Jump to content

12 வயதில் அப்பாவான கேரள சிறுவன்


Recommended Posts

12 வயதில் அப்பாவான கேரள சிறுவன்

 
 
கோப்புப்படம்: ஏ.பி.
கோப்புப்படம்: ஏ.பி.
 
 

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும்.

எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியின் உட்சுரப்பியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான பி.கே.ஜப்பார் இதுகுறித்துக் கூறும்போது, ''இளம் வயதிலேயே தந்தையாகியுள்ள சிறுவன் உரிய வயதுக்கு முன்பே பருவமடைந்திருக்கலாம்.

இது வழக்கத்துக்கு மாறான நிலை அல்ல. ஆனால் 12 வயதில் ஒரு சிறுவன் தந்தையான சம்பவத்தை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை'' என்றார்.

குழந்தை பிறந்து 18 நாட்கள் ஆகியிருந்தபோது, தந்தைக்கும், குழந்தைக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளைக் கொண்டு தந்தைமை பரிசோதிக்கப்பட்டது.

அதில் அவர்தான் குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தையாகியுள்ள சிறுவன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாய் மற்றும் தந்தை 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால், வழக்கில் சட்டரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/12-வயதில்-அப்பாவான-கேரள-சிறுவன்/article9597992.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்காவது புண்ணாக்காவது..., அவர்கள் வாலிபர்கள் வயசுல வாழுறாங்கள். விடுங்கோ வாழட்டும். இஞ்ச முன் பின் எல்லாம் முடிச்சுக் குடுத்து முடிக்க முப்பத்தைஞ்சாச்சு.....!  tw_angry:  tw_blush: 

Link to comment
Share on other sites

நானெல்லாம் 12 வயதில் இதுக்கும் மேலே சாதனைகள் செஞ்சிருக்கிறேன். :unsure: மரத்தில் செய்த ட்ரெயின் பொம்மை வேணும் எண்டு அடம்பிடித்திருக்கிறேன். tw_cold_sweat: முதுகில் கொழுவுற பள்ளிக்கூட பை வேணும் எண்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கிறேன். tw_anguished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானெல்லாம் அண்டவெயர் என்று போட்டதே 12 வயதில்த் தான்.

அதுவும் கோம்மேட் காரிக்கன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12  வயதிலா?

வடிவாக ஞாபகம் வருகுதில்லை

ஒரு வெளை  இப்ப பெண்கள்  வயதுக்கு வருவது முந்துவது மாதிரி

ஆண்களுக்கும்??:love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

. இஞ்ச முன் பின் எல்லாம் முடிச்சுக் குடுத்து முடிக்க முப்பத்தைஞ்சாச்சு.....!  tw_angry:  tw_blush: 

நானும் இப்படித்தான் சுவி. லேட்டாகி திருமணம் செய்ய கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும்.

12 வயதிலை அப்பனாகினது பெரிய விசயமாய் இருக்கலாம்.ஆனால்......
மிச்ச விசயங்களைப்பற்றி நான் வாயே திறக்கமாட்டன்...:grin:

முதுகு ஊத்தை உருட்டிவிட்டதைப்பற்றியெல்லாம் மூச்சும் விடமாட்டன்:mellow:

அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டன் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் யாருய்யா சொன்னா.... 
சிறுபிள்ளை வெளாண்மை வீடு வந்து சேராதுன்னு " 
இது அடி  வயிறு வரைக்குமில்லையா வந்திருக்குது ... :unsure:

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

மலையாள சினிமாக்களில் ஷகீலாவின் படங்களை மட்டும் அறிந்து வைத்து இருக்கின்றீர்கள் போல இருக்கு நெடுக்கு. அங்கிருந்து மிகவும் தரமான படங்கள் தான் அதிகம் வருகின்றன. பிரேமம் போன்ற படங்களையாவது பார்த்து இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

 

18 hours ago, இசைக்கலைஞன் said:

நானெல்லாம் 12 வயதில் இதுக்கும் மேலே சாதனைகள் செஞ்சிருக்கிறேன். :unsure: மரத்தில் செய்த ட்ரெயின் பொம்மை வேணும் எண்டு அடம்பிடித்திருக்கிறேன். tw_cold_sweat: முதுகில் கொழுவுற பள்ளிக்கூட பை வேணும் எண்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கிறேன். tw_anguished:

 

15 hours ago, ஈழப்பிரியன் said:

நானெல்லாம் அண்டவெயர் என்று போட்டதே 12 வயதில்த் தான்.

அதுவும் கோம்மேட் காரிக்கன்.

 

13 hours ago, விசுகு said:

12  வயதிலா?

வடிவாக ஞாபகம் வருகுதில்லை

ஒரு வெளை  இப்ப பெண்கள்  வயதுக்கு வருவது முந்துவது மாதிரி

ஆண்களுக்கும்??:love:

 

நீங்கள் எல்லோரும் 12 வயது சிறுவனைப் பற்றி மட்டுமே மட்டுமே கதைத்துக் கொண்டு இருக்கின்றிர்கள். அவனுக்கு 16 வயதில் ஒரு குருஜி இருக்கின்றா என்பதை சுலபமாய் மறந்து விடுகின்றிர்கள்.....!  tw_blush:

8 hours ago, குமாரசாமி said:

12 வயதிலை அப்பனாகினது பெரிய விசயமாய் இருக்கலாம்.ஆனால்......
மிச்ச விசயங்களைப்பற்றி நான் வாயே திறக்கமாட்டன்...:grin:

முதுகு ஊத்தை உருட்டிவிட்டதைப்பற்றியெல்லாம் மூச்சும் விடமாட்டன்:mellow:

அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டன் <_<

சேம் பிளட் ......!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொதாரி இது 16 வயது பெண்ணை கைது செய்யாமல் 12 வயது சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். கிந்திய சட்டம் இப்பிடிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

என்ன கொதாரி இது 16 வயது பெண்ணை கைது செய்யாமல் 12 வயது சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். கிந்திய சட்டம் இப்பிடிதான்

சிங்கம்  ஆட்டை  சாப்பிடுவது இயற்கை எனும் விதிக்குள் இதுவும்  வரும் போல....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

எங்களுக்கு எல்லாம்.. 12 வயசில.. அதைப் பிடிச்சு.. உச்சா போகத்தான் தெரியும். இவனுக்கு......................tw_angry::rolleyes:

உவன் 12 வயதில் அப்பான்னா... 24 வயசில.. இவன் தாத்தா.  கொடுமை. எல்லாம் மலையாள சினிமாவின் அபரிமிதமான காமத்தின் விளைவு.  tw_blush:

சோப்பு போடுவதை மட்டும் பார்த்து விட்டு சொல்லப்படாது மலையாளப்படங்கள்    மசாலா இல்லாத படங்களை நீங்கள் பார்க்க வேண்டும்  நெடுக்ஸ் tw_blush:

Link to comment
Share on other sites

12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது

 

 
03_BABY__BRITAIN_I_3147328f.jpg
 
 
 

கேரள மாநிலத்தில் 12 வயது சிறுவனுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் மீது பாஸ்கோ சட்டத்தின் கீழ் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயதே நிரம்பிய குழந்தையின் தாய் மீதும் குழந்தைகள் பாலினக் கொடுமை (போஸ்கோ சட்டம்) தடுப்புச் சட்டப்படி, சட்டப்பிரிவுகள் 7.8-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிறுவன்தான் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமியின் மீது போஸ்கோ சட்டப்பிரிவுகளின் கீழ் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் விநோதம்..

இந்த வழக்கின் விநோதம் என்னவென்றால், ஒரு பிரிவின் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படும் சம்பந்தப்பட்ட நபர் மற்றொரு சட்டப்பிரிவின்படி பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுவார். இந்த வழக்கு இப்போது, சிறுவன், சிறுமி மற்றும் அவர்களுடைய குழந்தை என மூன்று சிறாரின் நலன் சார்ந்ததாக மாறியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்துவரும் அதிகாரிகள், குழந்தைக்கு 12 வயது சிறுவன்தான் தந்தை என்பது உறுதியாகிவிட்டது. எனவே, பாலுறவு கொள்வதற்கு இருவரில் யார் முதலில் தூண்டியது என்பதின் அடிப்படையில் நீதி வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.

மாநிலத் தலைவர் கூறுவது என்ன?

இந்நிலையில், கேரள மாநில குழந்தைகள் நல வாரியத் தலைவர் சோபா கோஷி, "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குழந்தைகளின் உரிமையும் பேணப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தைகள் என்பதால் அவசரகதியில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி 18 வயது கீழ் உள்ளவர்களை ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதில்லை, குழந்தைகளாகவே பாவிக்கிறோம். போலீஸார்தான் இவ்வழக்கில் குற்றவாளி யார் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

http://tamil.thehindu.com/india/12-வயதில்-தந்தையான-கேரள-சிறுவன்-மீது-பலாத்கார-வழக்கு-பாய்ந்தது/article9601111.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான பெண் சிசுக்களைக் கொல்வதில் (பிறப்பின் முன்பும்...பிறந்த பின்பும்)..பல இந்திய மாநிலங்கள் இன்னும் முன்னிலையில் நிற்கின்றன!

ஒரு வேளை.....இயற்கை விழித்துக் கொண்டு  விட்டதோ?tw_blush:

 

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:

இந்த வழக்கின் விநோதம் என்னவென்றால், ஒரு பிரிவின் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படும் சம்பந்தப்பட்ட நபர் மற்றொரு சட்டப்பிரிவின்படி பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுவார். இந்த வழக்கு இப்போது, சிறுவன், சிறுமி மற்றும் அவர்களுடைய குழந்தை என மூன்று சிறாரின் நலன் சா

12 வயதில் உள்ளவர்களை "குற்றவாளிகள்" (criminals) என சட்ட்ப்படி சொல்ல முடியுமா? :unsure:

Link to comment
Share on other sites

On 24.3.2017 at 4:42 AM, குமாரசாமி said:

முதுகு ஊத்தை உருட்டிவிட்டதைப்பற்றியெல்லாம் மூச்சும் விடமாட்டன்:mellow:

அடிச்சு கேட்டாலும் சொல்லமாட்டன் <_<

 

On 24.3.2017 at 1:15 PM, suvy said:

சேம் பிளட் ......!tw_blush:

முதுகில அவ்வளவு ஊத்தையா இருக்குது ஆளாளுக்கு உருட்டி விளையாட.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24.03.2017 at 8:45 AM, suvy said:

 

 

 

 

நீங்கள் எல்லோரும் 12 வயது சிறுவனைப் பற்றி மட்டுமே மட்டுமே கதைத்துக் கொண்டு இருக்கின்றிர்கள். அவனுக்கு 16 வயதில் ஒரு குருஜி இருக்கின்றா என்பதை சுலபமாய் மறந்து விடுகின்றிர்கள்.....!  tw_blush:

சேம் பிளட் ......!tw_blush:

என்ன கன பிளட் ஒரே மாதிரி இருக்குது.:unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் படித்தவர்கள் நிறைந்த  மாநிலமான கேரளாவின் immoral நடவடிக்கை கேலிக்குரியது.

ஒரு 12 வயது அறியாச் சிறுவன், 16 வயது பெண்ணால் seduced பண்ணப்பட்ட நிலைமை கண்டு கொள்ளப்படவில்லை.

இங்கே பிரித்தானியாவில் இந்த நிலை வந்தபோது, சட்டமும், சமூகமும், அவர்களை ஆதரித்து, பிறந்து விட்ட குழந்தையின் நலன் கருதி நடந்து கொண்டது. 

Sensation: Baby-faced Alfie Patten shocked the world when he hit the headlines as a dad at 13

https://www.thesun.co.uk/archives/news/746069/britains-youngest-parents/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இந்தியாவின் படித்தவர்கள் நிறைந்த  மாநிலமான கேரளாவின் immoral நடவடிக்கை கேலிக்குரியது.

ஒரு 12 வயது அறியாச் சிறுவன், 16 வயது பெண்ணால் seduced பண்ணப்பட்ட நிலைமை கண்டு கொள்ளப்படவில்லை.

இங்கே பிரித்தானியாவில் இந்த நிலை வந்தபோது, சட்டமும், சமூகமும், அவர்களை ஆதரித்து, பிறந்து விட்ட குழந்தையின் நலன் கருதி நடந்து கொண்டது. 

Sensation: Baby-faced Alfie Patten shocked the world when he hit the headlines as a dad at 13

https://www.thesun.co.uk/archives/news/746069/britains-youngest-parents/

இந்தியாவில் இப்படி சிந்திக்க மாட்டார்கள். Sex என்றால் ஆண் பெண்ணுக்கு செய்வது என்று தான் அவர்களுக்கு தெரியும். 17 வயதுக்காரிக்கு 12 வயதுக்காரன் பிள்ளையை கொடுத்துட்டான் என்ற நோக்கிலேயே செல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இந்தியாவில் இப்படி சிந்திக்க மாட்டார்கள். Sex என்றால் ஆண் பெண்ணுக்கு செய்வது என்று தான் அவர்களுக்கு தெரியும். 17 வயதுக்காரிக்கு 12 வயதுக்காரன் பிள்ளையை கொடுத்துட்டான் என்ற நோக்கிலேயே செல்வார்கள்.

அதுதான் உன்மை மீரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விதமான அழுத்தங்களோ, நிர்பந்தங்களோ இல்லாது, ஆணும் பெண்ணுமாக கட்டில் செல்வார்கள்... பலமுறை...

ஆனாலும்.... ஆண் வேறு கலியாணம் செய்யப் போகிறார் என்றவுடன்.... அந்தப் பெண்... ஆற அமர... போய்... அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துட்டார்.. என்றால் உடனே அவர் கைது.

ஆண்... பலாத்காரத்துக்கு உட்படுவதில்லை என்பது அடிப்படை நிலை (default position)

அதுதான் இந்தியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வழக்கு.

ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரி... இளைஞர்.

ஒரு வழக்கு விடயமாக வைத்தியசாலைக்கு, ஒரு statement எடுக்க, தாதி ஒருவரை சந்திக்கிறார்.

இருவருக்கும் ஒரு கவர்ச்சி.... வெளியே சந்தித்துக் கொள்கின்றனர். 

கட்டில் வரை போகின்றனர். அவர் இயங்கிக் கொண்டிருக்கும் போது, 'நிறுத்து, நிறுத்து' என்கிறார் அவர்.

அவர் நிறுத்தாமல் தொடர்கிறார். இவர் பின்னர், பாலியல் பலாத்காரம் என முறையிட, 'நிறுத்து' என்று சொன்னபின்னும் அத்துமீறினால், அது பாலியல் பலாத்காரம் தான் என்ற சட்ட பிரிவின் கீழ் இவர் கைதாகிறார்.  

வழக்கு நீதிமன்றம் வருகின்றது. 

அவரோ, இணக்கத்துடன் தான் ஆரம்பித்தோம். இடையே எப்படி பாலியல் பலாத்காரமானது என்கிறார். அவர், பலவகையான சத்தங்கள் (முனகல்கள்) போட்டுக் கொண்டிருந்ததால்,  'நிறுத்து' என்று சொன்னதாக எனக்கு நினைவே இல்லை. என்கிறார். மேலும் அவர் நிறுத்து என்று சொல்லி இருந்தால் அந்த நேரத்தில் அதன் அர்த்தமே வேறு.... மேலும் நானும் நிறுத்தக் கூடிய நிலையில் இருந்திருக்க முடியாது... என்கிறார்.

ஜட்ஜ் ஐயாவுக்கு கோபமான கோபம்.

அரச வழக்கு தொடுனரை கடாசி தொலைத்து விடடார். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இது போன்ற வழக்குகளைக் கொண்டுவந்து, நீதிமன்ற நேரத்தினையும், மக்களின் வரிப் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று சொல்லி வழக்கினை தள்ளி விட்ட்டார்.

நீட்டி முழங்கிய, பெண் உரிமை சங்கத்துக்கும், இது போன்ற அபத்தங்களை ஆதரவு அளித்து, உங்கள் மதிப்பினைக் கெடுத்து, பின்னர், உங்கள் உதவி உண்மையாக தேவைப்படுபவர்களுக்கு தீங்கு இலைக்காதீர்கள் என்று குட்டும் வைத்தார். 

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

அவரோ, இணக்கத்துடன் தான் ஆரம்பித்தோம்

இணக்கத்துடன் ஆரம்பித்ததால் இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்குள் நுழைந்துவிட்டதாக எழுத்துக்கொள்ள வேண்டும் யுவர் ஆனர். :D: பிறகு நிறுத்து என்று சொன்னால் அது Breach of Contract என எடுத்துக்கொள்ள வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.