Jump to content

‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள்


Recommended Posts

‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள்

தினகரன்

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட புயல், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மையம் கொண்டுள்ளது. 'அ.தி.மு.கவில் பிளவு நீடிப்பதையே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விரும்புகிறது. வி.என்.ஜானகியோடு ஜெயலலிதா முரண்பட்டபோது, இரட்டை இலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. தற்போது அப்படியான எந்த அவசியமும் பிரதமர் மோடிக்கு இல்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தை நோக்கியும் அவர் வேகம் காட்டியபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க பிளவுபட்டது. 'அ.தி.மு.கவின் சட்டவிதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்படவில்லை' என்பதை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தது ஓ.பி.எஸ் அணி. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 'இரட்டை இலைச் சின்னத்தை அவருக்கு ஒதுக்கக்கூடாது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தார் மைத்ரேயன் எம்.பி. இதற்கு சாட்சியாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்தார். டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்தும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம், அ.தி.மு.கவின் துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆதரவுக் கடிதம் என ஏராளமான ஆவணங்களை காட்சிப்படுத்தினர். இதற்கிடையில், சசிகலா குடும்பத்துக்குள்ளும் அதிகார மோதல் வெடித்தது. 'டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என திவாகரன் தரப்பினர் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கினர். சசிகலாவுக்கு ஆதரவாக வாதாட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அனுமதியைப் பெற்றார் திவாகரன். தேர்தல் ஆணையத்தில் நடந்த வாதத்தின் முடிவில் இரண்டு தரப்புக்கும் சின்னம் கிடைக்கவில்லை. 'ஏப்ரல் 17-ம் தேதிக்குள் ஆவணங்களை அளிக்குமாறு' தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

சசிகலா"தமிழ்நாட்டுக்கு டிசம்பருக்குள் தேர்தலைக் கொண்டு வருவது குறித்து டெல்லி வட்டாரத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 'தேர்தல் ஆணையத்தில் கட்டாயம் வெற்றி பெறுவோம்' என தினகரன் ஆட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். கடைசி நாட்களில், 'ஆணையத்தின் முடிவு எதிராகப் போகலாம்' என்பதை அறிந்து, திவாகரன் தரப்பினர் டெல்லியில் தங்கியிருந்தனர். காங்கிரஸ் தலைமையில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு, அடுத்தக்கட்ட ஆலோசனைகளையும் கேட்டனர். ஆனால், முடிவு எப்படி இருக்கும் என்பதை பன்னீர்செல்வம் அணியினர் முன்பே யூகித்துவிட்டார்கள்" என விவரித்த ஆளும்கட்சியின் நிர்வாகி ஒருவர், நேற்று நடந்த விவகாரங்களை நம்முன் பட்டியலிட்டார். "இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி ஆணையம் உத்தரவிட்டதை தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சோர்ந்து போய்விட்டனர்.

நேற்று அவர்கள் தீவிர ஆலோசனையிலும் இறங்கினர். ' உங்களால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை. நீங்கள் நம்பிய ஆட்கள் எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டனர். தவறான ஆட்களை நம்பி களத்தில் இறங்கிவிட்டீர்கள். இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக்கூட உங்களால் கணிக்க முடியவில்லை' என தினகரன் தரப்பினரை நோக்கிக் குற்றம் சுமத்தினர். அவரது தரப்பினரோ, ' நமக்கு ஆதரவாக இருந்தவர்கள் கடுமையாக வேலை பார்த்தார்கள். அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. பொதுச் செயலாளர் பதவி நீடித்திருப்பதற்குக் காரணமும் அவர்கள்தான். நம்மை மீறிய சக்தி விளையாடும்போது நாம் என்ன செய்ய முடியும்?' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

திவாகரன்இதையடுத்து, திவாகரன் குடும்பத்துக்கு மூத்தவரான அந்த நபர் பேசும்போது, 'நம்மை நெகட்டிவ் சக்தி என்று டெல்லியில் ஆள்பவர்கள் நினைக்கிறார்கள். அவர்களை நாம் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் நம்மை அடிப்பார்கள். இப்போது கோழையாக அடி வாங்கி வந்திருக்கிறோம். இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்? தொடக்கத்தில் இருந்தே அவர்களை நாம் வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். நாம் அப்படிச் செய்யாமல் அமைதியாக இருந்ததால், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் நம்மை ஆதரித்த முஸ்லிம் அமைப்புகளும் விலகிச் சென்றுவிட்டனர். மத்திய அரசை எதிர்த்திருந்தால், இந்தளவுக்கு தோல்வி வந்து சேர்ந்திருக்காது. இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். நம்மால் அவர்களுக்கு ஆக வேண்டிய காரியம் என்று எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க ஆதரித்தாலே பா.ஜ.கவுக்குப் போதுமானது. நம்முடைய ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இனி சின்னத்தை மீட்க நாம் கடுமையாக போராட வேண்டியது இருக்கும்' எனக் கொந்தளித்தார். இதையடுத்து சட்டரீதியாக செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்" என்றார் விரிவாக. 

"அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. அவர்கள் பிளவுபட்டு இருப்பதையே தங்களுக்கான ஆதாயமாகப் பார்க்கின்றனர். 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தாலும், மூன்றாவது இடத்துக்குள் வந்துவிட வேண்டும்' என பா.ஜ.க நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கேற்ப பிரசார வியூகத்தையும் அமைத்து வருகின்றனர். இப்போதுள்ள சூழலில் களத்தில் அ.தி.மு.க என்ற கட்சி போட்டியிடவில்லை. தொகுதிக்குள் பணபலத்தைக் காட்ட டி.டி.வி.தினகரன் முயற்சித்தாலும், அதை முறியடிக்கவும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலைக்கு, அ.தி.மு.க நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர். அ.தி.மு.க அரசு முழுமையாக பதவிக்காலத்தை நிறைவு செய்யுமா என்பதும் சந்தேகம்தான்" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/84377-losing-two-leaves-symbol-is-the-biggest-shame-weve-ever-faced---sasikala-faction-in-anger.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.