Jump to content

என் முதலாவது காதலி...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

என் முதலாவது காதலியே...!

உன்னை நெஞ்சோடு…,

இறுக்கமாக அணைத்த நாள்,

இன்னும் நினைவிருக்கின்றது!

 

நீ…,!

எனக்கு மட்டுமே என்று..,

பிரத்தியேகமாக...

படைக்கப் பட்டவள்!

 

உனது அறிமுகப் பக்கத்தில்,

எனது விம்பத்தையே தாங்குகிறாயே!

இதை விடவும்…,,

எனக்கென்ன வேண்டும்?

உனது நிறம் கறுப்புத் தான்!

அதுக்காக….,

அந்தக் கோபாலனே கறுப்புத் தானே!

அதுவே உனது தனித்துவமல்லவா?

 

உன்னைப்  பற்றி…,

எனக்கு எப்பவுமே பெருமை தான்!

ஏன் தெரியுமா?

ஜனநாயகமும்...சோசலிசமும்,

உடன் பிறந்த குழந்தைள் போல..

உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!,

உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது?

 

என்னவளே...!

தோற்றத்தில்…,

நீ கொஞ்சம் பெரிசு தான்!

அதுவும் நல்லது தானே!

அதிலும்,,,

ஒரு வசதி தெரியுமா?

எந்த தேசத்தின் பணமானாலும்,

உனது ஆடைகளுக்குள் இரகசியமாக,

மறைத்து விடலாமே!

 

உன்னை அடைவதற்கு..,

நான் பட்ட பாடு…,

உன்னைத் தொடுவதற்கு,

நான் கடந்த தடைகள்,

அப்பப்பா..!

இப்போது நினைத்தாலும்,

இதயத்தில் இலேசாக  வலிக்கிறதே!

விதானையிடம் கூட…,

கையெழுத்துக்கு அலைந்தேன்!

விதானையின் விடுப்புக்களுக்கு…,

விடை சொல்லிக் களைத்தேன்!

பாம்புகள் போல நீண்ட வரிசைகளில்,

பல பகல் பொழுதுகள்..,,

பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்!

 

நாளைக்கு வந்திருவாள் என்றார்கள்,

நாலு நாட்கள் எடுத்தது!

 

சில வேளைகளில்..,

உனது அழகிய மேனியில்..

அன்னியர்கள் சிலர்,

ஓங்கிக் குத்துவார்கள்!

அந்த வேளைகளில்..,

உன்னை விடவும்,

எனக்குத் தான் வலிக்கும்!

 

ஒரு நாள்…,

உன்னை அந்நியர்களின் வீட்டில்,

அனாதரவாய்க் கை விட்டேன்!

எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா?

உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்!

 

எனக்கோ,

இரவு முழுவதும் தூக்கமேயில்லை!

எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்..,

இமைகளை மூட முடியவில்லை!

 

விடிந்ததும்..,

ஓடோடி வந்தேன் உன்னிடம்!

 

உன்னைக் காணவில்லை என்றார்கள்!

இதயத்தின் துடிப்பே,,,.

அடங்கிப் போன உணர்வு!

 

இரண்டு நாட்களின் பின்னர்..,

அந்த உத்தியோகத்தரின்,

'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,,

உனது சக தோழிகளுடன்..,

நாலாவது காலாகி.....

நீ  மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்!

 

அப்போதும் கூடப் பார்..!

உனது கறுப்பு நிறம் தான்…,

உன்னை மீட்டுத் தந்தது!

 

பத்து வருடங்களின் பின்னர்…,

 

இன்னொரு காதலி வந்தாள்!

 

நீ எனது முதல் காதலியல்லவா?

உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை!

கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்!

வஞ்சகர்கள் அவர்கள்!

இரண்டு லட்சம் கேட்டார்கள்!

 

இரண்டு லட்சத்தை..,

எங்கே தேடுவேன்!

 

அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்!

என் சொந்தங்கள் மீது,,,,

எரி குண்டுகள் போடவாம்!

 

ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்!

உனது முகம் வாடியது தெரிந்தது!

இறுக்கமாய் மனதை வரித்து,

உன்னிடம் சொன்னேன்…!

 

சரி தான் …. போடி!

 

(உருவகக் கவிதை)

a-contemporary-ordinary-sri-lankan-passp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்புக் கடவுச் சீட்டு கலக்குது....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..... முதல் காதலி
நம்ம ரோமியோ காதலைப்பற்றி எழுதிக் கலக்கப்போகிறார் என்று பார்த்தால் பிரிய சகியை கடைசியில் "சரிதான் போடி" என்று சொல்லிவிட்டாரே

இருந்தாலு அவள்

"அட  அற்பப்பதரே உன் ஒருவனையே நேசித்த உத்தமியல்லவா  என்னையா போடி என்றாய்"

என்று கேட்காமல் ஊமையாகி போனதைத்தான் என்னால் தாங்க முடியவில்லைtw_bawling:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு உருவகக் கவிதை நன்றாக எழுதியுள்ளீர்கள். நான்கூட இன்னும் முதல் காதலியை பத்திரமாக பெட்டியில் வைத்துள்ளேன். முதலுக்கு என்றும் முதல் மரியாதைதான். பாராட்டுக்கள் புங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே காதலிகளை, துணைகளை பழசாகப் போனால் மாற்றவும் வழி இருக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எதோ புங்கை துணிவா காதலி பற்றி எழுதத்தான் போறார். வாசிக்கலாம் என எண்ணி ஓடோடி வந்தேன். என்னை ஏமாற்றிவிட்டீர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை புங்கை.

குள்ளநரி ஜே ஆர் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய கறுப்பு காதலி முழு தமிழர்களையுமே வசப்படுத்திவிட்டாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

 

என் முதலாவது காதலியே...!

உன்னை நெஞ்சோடு…,

இறுக்கமாக அணைத்த நாள்,

இன்னும் நினைவிருக்கின்றது!

------

இரண்டு நாட்களின் பின்னர்..,

அந்த உத்தியோகத்தரின்,

'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,,

உனது சக தோழிகளுடன்..,

நாலாவது காலாகி.....

நீ  மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்!

புங்கையூரானின்  கவிதையை  ஆரம்பத்தில் வாசித்த போது....
அவரின் காதலியாக... "லப்ரொப்", அல்லது  "ஐ போன்" ஆக இருக்குமோ என்று நினைத்தேன். 
இடையில்... விதானையார் எல்லாம் வந்த போது... அந்த நினைப்பை மாற்ற வேண்டி வந்தது.
கடைசியில்... நீங்கள், கடவுச் சீட்டை  குறிப்பிடும் வரை.. என்னால் ஊகிக்க  முடியாமல் இருந்தது, 
உங்கள் கவிதைக்கு கிடைத்த வெற்றி. :)

கடவுச் சீட்டை... மேசை ஆடாமல் இருக்க, முண்டு கொடுத்த அநியாயத்தை... 
எங்கு போய் சொல்வது என்றுதான் தெரியவில்லை.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தூள் ....எனக்கும் இடக்கிடை கவிதையில் கை வைப்போமோ என்று ஆசை வாரது.....எழுத வருதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/03/2017 at 4:17 AM, suvy said:

கருப்புக் கடவுச் சீட்டு கலக்குது....!  tw_blush: 

நன்றி...சுவியர்!

அதுகும் அதில எழுதியிருக்கிற எழுத்து....இருபத்தியிரண்டு கரட் தங்கமாம்!

உண்மையே...?

 

On 28/03/2017 at 4:26 AM, வல்வை சகாறா said:

ஆ..... முதல் காதலி
நம்ம ரோமியோ காதலைப்பற்றி எழுதிக் கலக்கப்போகிறார் என்று பார்த்தால் பிரிய சகியை கடைசியில் "சரிதான் போடி" என்று சொல்லிவிட்டாரே

இருந்தாலு அவள்

"அட  அற்பப்பதரே உன் ஒருவனையே நேசித்த உத்தமியல்லவா  என்னையா போடி என்றாய்"

என்று கேட்காமல் ஊமையாகி போனதைத்தான் என்னால் தாங்க முடியவில்லைtw_bawling:

நான் நினைச்சன்!

தூண்டிலை..எந்த நேரம் போடுறது...மீனை எந்த நேரம் கழட்டி விடுகிறது எண்ட 'கலை' தெரியாவிட்டால்..பின் விளைவுகள் பெரிய பார தூரமாய்ப் போய்விடும் என்பது எனது பட்டறிவு!

இப்படித்தான் ஒருத்தி....உங்களுக்காக என்னவெல்லாம் வேணுமோ..அவ்வளவும் செய்வான் எண்டாள்!

சரி...சரி....உங்கட அப்பா, அம்மாவோட ஒருக்காக் கதைக்க வேணும்..ஒரு அப்பொயின்ட்மென்ற் எடுத்துத் தாருமன் எண்டு கேட்டன்!

உங்களுக்கென்ன விசர், கிசர் ஏதும் பிடிச்சிருக்கோ ? அக்காக்கள் இருக்கேக்கை..நீங்கள் கேட்கிறது வடிவில்லை எண்டு சொன்னாள்!

இவளை நம்பியிருந்தால்...இப்ப நம்மட நிலைமை எப்படி இருந்திருக்கும்!

சும்மா உணர்ச்சி வசப்படாமாவ் யோசிச்சுப் பாருங்கோ..! (

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி...சகாறா! 

On 28/03/2017 at 6:01 AM, Kavallur Kanmani said:

நல்லதொரு உருவகக் கவிதை நன்றாக எழுதியுள்ளீர்கள். நான்கூட இன்னும் முதல் காதலியை பத்திரமாக பெட்டியில் வைத்துள்ளேன். முதலுக்கு என்றும் முதல் மரியாதைதான். பாராட்டுக்கள் புங்கை.

நன்றி...காவலூர் கண்மணி!

என்னுடைய முதல் காதலியையும்..நான் வேண்டாம் என்று எவ்வளவு வற்புறுத்தியும் ..மேல் மூலையில... ஒரு செல்ல வெட்டு ஒண்டு வேட்டிப்போட்டுத் திரும்பத் தந்து விட்டார்கள்!

எங்கேயோ..வங்கியில் ஒரு பெட்டிக்குள்ள கிடக்க வேண்டும்! அதுக்கும், வேறு சில பொருட்களுக்கும் சேர்த்து..வருடத்துக்கு நூற்றி அறுபது டொலர் வருகுது!

நீங்களே...சொல்லுங்கோ...நான் அவளை நல்லா வைச்சிருக்கிறனா இல்லையா எண்டு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/03/2017 at 6:22 AM, கிருபன் said:

இப்படியே காதலிகளை, துணைகளை பழசாகப் போனால் மாற்றவும் வழி இருக்கவேண்டும்?

அப்பிடிப் போடுங்கோ...அரிவாளை கிருபன்!

ஒரு ஏழு வருசக் கொண்ட்ராக் முதலில் சைன் பண்ண வேணும்!

பிறகு ஒவ்வொரு ஏழு வருசமும்...இரண்டு பேருக்கும் விருப்பமெண்டால்...மீண்டும் புதுப்பிக்கப் படலாம்!

பதினெட்டு வயது வரும் வரை..பிள்ளை குட்டியள் இருந்தால் அவர்களை எப்படிப் பாதுகாப்பது,படிப்பிப்பது..அவர்கள் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதும் அந்த ஒப்பந்தங்களில் உள்ளடக்கப் பட வேண்டும்!

ஒரு பகுதிக்கு விருப்பமில்லை என்றால்...போய்க் கொண்டேயிருக்க வேண்டியது தான்!

வருகைக்கு நன்றி....கிருபன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27.3.2017 at 10:26 AM, புங்கையூரன் said:

பத்து வருடங்களின் பின்னர்…,

இன்னொரு காதலி வந்தாள்!

இன்னொரு காதலி பிறவுண் கலரில் வந்தாலும்.....

நான் அந்த பழைய கறுப்பியை விடவேயில்லை.றங்குப்பெட்டியில் வைச்சிருக்கிறன்..

Bildergebnis für deutsche pass

புங்கையரே! கவிதை பிரமாதம். tw_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.