Jump to content

வருக வருக திரு ரஜனிகாந் அவர்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வருக வருக திரு ரஜனிகாந் அவர்களே, தமிழர்தேசம் உங்களை வரவேற்கிறது

தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகர் திரு ரஜனிகாந் அவர்கள் விரைவில் இலங்கைத்தீவில் ஈழப்பகுதிக்குப் பயணம்செய்து அங்கு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீழ்குடியேறிய மக்களுக்காகத் தொண்டுநிறுனம் ஒன்று அமைத்துக்கொடுக்கும் குடியிருப்பை, உரிய பயணாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்சியில் கலந்துகொள்வதாகச் செய்திகள் வந்ததிலிருந்தே தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்கள் (?) எனச்சொல்லப்படுவோரால் பலத்த கண்டனச்சொற்பிரயோகங்கள் இதுபற்றி வெளியிடப்படுகின்றது.

இவ்விடையம் ஒருபுறம் இருக்க

இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்மக்களையிட்டு உலகில் வாழும் எந்த இனமக்களுக்கும் ஏதோ ஒருவகையில் இனம்காணப்படாத அது சரியோ தவறோ ஒரு சந்தேகத்துடன் கூடியதும் நிறைய கேள்விகளை உள்ளடக்கியதானதுமான புரிதல் இருக்கும். அதை உள்ளடக்கியதே விடுதலைப்புலிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவின் அப்போதைய சிறீலங்காவுக்கான உயர்ஸ்தானிகர் கேட்டிருந்தார்

"நீங்கள் எதற்காக இலங்கைத் தமிழர்களாக இருப்பதுபற்றி சிறப்பான பெருமைகொள்கிறீர்கள்" என.

இப்போ மறுபடியும் விசையத்துக்கு வருவோம்

தெரிந்தோ தெரியாமலோ நாம் அறியாத சில பண்புகளைக் கொண்டுள்ள ஒரு இனக்குழுமமாக இலங்கைத்தீவில் நாம் இருக்கின்றோம் அப்பண்புகள் சில வேளை சிறந்ததாக இருக்கலாம் இல்லையேல் ஏனையவர்களால் விரும்பக்கூடியதான அல்லது விரும்பத்தகாததான இல்லையேல் அந்தமான் நிக்கோபார் மற்றும் அமேசன் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கான உல்லாசப்பயணம் செய்யக்கூடியவர்களுக்கான சுற்றுலா மனநிலையை கொண்டுவரக்கூடியதான இயல்புள்ளவர்களாக நாங்கள் இருக்கலாம்.

இப்படியாக நான் குறிப்பிட்டவயோ இல்லையேல் நான் குறிப்பிடாத ஏதோ ஒரு விடையத்தை உள்ளடக்கியவர்களாகவோ நாம் இருக்கலாம்.

எது எப்படியோ, நாம் ஏதோ ஒருவகையில், சிறப்பானவர்கள் என உலகில் பட்டியலிடக்கூடிய இனங்களில் முதன்மையானவர்கள்.

ஆகவே தமிழகத் திரைப்பட நடிகர் திரு ரஜனிகாந் அவர்கள் எமது தேசத்துக்கு வந்து எம்முடன் அளவலாவுவதால் எமக்கு எந்தக்குறையும் வந்துவிடப்போவதில்லை தவிர எந்தப்பெருமையும் வந்துவிடப்போவதில்லை. இருப்பினும் திரு ரஜனிகாந் அவர்கள் கூறியிருக்கிறார் தமது தேசத்தின் மீட்பிற்காய் தமது இன்னுயிர்களையும் இரத்ததையும் அத்தேசத்தின் காற்றிலும் மண்ணிலும் கலந்துவிட்டு மிகப்பெரிய வீரம்செறிந்த வரலாற்றை இலங்கைத்தீவில் வாழக்கூடிய தமிழினத்துக்கு மேலும் சிறப்புச்சேர்த்த அந்த மாவீரர்களது எச்சங்களைத் தரிசிப்பதற்கும் அவ்வீரர்கள் சுவாசித்த காற்றில் மீதமிருக்கும் உயிர்வாழ்வதற்கான ஆக்சிசன் துகள்களை சுவாசிப்பதற்கும் ஆவலாகவே நான் தமிழ்மண் செல்ல எத்தனித்தேன் எனக்கூறியிருப்பதில் உண்மை இருக்கிதோ இல்லையோ

தமிழர் மரபில் பண்டைய அரசர்களின் எதிரிப்படைக் ஒற்றன் அரசவையில் உள்நுளைவதற்காக வாயிற்காவலனிடம் போலியாகத் தயாரித்த அரசனின் அடையாளக் கணையாழியைக் காட்டுவதைக் காவலன் புரிந்துகொண்டாலும் அது அரசனது முகாந்தரம் கூறும் அடையாளம் என்பதனால் உள்ளெபோக அனுமதியளிப்பான்,

அதுபோல் எனது தேசத்தின் மீட்புக்காய் தனது இன்னுயிரை அதேசத்துக்கே ஆகுதியாக்கிய மாவீரர்செல்வங்களது பெயரை எவராது சொல்வார்களாயிருந்தால் அவர்களது பெயர் சொல்லி யாரும் எம்தேசத்தில் காலடி எடுத்துவைக்க விரும்பினாலும் கண் இமைக்கும் நேரத்தின்,

நாம் வருக வருக என அழைக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் எனச் சுந்தரமூர்திநாயனார் கூறியதுபோல். மாவீரர்களது ஈகம், அவர்களது மாவீரம் இவற்றின்பால் எதைச்சொல்லி யார் எதைக்கூறுகிறார்களோ அது எதுவாக இருப்பினும் அதற்குநாம் மதிப்புக்கொடுத்தே தீரல்வேண்டும்.

தென்னகத்தின் முதன்மையான திரைப்படநடிகர் திரு ரஜனிகாந் அவர்களை என் தேசத்துக்கு வருக வருகவென வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.