Jump to content

’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் !


Recommended Posts

’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் !

            தினகரன்

டைத்தேர்தல் நடக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கிவிட்டதால்,தொகுதி முழுக்க பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை இல்லாமல்  நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அரசியல் கட்சியான தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதனால் தொகுதி முழுக்க உதயசூரியன் சின்னம் மட்டும்தான் எல்லோரின் கண்களுக்கும் பழகிய சின்னமாக காட்சியளிக்கிறது.மீதியுள்ள சின்னங்கள் எல்லாம் இன்னும் அவ்வளவாக வெளியே காணமுடியவில்லை.இதில் டி.டி.வி.தினகரனின் தொப்பி சின்னமும், மது சூதனின் இரட்டை மின்விளக்கு சின்னமும் பல்வேறு இடங்களில் போஸ்டர் வடிவிலும்,பேனர் வடிவிலும் காண கிடைக்கின்றன.தினகரனின் சார்பில் அவரின் ஆதரவாளர்கள் வைத்துள்ள விளம்பர பேனர்களில் சசிகலா மிஸ்ஸிங். ஆனால் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டும் பளிச்சிடுகின்றன.

ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ள ஊடகங்கள்!  

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுடன் பேட்டி எடுப்பதிலும் அதனை லைவ் செய்வதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் தொலைக்காட்சிகளின் குழுவினர் இப்போது இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகரிலும் முகாமிட்டுள்ளனர்.அரசியல் அரங்கம்,வேட்பாளருடன் ஒருநாள் என்ற பல்வேறு தலைப்புகளில் ஒளிபரப்பு செய்யப்படும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கென பிரத்யேக பேட்டிகள், காட்சிகள் படம் பிடிக்க தொலைக்காட்சிகள் ஆர்.கே.நகரின் கொருக்குப்பேட்டை,தண்டையார்ப்பேட்டை,வ.உ.சி.நகர்,காமராஜ் நகர் என்று பல இடங்களில் குழுமியுள்ளனர்.

                   லோகநாதன்

வட்டமடிக்கும் வெளிமாவட்ட வாகனங்கள்!  

பிரசார நேரங்களில் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்.அதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக பிளவுபட்ட நிலையில் நடக்கிறது. இதனால் பிளவு பட்ட அதிமுக பிரமுகர்களால் ஆர்.கே.நகர் நிரம்பியுள்ளது.அதிமுக அம்மா அணி சார்பில் களம் இறங்கியுள்ள டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி , ராமநாதபுரம், சேலம், கும்பகோணம்,திருச்சி என்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளனர்.காலை முதல் மாலைவரை ஆர்.கே.நகரின் எல்லா சாலைகளிலும் வெளிமாவட்ட பதிவெண் கொண்ட கார்கள் நூற்றுக்கணக்கில் அணிவகுத்துச் செல்கின்றன.இதனால் திரும்புகிற பக்கம் எல்லாம் வெள்ளைச் சட்டைகள் தென்படுகின்றன.ஆனால் யாரும் 'சின்னம்மா' குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் கவனமாக வாக்குச் சேகரிக்கிறார்கள் என்கிறார்கள் தொகுதி வாசிகள்.

                மதுசூதனன்

தினகரனை முந்திய மதுசூதனன்!

டி.டி.வி. தினகரன் நாளை மறுநாள்,ஆதி ஆந்திரர்கள் அதிகம் வசிக்கும் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க வருகிறார் என்பதை அறிந்துகொண்ட மதுசூதனன், இன்றே தனது பிரசாரத்தை அந்தப் பகுதிகளில் தொடங்கினார். அதுவும் ஆதி ஆந்திரர்களின் தாய் மொழியான தெலுங்கில் பேசி மதுசூதனன் வாக்குச் சேகரித்தார். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஓட்டுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒன்றாய் இருந்த கட்சியினர் இப்போது இரண்டு மூன்று அணியாய்ப் பிரிந்து ஓட்டு கேட்குறாங்களே'...என்ற குழப்பத்தில் வாக்காளர்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பிரசாரத்தில் இறங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

ஆர்.கே.நகர் வேட்பாளராக களம் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.லோகநாதன் தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார்.அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.பி.ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்.கே.நகர் முழுக்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் பிரசார சூடு தகிக்க தொடங்கிவிட்டது.

http://www.vikatan.com/news/politics/84601-all-political-parties-gears-up-for-rk-nagar-bypoll.html

Link to comment
Share on other sites

சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

 
சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்
 

ஆர்.கே.நகர் தொகுதியில் ‘‘இரட்டை இலை’’ சின்னம் இல்லாததை அ.தி.மு.க.வின் இரு அணியினருமே பெரும் குறையாக கருதுகிறார்கள்.

முன்பெல்லாம் அ.தி.மு.க. வினர் ஓட்டு கேட்க செல்லும்போது இரண்டு விரலை ஆங்கில ‘வி’ எழுத்து வடிவில் விரித்து காட்டுவார்கள். அடுத்த வினாடியே அது இரட்டை இலை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

இது அ.தி.மு.க.வினருக்கு மட்டுமின்றி வாக்காளர்களுக்கும் மிக, மிக எளிதானதாக இருந்தது.

ஆனால் இன்று ஆர்.கே.நகரில் அத்தகைய சூழ்நிலை இல்லை. அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்தவர்கள் தொப்பியோடு அலைகிறார்கள். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் இரட்டை விளக்கு மின்கம்பத்துடன் சுற்றி வருகிறார்கள்.

தொப்பியையும், மின் கம்பத்தையும் மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அ.தி.மு.வின் இரு அணியினருக்கும் ஏற்பட்டுள்ளது. தொடர் விளம்பரம் மற்றும் இடைவிடாத பிரசாரம் மூலம் தொப்பி, மின்கம்பம் சின்னத்தை மக்களுக்கு தெரியும் வகையில் பிரபலப்படுத்தி விட முடியும் என்று இரு அணியினரும் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சிகளில் அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் நிச்சயம் ஓரளவு வெற்றி கிடைத்து விடும். இதன் காரணமாக மக்களுக்கும் இந்த தடவை இரட்டை இலைக்கு பதில் ஒன்று இரட்டை விளக்கு மின் கம்பத்துக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தெளிவான மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

ஆனால் 12-ந்தேதி ஓட்டு போட போகும் போது அவர்கள் இரட்டை விளக்கு மின்கம்பம் அல்லது தொப்பி சின்னத்தை தேடி திணற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைய பேர் போட்டியிடுவதுதான்.

60-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 4 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட கூடும். ஒவ்வொரு எந்திரத்திலும் தலா 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள்தான் இடம் பெற்றிருக்கும். இப்படி 4 எந்திரங்களிலும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் வரிசையாக இருக்கும்.

இதில் எந்த எந்திரத்தில் எந்த இடத்தில் தொப்பி அல்லது மின்கம்பம் சின்னம் உள்ளது என்பதை அ.தி.மு.க. வினர் தேட வேண்டிய திருக்கும். இந்த சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்களோடு சின்னமாக கலந்து இருக்கும் என்பதால் சாதாரண மக்களை அது திணற வைத்து விடும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் முதலில் இடம் பெறும். இதனால் 2015-ம் மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஆர்.கே.நகரில் தேர்தல்கள் நடந்தபோது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் எந்திரத்தில் முதல் சின்னமாக இருந்தது. வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந் ததுமே பட்டனை அமுக்கி விட்டு வந்து விட்டனர். 12-ந்தேதி அப்படி செய்ய முடியாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னத்தை வரிசைப்படுத்துவதற்காக 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 38-வது பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மூன்று விதமாக வரிசைப்படுத்தப் படுகின்றன.

அதன்படி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் முதலில் இடம் பெறுவார்கள். அந்த வகையில் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் அடிப்படையில் முதலில் வருவார்கள். இவர்களைத் தொடர்ந்து மாநில கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள தி.மு.க. வேட்பாளரின் பெயர் அடுத்ததாக இடம் பெறும். எனவே உதயசூரி யன், தாமரை சின்னங்கள் முதல் மின்னணு எந்திரத்தில் முதலாவதாக உயரத்தில் இருக்கும்.

இரண்டாவதாக தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்து இருந்தும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சி களின் வேட்பாளர் களும், அவர்களது சின்னங்களும் இடம் பெறும். தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சிகள் இந்த வரிசைக்கு வருவார்கள்.

மூன்றாவதாக சுயேட்சை வேட்பாளர்களின் பெயரும் அவர்களுக்குரிய சின்னங்களும் இடம் பெறும். சுயேட்சைகள் அதிகம் உள்ளதால் அவர்களது பெயர்கள் அகர வரிசைப்படி தொகுக்கப்படும்.

அப்போது தினகரன், மதுசூதனன், ஜெ.தீபா ஆகிய மூவரின் பெயரும் சுயேட்சை வேட்பாளர்களில் எத்தனைவது இடத்தில் இடம் பெறும் என்பது தெரியவரும். 4 எந்திரங்களில் அவர்களது பெயர், சின்னம் எந்த எந்திரத்தில், எந்த இடத்தில் இடம் பெறும் என்பதும் தெரிய வரும்.

வாக்காளர்கள் தொப்பி யையும், மின்கம்பத்தையும் தேடி திணறக் கூடாது என்பதற்காக, அந்த சின்னம் இருக்கும் பகுதியை வரைபடம் மூலம் மக்களுக்கு விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த அ.தி.மு.க.வின் இரு அணியினரும் திட்ட மிட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தைப் பொருத்தே வாக்காளர் கள் தொப்பி அல்லது மின் கம்பத்தை தேடி அலையாமல் எளிதில் வாக்களிக்க முடியும்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/26132108/1076101/RK-Nagar-byelection-admk-symbol-order-in-independent.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொகுதியில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிகை 63 பேர்களுக்கு மேலிருந்தால் தற்போதிருக்கும் வாக்கு இயந்திரங்கள் கையாள முடியாது, அதனால் பழமை முறையான காகிதத்தில் புள்ளடி போடும் நடைமுறைக்கு மாறவேண்டியிருக்குமென சமீபத்திய செய்தியில் படித்தேனே..?think_smiley_50.gif

ஒவ்வொரு நாளும் மற்றுபட்ட செய்திகளால் ஒரே குழப்பமாக உள்ளதே..! think_smiley_47.gif

வாக்காளர்கள் ஓட்டுப்போடும் முறை பற்றி தெளிவாக இருந்தால் சரிதான்..!!

Link to comment
Share on other sites

தண்டையார்பேட்டையில் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா?: தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு

 

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்ததும் தி.மு.க.வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
தண்டையார்பேட்டையில் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா?: தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
 

ராயபுரம்:

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 23-ந்தேதி முடிவடைந்தது. அ.தி.மு.க. 2 அணியாகவும், தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தீபா பேரவை, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. 8 முணைப்போட்டி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினர் முற்றுகையால் பரபரப்பாக காணப்படுகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக வேட்பாளர் மதுசூதனன், மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. இதையடுத்து பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் கமி‌ஷன் தீவர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிலில் 200 பெண்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது.

இதுபற்றி அறிந்ததும் தி.மு.க. வட்ட செயலாளர் குமார் தலைமையில் 100-க் கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார் மற்றும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரத்துக்கு பின்னர் பறக்கும்படை அதிகாரிகளும், போலீசாரும் வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து கோவில் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பணம் எதுவும் சிக்கவில்லை. ஒரு நோட்டு மட்டும் சிக்கியது. அதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்களின் பெயர் மற்றும் அவர்களின் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

0D179F85-CD07-41E6-AA51-16703C9F4451_L_s

அங்கிருந்த பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி இவ்வளவு பேர் இங்கு திரண்டு இருப்பதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, சாமி கும்பிட வந்ததாக மட்டும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தி.மு.க. வினர் கூறும்போது, “ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காகவே பெண்களை இங்கு அழைத்து உள்ளனர். 2 அமைச்சர்களும் அங்கு இருந்தனர். நாங்கள் திரண்டதும் அமைச்சர்கள் வெளியே சென்று விட்டனர்.

புதிதாக கட்டப்பட்டு உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளது. வெற்றி பெற செய்தால் அதனை ஒதுக்கி தருவதாகவும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

பணப்பட்டுவாடா செய்யும் அரசியல் கட்சியினர் மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றனர்.

தி.மு.க. வினர் கொடுத்த தகவலின் அதே பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரது வீட்டிலும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/26162008/1076130/thandayarpettai-temple-cash-Distributed-200-woman.vpf

Link to comment
Share on other sites

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்- வாக்குசீட்டு மூலம் தேர்தல்?

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. 63 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. 63-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் வாக்குச் சீட்டு முறை மூலம் தேர்தல் நடைபெறும். தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

 

மருதுகணேஷ்( திமுக), மதுசூதனன் (அதிமுக புரட்சித் தலைவி அம்மா), டிடிவி தினகரன்( அதிமுக அம்மா), மதிவாணன் (தேமுதிக), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்கட்சி), கங்கை அமரன் (பாஜக), தீபா (மேட் பேரவை) உட்பட 70 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாற்று வேட்பாளர்களுடன் மொத்தம் 82 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளை மாலைதான் மொத்தம் எத்தனை பேர் களத்தில் உள்ளனர் என்ற நிலவரம் தெரியவரும்.

63 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/ec-switch-ballot-paper-system-rk-nagar-election-277968.html

Link to comment
Share on other sites

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றி,கள்ள ஓட்டுகள்
போட தினகரன் தரப்பு சூழ்ச்சி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

Tamil_News_large_1738770_318_219.jpg

இதன் காரணமாகவே, அதிக சுயேச்சைகள் களமிறங்கி, 127 வேட்பு மனுக்கள் தாக்கலானதாக கூறப்படுகிறது. அத்துடன், வாக்காளர்களுக்கு விதவிதமான முறையில், பணம் கொடுக்கும் வேலைகளிலும், அவரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோவிலுக்குள், பெண்களுக்கு பணம் கொடுக்க முற்பட்ட போது, தி.மு.க., வினர் முற்றுகையிட்டதால், அமைச்சர்கள் ஓட்டம் பிடித்தனர்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிசம்பர், 5ல் மறைந்ததை அடுத்து, அவர் தேர்வான, ஆர்.கே.நகர் தொகுதியில், அடுத்த மாதம்,12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், தினகரன்; அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன்; தி.மு.க., சார்பில், மருது கணேஷ்; பா.ஜ., சார்பில், கங்கை அமரன்; ஜெ., அண்ணன் மகள் தீபா உட்பட, 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
 

தள்ளுபடி


மனுக்கள் பரிசீலனையின் போது, 70 பேர் சார்பில் தாக்கலான, 82 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். இன்று மாலை, 5:00 மணிக்கு, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலின் படி, வேட்பாளரின் பெயரும், அவரது சின்னமும்

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும்.

ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 வேட்பாளர்களின் புகைப்படங்கள் மற்றும் சின்னங்கள் மட்டுமே இடம் பெற முடியும். இதன் படி பார்த்தால், ஒரு தொகுதியில், நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இடம் பெறக் கூடிய அளவான,64வேட்பாளர்களில், 63 பேர் களத்தில் இருந்தால் மட்டுமே, ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியும். ஏனெனில், 64ல் ஒரு சின்னமாக, 'நோட்டா' இடம் பெறும்.
 

ஏழு பேர்


அதனால், தற்போதுள்ள, 70 பேரில், ஏழுபேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், ஓட்டுச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்படும். நேற்றைய நிலவரப்படி, எந்த ஒரு சுயேச்சை வேட்பாள ரும், மனுவை வாபஸ் பெறவில்லை. மேலும், தற்போது உள்ள, 70 வேட்பாளர்களில், 25க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தினகரன் துாண்டுதலில் தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுச் சாவடியில், வேட்பாளர் சார்பில், ஒரு ஏஜன்ட் அனுமதிக்கப்படுவார்.

தினகரன் துாண்டுதலில், 25க்கும் மேற்பட்டோர், சுயேச்சையாக போட்டியிட்டால், அவரின் ஆதரவாளர்கள் அதிக அளவில், பூத் ஏஜன்டு களாக, ஒவ்வொரு பூத்களிலும் இடம் பெற வாய்ப்பு உருவாகும். இதன் மூலம், பூத்களை கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், கள்ள ஓட்டு போட சூழ்ச்சி செய்துள்ள தும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், 63க்கும் மேற்பட்டோர் வேட்பாளர் களாக இருந்தால், ஓட்டுச்சீட்டு முறையில், ஓட்டுப்பதிவு நடக்கும்; அது, கள்ள ஓட்டுகள் போட மிகவும் வசதியாக இருக்கும் என்பதும், தினகரன் ஆதரவாளர்களின் கணிப்பு.
 

அமைச்சர்கள் ஓட்டம்


இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு,

 

தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவிலில், பெண்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக தகவல் பரவியது.உடன், தி.மு.க., வட்டச் செயலர் குமார் உட்பட, கட்சி நிர்வாகி கள் திரண்டனர். அப்போது, கோவிலின் உள்ளே, அமைச்சர் உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததை பார்த்ததும்,வெளி கதவை மூடிவிட்டு, தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பிற கட்சிகளின் நிர்வாகிகளும் அங்கு குவிந்தனர். தேர்தல் அதிகாரிகள் வருவதற்குள் சுதாரித்த அமைச்சர்கள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள், கோவிலின் மற்றொரு வாயில் வழியாக, தப்பி ஓடினர்.தேர்தல் அதிகாரிகள் வந்து, கோவிலில் சோதனை செய்த போது, நோட்டுப் புத்தகம் ஒன்று சிக்கியது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், அவர்களின் மொபைல் போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருந் தன. இதன் மூலம், பெண்களுக்கு, பணம் பட்டு வாடா செய்து, ஓட்டுகளைப் பெற திட்ட மிட்டதும் தெரிய வந்தது.

இதுபோல, தினகரன் தரப்பினர், விதவிதமான முறைகளில், தொடர்ந்து பணம் வினியோகம் செய்து வருவதாகவும், போலீசார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் பல தரப்பினரும் புகார் செய்துள்ளனர்.
 

போலீஸ் உதவியுடன் பணம்பட்டுவாடா: மதுசூதனன் பகீர்


காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள, விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகளிடம், மதுசூதனன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வரா னதும், மீனவர்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும். ஜெ., சொத்துகளை மீட்போம். தேர்தல் கமிஷன், ஒருதலை பட்சமாக செயல் படுகிறது.வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்ய,தண்டையார் பேட்டை, புது வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர்கள், தினகரனின் ஏஜன்டுகளாக செயல்படுகின்றனர்; அவர்கள் மீது புகார் செய்யப்படும்.இவ்வாறு மதுசூதனன் பேசினார். - நமது நிருபர்கள் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1738770

Link to comment
Share on other sites

சசிகலா அணி அமைச்சர்கள் மீது பகீர் குற்றச்சாட்டு!

udumalai radhakrishnan- udhaya kumar

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு சசிகலா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பணம் கொடுப்பதாக, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தி.மு.க புகார் அளித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். தி.மு.க, அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொகுதி முழுவதும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னர் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் இன்று புகார் அளித்துள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி இல்லை. இதனால், அவரது அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். மேலும், டெல்லி தலைமைத் தேர்தல் அலுவலகத்திலும் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்படும் என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/84678-d-m-k-lodges-complaint-against-ministers-radhakrishnan-and-udhaykumar-stating-bribe-at-r-k-nagar.html

Link to comment
Share on other sites

500 ரூபாய்க்கு ஆர்.கே.நகரில் ஆரத்தி!  -  போட்டி போடும் பெண்கள் 

தினகரன்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தால், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்சியினர் கொடுக்கின்றனர். இதனால், ஆரத்தி எடுக்க பெண்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. 

 ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது.  வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அ.தி.மு.க உள்கட்சி பூசலால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகள் உருவாகின. இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடுசெய்துள்ளது. 
இந்தச் சூழ்நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு வாக்குசேகரிக்க கட்சியினர் பெருந்திரளாகக் களமிறங்கியுள்ளனர்.  தொப்பி அணிந்த கட்சியினர், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் பிரசாரத்துக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொப்பி அணிந்துகொண்டு, தொகுதி முழுவதும் சசிகலா அணியினர் வலம் வருகின்றனர். பிரசார வாகனத்தில் தொப்பி அணிந்தபடி டி.டி.வி.தினகரனும் வாக்கு சேகரித்துவருகிறார்.  
பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், வயதுமுதிர்ச்சி காரணமாக அடிக்கடி சோர்ந்துபோனாலும், மக்கள் கூட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். வாக்குசேகரிப்பின்போது, தொகுதி மக்களின் பெயர்களைச் சொல்லி அழைக்கிறார். இது, அவருக்குப் பிளஸ்பாயின்ட்டாக  இருக்கிறது. 

 தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷனுக்கு, உதயசூரியன் சின்னம் பலமாகக் கருதப்படுகிறது. தி.மு.க. ஓட்டுக்கள் அப்படியே விழும் என்பதால், அது தங்களுக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தும் என்று தி.மு.க-வினர் கருதுகின்றனர். அதோடு, மருதுகணேஷுக்குப் பத்திரிகையாளர் என்ற அடையாளம் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளது. தொகுதியில் உள்ள பிரச்னைகளைப் புள்ளி விவரங்களுடன் பிரசாரத்தின்போது சொல்கிறார். 

ttv_14060.jpg


 ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற அடையாளத்தை நம்பிக் களமிறங்கிய தீபாவுக்கு, பல்வேறு சவால்கள் தொகுதியில் காத்திருக்கின்றன. அவர், தொடங்கிய எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, கோஷ்ட்டி பூசலில் சிக்கித் தவிப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடு பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதுவும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்கின்றனர். தீபாவை ஆதரித்தவர்களைச் சரியாக அவர் அனுசரித்துச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் மேலோங்கி நிற்கிறது. இதுபோன்ற சிக்கல்களைத் தாண்டி, அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

 உத்தரப்பிரதேச மாநில மெகா வெற்றிக்குப் பிறகு, பா.ஜ.க., ஆர்.கே.நகர் தொகுதியில் உற்சாகத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது. மக்களிடையே அறிமுகமான கங்கைஅமரன், தொகுதியில் உள்ள பிரச்னைகளை எளிய முறையில் மக்களிடம் எடுத்துச் சொல்லி, ஓட்டு கேட்டு வருகிறார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தேர்தல் வியூகத்தின்படி, பா.ஜ.க-வினர் ஆர்.கே.நகரில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர, தே.மு.தி.க வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன் உள்பட சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

 ஓட்டு கேட்டுச் செல்லும் இடங்களில், வேட்பாளர்களைப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு அன்பளிப்பு கொடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆர்.கே.நகரில் ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வேட்பாளர்கள், நேரடியாக அன்பளிப்புக் கொடுக்காமல், கட்சியினர் மூலம் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மறைமுகமாகக் கொடுக்கின்றனர். இதனால், ஆரத்தி எடுக்கவே ஆர்.கே.நகர் தொகுதி பெண்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தகையப் பெண்கள், கட்சி வேறுபாடின்றி வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்குரிய அன்பளிப்பை, கட்சியினரிடமிருந்தும் பெண்கள் பெற்றுக்கொள்கின்றனர். இதைக் கட்டுப்படுத்தவேண்டிய தேர்தல் அதிகாரிகள், அதை வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/84675-rk-nagar-bypoll-are-women-receiving-cash-for-arthi.html

Link to comment
Share on other sites

On 3/26/2017 at 4:43 AM, ராசவன்னியன் said:

தொகுதியில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிகை 63 பேர்களுக்கு மேலிருந்தால் தற்போதிருக்கும் வாக்கு இயந்திரங்கள் கையாள முடியாது, அதனால் பழமை முறையான காகிதத்தில் புள்ளடி போடும் நடைமுறைக்கு மாறவேண்டியிருக்குமென சமீபத்திய செய்தியில் படித்தேனே..?think_smiley_50.gif

ஒவ்வொரு நாளும் மற்றுபட்ட செய்திகளால் ஒரே குழப்பமாக உள்ளதே..! think_smiley_47.gif

வாக்காளர்கள் ஓட்டுப்போடும் முறை பற்றி தெளிவாக இருந்தால் சரிதான்..!!

சில சுயேச்சைகள் வேட்புமனுவை "திரும்ப" பெறவும் tw_blush: எண்ணிக்கை இப்போது 62 ஆகிவிட்டதாம்.. :cool:

Link to comment
Share on other sites

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தலில் போட்டியிடுவோர், 62 பேர். இவர்களில், ஜெ., மருமகள் தீபாவுக்கு, படகு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
 

 

Tamil_News_large_1739443_318_219.jpg

கடைசி நேரத்தில், எட்டு பேர் வாபஸ் பெற்றதால், இயந்திர ஓட்டுப்பதிவு உறுதியாகி உள்ளது. யாருக்கு வெற்றி என்பதில், பலத்த போட்டி இருப்பதால், பண மழை கொட்டும் என, வாக்காளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ஜெயலலிதா மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச், 16ல், வேட்பு மனு தாக்கல் துவங்கி, 23ல் நிறைவு பெற்றது. அரசியல் கட்சிகள், ஓட்டுச்சாவடிகளில் தங்கள் ஆட்கள் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக, சுயேச்சை களாக சிலரை களம் இறக்கின. அதன் காரணமாக, மொத்தம், 127 வேட்பு மனுக்கள் தாக்கலாகின.

70 மனு ஏற்பு



கடந்த, 24ம் தேதி நடந்த வேட்பு மனு

பரிசீலனையில், 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதில், மாற்று வேட்பாளர்கள் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து, மொத்தம், 70 வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டது.
வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், நேற்று மாலை, 3:00 மணி வரை, வாபஸ் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள்எண்ணிக்கை, 63க்குள் இருந்தால், ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்த முடியும். இல்லையெனில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும் நிலை வரலாம் என, கூறப்பட்டது.
இந்நிலையில், கட்சிகளுடன் பேசிய தேர்தல் அதிகாரிகள், சுயேச்சைகள் சிலரை வாபஸ் பெறும்படி வலியுறுத்தினர். அதனால், எட்டு சுயேச்சை வேட்பாளர்கள், நேற்று மனுவை வாபஸ் பெற்றனர்.மாலை, 3:00 மணிக்கு மேல், சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கும் பணி துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, இப்பணி நிறைவு பெற்றதும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம், 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எனவே, நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜெ., மருமகள் தீபாவிற்கு, படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வினர் இரண்டாக பிளவுபட்டு, எதிரும் புதிருமாக

 

நிற்கின்றனர்.
 

கட்டாயம்


யாருக்கு மக்கள் செல்வாக்கு என்பதை, நிரூபிக்க வேண்டிய கட்டாயம், இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., பிளவுபட்ட சூழலில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், தி.மு.க.,விற்கும் உள்ளது. இந்த தேர்தல் முடிவு, அரசியலிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் பணத்தை வாரி இறைக்க முடிவு செய்துள்ளனர். அதனால், வாக்காளர்களும், பண மழை கொட்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
 

3 தினகரன்; 2 மதுசூதனன்!


இந்த தொகுதியில், ௨௦௧௬ சட்டசபை தேர்தலில், 45 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை, 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள். மொத்த வேட்பாளர்களில், 49 பேர் சுயேச்சைகள்; மற்றவர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
வாக்காளர்களிடம் பெயர் குழப்பம் ஏற்படுத்த, முக்கிய கட்சி வேட்பாளர்களின் பெயரில், சுயேச்சை வேட்பாளர்களை களம் இறக்குவது வாடிக்கை. அந்த வகையில், ஆர்.கே.நகரில், மூன்று தினகரன்; இரண்டு மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1739443

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.