட்களை எடுக்கும் போது நீர் ௯டிய விலைக்குரியதுக்கு பணம் கொடும்; நான் குறைந்ததுக்கு பணம் கொடுக்கிறன் என்று மனிதர்களை பிரித்துப் பார்ப்பது..அல்லது தாங்கள் எடுக்கும் பொருட்களுக்கு மட்டும் மற்றவர் கையில் பணத்தை திணித்து விட்டு மாறுவது.நானும் இப்போ இவ்வாறன சங்கடங்களை சந்திக்கின்றேன்...ஆனால் யார் மனதையும் நோகப் பண்ணக் ௯டாது என்பதற்காக எதுவும் பேச மாட்டன்..மனதுக்குள் என்ன பழக்க வழக்கங்கள் என்று மனம் சீ என்று போய் விடும்..

உண்மைதான்பிள்ளை

உங்களது முதலாவது கேள்விக்கு

உங்களது இரண்டாவது பகுதியில்  பதிலிருக்கு...

இவ்வாறு தான் எமக்குள்   பிரச்சினைகளும்  பிரிவுகளும் 

நான்அதிகம்  கொடுத்தனான்

இவர்  கொடுப்பதே இல்லை போன்ற  பாகுபாடுகளும்வருகின்றன

அவரவர் தத்தமது வீக்கத்துக்கு ஏற்ப  கொடுத்து விட்டால்  அதிலேயே  பிரச்சினை  முடிந்து விடும்

இதை  நம்மவர்  பழக்கப்படுத்திக்கொள்ளணும்

கொஞ்சம் எம்மவருக்கு கடினம்தான்

ஆனால்  தேவையான ஒன்று.

நன்றி பிள்ளை

வருகைக்கும்  நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உண்மை தான்அண்ணா

ஆனால்   நான் சொல்வது  பங்கீடு

நீங்கள்  சொல்வது கஞ்சத்தனம்  அல்லது ஒவ்வாமை

இந்நிலை  இருந்தால்  பங்கீடே வராதே..

நன்றி அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

உண்மை  தான் புத்தர்

எனக்கு அடிக்கடி ஐரோப்பிய கார்ப்பயணம்வரும்

உறவுகள் எல்லா  நாடுகளிலும்  இருப்பதால்...

கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனியே  தான் காருக்கான  செலவு

வீதிச்செலவு

பயணச்செலவு  என செலவிட்டு வருவது வழக்கம்

மக்களும்  வாகனத்தை செலுத்தினாலும் எனது வங்கி  காட்டை முன்னுக்கு வைத்து விடுவேன்

திரும்பி  வந்து குத்துவிளக்கில் கணக்கு பார்த்து தலையிடி வந்த நாட்களும் உண்டு

ஆனால் இப்பொழுதெல்லாம்  அப்படி செலவுகள் கட்டுக்குள் வந்து  விடுகின்றன

ஒவ்வொருவரும்  ஒவ்வொரு செலவை  பார்த்துக்கொள்கிறார்கள் (அவர்களாகவே)

இது குடும்பத்துக்கும் நல்லது தானே..?

 

நன்றி  புத்தர் அண்ணா

வருகைக்கும்  நேரத்துக்கும்..

 

 

நிச்சயம் நல்லது ஆனால் சாப்பாட்டுக்கடையில் பங்கீடு தான் கொஞ்சம் மனதை உறுத்துகிறது....காரையே, பிள்ளைகள் வாங்கி கொடுக்கும் நாட்டில அவர்கள் வாழ்கிறார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

நிச்சயம் நல்லது ஆனால் சாப்பாட்டுக்கடையில் பங்கீடு தான் கொஞ்சம் மனதை உறுத்துகிறது....காரையே, பிள்ளைகள் வாங்கி கொடுக்கும் நாட்டில அவர்கள் வாழ்கிறார்கள்....

உண்மைதான்

இது போன்ற  சிறிய சிறிய  பங்கீடுகளும்

புரிதலும்

பெரிய விடயங்களுக்கும் உந்துதலாகும் என்பது எனது கணிப்பு

அடுத்ததாக  உங்களுக்கு எந்தக்கார் விருப்பம் என்று மக்கள் கேட்டு  வைத்திருக்கிறார்கள்

விரைவில் கைக்கு வரும்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பு வேலை செய்த இடத்தில் மாதமொருமுறை மலேசியசீனா உணவகம் ஒன்றுக்கு மதிய உணவு உண்ணச்செல்வோம்.  மூன்று பேர் சென்றால் சோற்றுடன் 4 வெவ்வேறு கறிகளை வாங்குவோம். 7 பேர் சென்றால் வெவ்வேறு 8 கறிகளை வாங்குவோம். ஒரு முறை 14 பேர் போனோம். 15 வெவ்வேறு கறிகளை வாங்கினோம்.  எல்லாவற்றையும்சாப்பிட்டுவிட்டு  நாங்கள் பங்கிட்டு பணத்தினைச் செலுத்துவோம். எல்லோரும் குறைந்த விலையில் எல்லா உணவுகளையும் சுவைப்போம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.