Jump to content

திரை விமர்சனம்: கடுகு


Recommended Posts

திரை விமர்சனம்: கடுகு

 

kadugureview_3147437f.jpg
 
 
 

உரிய தருணம் வரும்போது விஸ்வரூபம் எடுக்கும் வாமனனின் கதைதான் ‘கடுகு’.

புலி வேஷக் கலைஞரான ராஜ குமாரன், அக்கலை அழிந்துவரு வதால் வறுமையில் வாடுகிறார். தரங்கம்பாடியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வெங்கடேஷுக்கு உதவியாளராக அவருடன் செல்கிறார். அந்த ஊரில் தன்னால் முடிந்த அளவில் பிற ருக்கு நன்மைகள் செய்து வருகிறார்.

பரத் அந்த ஊரில் வளரும் அரசியல்வாதி. இளைஞர்களிடை யில் செல்வாக்கு பெற்ற குத்துச் சண்டை வீரர். அந்த ஊருக்கு வரும் அமைச்சர் தவறான நட வடிக்கையில் ஈடுபடுகிறார். அந்தத் தவறின் விளைவுகள் என்ன, அதில் பரத்தின் பங்கு என்ன, ராஜகுமா ரனுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ஆகிய கேள்விகளுக்குப் பதிலாக விரிகிறது ‘கடுகு’ படத்தின் திரைக்கதை.

பல்வேறு மரபுக் கலைகளும் கவனிப்பாரற்று விளிம்பு நிலையில் தள்ளப்பட்டிருக்கின்றன. அவற் றில் ஒன்றுதான் புலிவேஷம். படம், இந்தக் கலையும் கலைஞர்களும் உள்ள அவல நிலை மீது சமூகத்தின் கவனத்தைத் திருப்புகிறது. மரபுக் கலைகளுக்கும் கலைஞர்களுக் கும் சமுதாயத்தில் இன்று உள்ள மோசமான நிலையை அம்பலப் படுத்துகிறது. இதையே கதையின் மையமாகக் கொள்ளாமல், இதைப் பின்னணியாகக் கொண்டு நீதிக் கும் அநீதிக்கும் இடையேயான போராட்டத்தை இயக்குநர் விஜய் மில்டன் சித்தரிக்கிறார். அந்தப் போராட்டம் வழக்கமான சங்கதி களுடன் எதிர்பார்க்கக்கூடிய வகை யில் அமைந்திருப்பதுதான் பிரச்சினை.

புலிப்பாண்டி, அநிருத், டீச்சர், பரத்தின் பாட்டி, காவல்துறை அதிகாரி ஆகிய கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன. பரத்தின் இயல்பை எளிதாக வகைப்படுத்த முடியாத அளவுக்கு அவருடைய பாத்திரத்தை அமைத்திருக்கிறார். புலிவேஷ நடனம் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூட நிகழ்ச்சியில் குழந்தை களை மையப்படுத்தி அவர்கள் கேட்கும் கேள்விகளை வெளிப் படுத்தியிருக்கும் விதம் அழகு.

எல்லாமே திட்டமிட்டதுபோல நடக்கின்றன. உண்மை அனை வருக்கும் தெரிந்த பிறகும், கதை அடுத்த கட்டத்துக்கு நகராமல் சண்டித்தனம் செய்கிறது.

வசனங்கள் சமகால வாழ்வின் மீதான கூர்மையான விமர்சனமாக வெளிப்படுகின்றன. டீச்சர் தன் கதையை ராஜகுமாரனிடம் சொல் லும் இடம் நெகிழவைக்கிறது. ராஜ குமாரன் தன் மனம் கவர்ந்த பெண் ணைச் சந்திக்க மறுப்பதற்குச் சொல்லும் காரணம் மனதைத் தொடுவதாக இருந்தாலும் அவரை இந்த அளவுக்குத் திகட்டத் திகட்ட நல்லவராகக் காட்ட வேண்டுமா என்னும் கேள்வியும் எழுகிறது. அவ ரிடம் அபாரமான திறமை இருக் கிறது என்பதை இயக்குநர் முன்பே நிலைநாட்டிவிடுவதால் கிளைமாக் ஸில் புலியாகச் சீறும்போது அதில் நம்பகத்தன்மை கூடிவிடுகிறது.

ராஜகுமாரனின் நண்பன் தான் காதலிக்கும் பெண்ணுக்குத் தூது விடுவதும் அதை அவள் தவறாகப் புரிந்துகொண்டு பரத்தை நினைத்து உருகுவதும் படத்தோடு ஒட்டவே இல்லை. அரசியல்வாதியும் பரத் தும் சம்பந்தப்பட்ட காட்சிகள் செயற் கையாக உள்ளன. காவல்துறை குற்றத்தைக் கையாளும் விதம் வழக்கம்போலவே இருந்தாலும் மனசாட்சி கொண்ட அதிகாரியான வெங்கடேஷுக்கு வரும் சிக்க லைக் காட்சிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது.

மிகவும் சாந்தமாக வலம் வரு கிறார் ராஜகுமாரன். புலி வேஷம் போடும்போது மட்டும் அவரிடம் வரும் ஆக்ரோஷம் அற்புதம். உடல் மொழி, இரக்க குணம், வெகுளித் தனம் ஆகியவற்றை நன்கு வெளிப் படுத்தி நிறைவாகச் செய்திருக் கிறார். ஒரு சில இடங்களில் மிகை நடிப்பைத் தவிர்த்திருக்கலாம்.

ராஜகுமாரனின் நண்பனாக நடித்திருக்கும் பாரத் சீனி நல்ல கண்டுபிடிப்பு. காவல்துறை அதி காரிகள் துரத்தும்போது தப்பித்து, காதலியிடம் சைகையால் உணர்த் தும் காட்சியில் தியேட்டரில் அப் ளாஸ் அள்ளுகிறது. படத்தில் வரும் சிறுசிறு கதாபாத்திரங்கள்கூட மிக வும் கவர்கிறார்கள். பரத்தின் பாட்டி யாக வருபவரின் கிளைமாக்ஸ் காட்சி நடிப்பு அபாரம்.

பின்னணி இசை, பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக் கலாம். படத்தின் இயக்குநரே ஒளிப் பதிவாளராகவும் இருப்பதால் கிடைக்கும் பலனை படம் முழுமை யாக அறுவடை செய்துள்ளது.

நல்ல விஷயங்களைச் சொல்ல நினைப்பது பாராட்டுக்குரியதே ஆனால் அதைச் சொன்ன விதத்தில் பல இடங்களில் செயற்கைத்தனம் தலைதூக்குவது நெருடலை ஏற் படுத்துகிறது.

விளிம்பு நிலையில் இருக்கும் கலையின் மீது கவனம் செலுத்தி யிருப்பதும், மையப் பாத்திரத் தையும் அதற்கான நடிகரையும் வித் தியாசமாகவும் துணிச்சலோடும் முடிவுசெய்திருப்பதும் பாராட்டப் பட வேண்டியவை. புலியாட்டத் தின் சித்தரிப்பு சில இடங்களில் அசோகமித்திரனின் ‘புலிக் கலை ஞன்’ சிறுகதையை நினைவு படுத்துகிறது.

பார்வையாளர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய சில காட்சிகளாலும் கதாபாத் திரங்களாலும் செயற்கையான சினிமாத்தனங்களை மீறிப் படம் நின்றுவிடுகிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-கடுகு/article9601444.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.