Jump to content

ஆட்சி மாறினால் சாட்சி சொன்ன அனைவரையும் அடைப்போம் - கடற்படையின் முன்னாள் தளபதி வீரசேகர லண்டனில் இருந்து கொதிப்புப் பேட்டி


Recommended Posts

ஆட்சி மாறினால் சாட்சி சொன்ன அனைவரையும் அடைப்போம் - கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி வீர­சே­கர லண்­ட­னில் இருந்து கொதிப்­புப் பேட்டி
 
 
 
ஆட்சி மாறினால் சாட்சி சொன்ன அனைவரையும் அடைப்போம் -  கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி வீர­சே­கர லண்­ட­னில் இருந்து கொதிப்­புப் பேட்டி
இலங்­கைக்கு எதி­ராக ஜெனி­வா­வில் சாட்­சி­ய­ம­ளித்த அனை­வ­ரை­யும் ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் சிறை­யில் தள்­ளு­வோம் என்று அச்­சு­றுத்­தி­யி­ருக்­கி­றார் கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­ப­தி­யும் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர. 
 
ஜெனி­வா­வில் அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­த­வர்­க­ளைப் பெயர் குறிப்­பிட்டு அவர்­க­ளை­யெல்­லாம் சிறை­யில் அடைபோம் என்­றும் அவர் கூறி­னார். ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த விட­மாட்­டோம். நடை­மு­றைப்­ப­டுத்த முற்­பட்­டால், முன்­னாள் படை­யி­னரை ஒன்­றி­ணைத்து அதைத் தடுப்­போம்’’ என்­றும் அவர் சூளு­ரைத்­தார். 
 
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 34 ஆவது கூட்­டத்­தொ­டர் கடந்த பெப்­ர­வரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரை சுவிஸ் தலை­ந­க­ரான ஜெனி­வா­வில் நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத் தொட­ரில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர்க் குற்­றங்­கள் குறித்த அறிக்­கை­யு­டன் சரத் வீர­சே­க­ர­வும்  கள­மி­றங்­கி­யி­ருந்­தார்.
 
ஜெனி­வா­வுக்­குச் சென்­றி­ருந்த தமி­ழர் பிர­தி­நி­தி­க­ளு­டன் அவர் கடு­மை­யான வாய்த் தர்க்­கத்­தி­லும் ஈடு­பட்­டி­ருந்­தார். இந்­திய அரச சார்­பற்ற நிறு­வ­னம் ஒன்­றின் ஊடா­கவே சரத் வீர­சே­கர ஜெனி­வா­வுக்குள் நுழைந்­தி­ருந்­தார். கூட்­டத் தொடர் நிகழ்­வு­க­ளுக்­காக அங்கு சென்­றி­ருந்த தமி­ழர்­களை அவர் ஒளிப்­ப­டம் எடுத்­தார் என்­கிற குற்­றச் சாட்­டும் எழுப்­பப்­பட்­டுள்­ளது. 
 
ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபைக்­குள் ஒளிப்­ப­டம் எடுப்­பது தடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லும் அவர் அவ்­வாறு நடந்­து­கொண்­டது தமி­ழர் பிர­தி­நி­தி­ களை அச்­சு­றுத்­தும் போக்­கி­லேயே என்று மனித உரிமை ஆர்­வ­லர்­கள் கடிந்­து­கொண்­டி­ருந்­த­னர். 
 
இந்த நிலை­யில் தனது ஜெனிவாப் பய­ணத்தை முடித்­துக் கொண்டு லண்­டன் சென்­றுள்­ளார்  சரத் வீர­சே­கர. அங்­கி­ருந்­த­வாறு தொலை­பேசி மூலம் உத­யன் செய்­தி­யா­ள­ருக்கு அவர் தெரி­வித்­த­தா­வது,
 
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த இலங்­கைக்கு அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதைப் பெரி­ய­தொரு இரா­ஜ­தந்­திர வெற்­றி­யென மக்­கள் மத்­தி­யில் காண்­பிப்­ப­தற்கு அரசு முயற்­சிக்­கின்­றது. இது வெற்றி அல்ல. இலங்கை மீது விரிக்­கப்­பட்­டுள்ள வலைக்கு அர­சும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளது.
 
படை­யி­னர் குற்­ற­மி­ழைக்­க­வில்லை என்று நாம் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­வ­ரும் நிலை­யில், தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்கி, போர்க்­குற்­றம் நடந்­துள்­ள­தாக அரசே மறை­முக ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ளது. இதை எப்­படி இரா­ஜ­தந்­திர வெற்றி என்று கூற­மு­டி­யும்?
 
ஜெனி­வா­வில் முகா­மிட்­டி­ருந்த விடு­த­லைப் புலி­க­ளின் பிர­தி­நி­தி­கள் என்­னு­டன் கடும் தர்க்­கத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆனா­லும் நான் ஓய­வில்லை. சிறந்த முறை­யில் பதி­லடி வழங்­கி­னேன். அனந்தி, சிவா­ஜி­லிங்­கம், கஜேந்­தி­ர­கு­மார், பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து, நிமல்கா பெர்னான்டோ ஆகி­யோர் இலங்­கைக்கு எதி­ரா­கப் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­த­னர். இது தேச விரோ­தம். எமது ஆட்சி வந்த பின்­னர் இவ்­வா­றா­ன­வர்­களை சிறை­யில் அடைப்­போம்.
 
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை இனி­மேல் இலங்கை மீது தீவி­ரப் பார்­வை­யைச் செலுத்­தும். அதன் அறிக்­கை­யா­ளர்­கள் நாட்­டுக்கு அடிக்­கடி வரும் சூழ்­நிலை உரு­வா­கும். உண்­மை­யைக் கண்­ட­றி­யும் குழுவை அமைக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­ப­டும். படை­யி­ன­ரைத் தண்­டிக்­கு­மாறு கோரப்­ப­டும். பழைய சம்­ப­வங்­க­ளைக்  கிள­று­வ­தால் மீண்­டும் கசப்­பு­ணர்­வு­தான் ஏற்­ப­டும். உண்­மைக் கண்­ட­றி­யும் ஆணைக்­கு­ழுவை அமைக்க இட­ம­ளிக்­க­மாட்‌டோம் -- என்­றார்.

http://www.onlineuthayan.com/news/25242

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.