Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் 

 

 

காலம் பல   அழியாத  நினைவுகளை  நகர்த்திக் செல்கிறது. அவற்றில்  பாடசாலைக்  காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு  ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும்  இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது   மேற்பா ர்வையிலேயே  நடைபெறும் . மனைவி   மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் ..

 

.மூத்தவன் கேசவனின்  நண்பன் ..பக்கத்து வீட்டு  பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள்.  கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி    கற்றார்கள். கிராமத்தில்  பாலர் வகுப்பிலிருந்து  ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது, பின் அருகில் இருக்கும் உயர்கல்விக்கு எ நாற்பது  நிமிட நடை தூரத்தில் ஒரு கல்லூரி அங்கு   ஆறாம்  தரத்தில்  இருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பார்கள்.  

 

மேலதிகமான கல்வி  சா/ தரம் உயர் தரம் என்பவற்றுக்கு யாழ் படடணம் போக வேண்டி இருந்தது .  நண்பர்கள் இருவரும் ஒன்றாகவே  கோயில் வளவில் நண்பர்களுடன் ..பந்து விளையாடச்செல்வார்கள் .பிரேமனின் தாயார் வீட்டில் வளர்க்கும் பசுவைக்காணவில்லை போய் பார்த்துவா தம்பி என்றால் ...கேசவனும் கூடவே பிரேமனுடன் செல்வான்   மாலையில்  வீடு திரும்பாவிடில் இருவரில் ஒருவரிடம் மற்றவரைப்   ப ற்றிக் கேட்க்கலாம். காலம் உருண்டோட  இருவரும் எடடம் வகுப்பை அடைந்தனர் 

 

 ஒன்பதாம் வகுப்பில் ..கலைத்து றை    விஞ்ஞானத்துறை என பகுதி பிரிப்பார்கள்  ஆசிரியர்கள்.  பின்னர்   அதிபரினால்  தெரிவு அறிவிக்கப்படும்.  அப்படியான கால்கட்ட்த்தில்   ..பிரேமன் கலைத்துறைக்கும் . செல்வாக்குள்ள மனிதரின் மகன்  கேசவன் சயன்ஸ் பிரிவுக்கும் அ னுமதிக்க படடனர் .. நண்பர்கள் பிரிவது ..மிகவும் கொடுமை ..கேசவன் தன் தாயாரிடம் ...நடந்ததை சொல்லி தனக்கும் கலைப்பிரிவு   தான் . படிக்க  ஆர்வமுள்ளது என்று  கூறினான் . 

 

அந்தக் காலத்தில் சயன்ஸ் படிப்பது ஒரு கெளரவமான   மாயத் தோற்றத்தை கொண்டிருந்தது ..பிள்ளையின் ஆற்றல் நாடடம் கலைத்துறையாக இருந்தாலும் ..ஊராரிடம்பறை சாற்ற பிள்ளையை நிர்பந்திக்க வேண்டி இருந்தது . கேசவனின் தாயாரும் கணவரிடம் பேசினாள்.   என்  பிள்ளை   டாக்ட்டராக   இஞ்சினியராக நான் கனவு காண்கிறேன் .மறு  பேச்சு  பேசாமல்  அவரை சயன்ஸ் பிரிவில் படிக்க சொல் என்று கண்டிப்பான கடடளையிட்டு விட்டார் . 

 

கேசவனும்  தந்தை சொல்  மீறி  ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்து படித்து வந்தான் ...வெவ் வேறு வகுப்புக்க  ளாயினும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர் ...வகுப்பில்  தாவரங்களின் படங்களை கீறுவதற்கு ,    வீட்டுப் பாடம் ஒன்றாக செய்வதற்கு பிரேமனை தன வீட்டுக்கு அழைப்பான் ...எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள் .     அந்த வருட இறுதி தேர்வில்  கேசவன் குறைந்த மதிப்பெண்களை பெற்றான்  வீட்டிலும்  ரிப்போர்ட் காட்டில் தந்தையின் கையெழுத்து வாங்க  வேண்டி இருந்தது . தந்தை அந்த அறிக்கையை பார்த்தும் மிகவும் கடிந்து கொண்டார் .

 இதனால் மனவேதனை உற்ற கேசவன்  பலவாறு யோசித்தான். நண்பன்   பிரேமனுக்கு மட்டும் சொல்லிவிட்டு ....மறுவாரம்  தாயாருக்கு சொல்லாமல் படடனத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு ..சென்று  விடடான்.  திடீர் வரவைக்க கண்ட தாத்தா   ...மகிழ்ச்சி ஒரு புறமும் சந்தேகம் ஒருபுறமுமாய் ..பாட்டியிடம் எதுவும்  அவனிடம் கேட்க்காமல்  நல்ல உணவு கொடுக்க ச்சொன்னார் .

 

.மாலையானது  தாத்தா மெல்ல பேச்சுக்கு கொடுத்து பேரன் கோவித்து கொண்டு வந்ததை அறிந்தார் ..உடனடியாக  மகள் வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பினார்  பேரன் தங்களிடம் வந்து விட்ட்தாக ..தான் பொறுப்பாக பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார் . சில வாரங்கள் சென்றது . மார்கழி விடுமுறை முடித்ததும் மெல்ல அவனது எண்ணத்தைக்  கேடடா ர்.   அவன் ஊருக்கு செல்ல விருமபவில்லை எனவும்      படடண த்திலே ஒரு பாடசாலையில்க லைத்துறை பிரிவில் தன்னை சேர்க்க அனுமதி வாங்கி தரும்படியும் சொன்னான் . நீண்ட நாட்கள் தனிமையில் இருந் தாத்தா  பாட்டி மிகவும் உற்சாகமாக அவனைக் கவனித்தனர் 

 

வயதான தாத்தா   . தன் செல்வாக்கைப்பயன் படுத்தி  பிரபலமான கல்லூரியில் கலைத்துறையில் அவனை  சேர்த்து விடடார் .. அவன் சா /தரம் முடித்து  பின் உயர் தரத்தில் மிக திறமையான சித்தி அடைந்து .. கலைத்துறைப்  படடதாரி   ஆனான்  ...கால ஓடத்தில் ..கணணித் துறையிலும்  நாடடங்கொண்டு .. மிகத்   திறமையான நிலையை அடைந்தான் .  பல கம்பெனிகளில் இருந்து ..வடிவமைப்புக்காக  ஓடர்கள் வந்தன. அவனது பொருளாதாரம் உயர்ந்தது ...  தன் முயற்ற்சியினால்  ஒரு  கம்பெனி அமைத்து நிர்வகித்து  நல்ல நிலைக்கு வந்தான். ஊருக்கு செல்லும்போது தன் நண்பனைத்  சந்திக்க  மறப்பதில்லை .

 

..நீண்ட நாட்கள்  பேசாதிருந்த   தந்தை ..கம்பெனித் திறப்பு விழாவில் கலந்து பாராட்டினார் . இன்றும் தான் இழந்த அந்த ஒரு வருட வாழ்க்கையை எண்ணி  கலங்குவதுண்டு ...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில்   திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை  மாறிச்  செல்கிறது ..

 

இது சற்று  முன்னைய  காலத்தின் கதை  பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு அறியாது திணிக்கும் பெற்றோரின் மீதான தாக்கம்  என்னால் முடிந்த எழுத்து வடிவில்   நட் புடன்  நிலாமதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அக்கா. வெளிநாடு வந்தபின்னாவது திருந்தவில்லை. அதிலும் லண்டன் படு மோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி பாடசாலை வாழ்க்கை எந்த ஒருவராலும் மறைக்க முடியாது.

நீங்கள் எழுதியது போல் சயன்ஸ் ஆட்ஸ் இரண்டுக்கும் பெரியதொரு மானப் பிரச்சனை.ஆட்ஸ் படிப்பவர்களை ஒரு முட்டாளாக எண்ணிய காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தை வருடிய கதை...நன்றியும் வாழ்த்துக்களும் நிலாமதி.

22 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி பாடசாலை வாழ்க்கை எந்த ஒருவராலும் மறைக்க முடியாது.

நீங்கள் எழுதியது போல் சயன்ஸ் ஆட்ஸ் இரண்டுக்கும் பெரியதொரு மானப் பிரச்சனை.ஆட்ஸ் படிப்பவர்களை ஒரு முட்டாளாக எண்ணிய காலம்.

முந்தி ஆர்ட்ஸ் படிச்ச மாப்பிளையளுக்கு சீதனமும் வலு சீப் :cool:
இப்பத்தையான் விலைவிபரம் என்னெண்டு தெரியேல்லை :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலிருந்து... லண்டனுக்கு, விரும்பி போனவர்... tw_glasses:
"லண்டன்" படு மோசம் என்று  சொன்ன கருத்தை... வாசிக்க....
சுப்பிரமணியசாமியின்... நினைப்பு வந்து விட்டது.  :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் அக்கா. வெளிநாடு வந்தபின்னாவது திருந்தவில்லை. அதிலும் லண்டன் படு மோசம்

எப்ப பாரு லண்டன் சனத்திலே குற்றம் சாட்டுறது 

 

அக்கா நிலாமதி எப்படி சுகமா இருக்கிறியளா கதை சூப்பர் இப்ப கொளரவத்திக்கு ரஷ்யா டொக்டர் என்னதைதை சொல்ல அவருக்கு கோடி வேற சீதனம்  நாட்டு நடப்ப சொன்னன்  (ஊரில் )

7 hours ago, குமாரசாமி said:

உள்ளத்தை வருடிய கதை...நன்றியும் வாழ்த்துக்களும் நிலாமதி.

முந்தி ஆர்ட்ஸ் படிச்ச மாப்பிளையளுக்கு சீதனமும் வலு சீப் :cool:
இப்பத்தையான் விலைவிபரம் என்னெண்டு தெரியேல்லை :grin:


குறைஞ்சது  5 லட்சம் முதல் கோ    ....கோடிவரை    தொட்டு விட்டது கு.சாtw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியிலிருந்து... லண்டனுக்கு, விரும்பி போனவர்... tw_glasses:
"லண்டன்" படு மோசம் என்று  சொன்ன கருத்தை... வாசிக்க....
சுப்பிரமணியசாமியின்... நினைப்பு வந்து விட்டது.  :grin: :D:

அட்ரா.....அட்ரா....அட்ரா :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அட்ரா.....அட்ரா....அட்ரா :grin:

விரும்பிப் போனன் எண்டு எப்ப சொன்னனான். சொந்தம் பந்தம் எண்டாலும் பிழை எண்டால் பிழைதான். இதுக்குள்ளை உண்மையைச் சொல்லக்கூடாதோ.????:317_full_moon_with_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆர்ட்ஸ் தான் படித்தனான். முனிவர் சொல்லுறதை பார்த்தால் இப்ப அங்கிருந்து படித்திருக்கலாம் என்று நினைக்கின்றன் .....!  tw_blush:

நல்ல கருவைத் தொட்டிருக்கிறீங்கள், தொடருங்கள் சகோதரி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த கெளரவ பிரச்சனை காரணமாக சயண்ஸ் செய்து கடைசில தந்தி கம்பிதான் ரிசல்ட்......ஆர்ட்ஸ் செய்திருந்திந்தால் ஒரு சிறந்த எழுத்தாளராக வந்திருக்கலாம் என்று இப்பவும் கவலைப்படுவதுண்டு 

Link to comment
Share on other sites

ஆட்சுமில்லை, சயன்சுமில்லை இடையில் அக்கிறிக்கல்சர். ஆனாலும் இரும்பு இயந்திரங்கள்தான் வாழ்வு தந்தது. நான் 8 மணித்தியாலம் உழைக்க எனக்கு வந்தவள் நாள்முழுதும் எனக்காக உழைக்கிறாள். அதுதான் எனக்குவந்த சீதணம். :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்ஸ் குறுப்பிற்கும் சயன்ஸ் குறூப்பிற்கும் இவ்வளவு முரண்பாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருக்கிறதா..? நான் இரண்டுமே படிக்கவில்லையாதலால் அதிகம் தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் இந்த பாகுபாடு இருப்பதாக அறியவில்லை. எந்த எழுத்தர், மென்பொருளாளர் பணிக்கும் ஒரு கல்லூரி பட்டம்(B.Sc, or B.A) இருந்தால் போதுமானதே.

தமிழகத்தின் கல்லூரிகளில் விலைபோகாத, எளிதாகக் கிட்டும் குறூப்  பி.ஏ(வரலாறு) - BA(History) தான்..!

 

On 3/25/2017 at 1:03 AM, நிலாமதி said:

 ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் 

...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில்   திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை  மாறிச்  செல்கிறது ..

அனுபவத்தில் உணர்ந்த உண்மைதான்..! consoler.gif

நன்றி.

26 minutes ago, Paanch said:

...நான் 8 மணித்தியாலம் உழைக்க எனக்கு வந்தவள் நாள்முழுதும் எனக்காக உழைக்கிறாள். அதுதான் எனக்குவந்த சீதணம். :)  

பாவம், ரொம்பக் கொடுமை..! vire.gif

Link to comment
Share on other sites

10 minutes ago, ராசவன்னியன் said:

ஆர்ட்ஸ் குறுப்பிற்கும் சயன்ஸ் குறூப்பிற்கும் இவ்வளவு முரண்பாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருக்கிறதா..? நான் இரண்டுமே படிக்கவில்லையாதலால் அதிகம் தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் இந்த பாகுபாடு இருப்பதாக அறியவில்லை. எந்த எழுத்தர், மென்பொருளாளர் பணிக்கும் ஒரு கல்லூரி பட்டம்(B.Sc, or B.A) இருந்தால் போதுமானதே.

தமிழகத்தின் கல்லூரிகளில் விலைபோகாத, எளிதாகக் கிட்டும் குறூப்  பி.ஏ(வரலாறு) - BA(History) தான்..!

 

அனுபவத்தில் உணர்ந்த உண்மைதான்..! consoler.gif

நன்றி.

பாவம், ரொம்பக் கொடுமை..! vire.gif

பாவம் வன்னியர் ரெம்பக் கடுப்பாகிவிட்டார். லட்சமோ.! கோடிகளோ..!! அவரைக் கலாய்க்குது போல் இருக்கிறது. :( :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்த நேரம்....ஆர்ட்சுக்குப் போயிருக்கலாம் தான்!

வீட்டில் ஒரு கொலை கட்டாயம் விழுந்திருக்கும்!

நல்ல ஒரு கருவைத் தொட்டிருக்கிரீங்கள், நிலாக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆர்ட்ஸ் சயன்ஸ் பிரச்சனை இப்பவும் ஊரில் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2017 at 9:08 PM, suvy said:

முனிவர் சொல்லுறதை பார்த்தால் இப்ப அங்கிருந்து படித்திருக்கலாம் என்று நினைக்கின்றன் .....!  tw_blush:

நீங்கள் டூ லேற் அண்ண நான் கூட படிக்கும் காலத்தில் ஆட்ஸ் படிக்க போனேன் ஏனென்றால் எனக்கு  கணக்கு  கொஞ்சம் அப்பிடி இப்பிடி அங்க போய் பார்த்தால் 53 பேர் ஒரு வகுப்பறையில் இருக்கினும் பிறகு இதுக்குள்ள குந்தியிருந்து மட்டை அடிக்க இயலாது என்று போட்டு கொமசுக்கு பூந்து கோமாவாவுனதுதான்:51_scream: மிச்சம் அவ்வளவும் கொடிகள் ரிசல்டை சொன்னன் பேந்து நாட்டை விட்டு ஓடி அது பெரி கதை வேண்டாமே 

 

5 hours ago, MEERA said:

உந்த ஆர்ட்ஸ் சயன்ஸ் பிரச்சனை இப்பவும் ஊரில் உள்ளது. 

இலங்கையில் உயர்தரம் இருக்கும் வரைக்கும் ஓடும் வாத்தியார் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை , இஞ்சினியர் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை ,வைத்தியன் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை இப்படி ஓடுகிறது இங்கே :97_raised_hand:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா இந்தக்கதையில் ஆரம்பத்தில் சறுக்கினாலும் பின்னர் விருப்புக்கு ஏற்றமாதிரி தெரிவு செய்ய வாய்ப்பு கிடைத்துவிட்டது. பலருக்கு அவ்வாய்ப்பே இல்லாமல் பெற்றோரின்  விருப்புக்காக என்று வாழ்ந்து எதிர்காலக்கனவு என்பதையே பலியாக்கி தோல்வி கண்டவர்கள் நிலைதான் அதிகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.