Jump to content

நான்கு சுவருக்குள் கணினி, விளையாட்டோ எட்டாக்கனி


Recommended Posts

தெருவிலே கிழிந்த டவுசரோடு விளையாடிக்கொண்டிருப்பேன். அந்த டவுசரும் கூட எங்கோ சறுக்கிலே, சென்று மீண்டும், மீண்டும் சறுக்கி விளையாடி கழிந்தது தான். ஒவ்வொரு முறையும் இப்போது சறுக்குவது தான் கடைசி என நினைத்து, நினைத்தே நீண்ட நேரங்களை காவு வாங்கியிருக்கும். என்னோடு உடன் பிறந்த நான்கு சகோதர்களும் கூட அப்படித்தான். எங்கள் ஐந்து பேரையும் சேர்த்து வீட்டில் பார்ப்பதே, இரவு நேரத்தில் மட்டும் தான்!

அந்த அளவுக்கு இருக்கும் அன்றைய கால விளையாட்டு. உடன் விளையாட வருபவர்களில் வசதியான வீட்டுப் பிள்ளைகள், மத்திய ரக குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள், வறிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள் என அனைவருமே ஒன்று கூடியே விளையாடுவோம். அந்த அளவுக்கு சமத்துவம் உலாவிய நேரங்கள் அவை. அன்று விளையாடிக் கழிந்த ஒவ்வொரு பொழுதுகளும், அர்த்தமுள்ளவை. ஒவ்வொரு விளையாட்டிலும் பக்குவப் படுத்தும் பண்புசார் கூறுகளும் இருக்கும்.

இதோ இப்போது குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகளின் பக்கம், பெற்றோரே கவனத்தை திருப்பி விட்டு விடுகின்றனர். அதில் முக்கிய அறிவிப்புகளும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்பட இருக்கும் திரைப்படங்களின் பெயரை சொல்லும் போதும், அண்மைக்கால ஜூரமான செய்தித் தொலைக்காட்சிகளின் பிரேக்கிங் நியூஸ் வரும் போதும், பின்னால் இருந்து ஒலிக்கும் பிண்ணனி இசையும், பல வர்ணங்களும் குழந்தைப் பருவத்திலேயே அவர்களை சுண்டி இழுத்து விடுகின்றது.

தொடர்ந்து நடைபழகிய நாள்களிலேயே சித்திரத் தொலைக்காட்சிகளை பழக்கி கொடுக்கின்றனர். எல்.கே.ஜி படிக்கும் நிலையை எட்டும் போதே ஸ்மார்ட் போன்களும், பெற்றோரின் மடி கணினியும் பரிச்சயம் ஆகி விடுகின்றது. ‘’என் புள்ள சூப்பரா செல்ல ஆப்ரேட் பண்ணுவான். யூ டியூப்குள்ள கூட போயிடுவான்” என பெருமைப்படும் பெற்றோர்களும் உள்ளனர். தொடர்ந்து வளரிளம் பருவத்திலும் அக்குழந்தையின் விளையாட்டு முழுக்க, முழுக்க கணினி சார்ந்தே இருக்கிறது. முன்பெல்லாம் மேல்தட்டு குடும்பத்தினரை மட்டும் தான் இது வியாபித்திருந்தது. இதோ இப்போது கிராமங்கள் வரையுள்ள பிரவுசிங் செண்டர்களில் ஒரு மணி நேரத்துக்கு கேம்ஸ் விளையாட என கட்டண  குறிப்பை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வைத்துள்ளனர். பெரிய மால்களிலும் குழந்தைகள் விளையாட்டு பிரிவில் வீடீயோ கேம் விளையாட்டுக்களே பிரதானம்.

 

hd-23-e1490152389501.jpg

(wazji.pl)

கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்த யானை துவங்கி, மணமக்கள் ஊர்வல வரவேற்புக்கு அழைத்து வரப்பட்டிருந்த குதிரை வரை சாலையில் வியந்து பார்த்து அதிசயத்த விசயங்களை இன்றைய குழந்தைகள் கணினியில் பார்க்கின்றனர். அத்தனையும் தெரிகிறது. எல்லா துறைகளிலும் அனுபவங்களும், நுணுக்கங்களும் கணினியின் மூலம் கற்றுள்ளனர். ஆனால் சமூகம் குறித்த புரிதல்களில் உங்கள் குழந்தைகள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்களே ஒரு முறை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.

விட்டுக் கொடுப்பதில், பகிர்ந்துண்பதில் எத்தனை, எத்தனை முரண்பாடுகள்? எங்கோ ஒரு வீட்டில் கொய்யா மரத்தில் விளைந்து நிற்கும் கொய்யா பழத்தை ஏறி பறிப்பவன், முதலில் கீழே இருப்பவனுக்கு தூக்கிப் போட்டு விட்டுத் தான், அவன் கையில் உள்ள பழத்தை கடிப்பான். இப்போது அக்குழந்தைகளை காணவில்லை.

குழந்தைகள் விளையாட வேண்டும் என்று முண்டாசுக் கவிஞன் மாகாகவி பாரதியாரும் விரும்பினார். அதனால்தான் “மாலை முழுவதும் விளையாட்டு” என்கிறார். ஓடி விளையாடு பாப்பா என அறிவுறுத்துகிறார். இதோ இப்போது மாலையில், பள்ளி முடிந்து வந்ததுமே, கால், கை, முகம் கூட கழுவ நேரமின்றி மறுநாள் வீட்டுப்பாடம் எழுதும் குழந்தைகளைப் பார்க்கையிலும், வீட்டுப்பாடத்தை எழுதி முடித்தால் செல்போன் கேம்ஸ் விளையாடத் தருவேன் என சொல்லும் பெற்றோரையும் பார்க்கையில் அடுத்த தலைமுறையின் மேல் பரிதாபமே எழுகிறது.

village-life-indonesia-herman-damar-9-e1

(boredpanda.com)

முன்பு உப்பு மூட்டை விளையாட்டை விளையாடுவோம். ஒருவரது, முதுகில் இன்னொருவர் பற்றிக் கொள்வார். இதுவே எத்தனை பெரிய தத்துவம். எந்த பாரத்தையும் எதிர்கொள்கிற ஆற்றலையல்லவா தருகிறது. ஓடி விளையாடுவதும், ஒளிந்து விளையாடுவதும் உடலினை உறுதி செய்யும் விளையாட்டுக்கள் தான். பக்கத்து வீடு, எதிர் வீடு என எங்கோ ஒரு பகுதியில் வீட்டு கட்டுமானப் பணி  நடக்கும். அதன் பிரதானமான மணல்  கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் மாட்டு வண்டியில் தான் மணல் வரும். இப்போது தான் லாரிகள் பறக்கிறது. யூனிட்டில் விலையும் சொல்கிறார்கள். குவிந்து கிடக்கும் மணலை குவித்து குழந்தைகள் விளையாடும். கோபுரம் போல் அந்த மணலை உயரமாக குவித்து வைத்திருக்கும். மையப்பகுதியில் அதன் ஒரு புறத்தில் இருந்து ஒரு குழந்தை குழி தோண்டி செல்ல, எதிர்புறத்தில் இருந்து இன்னொரு குழந்தை குழி பறித்து வரும்.

இதில் இருவரின் கரங்களும் ஒன்றோடு, ஒன்று தொட்டதும், கை குலுங்கி சிரிக்கின்ற சிரிப்பு ஒற்றுமைக்கும் எத்தனை பெரிய பாடம். தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் சின்னமே இணைந்த கரங்கள் தான். குழந்தைகள் சேர்ந்து சிறு, சிறு பாத்திரங்களை வைத்து சோறாக்குவது போல் விளையாடுவதும் எத்தனை பெரிய பாடத்தை தாங்கி நிற்கிறது. சமூக ஒற்றுமையை, குடும்ப சூழலை, ஆண், பெண்  சமநிலையை என அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் பரவலாக அறியப்பட்ட விளையாட்டுக்கள். ஆனால் இவை மட்டுமல்ல இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தை விளையாட்டுக்கள் இன்று சுவடில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன.

அண்மையில் அண்ணன் வீட்டுக்கு சென்றேன். அண்ணனின் பேரன் கணினியில் விளையாடிக் கொண்டிருந்தான். அருகிலே சென்று பார்த்தேன். ஒரு பொம்மை கையிலே துப்பாக்கியுடன் ஒவ்வொரு இடமாக தேடிச் சென்று சுட்டுக் கொண்டிருந்தது. தாத்தா…இதோ இந்த துப்பாக்கி வைச்சு சுட்றான்ல இதான் நான். பேங்க்ல கொள்ளையடிச்சுட்டு, தப்பிக்கணும். வழியிலே போலீஸ் சுட முன்னாடி, நாம அவுங்கள சுடணும் அதான் கேம்.”என்றான். எனக்கு என்னையே சுடுவது போல் இருந்தது.

video-game-boy-e1490152850395.png

(uclacommons.com)

முன்பெல்லாம் அரசு பள்ளிகள் ஆனாலும், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆனாலும் பிரமாண்டமான விளையாட்டு மைதானங்கள் இருக்கும். அதில் மாணவ., மாணவியர் விளையாடி மகிழ்வார்கள். ஆனால் இன்று பிரமாண்ட மைதானங்களின் பெரும்பகுதியை வகுப்பறை கட்டிடங்களே வியாபித்துக் கொண்டன.

பள்ளிகள்தோறும் உடற்கல்வி ஆசிரியர் இருப்பார். வாரத்தில் மூன்றோ, நான்கோ நாள்கள் உடற்கல்வி வகுப்பு வரும். ஆனால் இப்போதெல்லாம் அறிவியல் ஆசிரியர்களும், கணித ஆசிரியர்களும் அந்த வகுப்பை வாண்டட் ஆக கேட்டு வாங்கி பாடம் எடுத்து விடுகிறார்கள். அல்லது அவர்களுக்கு டெஸ்ட் கேள்வி பதில் எழுதும் நேரமாக இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

‘’நோ வே” இந்த பிள்ளைங்க விளையாடியே மூணு மாசம் ஆச்சு. படிக்க மன உறுதியோட சேர்ந்து, உடல் உறுதியும் தேவை” என வாதிடும் உடற்கல்வி ஆசிரியர்களும் இருப்பதாக தெரியவில்லை.

தமிழகத்தில் அரசு சார்பில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் – 36,956 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் – 8,407, சுயநிதிப் பள்ளிகள் – 11,462 உள்பட மொத்தம் 56,828 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1.33 கோடி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 5.09 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், உடற்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் சுமார் 3500 பேர் மட்டுமே. இது, மற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு.

தமிழகத்தில் உள்ள 8,200 அரசு நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி  ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.  அதேபோன்று அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்  பள்ளிகளிலும் 2,200 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக  உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக  ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

14471247186_348ed3bf73_b-e1490152629737.

(staticflickr.com)

“திறமையுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் உடற்கல்வி மூலம் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்குகிறது. இதன்மூலம், மாநில, தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுக்களில் மாணவர்கள் பிரகாசிக்க வழி கிடைத்தும், பயிற்சி அளிக்க போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், அரசின் எதிர்பார்ப்பு முழுமை அடையாத நிலையே உள்ளது.” என்கின்றார் கூடவே நடைபயிற்சிக்கு வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஒருவர். யார் கண்டது? அரசு இயந்திரத்துக்கும் மாணவர்களின் புத்தகச் சுமையும், விளையாடும் நேரமும் தெரிந்தே தான் நிரப்பப்படவில்லையோ என்னவோ? அல்லது அரசே குழந்தைகளின் விளையாட்டை விரும்பவில்லையோ என்னவோ!

இதே போல் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் உப்பு மூட்டை விளையாடாததை அறிந்துதான், புத்தகப்பை வாய்த்ததோ என்னவோ? பள்ளியில் எழுதக் கொடுக்கும் வீட்டுப் பாடங்களும் மலைக்க வைக்கிறது. பல்லாங்குழி விளையாட்டு, கணிதத் திறனை மேம்படுத்தும். காலி இடங்களில்  விளையாடி மகிழ்த கிட்டி புள் விளையாட்டுத் தான் இன்றைய கிரிக்கெட்டின் பிதாமகன். இன்று நம் குழந்தைகள் கிரிக்கெட்டைத்தான் ரசிக்கின்றன. ஆனால் இந்த பாரம்பரியம் எல்லாம்  நம்மை விட்டு அகன்று விட்டன. குழந்தைகள் சம காலத்தில் கணினியிலேயே தஞ்சம் புகுந்து விட்டனர். இதனால்  சகோதரத்துவமும், மனித நேயமும் இல்லாமல் போய் விடுகின்றது. முகநூலில் எதிர் வீட்டுக்காரருக்கு நட்பு வேண்டுகோள் கொடுத்து, அதன் மூலம் அவரிடம்  அறிமுகம் ஆகிக்  கொள்வதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? உண்மையிலேயே தொழில்நுட்பத்தின் பெருக்கம், அதீத பயன்பாடு என்பது மனித மனங்களையும் சேர்த்தே பண்படுத்த வேண்டும்.

கூட்டுக் குடும்ப உறவுநிலை தலைகீழாய் சிதறுண்டு போனதும் கூட இதற்கு ஒரு வகையில் காரணம். இன்று பல குழந்தைகளிடம் எல்லாம் இருக்கிறது. வீட்டில் கதைகள் சொல்ல, நல்வழிப்படுத்த தாத்தா, பாட்டிகள் இல்லை. இவை மனிதத் தன்மையையே குழந்தைகளுக்கு மாய்த்து விடும் திறம் உள்ளவை. வாழ்வியல் அறத்தில் இருந்தும் வெகு தூரத்தில் விலகி நிற்கும் ஒரு தலைமுறையை விளையாட அனுமதிக்காமல் உருவாக்கி விடக் கூடாது.

இப்போது செல்போன்களில் கூட ‘’டாக்கிங் கேம்”கள் வந்து விட்டன. அவைகள் இருக்கட்டும். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பேசுங்கள். விளையாட அனுமதியுங்கள். குழந்தைகளுக்கு கணினியில் எல்லாம் கிடைக்கும். பாசம், பண்பு, கலாச்சாரம் எல்லாம் குடும்பத்தில் இருந்து மட்டுமே கிடைக்கும்.

http://roartamil.com/features/child-development-education-system/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலத்திரனியல் சாதனங்கள் எல்லோரையும் இயந்திரங்களாக்கிவிட்டது. ஏதாவது அதிரடி மாற்றம் ஏற்ப்பட்டு அவை செயலிழந்தாலொளிய இன்னும் மனிதர்களிடையேயும் உறவுகளிடையேயும் இடைவெளிகள் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.