Jump to content

வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே’- டிடிவி தினகரனை முற்றுகையிட்ட மக்கள்


Recommended Posts

வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே’- டிடிவி தினகரனை முற்றுகையிட்ட மக்கள்

 

 
  • அதிமுக தலைமைக் கழகத்தில் டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.
    அதிமுக தலைமைக் கழகத்தில் டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.
  • ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் எழில் நகரில் ஆட்டோவில் சென்று வாக்குசேகரித்த அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன்.
    ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் எழில் நகரில் ஆட்டோவில் சென்று வாக்குசேகரித்த அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன்.
 

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் நேற்று பிரச்சாரத் தில் ஈடுபட்டார். அவருடன் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பா.பெஞ்சமின் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித் தனர்.

அப்போது பெண்கள் சிலர் தினகரனை முற்றுகையிட்டு, ‘‘வெள்ளத்தின்போது எங்கள் உடை மைகள் உட்பட ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய பொருட் கள் அழிந்தன. ஆனால், எங்க ளுக்கு அரசின் நிவாரணம் ரூ.5 ஆயிரம்கூட கிடைக்கவில்லை. எங்க ளுக்கு ஆறுதல் கூறக் கூட கட்சிக் காரர்கள் யாரும் வர வில்லை’’ என கோபமாகக் கூறினர். அவர்களை தினகரனுடன் வந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர்.

குடிசை பகுதி மக்கள்

பின்னர், ஆட்டோவில் பிரச்சாரம் செய்த தினகரனை அப்பகுதி குடிசைவாசிகள் வழிமறித்து, ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட பிறகு, எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. எங்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கொடுப்பதாக ஜெய லலிதா உறுதி அளித்திருந்தார். அதற்கான கோப்புகளும் தயார் செய்யப்பட்டன.

முதல்வர் மறைவுக்குப் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றனர். ‘‘ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை முடித்துக் கொடுக்கிறேன்’’ என தினகரன் உறுதியளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:

இந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள், ஜெயலலிதாவிடம் 57 ஆயிரம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன். சொந்தமாக வீடு வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம். அதனால், அவர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவோம்.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடுங்கையூர் குப்பை மேட்டை, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றி, அங்கு குடி யிருப்பு, பூங்காக்களை கட்டித் தருவேன். அதிக இளைஞர்கள் உள்ள தொகுதி என்பதால் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் கள் நடத்தப்படும். இந்த தொகு தியை,முன்மாதிரி தொகுதியாக ஜெயலலிதா மாற்ற விரும்பினார். அதை நிறைவேற்றுவேன்.

மதுசூதனன் மீது புகார்

மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னம்தான் வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சியினர் இரட்டை விளக்கு மின்கம்பம் என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகள்

அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

வீடில்லா 57 ஆயிரம் பேருக்கு வீடு, தண்டையார்பேட்டையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, 10 நடமாடும் மருத்துவமனைகள், வேலைவாய்ப்பு ஆலோசனை மையம், புதிய மீன் அங்காடி, முக்கிய பேருந்து நிறுத்தங்கள், சாலையோர பூங்காக்களில் கைபேசி சார்ஜிங் மற்றும் கட்டணமில்லா வைபை இணைய வசதி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com/tamilnadu/வெள்ளம்-வந்தபோது-யாரும்-வரவில்லையே-டிடிவி-தினகரனை-முற்றுகையிட்ட-மக்கள்/article9603526.ece?homepage=true

Link to comment
Share on other sites

அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன தினகரன் : பிரசாரத்தின் போது பரபரப்பு
 
 
 

ஆர்.கே.நகரில் களமிறங்கியுள்ள, சசிகலா அக்கா மகனும், அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளருமான தினகரனை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க முடியாமல், அவர் திணறினார்.

 

Tamil_News_large_173943320170327230459_318_219.jpg

 

ஆட்சியையும் கொண்டு வர முடிவு



ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பின்னால், பலரும் அணிவகுத்தனர்.எனினும், சசிகலா சிறை செல்லும் முன், தினகரனை துணை பொதுச் செயலராக்கினார். அவர், கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், ஆட்சியையும் கொண்டு வர முடிவு செய்துள்ளார். அதற்காக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களமிறங்கி உள்ளார்.

பொதுமக்களிடம் எதிர்ப்பு இருந்தாலும், பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து, தேர்தல் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை, 9:50 மணிக்கு,38வது வட்டத்திற்கு உட்பட்ட, துர்காதேவி நகர், எழில் நகர், எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில், கட்சி நிர்வாகிகளுடன், தொப்பி அணிந்தபடி நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும் ஓட்டு சேகரித்தார்.
 

வறுத்தெடுத்தனர்


எழில் நகரில் ஓட்டு கேட்டு சென்ற போது, அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஜெ.,யின் சொந்த தொகுதியாக இருந்தும், ஆர்.கே.நகரில், எந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. மீண்டும் எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள்' என, கேள்விகளால் வறுத்தெடுத்தனர்.
உடனே, சுதாரித்த கட்சிநிர்வாகிகள், 'உங்கள் ஓட்டு தொப்பிக்கே' என, கோஷமிட்டப்படி, அவர்களை பேச விடாமல் தடுத்தனர். உடனே, தப்பித்தோம் என, அவசரமாக பிரசார வாகனத்தில், தினகரன் ஏற முயன்றார்.

அப்போது, அவரை ஆரத்தி எடுப்பதற்காக, அவரது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்திருந்த பெண்களும், 'ஜெ., இருந்த வரை, எதுவும் நடக்கவில்லை. குப்பை மேடு

 

அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதை அகற்றவில்லை. நீங்கள் எந்த முகத்தோடு வருகிறீர்கள்' என, கேள்வி கேட்க துவங்கினர்.
 

வாக்குறுதி


பதிலளிக்க முடியாமல் தடுமாறிய தினகரன், அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். அடுத்த தெருவிற்கு சென்ற தினகரன், ''ஜெ.,விடம், 57 ஆயிரம் மனுக்கள், வீடு கேட்டு கொடுக்கப்பட்டு உள்ளன. அதை, நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி தருவோம். கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்ற கோரிக்கை விடுத்தனர். இங்கு, சுற்றுச்சூழலை பாதிக்காத, நவீன குப்பை கிடங்கு அமைக்கப்படும்,'' என, வாக்குறுதி அளித்தார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1739433

Link to comment
Share on other sites

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., - சசிகலா அணி வேட்பாளர் தினகரனுக்கு, திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால், 70 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் குறிவைத்து, பணப் பட்டுவாடா செய்ய, தினகரன் ஆட்கள் திட்டமிட்டு உள்ளனர். வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

Tamil_News_large_174015820170328234425_318_219.jpg

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், ஆட்சிக்கு தலைமை ஏற்கலாம் என்ற எண்ணத்தில், சசிகலா குடும்பத்தினரால், தினகரன் களமிறக்கப்பட்டு உள்ளார். தொகுதி
மக்களிடம், சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதால், ஜெ.,வை முன்னிலைப்படுத்தி, அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தில், சசிகலா பெயர், படம் போன்ற வற்றை அறவே தவிர்த்து, சசிகலாவுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல, தொகுதியை வலம் வருகிறார். எனினும், சசிகலா குடும்பத்தின் மீதான எதிர்ப்பை, மக்கள் இவரிடம் வெளிப்படையாக காட்ட துவங்கி உள்ளனர். அதனால், அவர் ஓட்டு கேட்டு

செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொகுதியில் உள்ள, எழில் நகர் பகுதியில், நேற்று முன்தினம் ஓட்டு கேட்டு சென்ற போது, தினகரனை முற்றுகையிட்டு, பெண்கள் சரமாரி யாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க முடியாமல், அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

அவருக்கு ஆதரவாக, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளஅமைச்சர்கள், எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் என, அனைவருமே, இது போன்ற எதிர்ப்பை, தொகுதி முழுவதும் சந்தித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை, மக்கள் திட்டி தீர்க்கும் வீடியோ, சமூக வலைதளங் களில் பரவி வருகிறது.

இந்நிலையில், தோல்வியை தவிர்க்க, 70 ஆயிரம் வாக்காளர்களை குறிவைத்து, பணப்
பட்டுவாடா செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தொகுதி முழுவதும் சுற்றி வந்தாலும், எதிர்ப்பை தான் சம்பாதிக்க வேண்டும் என்பதால், குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த மக்களை மட்டும், 'கவனிப்பு' மூலம் கவர திட்டமிட்டு உள்ளனர்.

அதன்படி, பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவோர் யார் என்ற கணக்கெடுப்பு நடத்தப் பட்டு வருகிறது. அது போன்ற வாக்காளர்களை மட்டும், தனியாக கவனிக்க, ஆட்களை நியமித் துள்ளனர். அவர்கள்,அந்த பகுதிகளுக்கு சென்று, ஆண் வாக்காளராக இருந்தால்,பணம் கொடுக்க

 

திட்டமிட்டு உள்ளனர். பெண்களாக இருந்தால், சத்தியம் வாங்கிக் கொண்டு, அவர்கள் விரும்பும் பரிசு பொருட்களை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இது போன்ற கவனிப்புகளை, அந்தந்த பகுதி நிர்வாகிகள் முன்னிலையில் மேற்கொள்ள, ரகசிய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதையறிந்த, தி.மு.க., மற்றும் பன்னீர் அணியினர், பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனில், புகார் மனு கொடுத்துள்ளனர்.
 

தொப்பிகள் ஏராளம்!


தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, ஓட்டு கேட்டு செல்லும் இடங் களில், அனைவருக்கும் தொப்பி வினியோகம் செய்கின்றனர். வெயிலுக்கு உதவும் என்பதால், எல்லாரும் வாங்கி அணிகின்றனர். இதை தடுக்க வேண்டும் என, மற்ற வேட்பாளர்கள், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
 

வெளியே தாராளம்!


ஆர்.கே.நகர் தொகுதியில், வீடு வீடாக சென்று பணம் கொடுப்பதை, தி.மு.க., மற்றும் பன்னீர் அணியினர் தடுத்து வருகின்றனர். அதனால், தினகரன் தரப்பினர், ஆர்.கே.நகர் தொகுதியை ஒட்டி அமைந்துள்ள, பெரம்பூர், திரு.வி.க., நகர், ராயபுரம், துறைமுகம் போன்ற தொகுதிகளில், திருமண மண்டபத்திற்கு, வாக்காளர்களை வரவழைத்து, பணம் வினியோகம் செய்ய உள்ளனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1740158

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.