Jump to content

முதல் விமானப்பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன்.

"சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன்.

இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன்.

 

முப்பது வருடங்களுக்கு முன்பு, முதல் விமானப்பயணம் சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர்லங்கா மூலம் ஆரம்பமானது. மானிப்பாயிலிருந்து மினி வானில் தலைமன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் ராமேஸ்வரம் போய் ரயிலில் சென்னை போய் சேர்ந்தேன்

போனபாதையால் திரும்பி ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.ராமானுஜம் கப்பல் திரும்பி ஓடும் என்று எதிர்பார்த்து காத்திருந்திருந்தால் இன்று அவுஸ்ரேலியா ஒரு சூப்பர்டூப்பர் எழுத்தாளனை இழந்திருக்கும் .

 

இரண்டுவருடங்கள் வரை ஓடும் ஒடும் என காத்திருந்து  எனது முதல்  விமானப்பயணம் ஆரம்பமானது. விமானநிலையத்திற்கு வழி அனுப்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.எல்லோரும் என்னை போல் கப்பலில் வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் .சிலருக்கு நாடு திரும்ப விமானம் ஏற வேண்டிய நிலை வேறு சிலருக்கு வெளிநாடு செல்ல விமானம் ஏற வேண்டிய நிலை. அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு.

டொக்டர்மாருக்கு  பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான்.

 

எனக்கோ விமானத்தில் முதல்முதலாக பயணம் செய்ய போற பயமொன்று மனதை துளைத்தெடுத்துகொண்டிருந்தது.

சுங்க சோதனைகள் ,குடியகழ்வு சோதனைகளை முடித்து, போர்டிங்க் பாஸ் கையிலிருந்தும் ஊரில் பஸ்ஸுக்கும் புகையிரதத்திற்கும் இடம் பிடிக்க முண்டியடித்துக் கொண்டு ஏறிய பழக்கம் தோசத்தில் இங்கேயும் ஒடிச்சென்று நுழைவாயிலில் நின்றுகொண்டேன்.

"இரு கை கூப்பி ஆயுபோவன் என்ற புன்னகையுடன் ஒருத்திவரவேற்றாள்"என்னுடைய தமிழ்ப்பற்றை அடக்கி வைத்து கொண்டுபதிலுக்கு நானும் ஆயுபோவன் என்றேன். "போடிங்க்பார்ஸ் பிளிஸ்"

பாஸ்போர்ட்டையும்,அவங்கள் தந்த வெள்ளை துண்டையும் சேர்த்து கொடுத்தேன்.பார்ஸ்போர்ட்டை திருப்பி தந்துவிட்டு வெள்ளைதுண்டை பார்த்துவிட்டு "யு சீட் நம்பர் .....டெர்ன் யு ரைட்"

அவளுக்கு தெரியுமே, எனக்கு ரைட் லெவ்ட் பிரச்சனையிருக்கு என்று.ஒரு மாதிரி                                                                                                                                                                                         சமாளிச்சு சீட்டை கண்டுபிடித்து அமர்ந்து கொண்டேன்.  .விமானபணியாளர்கள் தங்கள் கடமைகளை செய்துகொண்டிருந்தனர்.

அந்த குளிருக்குள்ளும் எனக்கு வியர்க்க தொடங்கிவிட்டது.விமானம் புறப்பட தொடங்க முதல் பணிப்பெண் எனது சீட்டுக்கு முன்பு நின்று இருக்கை பட்டி போடும் முறையையும்,ஒட்சிசன் குறைந்தால்  என்ன செய்ய வேண்டும் மற்றும் உயிர்காப்பு கவசம் அணிவது எப்படி எனவிளக்கம்கொடுத்து கொண்டிருந்தார்.அவர் கூறிய எதுவும் எனது மனதில் பதியவில்லை எனது சிந்தனை முழுவதும் கொழும்பு விமான நிலயத்தில் இறங்கி வெளியே செல்லும் பொழுது இராணுவத்தொல்லை இருக்ககூடாது என்பதாகவே இருந்தது.

உணவு பரிமாறினார்கள், முள்ளுக்கரண்டி கத்தி போன்றவற்றை பார்த்ததுண்டு ஆனால் அன்று பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.அதுவும் முதல் அனுபவம் ஒரு மாதிரி உணவை  போராடி சாப்பிட்டு முடித்துவிட்டேன் .சற்று குனிந்தேன் சேர்ட்டில் குழம்பு கறை பட்டிருந்தது.துடைத்து பார்த்தேன் கறை போகவில்லை.விமானப் பயணத்திற்காக வாங்கிய வெள்ளை சேர்ட் கறைபட்டு அழுக்காகியிருந்தது. சேர்ட்டில் கறை படிந்ததை விட ,கறையை பார்த்து விமானபணிப்பெண்களும் சகபயணிகளும் எனது பயணம் கன்னிப்பயணம் என்று கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற கவலை அதிகமாக இருந்தது.

இன்னும் சில மணி நேரத்தில் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கப்போகின்றோம் என விமானி அறிவிக்க ,எனது கைப்பையை எடுக்கஎழும்பினேன். பணிபெண் அருகே வந்து சொன்னாள் பிளேன் இறங்கப்போகுது இருக்கையிலிருந்து இருக்கை பட்டியை போடுமாறு.   புகையிரதத்திலிருந்து  இறங்குவதற்கு அடிப்பட்டு இறங்கிய பழக்க தோசம் இங்கயும் வந்திட்டு என்று நான் கவலைப்பட்வில்லை. சொறி என்று சொல்லி அமர்ந்துவிட்டேன்.

முன்சீட்டை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன் விமானம் ஒடுபாதையில் தரைதட்டும்பொழுது .விமானம் நின்று சகபயணிகள் எல்லொரும் எழுந்த பின்பு தான் நான் எழுந்தேன் .நன்றி சொல்லி விமான ஊழியர்கள் வழி அனுப்பிவைத்தனர்.ஏணியால் இறங்கும் பொழுது திரும்பி பார்த்தேன் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கிய சீருடையினர். பக்கத்தில் நின்ற பஸ்ஸில் ஒடிப்போய் ஏறிக்கொண்டேன்.விமானப்படையனரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

 

குடிவரவுக்கு போய் கடவுச்சீட்டை நீட்டினேன் .முகத்தையும் பாஸ்போர்ட்டையும் இரண்டு,மூன்று தடவை திரும்பி பார்த்தார் ,இனிமேல் இல்லாத அப்பாவி போன்று முகத்தை வைத்திருந்தேன்.

ஒரு முத்திரையை குத்திபோட்டு வேண்டா விருப்பா பாஸ்போர்ட்டை தந்தார்.அவர் சிரிக்கவில்லை என்றாலும் நான் சிரித்துபோட்டு போம ஸ்துதி சொல்லி வாங்கி வெளியே வர, கட்டிட நடைபாதையின் மேலே" போர் என்றால் போர் சமதானம் என்றால் சமாதானம்"என்று குரல் கொடுத்த ஜேஆரின் படம் தொங்கி கொண்டிந்தது....

 

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

 

பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....."

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு புத்தன். என் முதல் விமானப் பயணம் நினைவில் வந்தது. அதுபற்றியும் ஒருக்கா எழுதவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

பதிலுக்கு நானும் மனதினுள் சிரித்தபடி 'யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம்' இது "அப்பே ரட்ட....."

'பஞ்ச்' டயலாக், நல்லாயிருக்கு..!  vil2_roi.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்  முதல் முத்தம்போல் முதல் ரயில் பயணம்,முதல் கப்பல் பயணம், முதல் விமானப் பயணமும் மறக்க முடியாதுதான்.மிக நன்றாக இருக்கின்றது.அதுசரி விமானத்தில யன்னல் ஒர சீற்றுக்கு சண்டை பிடிக்க வில்லையா.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்
 
விமான பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்ற வாலிபர் கைது என்று பேப்பரில் என்றோ படித்த ஞாபகம்.அது நீங்களாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு.

ஆமா நான் தான் என்று உண்மையா சொல்ல போறீங்க?

ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரே புன்சிரிப்பாகவே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பயணம் மாதிரி தெரியவில்லையே ... நன்றாக இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட பெயர் அவருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ புத்தன் 

ம் சூப்பரு  

 கூட்டாளிகள் ஆகாது  எப்ப பாரு சொப்பன சுந்தரி கள் நினைப்புத்தான் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

"அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்றுதிரும்பிவாறீயள்"

தமிழர் தலையில்  சுத்தியலால்  அடித்த மாதிரிஇருக்கு..

அடுத்த  அடியோட

சிறீலங்கா தானே...

ம்ம்ம்

இன்னொரு அற்புதக்கிறுக்கல்...

தொடருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கதை அசத்தல்.tw_thumbsup:

13 hours ago, putthan said:

அந்த வயதில் பெண்களைப்பற்றிய கற்பனை அதிகமாக இருக்கும் .நண்பர்கள் ஒன்றுகூடினால் அதிகம் பெண்களைப்பற்றித்தான் பேசுவோம். பொழுது போக்காக சிலசமயங்களில் விடுதலை பற்றி பேசுவதுண்டு.

டொக்டர்மாருக்கு  பெண்களை தொட்டு பார்க்கும் சந்தர்ப்பம் அதிகம் என்றான் ஒருத்தன் ,இன்னோருத்தன் இல்லையடா பைலட்மாருக்குத்தான் நல்ல சான்ஸ் இருக்கு என்றான்.மற்றவன் ஒருபடி மேல போய் "மச்சான் ஏர்கொஸ்டரிடம் ஒரு கிஸ் கேட்டுப்பார் அவள் தருவாள்,அவையளின்ட டியுட்டி... கஸ்டமாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடில் அவையளினட வேலை போய்யிடும்" என சொல்லி உசுப்பேத்தினான்.

அந்த வாலிப காலத்திலை எனக்கோ என்ரை கூட்டுவளுக்கு உப்புடியான தீய சிந்தனையள் வந்தே இல்லை. எப்பவும் இலக்கியம் கவிதை மகாபாரதம் கம்பராமாயணம் எண்ட கதையள் தான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனதில் இருக்கும் வலியை நீங்கள் ஆசுவாசப்படுத்த "....மனதினுள் சிரித்தபடி யோவ் நாங்கள் இதுவும் செய்வோம் இன்னும் செய்வோம் இது "அப்பே ரட்ட....." நெத்தியடி புத்தன்...
தொடரட்டும்  இந்த "கருக்களால் நிறைந்த கிறுக்கல் "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் விமானப் பயணத்தை.... எவராலும் மறக்க முடியாது.
அதனை தலைப்பாக எடுத்து, கிறுக்கிய புத்தனின்  சிந்தனைக்கு பாராட்டுக்கள்.
உங்களது பதிவு... எம்மை மீண்டும்  எமது முதல் விமானப் பயண அனுபங்களை,  அசை போட வைத்தது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு விமானப் பயண அனுபவம்!

எனது நினைவுகளையும் கீறி விட்டது!

அந்தக்காலத்தில் அரசாங்க உத்த்யோகத்தர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் இலவசப் பயண வாரண்ட் மாதிரிக் கொடுப்பார்கள்! அந்த வாரண்டுகள்...அந்த வருடம் உபயோகிக்கப் படா விட்டால் காலாவதியாகி விடும்! எனக்கு மூன்று அல்லது நான்கு வயதளவில் இருக்கும்! அப்போது எயர் சிலோன் என்ற பெயரில் தான் விமான சேவை இயங்கியது! ஒவ்வொரு பயணியையும், அவர்கள் குழந்தைகளாக இருந்தாலும். நிறுத்த பின்னர் தான் விமானத்துக்குள் ஏற விடுவார்கள்! காதுகளுக்குள் வைத்துக் கொள்ளப் பஞ்சும், வட்ட வடிவமாக உள்ள 'பெப்பர் மின்ற்' இனிப்புகளும் தந்ததாக ஞாபகம் உள்ளது!

இதனால் விமானப் பற்றிய பயம் இல்லாமலே போய் விட்டது!

என்னை ஏற்றிச் சென்ற முதாலாவது..இலங்கை விமானம்..இது தான்!

Air_Ceylon_Douglas_DC-8_at_Zurich_Airpor

இருப்பினும்...கொழும்பிலிருந்து..தாய்லாந்து நோக்கிய முதல் பயணம்...அற்புதமானது என்பது மட்டுமல்ல...வானத்திலிருந்து பார்க்கும் போது..மாலை தீவின் கரைகளும்... இலங்கைத் தீவின் கரைகளும்..பொற் கோடுகளால் வரைந்த ஓவியம் போல தோன்றும்! ஒரு வேளை எமது விமானம் புறப்பட்ட நேரம்...சூரியனின் திசை போன்றவற்றால்..அந்த மாயத் தோற்றம் ஏற்பட்டிருக்கலாம்!

எனக்கு உயரத்திலிருந்து இயற்கை அமைப்புகளைப் பார்க்கப் பிடிக்கும்!

ஈராக்கின் மேலாக விமானம் பறக்கும் போது..அதன் கல்லாலான மலை முகடுகளும், அவுஸின் மேலாகப் பறக்கும் போது..அயர்'ஸ் றொக், மேற்கு அவுஸ்திரேலியாவின் பங்கிள், பங்கிள் மலைக்குன்றுகளும் மிகவும் அழகானவை!

தொடர்ந்தும்...அடிக்கடி...கிறுக்குங்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/03/2017 at 9:00 PM, putthan said:

 

Image result for images of first journey man in flight

 

 

 

Link to comment
Share on other sites

On 23/03/2017 at 6:00 AM, putthan said:

அதே இடத்தில் இன்று மைத்திரியின் படம் தொங்கிகொண்டிருக்கின்றது."அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்று திரும்பிவாறீயள்"கேட்பது போல இருந்தது.

ஒவ்வொரு சிங்களவரும் இதைத்தன்  எண்ணுவார்கள்  அல்லது அவ்வாறு எண்ணுவார்கள் என்று நாம் எண்ணுவோம். ஒரு தரப்புக்கு அடிமைப்பட்டதன் தாக்கம் வாழ்நாள் முழுக்க  மனதை பாதிக்கும். 

Link to comment
Share on other sites

வழக்கம் போல நன்றாக இருக்கு புத்தன்.... விரைவில் கதைகளை தொகுத்து புத்தகமாக போடுங்கள்

8 hours ago, புங்கையூரன் said:

இருப்பினும்...கொழும்பிலிருந்து..தாய்லாந்து நோக்கிய முதல் பயணம். அற்புதமானது என்பது மட்டுமல்ல

 

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சரி, பிறகு தாய்லாந்தில் ஏற்பட்ட அருமையான அனுபவங்களையும் கூச்ச நாச்சமில்லாமல் எழுதுங்கள்

ஆமோதிக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய முதல் விமானப்பயணமும் மறக்கமுடியாதது. பலாலியிலிருந்து கொழும்புக்கு இந்திய இராணுவ அடக்குமுறையிலிருந்து தப்பித்து ஓடிய பயணம். முழுக்காற்சட்டை போட முன்னரே அவசரமாகப் போகவேண்டி வந்தது. சிறிலங்கன் விமானப்படையின் துருப்புக்காவும் விமானத்தில் நின்றுகொண்டே அநுராதபுரம் மட்டும் போகவேண்டி வந்தது. பின்னர் இருக்கைகள் கிடைத்தன!

பண்ணைப் பாலத்தை அந்த முதலாவது விமானப் பயணத்தில்தான் பார்த்தேன். இன்னும் நேரே பார்க்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை புத்தன்.எந்த முதல் அனுபவமும் மறக்க முடியாது.எனது முதல் விமானப்பயணம் கொழும்பு சென்னை .அதில வாழைப்பழத்தை கத்தி கறன்டியால் வெட்டி சாப்பிட்டதை மறக்க முடியாது.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.3.2017 at 8:31 AM, சுவைப்பிரியன் said:

அருமை புத்தன்.எந்த முதல் அனுபவமும் மறக்க முடியாது.எனது முதல் விமானப்பயணம் கொழும்பு சென்னை .அதில வாழைப்பழத்தை கத்தி கறன்டியால் வெட்டி சாப்பிட்டதை மறக்க முடியாது.tw_blush:

விமானத்தில் ஏறியவுடன்,
வாழைப் பழத்தை...... கத்தியால் வெட்டி, முள்ளுக் கரண்டியால் குத்தி....  சாப்பிடுவது  தான்... "டிசிப்பிளின்". :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/03/2017 at 9:16 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கு புத்தன். என் முதல் விமானப் பயணம் நினைவில் வந்தது. அதுபற்றியும் ஒருக்கா எழுதவேணும்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் .....எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்

On 23/03/2017 at 9:20 PM, நவீனன் said:

புத்தனின் கிறுக்கல் எப்போதும்  ஒரு தனி ரகம்..tw_blush:

பிறகுதான் பச்சை.

நன்றிகள் நவீனன் பச்சைக்கும்

On 23/03/2017 at 9:21 PM, ராசவன்னியன் said:

'பஞ்ச்' டயலாக், நல்லாயிருக்கு..!  vil2_roi.gif

நன்றிகள் ராசவன்னியன் எல்லா புகழும் தமிழ் சினிமாவுக்கே

On 23/03/2017 at 9:32 PM, suvy said:

புத்தன்  முதல் முத்தம்போல் முதல் ரயில் பயணம்,முதல் கப்பல் பயணம், முதல் விமானப் பயணமும் மறக்க முடியாதுதான்.மிக நன்றாக இருக்கின்றது.அதுசரி விமானத்தில யன்னல் ஒர சீற்றுக்கு சண்டை பிடிக்க வில்லையா.....!  tw_blush: 

நன்றிகள் சுவி ஏன் இல்லை ,தெரியாத மாதிரி யன்னல் சீட்டில் போய்யிருந்திட்டன் ....பக்கத்து சீட்டில இருக்க வந்தவன் என்னைவிட உசார் பேர்வழி

On 24/03/2017 at 0:22 AM, வாத்தியார் said:

கிறுக்கல் நன்றாக இருக்கின்றது

நன்றிகள் வாத்தியார் எல்லாம் உங்களது பாராட்டுக்கள் தான்

On 24/03/2017 at 2:34 AM, ஈழப்பிரியன் said:

புத்தன்
 
விமான பணிப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட முயன்ற வாலிபர் கைது என்று பேப்பரில் என்றோ படித்த ஞாபகம்.அது நீங்களாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு.

ஆமா நான் தான் என்று உண்மையா சொல்ல போறீங்க?

ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரே புன்சிரிப்பாகவே இருந்தது.

நன்றிகள் ஈழப்பிரியன் .....சத்தியமா நான் அவனில்லை

On 24/03/2017 at 3:39 AM, kilian said:

இது கற்பனை இல்லை. நிஐம். 

இது கற்பனை இல்லை. 

நன்றிகள் kilian கற்பனை கலந்த  நிஐம். 

On 24/03/2017 at 4:58 AM, நிலாமதி said:

முதல் பயணம் மாதிரி தெரியவில்லையே ... நன்றாக இருக்கிறது 

நன்றிகள் நிலாமதி.....கொஞ்சம் புதுசும் கலந்துதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/03/2017 at 5:04 AM, முனிவர் ஜீ said:

உங்கட பெயர் அவருக்கு தெரிந்திருக்குமோ என்னவோ புத்தன் 

ம் சூப்பரு  

 கூட்டாளிகள் ஆகாது  எப்ப பாரு சொப்பன சுந்தரி கள் நினைப்புத்தான் tw_blush:

நன்றிகள் ஜீ....உந்த கூட்டாளிமார் இல்லாட்டி நான் இப்ப அமேரிக்காவில் ட்ரம்பட்டுக்கு அரசியல் ஆலோசக்ராக இருந்திருப்பன்:10_wink:

On 24/03/2017 at 5:47 AM, விசுகு said:

 

"அடே உங்களை என்ன செய்யிறது என்றே விளங்குதில்லை.. எப்படி அழிச்சாலும் முளைச்சு வந்திடுறீயள்....ஈழம் என்று வெளிநாட்டுக்கு போனியள் இப்ப ஐக்கிய இலங்கை என்றுதிரும்பிவாறீயள்"

தமிழர் தலையில்  சுத்தியலால்  அடித்த மாதிரிஇருக்கு..

அடுத்த  அடியோட

சிறீலங்கா தானே...

ம்ம்ம்

இன்னொரு அற்புதக்கிறுக்கல்...

தொடருங்கள்..

நன்றிகள் விசுகு ....இப்ப நான் சிறீ அடுத்த அடியோட லங்கா ...அதன்பின்பு சிறிலங்கன்

On 24/03/2017 at 10:29 AM, குமாரசாமி said:

புத்தனின் கதை அசத்தல்.tw_thumbsup:

அந்த வாலிப காலத்திலை எனக்கோ என்ரை கூட்டுவளுக்கு உப்புடியான தீய சிந்தனையள் வந்தே இல்லை. எப்பவும் இலக்கியம் கவிதை மகாபாரதம் கம்பராமாயணம் எண்ட கதையள் தான் :cool:

நன்றிகள் கு.சாமி ...அப்பேவே உங்களுடன் கூட்டாளியாக இருந்திருந்தால் இப்ப சிட்னியில் கம்பன்கழகத்தின் தலிவராகவோ ,செயலாளராகவோ இருந்து கன்னி  தமிழ் வளர்த்திருக்கலாம்...யஸ்ட் மிஸ்ட்...:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னிப் பயணத்தில் மிடுக்கு வேற..... அதென்னப்பா கௌரவப்பிரச்சனையா பீல் பண்ணுறீங்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.