Jump to content

யாழ்ப்பாணத் தோசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11892272_591540774317591_567066764916315

செ.தே.பொருட்கள் :-

கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
வெந்தயம் – 1 தே. கரண்டி
சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
மிளகு – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி
தாளிப்பதற்கு :-
சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
செத்தல் மிளகாய் – 3
கடுகு – 1/2 தே. கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
கறிவேப்பிலை – 1 நெட்டு

செய்முறை :-

* உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.
* சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.
* உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
* அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து
10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.
* புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.
* சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
* தாளிதத்தையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.
* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )
** தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.
** குறிப்பு: தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.

http://tamilbeautytips.com/ta/11869

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழரசு said:

 

 

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

 
 

அதுதான் நோர்வேகாரர்கள் மகிழ்வில் உலகத்தில் நம்பர் ஒன் என்று சொல்லியாச்சே.

ஒட்டுமொத்தமா.... நோர்வேக்காக வயிறு எரிஞ்சாச்சு..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

ஏன் இப்படி கேட்டமா ..... சாப்பிட்டீங்களா தூங்கினீங்களா என்று இல்லாமல் 

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

நோர்வேக்காக வயிறு எரிஞ்சாச்சு..:grin:

 

1 minute ago, தமிழரசு said:

ஏன் இப்படி கேட்டமா ..... சாப்பிட்டீங்களா தூங்கினீங்களா என்று இல்லாமல் 

இந்த பதிவைப் பாத்துமா உங்களுக்கு நான் பச்சை தமிழன் என்று புரியவில்லை.

மற்றவர்கள் வயித்தெரிச்சலைப் பார்த்து சந்தோசப்படுபவன் சுத்த தமிழன்தானே?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

இங்க நேற்றும் இன்டைக்கும் தோசைதான். ஒருக்கால் மா கரைத்தால் இரண்டு நாளைக்கு வரும். அதுவும் பக்கத்தில் ரெண்டு வீட்டுக்கு குடுத்து....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

எங்க வீட்டில் இப்போது வாராவாரம் தோசை, அப்பம் என்று விதவிதமாக போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

 

இந்த பதிவைப் பாத்துமா உங்களுக்கு நான் பச்சை தமிழன் என்று புரியவில்லை.

மற்றவர்கள் வயித்தெரிச்சலைப் பார்த்து சந்தோசப்படுபவன் சுத்த தமிழன்தானே?:grin:

நீங்கள் சுத்த தமிழன் நான் ஒத்துக்கொள்கின்றேன். இருந்தாலும் உங்களுக்கு கன பேரின் கண்பட்டு வயிறு வலிக்கப்போகிறது.

3 minutes ago, MEERA said:

எங்க வீட்டில் இப்போது வாராவாரம் தோசை, அப்பம் என்று விதவிதமாக போகிறது.

நீங்கள் கொடுத்து வச்சவர்.

24 minutes ago, Nathamuni said:

அதுதான் நோர்வேகாரர்கள் மகிழ்வில் உலகத்தில் நம்பர் ஒன் என்று சொல்லியாச்சே.

ஒட்டுமொத்தமா.... நோர்வேக்காக வயிறு எரிஞ்சாச்சு..:grin:

அவரே பயங்கர கடுப்பில் இருப்பார் நீங்கள் வேற அதையே நினைவு படுத்திக்கொண்டு பாவம் ஜீவன் சிவா விட்டுவிடுங்கள் நாதமுனி 

18 minutes ago, suvy said:

இங்க நேற்றும் இன்டைக்கும் தோசைதான். ஒருக்கால் மா கரைத்தால் இரண்டு நாளைக்கு வரும். அதுவும் பக்கத்தில் ரெண்டு வீட்டுக்கு குடுத்து....! tw_blush:

பரவாயில்லை அப்படியாவாவது கிடைக்குதே சுவி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்க்க அம்மா சுடும் தோசைபோல் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசைக்கு அவிச்ச மாவோட,பச்சமாவும் போடுறது என்டது இன்டைக்குத் தான் தெரியும்:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழரசு said:

11892272_591540774317591_567066764916315

 

ஆகா.... இதுதான்.... தோசை.
தோசையில்... சிறு சிறு வாய்வுக் குழிகள் வந்து, இருக்கும் போது தான்...  தோசைக்கே... தனி ருசி. 
கோடைகாலம் தொடங்க இருக்கின்றது,  தமிழரசு சொன்ன முறையில்... செய்து பார்க்க வேண்டும். :)

மனிசி, தோசை சுட்ட பின்....  அடுப்பு, குசினி, தோசை சட்டி, பாத்திரம், கிரைண்டர்..... உதுகள் எல்லாத்தையும் கழுவும் பொறுப்பு எனது என்பதால்,  தோசை.... ஆசை இருந்தாலும், அடக்கி வைத்திருக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

எங்க வீட்டில் இப்போது வாராவாரம் தோசை, அப்பம் என்று விதவிதமாக போகிறது.

சாம்பிளுக்கு... சில படங்களையும், இணைத்தால் தான்... நாங்கள் நம்புவோம்... மீரா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழரசு said:

நீங்கள் கொடுத்து வச்சவர்.

 

4 minutes ago, தமிழ் சிறி said:

சாம்பிளுக்கு... சில படங்களையும், இணைத்தால் தான்... நாங்கள் நம்புவோம்... மீரா. :grin:

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

 

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

மாமியார் வந்தால் எங்கள வீட்டை கூப்பிட்டு தோசை சுட்டுத் தாறது:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மாமியார் வந்தால் எங்கள வீட்டை கூப்பிட்டு தோசை சுட்டுத் தாறது:mellow:

எப்ப வாறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, MEERA said:

ஊரிலிருந்து மாமியார் வந்திருக்காங்க, வெயிட்டும் கூடிவிட்டது சுகரும் கூடிவிட்டது.

மருமகனை... எல்லா மாமியார்களும், கவனிக்கும் சிறப்பு எல்லா இடங்களிலும் உள்ளமை... மிக அழகு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இங்க நேற்றும் இன்டைக்கும் தோசைதான். ஒருக்கால் மா கரைத்தால் இரண்டு நாளைக்கு வரும். அதுவும் பக்கத்தில் ரெண்டு வீட்டுக்கு குடுத்து....! tw_blush:

ம்ம்ம்...!

நமக்குப் பக்கத்து வீடு கூடச் சரியா வந்து வாய்க்கேல்ல!

 

3 hours ago, ஜீவன் சிவா said:

இப்பதான் முழுசா அஞ்சு தோசையை அண்ணி கையால வாங்கி முழுங்கிட்டு இங்கு குந்தியிருக்கிறேன் - பச்சை சம்பல் + முருங்கைக்காய் சாம்பாரு + தோசை // இதற்கு எது ஈடாகும் என்று யோசிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த கள உறவுகளுக்கு வயிறு எரியனும் என்றுதான் இதை பகிர்கின்றேன். :grin::grin:

ஜீவன்....கோழிக்கறியைச் சாப்பிட்டால்...எலும்பைக் கழுத்தில கட்டிக்கொண்டு ஊர் முழுக்கத் திரியிறது மிகவும் கெட்ட பழக்கம்!:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதைப் பார்க்க அம்மா சுடும் தோசைபோல் இருக்கு.

நீங்கள் பிள்ளையளுக்கு சுட்டுக் கொடுத்தியல் எண்டால், அவையள் அப்படி சொல்லுவினம் தானே.

4 hours ago, ரதி said:

தோசைக்கு அவிச்ச மாவோட,பச்சமாவும் போடுறது என்டது இன்டைக்குத் தான் தெரியும்:rolleyes:

உங்கண்ட அண்ணர், பிளேன் சோடா விட்டு செய்யிற கூப்பன் மா தோசை ரெசிபியால் எல்லாம் தந்தவர் மறந்திட்டியளோ ? :grin: 

போன கிழமை கூழ் அடிக்க நண்பர் வீட்டுக்கு போனேன்.

ஒடியல் மா தடிப்பா இருக்குதாம் என்று... சோளன் மா போட்டு இருந்தா நண்பனின் தாய்.

என்ன சொல்ல வருகிறேன் எண்டால், சமைச்சு, சமைச்சு, ஆராய்ந்து புது முறைகளை கண்டு பிடிக்கினம்.

 

1 hour ago, புங்கையூரன் said:

ம்ம்ம்...!

நமக்குப் பக்கத்து வீடு கூடச் சரியா வந்து வாய்க்கேல்ல!

 

ஜீவன்....கோழிக்கறியைச் சாப்பிட்டால்...எலும்பைக் கழுத்தில கட்டிக்கொண்டு ஊர் முழுக்கத் திரியிறது மிகவும் கெட்ட பழக்கம்!:unsure:

 

நீங்கள் ஒரு பக்கம்... புங்கையர்...

லோங் ஹாலிடே நோர்வே காரர்.... கோழி திண்டால், இன்னொரு கோழியையே கட்டிக் கொண்டு திரிவார்.... :grin: 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

நீங்கள் பிள்ளையளுக்கு சுட்டுக் கொடுத்தியல் எண்டால், அவையள் அப்படி சொல்லுவினம் தானே.

உங்கண்ட அண்ணர், பிளேன் சோடா விட்டு செய்யிற கூப்பன் மா தோசை ரெசிபியால் எல்லாம் தந்தவர் மறந்திட்டியளோ ? :grin: 

போன கிழமை கூழ் அடிக்க நண்பர் வீட்டுக்கு போனேன்.

ஒடியல் மா தடிப்பா இருக்குதாம் என்று... சோளன் மா போட்டு இருந்தா நண்பனின் தாய்.

என்ன சொல்ல வருகிறேன் எண்டால், சமைச்சு, சமைச்சு, ஆராய்ந்து புது முறைகளை கண்டு பிடிக்கினம்.

 

அம்மாவின் தோசையிலும் சுவையான தோசை நான் சுடுவதும் பிள்ளைகள் உண்பதும் வழமைதான். எனக்கு அம்மாவின் தோசைபோல் யார் சுடுவதும் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அம்மாவின் தோசையிலும் சுவையான தோசை நான் சுடுவதும் பிள்ளைகள் உண்பதும் வழமைதான். எனக்கு அம்மாவின் தோசைபோல் யார் சுடுவதும் இருக்காது.

 

அதுதான் சொல்கிறேன்...

உங்களுக்கு உங்கள் அம்மாவின் தோசை திறமாயிருக்கும்.

உங்கண்ட பிள்ளைகளுக்கு அவையண்ட அம்மா சுடுற தோசை தான் திறமாயிருக்கும்.

அம்மம்மா தோசையே சுடுறா... அம்மா எப்படி அதை தின்னுறவோ தெரியாது எண்டெல்லா சொல்லுவினம். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

அதுதான் சொல்கிறேன்...

உங்களுக்கு உங்கள் அம்மாவின் தோசை திறமாயிருக்கும்.

உங்கண்ட பிள்ளைகளுக்கு அவையண்ட அம்மா சுடுற தோசை தான் திறமாயிருக்கும்.

அம்மம்மா தோசையே சுடுறா... அம்மா எப்படி அதை தின்னுறவோ தெரியாது எண்டெல்லா சொல்லுவினம். :grin: 

அட பாவி tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாரப்பா தோசை எண்டவுடனை சனம் வரிசையிலை நிக்கிறதை!!!!!!!!:grin:
எண்டாலும் பாருங்கோ என்ரை ஊரிலை தென்னை நுனியோலையாலை அடுப்பெரிச்சுத்தான் தான் தோசை சுடுவினம். வாசமும் சுவையும் சொல்லி வேலையில்லை.அதோடை நல்லெண்ணையும் விட்டு மொருமொருக்க எடுத்து அப்பிடியே உருட்டி.........:love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை பாரப்பா தோசை எண்டவுடனை சனம் வரிசையிலை நிக்கிறதை!!!!!!!!:grin:
எண்டாலும் பாருங்கோ என்ரை ஊரிலை தென்னை நுனியோலையாலை அடுப்பெரிச்சுத்தான் தான் தோசை சுடுவினம். வாசமும் சுவையும் சொல்லி வேலையில்லை.அதோடை நல்லெண்ணையும் விட்டு மொருமொருக்க எடுத்து அப்பிடியே உருட்டி.........:love:

நெருப்பு வெக்கைல, தென்னோலை, தென்னம்பட்டை, உமல், பனம்மட்டை, பனையோலை எண்டதில வித்தியாசம் இருக்குதோண்ணை?

அம்மம்மா.... மண்ணெண்னை அடுப்பில செய்தாலும் அந்தமாதிரி இருக்கும்.

உது கைப்பக்குவம்... நெருப்புச்சூடில்லை எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே டைப்பு தோசை தானண்ணா  ...ஸ்பைசி லாண்ட் தோசையும்....இப்பாவும் நாலு உள்ளுக்கு தள்ளிப்போட்டிருக்கிறன்...அந்தமாதிரி (இப்படிச் சொல்லாட்டி சுவராசியம் இல்லை) காலையிலை போனாலே ஊர் போலை தோசை வடை இட்டலி,சட்னி சாம்ம்பாரும் ..டீயும் தருவினம்...அந்தப் பிடி பிடித்துவிட்டு வேலைக்குப் போனால்..ஊர் தோத்துது போங்கோ....3.50 ஆர்தருவினம் இந்த சந்தோசத்தை...படம் காட்டலாம்..பிந்திப்போச்சு..பாப்பம் பிறௐஊ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, alvayan said:

இதே டைப்பு தோசை தானண்ணா  ...ஸ்பைசி லாண்ட் தோசையும்....இப்பாவும் நாலு உள்ளுக்கு தள்ளிப்போட்டிருக்கிறன்...அந்தமாதிரி (இப்படிச் சொல்லாட்டி சுவராசியம் இல்லை) காலையிலை போனாலே ஊர் போலை தோசை வடை இட்டலி,சட்னி சாம்ம்பாரும் ..டீயும் தருவினம்...அந்தப் பிடி பிடித்துவிட்டு வேலைக்குப் போனால்..ஊர் தோத்துது போங்கோ....3.50 ஆர்தருவினம் இந்த சந்தோசத்தை...படம் காட்டலாம்..பிந்திப்போச்சு..பாப்பம் பிறௐஊ...

 
 

உங்க லண்டன் ஹரோவ் பக்கம் வந்தியல் எண்டால் ஒரு பவுனுக்கு 3 தோசை...

வியாழக்கிழமை, 4 தோசை, ஒரு உளுந்து வடை, சம்பல், சாம்பாரு, கிழங்குக்கு கறி, ஓபெர்... £2.50.

5 கடலை வடை £1. ஒரு இடத்திலேயும் உப்படி வாங்க ஏலாது.

சிறி லங்காவுக்கு எக்ஸ்போர்ட் பண்ணலாம் என்று யோசனை பாருங்கோ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.