Jump to content

ரஜினி என்னும் கோமாளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி என்னும் கோமாளி

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது  இலங்கை பயணம், அரசியல் ஆக்கப்பட்டதால் தனது பயணத்தை கைவிடுவதாக கூறி நீண்ட நெடிய மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். யாரை  முட்டாள் ஆக்க இந்த முயற்சி ரஜினி சார் !  தலைவா ! தலைவா ! என்ற சரணாகதி கோசம் போட்ட தலைமுறை எல்லாம் போயே போய் விட்டது. டிஜிட்டல் தலைமுறைகளின் காலம் இது.

 

raji.jpg

 

அட கிளம்புங்க ஜி ! காத்து வரட்டும் !

வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காக  லைக்கா  நிறுவன தலைவர் சுபாஷ்கரன், 150 வீடுகளை கட்டி, தனது தாயார் பெயரில் அர்பணிக்கிறார். நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை ! அவர் அன்பானவர் ! கருணை உள்ளவர் தான். ஆனால் நீங்கள் சொல்ல மறந்தது, மறைத்தது,  சுபாஷ்கரனுடன் பெரும் கருணை உள்ளம் கொண்ட ராஜபக்சேவின் மருமகன் கிமல் கெட்டியின் வணிக தொடர்புகள் ?
அது சரி சுபாஷ்கரன் செய்கிறார் ! நீங்கள் என்ன செய்தீர்கள் ! நீங்க உங்க பாக்கெட் இருந்து ஒரு செங்கலாவது எடுத்து வச்சு இருப்பிங்களா ? அட போக ஜி ! காத்து வரட்டும்.

சினிமா வசனம் டா ஸ்வாமி

காலம் காலமாய் வாழ்ந்த, தங்களின் பூமிக்காக, உரிமைக்காக, கவுரவத்திற்காக, லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்த,  தங்களை தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்து மடிந்த இடங்களை பார்த்து, அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க விருப்பம். அடேங்கப்பா என்ன வசனம் ! என்ன நடிப்பு ! உலக மகா நடிப்பு டா ஸ்வாமி !  ரஜினி சார் ! உங்களுக்கு இப்போது தான் தெரிந்ததா வீர பூமியை ? போராளிகளை ? இனம் காக்க தன் உயிர் தந்த மாவீரர்களின் சரித்திர பூமியை ? இப்போது தான் தெரிந்ததா ?

கடல் கடந்து, கண்ணீர் கடந்து, படகு இழந்து, உயிர் துறந்த, மீனவர்கள் பற்றி எல்லாம் நீங்கள் திடீர் ஞானோதயம் கொண்டு பேசுவது எல்லாம் நம்புர மாதிரியா இருக்கு ? அத விடுங்க 100 மீனவர்கள்  நடு கடலில்  வீர மரணம் அடைந்த போது பேசாத நீங்கள், தற்போது மீனவர் நலம் பற்றி, சிறிசேனா விடம் பேச போகிறேன் என்று. ஏன் ரஜினி சார் ! சிறிசேனாவிடம்  பேசுமாறு நேற்று தான் பாபா கனவில் சொன்னாரா ?  

இதுவும்  வீர பூமி தான்

முல்லை  வாயில் முற்றம் மற்றும் வவுனியாவின்  யுத்தம் நடந்த போது நீங்கள் எங்கு போய் இருந்தீர்கள் இமய மலைக்கா ? வயிறு எரியுது சார் ! நீங்க எல்லாம் மா வீரர்கள் பூமி பற்றியும்,  மாவீரர்கள் சரித்திரம் பற்றியும், பேசுவதும். நெடுவாசல் போராட்ட களம் கூட மா வீரர்களின்   களம் தான். டெல்லியில் 13 வது நாளாக போராடுகிறானே அந்த வயதான விவசாயிகள் கூட போராளிகள் தான். வலைத்தளங்களில் மூலம் அறிந்தேன், கண்ணீர் விட்டு அழுத, வயதான அந்த  பெண் விவசாயி கூட போராளி தான். நீங்கள் இலங்கை எல்லாம் போக வேண்டாம் ! இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதேனும் ஒரு வார்த்தை பேசி இருப்பீர்களா என்ன ?

நீ நடிகன் டா

கலைஞன் என்பவன் மக்களை மகிழ்விப்பவன் மட்டும் அல்ல, சிந்திக்க வைப்பவன். அவன் ஜனங்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவன். நீங்கள் பேசும் அனைத்திற்கும் கை தட்டு கிடைக்கும் என நினைப்பது முட்டாள்தனம். இந்த உலகம் ஒரு நாடக மேடை என்பதையும், நாம் அனைவரும் நடிகர்கள் என்பதையும்,  மறுபடியும் நீங்கள்  எங்களுக்கு சொல்லி காட்டி இருக்கிறீர்கள்.  வைகோ, திருமா, ராமதாஸ் இவர்கள் சொல்லி தான் நீங்கள் போக வில்லையா என்ன ? அறிக்கை விட்ட  நீங்கள் கோமாளியா ? அறிக்கை கேட்டு சிந்தித்த நாங்கள் கோமாளியா ?

நன்றி :தமிழ்வெப்துனியா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.