Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளையாடும் வீடு

இது ஆனந்தம்  விளையாடும் வீடு

5 அன்றில்கள்  ஒன்றான கூடு

இது தான்   அவர்களால் அவர்கள்  வீட்டில்  அநேகம் பாடப்பட்ட பாடல்.

அன்பான அம்மா

அடித்தே இருக்காத அப்பா

வசதியான நாடு

திறமையான பிள்ளைகள்

மேல் படிப்புக்கள்...என எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தன

 

பட்டப்படிப்பு முடிக்கும் தருணம் அவனுக்கு காதல் ஒன்று அரங்கேறியது

சாதி  வந்து குறுக்கிட்டது

குடும்பம் சின்னாபின்னமாகியது

தகப்பனார் கோமா நிலையில்  வைத்தியசாலையிலிருந்தார்

கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி 

அவர் பெற்ற பிள்ளை

பாசமாக  வளர்ந்த வளர்த்த

படித்த பிள்ளை சொன்னது

சாதி  வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கண்களைக் குருடாக்கி விட்டது. மட்டுமல்லாது பேச்சிலும் விஷத்தை விட்டிருக்கு....!  tw_blush:

எழுதுங்கள் விசுகு....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.  அதுசரி தமிழரை காதலித்தால்தான் சாதி. வேற்றினத்தவரை காதலித்தால் சாதி இல்லையா?  இந்தக் கேள்வி என்னிடம் அதிக நாளாக உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் தவறு தகப்பனையே சாரும்.

அதற்காக அவரை அப்படி திட்ட வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

எதையும் நான் இங்கு தீர்மானமாக சொல்லவில்லை

ஒரு வார்த்தையோடு நிறுத்தியிருக்கின்றேன்

எந்தவித கலப்புமற்று

நடந்ததை  நடந்தது போல் எழுதியிருக்கின்றேன்

ஏனென்றால் நாம் அதிலும் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் எங்கு சறுக்குகின்றோம்

எங்கு தடுமாறகின்றோம்

எப்பொழுது எமக்குள் விரிசல் தொடங்குகிறது

பாசத்தோடு நாம் வளர்த்த  பிள்ளைக்கு நாம் எவ்வாறு (சாகக்கிடக்கும் நிலையிலும்) 

பைத்தியக்காறராக தெரிகின்றோம்??

பல காலமாக எனக்குள் கிடந்த விடயமிது

யாழின்  இந்த திரி

அதையும் கொட்ட வைத்திருக்கிறது

நல்லது  நடந்தால் அதுவே குறி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வந்த விடயம் முக்கியமானது. ஆனால் முகநூல் சுவரில் எழுதுவது மாதிரித்தான் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு குடியுரிமை வேண்டும்.இங்க வேலை வேண்டும்.இங்குள்ள பாதுகாப்பு வேண்டும்.இங்குள்ள மருத்துவ வசதி வேண்டும்.அப்படி சகல வசதிகளும் இங்கு வேண்டும்.ஆனால் கலியானம் என்டு வந்தால் மட்டும் அங்குள்ள சாதி வேண்டும்.:unsure:tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி . இங்கு பிறந்த சில  பிள்ளைகளுக்கு சாதி என்றால் என்ன என்றே விளங்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திரியை  பார்த்ததும் இதைத்தான் யோசித்தேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி திமிரை மிகவும்  சுருக்கமாக  எழுதியுள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி...விசுகர்!

தந்தையின் 'தலையீடு' மகனை எவ்வளவுக்குப் பாதித்திருந்தால்...இப்படியான வார்த்தைகள் அவனது வாயிலிருந்து விழுந்திருக்கும் ?

இந்த வேளையில்....கீதை தான் நினைவுக்கு வருகின்றது!

எதைக் கொண்டு வந்தோம்....நாம் இழப்பதற்கு?

Link to comment
Share on other sites

"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதியார் பாடலை பாலகன் படிக்கும்போது பரவசப்படுவதும் தந்தைதான்,

பாலகன் பருவ வயதுவந்து துணையைத் தேடும்போது சாதி வெறிபிடித்து அலைவதும் தந்தைதான்.

12 hours ago, Kavallur Kanmani said:

.  அதுசரி தமிழரை காதலித்தால்தான் சாதி. வேற்றினத்தவரை காதலித்தால் சாதி இல்லையா?  இந்தக் கேள்வி என்னிடம் அதிக நாளாக உண்டு.

அதிகமாக கையையே கழுவி விடுவார்கள். அங்கு சாதி இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன.....! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

-----

அன்பான அம்மா

அடித்தே இருக்காத அப்பா

------

தகப்பனார் கோமா நிலையில்  வைத்தியசாலையிலிருந்தார்

கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி 

அவர் பெற்ற பிள்ளை

பாசமாக  வளர்ந்த வளர்த்த

படித்த பிள்ளை சொன்னது

சாதி  வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.

என்ன இருந்தாலும்.... பெற்ற தகப்பனை பார்த்து,
படித்த மகன் பாவித்த  வார்த்தையை.. ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விசுகு.

Link to comment
Share on other sites

திருமணம் என்று வரும் பொழுது சாதி குறுக்கிடுவது சகஜம், ஏனெனில் நாம் பிறந்து வளர்ந்த காலம் இடம் அப்படியானது. 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்று வரும்போது சாகக்கிடைக்கும் தகப்பனைப்பார்த்து பாசாமில்லாமல் சொல்பவனை, அந்த பெண் கட்டியிருந்தால் , அவள்  ஏண்டா இவனைக் கட்டினேன் என்று கவலைப்பட்டிப்பார்.  தன்னுடைய விருப்பத்தினை மட்டுமே சுயநலமாகக் கருதும் ஒருவனால் அந்தப் பெண் எப்படிக்குடும்பம் நடாத்துவாள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.