Jump to content

`லண்டன் தாக்குதல்தாரியை புலனாய்வு அமைப்புக்கு தெரியும்': உரிமை கோருகிறது ஐ.எஸ்.


Recommended Posts

`லண்டன் தாக்குதல்தாரியை புலனாய்வு அமைப்புக்கு தெரியும்': உரிமை கோருகிறது ஐ.எஸ்.

 

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாக்குதல்தாரி பிரிட்டனை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், அவர் யாரென்று காவல்துறைக்கும், புலனாய்வு சேவை அமைப்புக்கும் தெரியும் என்ற தகவலையும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த கீத் பால்மர் மற்றும் ஐஷா ஃபிராடேபடத்தின் காப்புரிமைPA/FACEBOOK Image captionஉயிரிழந்த கீத் பால்மர் மற்றும் ஐஷா ஃபிராடே

இத்து தொடர்பாக பிரிட்டனின் பிரதிநிதிகள் சபையில் வெளியிட்ட அறிக்கையில், வன்முறை மிகுந்த தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தாக்குதல்தாரி விசாரிக்கப்பட்டார் என்று தெரிவித்த தெரீசா மே , ஆனால் அவர் தொடர்புக்கு அப்பால் இருந்து வந்தார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

''புலனாய்வு அமைப்பின் தற்போதைய பட்டியலில் அவர் இடம்பெறவில்லை'' என்று தெரீசா மே குறிப்பிட்டுள்ளார்.

தெரீசா மே Image captionதெரீசா மே

புதன்கிழமை நான்கு பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தாக்குதல் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் போலீஸ் கான்ஸ்டபிளான கீத் பால்மர், லண்டன் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வந்து உயிரிழந்த கீத் பால்மர், ஐஷா ஃபிராடே என்ற பெண்மணி , 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மற்றும் தாக்குதல்தாரி ஆகியோர் அடங்குவர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவ இடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசம்பவ இடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு பெண்

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த 29 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லண்டன் பெருநகர பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி மேலும் தெரிவித்தார்.

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடைபாதையை ஒட்டி காரை ஓட்டி சென்ற ஒரு நபர் பாதசாரிகள் மீது மோதி பலரை கீழே விழ வைத்துள்ளார். பீதியை உண்டாக்கியுள்ள இந்த சம்பவத்தில் பல டஜன் நபர்கள் காயமடைந்துள்ளனர்.

பின்னர், நாடாளுமன்றத்தை நோக்கி ஓடிய தாக்குதல்தாரி, அங்கிருந்த நிராயுதபாணியான போலீஸ் கான்ஸ்டபிளான கீத் பால்மரை கத்தியால் குத்தினார். அதன் பிறகு, ஆயுதம் ஏந்திய போலீசார் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றனர்.

உயிரிழந்த காவலரான பால்மருக்கு அஞ்சலி செலுத்திய தெரீசா மே, ''ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் ஒரு காதநாயகனே. மேலும், அவரது செயல்களையும், தியாகத்தையும் எப்போதும் மறக்க முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கீத் பால்மரின் புகைப்படத்துக்கு அஞ்சலிபடத்தின் காப்புரிமைEPA Image captionகீத் பால்மரின் புகைப்படத்துக்கு அஞ்சலி

 

இதனிடையே, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தனது செய்தி முகமை மூலமாக அந்த அமைப்பு கோரியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு தெரியுமா,  யாழ்பாண பல்கலைக்கழகம் அன்றைய தமிழ் தேசிய வாதிகளான  தமிழரசு கட்சியின்,  மிக கடுமையான எதிர்ப்பின் மத்தியிலேயே திறந்து  வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை திறக்க விடபாட்டோம் என்று அவர்கள் அடம் பிடித்தார்கள். யாழ்பாணம் முழுவதும் கறுப்பு கொடி ஆர்பாட்டங்கள் நடந்தன.    கூறப்பட்ட காரணம்,  இராமநாதன் என்ற தமிழினத்தின் மாபெரும் தலைவர் பெயரில் உள்ள இராமநாதன் கல்லூரியை,   அதன் பெருமைகளை அழிக்கவே  அதை அரச பல்கலைக்கழகமாக சிங்கள அரசு மாற்றுகிறது என்பதாகும்.   அரசின் மிக சிறிய கிராமிய மட்டதிலான  அபிவிருத்தி திட்டங்கள் கூட  தமிழரசு கட்சியால் கடுமையாக எதிர்க்கப்பட்டு  அவற்றிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என அன்று மக்கள் மத்தியில் கடுமையான  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எதிர் காலத்தில் தாம் உருவாக்க நினைக்கும் தமிழீழ புரட்சிக்கு அது இடையூறு விளைவிக்கும் என தமிழ் தேசியவாதிகள் அன்று கருதினர்.   அதன் தொடர்சசியாக எந்த தொழிற்துறை யாழில் உருவாக்கப்பட்டாலும் அதை எதிர்க்க காரணங்களை தேடித் தேடி  கண்டுபிடித்து அதை எதிர்கக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது.  அப்பாவி மக்களை தூண்டி அவற்றிற்கெதிராக போராட்டம் நடத்த அந்த கும்பல் முயற்சி செய்துகொண்டே இருக்கும். தற்போதைய போலி அறிவியல் வட்சப், யூரிப் காணோளிகள் அதற்கு பலம் சேர்ககின்றன.   சுற்றுலாதுறையை வளர்கக முற்பட்டால் பல்வேறு நாட்டவர்கள் இங்கு  வருவதால் யாழ்பாண கலாச்சாம் கெடுகிறது என்று ஒரு கூட்டம் வரும்.   ஒரு காலத்தில் “யாழ்பாண வெங்காயங்கள்” இலங்கை முழுவதும் பிரபல்யமாக அதிக  கேள்வி உள்ளதாக இருந்தது. நிரம்பலை யாழ்பாண விவசாயிகள் செய்து தமது பொருளாதாரத்தை பெருக்க  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தனது பொருளாதார கோட்பாடுகள் மூலம் உதவி செய்தார்.   இன்றைய உலகமயமாக்கல் பொருளாதார மாற்றங்களினால் அந்த நிலை இன்று இல்லை என்றாலும் ஏனைய தொழிற்துறைகளை முற்றாக நிராகரித்து   யாழ்பாணத்தில் வெங்காயங்களை உற்பத்தி செய்து சந்தைப்டுத்தி மீண்டும் யாழ்பாண வெங்காயங்களை இலங்கை முழுவதும் பிரபல்யப்படுத்தலாம்.  இலங்கையின் மற்றைய பிரதேசங்கள் பல்வேறு தொழிற் துறைகளால் வளர்சியடைய அவர்களுக்கு தேவையான வெங்காயங்களை நாம் சப்ளை செய்யலாம்.   
    • உண்மை தான். ஆனால் இதில் முதலிட்டவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடமை. இதில் பல கோடி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் வாழ்வு இருக்கிறது. இதை உணர்ந்து தான் புட்டினும் நரித்தனம் செய்தார். 
    • இங்கு மற்றைய நாடுகள் தடைசெய்ய காரணம் விவசாயத்தின் போது உபயோகிக்கப்படும் மிதமிஞ்சிய பூச்சிக் கொல்லிகள். 2022 இல் Eu இந்த எத்திலின் சோதனையை குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டாயாமாக்கினார்கள். மார்ச் மாதத்திலிருந்து U.K. கட்டாயாமாக்கி உள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் செத்தல் அரிசி மல்லி சீரகம்  உட்பட பலவற்றிற்கு Pesticide சோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல்  இந்தியாவிலிருந்து சிறீலங்கா சென்று  Product of Sri Lanka என்று U.K. வரும் செத்தல் மிளகாய் ( மிளகாய் தூள் உட்பட)  இனி Aflatoxins அளவு பரிசோதனை செய்யப்படும். மேலதிக விபரங்கள் https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/1/made https://www.legislation.gov.uk/uksi/2024/120/schedule/2/made
    • ஹா ஹா அதெல்லாம் அந்த‌க் கால‌ம் இப்ப‌ கூட‌ இவ‌ரின் பெய‌ரை சொன்னால் சில‌ இட‌ங்க‌ள் அதிரும் லொல்🙏🥰.................................. ஓ மோம் உந்த‌ பெரிசுக்கு குசும்பு அதிக‌ம் தான்.........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.