Jump to content

12 வயதில் அப்பாவான கேரள சிறுவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

18 minutes ago, இசைக்கலைஞன் said:

இணக்கத்துடன் ஆரம்பித்ததால் இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்குள் நுழைந்துவிட்டதாக எழுத்துக்கொள்ள வேண்டும் யுவர் ஆனர். :D: பிறகு நிறுத்து என்று சொன்னால் அது Breach of Contract என எடுத்துக்கொள்ள வேண்டும். tw_blush:

 
 

இந்த மாதிரி சிக்கல் மிகுந்த விசயங்களில், விசயங்களை தெளிவாக்கி, அந்தமாதிரியான, பாயிண்டுகளை அடுக்கி வைக்கும், எங்கள் அண்ணன், தமிழ் சிறியர்... இப்போ சைவமாகி விட்டார், மக்களே. tw_cry:

Link to comment
Share on other sites

12 வயதில் தந்தையான சிறுவன் ; மருத்துவம் சொல்லும் காரணம் என்ன? 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கு இரு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தந்தை என 12 வயது சிறுவன் ஒருவனை அடையாளம் காட்டினார். சிறுவனுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் குழந்தைக்கு சிறுவன்தான் தந்தை என்பது உறுதியானது.  தற்போது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுவன் மீது போஸ்கோ(POCSO) எனப்படும் குழந்தைகள் பாலின கொடுமைச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்தியாவிலேயே இளம் வயது தந்தை இந்த சிறுவன்தான். இளம்பெண், சிறுவன், குழந்தை மூன்று பேரையும் பற்றியத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 

12 வயதில் தந்தையான சிறுவன்

இந்த விவகாரத்தில் பாலுறவு கொள்வதற்கு முதலில் தூண்டியவருக்குத் தண்டனை அளிக்கப்படுமாம். இப்போது குழந்தை வேறு பிறந்திருப்பதால், மூன்று பேரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம் பெண்ணும்,  பெண்தான் தூண்டியதாக சிறுவனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். எனவே இருவர் மீதுமே வழக்கு பாய்ந்துள்ளது.   

இது குறித்து பாலியல் மருத்துவர் அசோகனிடம் நாம் கேட்ட போது, ''சிறுமிகள் எப்படி விரைவில் பூப்பெய்து விடுகிறார்களோ... அப்படித்தான்  அந்தச் சிறுவன் முன்னதாக பருவம் எட்டியிருக்கிறான். ஆண் குழந்தைகளுக்கு விந்தணு வெளிப்படும் காலத்தைத்தான் பருவமாக பார்க்கிறோம். தற்போதைய தலைமுறைக்கு இணையம் வழியாக எல்லா வாய்ப்புமே கொட்டிக் கிடக்கிறது. மேற்கத்திய கலாசாரம், நம்ம கலாசாரம் அப்படி என்கிற எந்த வித்தியாசமும் இல்லை. உடை, நடை, பாவனைகளில் இருந்து எல்லாமே ஒரே கலாசாரமாக மாறிவிட்டது. உணவுப் பழக்க வழக்கங்கள் கூட மாறியிருக்கின்றன. 

இணையங்களில் பாலியல் தொடர்பான படங்களைப் பார்க்கும்போது,  உடல் ரீதியாகவும் துண்டப்படுகின்றனர். உடல் ரசாயனங்களால் ஆன குப்பை போன்றது. ஆனால், மனது நல்லது கெட்டது அறிய வேண்டும். நாம் செய்வது சரியா... தவறா என ஆராய வேண்டும். இவர்கள் விவகாரத்தில் இருவருமே மனரீதியாக ஆராயவில்லை.   

இப்போது, பத்து வயது சிறுவன் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறான். மனம் பக்குவமடையாத வயது.  பாலியல் படங்களைப் பார்க்கும் போது  உடல் ரீதியாக தூண்டப்பட்டு விடுகிறான். மைனர்தானே என்று நாம் விட்டுவிட முடியாது. நிர்பயா விவகாரத்தில் கூட மைனர் குற்றவாளியின் செயல்பாடுதான், அவரது மரணத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. வன்மத்துக்கும் வக்கிரத்துக்கும் வயதை விட மனதுதான் முக்கிய காரணம். எல்லா வயதிலும் வக்கிரம் நிறைந்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். 

இவர்களைப் பொறுத்தவரை விளையாட்டாக ஆரம்பித்து இப்போது வினையில் முடிந்திருக்கலாம். உடல் ஆசைப்படும்போது மனசுதானே கட்டுப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்பாட்டை மீறியுள்ளனர். திருமண வயது எதற்காக நிர்ணயித்திருக்கிறார்கள்? அப்போதுதான் ஒரு ஆண் குடும்பத்தை வழி நடத்தக் கூடிய அளவுக்கு முதிர்ச்சி பெற்றிருப்பான். வேலைக்கு போய் பணம் சம்பாதிப்பான். பெண் உடல் மற்றும் மனதளவில் உறவுக்கு தயாராகியிருப்பார். குடும்பத்தை வழி நடத்த அவளும் பக்குவமடைந்திருப்பார்.   இருவருக்குமே செக்ஸ் குறித்த விழிப்பு உணர்வு இருக்கும்.  

'போஸ்கோ' சட்டமே விவாதத்திற்குரியதுதான்.  சம்பந்தப்பட்ட மூன்று குழந்தைகளின் உரிமையும் இந்த விவகாரத்தில் காக்கப்பட  வேண்டும். குற்றம் புரிந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தைகள் என்பதால் அவசரகதியில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி 18 வயது கீழ் உள்ளவர்களை ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதில்லை, குழந்தைகளாகவே பாவித்து இந்தப் பிரச்னையை மனிதாபிமானத்தோடுதான் அணுக வேண்டும்'' என்றார்.

 

http://www.vikatan.com/news/india/84871-kerala-boy-becomes-father-at-12-teenage-mother-booked-under-pocso-act.html

Link to comment
Share on other sites

சிறுவனின் அப்பாவிடமும் கொஞ்சம் விசாரிங்க எஜமான்.. டி.என்.ஏ. ஒரே மாதிரியாக இருந்து குழப்பம் வந்திருக்கப்போகுது.. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.