Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்னமகன்

பட்டப்படிப்பு முடியும்  தருவாயில்

3 மாதம் வேலை  செய்து அந்த வேலை  சம்பந்தமான அறிக்கை  சமர்ப்பித்து

நேரடி பரீட்சையிலும் சித்தி  பெறணும்

அதன்படி பெரிய  கம்பனி ஒன்றில்  வேலைக்கு சேர்ந்திருந்தான்

இவனோடு ஒரு பிரெஞ்சுக்காரர் ஒரு ஆபிரிக்கர்  இவன் என 3 பேரை அந்த நிறுவனம் எடுத்திருந்தது

இவர்களுக்கு பொறுப்பானவர்  ஒரு பிரெஞ்சுக்காறர்.

 

3  மாதம்  முடியும் தருணம்

இவர்களுக்கு பொறுப்பானவர் 

வெளிநாட்டுக்காரரான இருவருக்கும்

மிகவும் உதவியாக இருந்தார்

பரீட்சைக்கு எவ்வாறு எழுதுவது

நேர்முகத்தெர்வில்  எவ்வாறு பதிலளிப்பது என்பது  போன்று உதவியதோடு மட்டுமன்றி

இறுதி  நாள் நேரடி பரீட்சை  நடைபெறும் இடத்துக்கும்  நேரடியாக வந்திருந்தார்

பரீட்சை முடிந்ததும்

வெளியில் வந்த இவர்களுக்கு

பரீட்சையில் அவரது உதவி  பெருதும் உதவியதால் பெருத்த சந்தோசம்

மிக்க நன்றிகளை  சொல்லி

மனதிலிருந்த விடயத்தை நேரடியாகவே கேட்டனர்

எங்களுக்கு இவ்வளவு  உதவுகிறீர்களே

நேரத்தை செலவு செய்கிறீர்களே

இதற்கு ஏதாவது காரணமுண்டா? என்று.

 

அவர்  சொன்னார்  நான் ஒரு பிரெஞ்சுக்காரன்

எனக்கு  சொந்தமாக வீடு இருக்கு வசதி இருக்கு பரம்பரை சொத்துக்கள் இருக்கு 

எனக்கு  இந்த வேலை கூட ஒரு பொழுது போக்குத்தான்

இதனால்  வரும் வருமானத்தில்தான் நான்  வாழணும் என்றில்லை

எனது வருமானத்தை  நம்பி  எதிர்பார்த்து எனது குடும்பத்தில் எவருமில்லை

ஆனால் நீங்கள்  இருவரும்அப்படியில்லை

உங்களை  இந்த நிலைக்கு கொண்டுவர

உங்கள்  பெற்றோர் பட்ட வலிகள்  கொஞ்ச நஞ்சமில்லை

உங்களுக்காக அவர்கள் செய்த செய்து வரும் வேலைகள் 

அவர்கள் விரும்பி  செய்பவையல்ல

அவர்களது ஒரு கனவு உங்களையாவது மேலே கொண்டு வரணும் என்பது மட்டும் தான்.

அதற்காகத்தான் உங்களை  நானும் உள்ளே  எடுத்தேன்

3வது ஆளையும்உங்களில்  ஒருவரை  எடுக்கத்தான்  எனக்கு விருப்பம்

ஆனால்  பெரிய  இடத்தில் என்மீது சந்தேகம் வராமலிருக்கத்தான் ஒரு பிரெஞ்சுக்காரரை எடுத்தேன் என்றாராம்

 

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  புலம் பெயர் தேசங்களில் உள்ளே  எடுத்தது

அரவணைத்தது

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறைக்கு இந்தக் குறை இருக்காது.அந்த பிரஞ்சுக்காரனை நினைக்க பெருமையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேரில் ஒருவரிடம் தான் மனிதம்...வாழும்!

அதுவே உங்கள் மகனிடம் மாட்டுப்பட்டது...உங்களினதும், மகனினதும் அதிர்ஷ்டமே!

எனினும் மனிதம்..ஏதாவது வடிவில்...எப்போதும் தன்னை இனங்காட்டிய படியே இருக்கும்!
இல்லா விட்டால்...உலகம் இயங்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

--------

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  புலம் பெயர் தேசங்களில் உள்ளே  எடுத்தது

அரவணைத்தது

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

இந்த வரிகள்....  மிக நிதர்சனமானவை,  விசுகு.
வெளிநாட்டுக்காரனை... வெறுக்கும் நாடுகளில்,
இப்படியான மனிதத் தன்மையுள்ளவர்கள் இல்லாமல் இருந்து இருந்தால், 
வாழ்க்கையே... வெறுத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த தலைமுறைக்கு இந்தக் குறை இருக்காது.அந்த பிரஞ்சுக்காரனை நினைக்க பெருமையாக இருக்கிறது.

உண்மை  தான் அண்ணா

அடுத்த தலைமுறைக்கு இந்த சலுகை கிடைக்கது

ஆனால் அவர்கள் சலுகைகளை  வளங்கும் இடததில் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

நன்றியண்ணா

வருகைக்கும் நேரத்துக்கும்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

ஆயிரம் பேரில் ஒருவரிடம் தான் மனிதம்...வாழும்!

அதுவே உங்கள் மகனிடம் மாட்டுப்பட்டது...உங்களினதும், மகனினதும் அதிர்ஷ்டமே!

எனினும் மனிதம்..ஏதாவது வடிவில்...எப்போதும் தன்னை இனங்காட்டிய படியே இருக்கும்!
இல்லா விட்டால்...உலகம் இயங்காது!

உண்மை  தான் அண்ணா

இந்த  மனிதம்  எம்மிடையே குறைந்து வருதல் சிலவேளை  எனக்கு கவலை தரும்  விடயம்.

ஆனாலும் எம்மவர்களிடையேயும் சிலர் பெரிய  மனசு படைத்தவர்கள்  இல்லாமலில்லை.

இத்தனை அழிவுகளிலிருந்து எம்மினம்  மீண்டுவருவதற்கு இந்த மனிதம்  தானே காரணம்.

நன்றியண்ணா

வருகைக்கும் நேரத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதுவரை இப்படியானவர்களை காட்டியதில்லை இறைவன் அது ஒரு சிலருக்கு மட்டுமே  வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கும்   அவருக்கும்:97_raised_hand:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

இந்த வரிகள்....  மிக நிதர்சனமானவை,  விசுகு.
வெளிநாட்டுக்காரனை... வெறுக்கும் நாடுகளில்,
இப்படியான மனிதத் தன்மையுள்ளவர்கள் இல்லாமல் இருந்து இருந்தால், 
வாழ்க்கையே... வெறுத்து இருக்கும்.

உண்மை  தான்சிறி

எம்மை  அகதியாக ஏற்றுக்கொண்டதிலிருந்து

வீடு

வேலை

வசதிகள்

என ஒவ்வொரு விடயத்திலும் யாரோ ஒருவர் மனிதாபிமானத்தை  காண்பித்திருப்பார்

உலகம் உருள்வதற்கு இதுவே காரணம்

நன்றி சிறி

வருகைக்கும் நேரத்துக்கும்...

1 minute ago, முனிவர் ஜீ said:

எனக்கு இதுவரை இப்படியானவர்களை காட்டியதில்லை இறைவன் அது ஒரு சிலருக்கு மட்டுமே  வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கும்   அவருக்கும்:97_raised_hand:

இருக்கலாம்   ராசா

ஆனால் கதைகள்  என்று எனது அனுபவங்களையே  பதிவது வழமை

சில  அனுபவங்களை

செய்திகளை

தேவையானவற்றை  சொல்லிச்செல்லவேண்டியுள்ளது

அது தேவையும் கூட.

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.'

ஒரு சிலரின் நேர்மை, நாணயம், மனிதாபிமானம் மற்றும்  உழைப்பில் தான் இந்த உலகம் உய்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானமுள்ள மனிதர்களைக் காண்பது குறைந்து கொண்டுவரும் இக்காலத்தில் இப்படியும் ஒருவரா என்று வியக்கவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா தகப்பன் செய்வது பிள்ளையளுக்கு தான் சேரும் என்று சொல்வார்கள்.நீங்கள் செய்த நன்மை தான் உங்கடை மகனுக்கு சேர்ந்திருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

மனிதாபிமானமுள்ள மனிதர்களைக் காண்பது குறைந்து கொண்டுவரும் இக்காலத்தில் இப்படியும் ஒருவரா என்று வியக்கவைக்கிறது.

நன்றி சகோதரி..

மனதுக்குள்  இருந்த சில அனுபவங்களை

பதிவிட  நினைத்திருந்தேன்

யாழின் இந்த திரி  அதற்கு திறவு கோலாகிவிட்டது

நன்றி சகோதரி..

வருகைக்கும் நேரத்துக்கும்..

11 minutes ago, வாதவூரான் said:

அண்ணா தகப்பன் செய்வது பிள்ளையளுக்கு தான் சேரும் என்று சொல்வார்கள்.நீங்கள் செய்த நன்மை தான் உங்கடை மகனுக்கு சேர்ந்திருக்கு

அதில்   

 நிச்சயம்  நம்பிக்கையுண்டு

நன்றி சகோதரா

வருகைக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

On ‎28‎.‎03‎.‎2017 at 7:30 PM, விசுகு said:

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  புலம் பெயர் தேசங்களில் உள்ளே  எடுத்தது

அரவணைத்தது

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

அதே மனிதம் தான் எம்மை நித்திலும் அரவணைத்து. தன்னையே இழந்து எங்களை வாழ வைப்பதற்கும் முயன்றதைக் கண்டுகொள்ளாமல் அழித்துவிட்ட வரலாறும் உள்ளது. :(

Link to comment
Share on other sites

On 28.3.2017 at 11:00 PM, விசுகு said:

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

 

On 29.3.2017 at 3:59 AM, புங்கையூரன் said:

மனிதம்..ஏதாவது வடிவில்...எப்போதும் தன்னை இனங்காட்டிய படியே இருக்கும்!
இல்லா விட்டால்...உலகம் இயங்காது!

அழகிய அர்த்தமுள்ள வரிகள்

மனிதம் எப்பவும் எந்த ரூபத்திலும் எங்கேயும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

அந்த மனிதம் கொண்ட மனிதர்களாக நாங்களும் வாழ்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.