Jump to content

ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா?


Recommended Posts

ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா?

 

 
brain_fb

 

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ் புக்கில் தீவிரமாக இயங்குபவர்களா? உங்களுக்குத் தான் இந்த பதிவு. தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதும் படித்துவிடுங்கள்.

நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போது, அலுவலக கூட்டத்தில், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நீங்கள் விரைவில் சந்திக்கக் கூடும்.

இதனால் மனிதனின் இரண்டு மூளையின் இடையே உள்ள செயல்பாட்டுத்திறன் சமநிலையில் இருக்காது என அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியொன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பயன்பாடோ அந்தளவுக்கு அதிகமான பாதிப்புக்கள் நிகழக் கூடும். அது அவர்களின் சிந்தனையோட்டத்திலும் அதனை தொடர்ந்து செயல்பாடுகளிலும் வெளிப்படும்.

ஃபேஸ்புக்கில் அதிக நேரம் இருக்கும்  341 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர் ஆராய்ச்சியாளர்கள். முதல் செமஸ்டர் முடிந்த நிலையில் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர்கள் ஒவ்வொரு மாணவரின் படிப்பு மற்றும் மதிப்பெண்களை அதன்பின் தொடர்ந்து ஒருவருடம் முழுவதும் கவனிக்க ஆரம்பித்தனர்.  

ஆராய்ச்சியின் முடிவில் அதிகமாக ஃபேஸ்புக் பயன்படுத்தும் மாணவர்களின் மூளையில் நடந்த மாற்றங்களால் நுண் உணர்வுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதில் 76 சதவிகித மாணவர்கள் ஃபேஸ்புக்கை வகுப்புகளிலும், 40 சதவிகிதத்தினர் வாகனம் ஓட்டும் போதும் பயன்படுத்தியிருந்தனர்.   தொடர்ந்து ஃபேஸ்புக்கில் மூழ்கி தன்னை மறந்த நிலையில் அவர்களின் நடத்தையிலும் பல மாற்றங்கள் இருந்தன. அறிவாற்றலிலும் பலவீனமான  கூறுகள் ( இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மூளையின் இரண்டு பகுதிகளுக்கான ஒத்திசைவு குறைந்துவிட்டதால், மாணவர்கள் சமன் நிலை இழந்து, பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைந்து அவர்களின் படிப்பும் சமூகத்தில் பழகும் தன்மையும் பாதிக்கப்படுகிறது என்றார் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஓஃபிர் டூரில் 

மாணவர்களின் நிலை இதுவென்றால், மற்றவர்களில் 63 சதவிகித மக்கள் ஒருவருடன் மற்றவர் உரையாடிக் கொண்டிருக்கும் போது தவிர்க்க முடியாமல் தங்கள் மொபைலை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். 65 சதவிகிதத்தினர் அலுவலக வேலை நேரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய வேலை செய்வதற்கு பதில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வுபூர்வமாக தெரிந்துவிட்டதால் அவற்றை அளவாக பயன்படுத்தும் படி மக்களுக்கு ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளனர். 

இந்த ஆய்வு அறிக்கை ஜெர்னல் ஆஃப் மேனேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸில் வெளிவந்துள்ளது (Journal of Management Information Systems.

இனி அடுத்த முறை ஃபேஸ்புக்கைத் திறந்து, எத்தனை லைக்ஸ், எவ்வளவு ஷேர்ஸ், எத்தனை புதிய நட்புக் கோரிக்கை என்று பார்க்காதீர்கள்! கருவிகளுக்கு அடிமையாகாமல், மனக் கட்டுப்பாட்டுடன் அவற்றை உங்கள் தேவைகளுக்காகவும் தொழில்நுட்பமாக மட்டுமே பயன்படுத்தினால் அது வளர்ச்சிக்கான பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் என்பது உண்மையிலும் உண்மை!

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.