Jump to content

சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்! -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ்


Recommended Posts

சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்!  -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ்

சசிகலா-தினகரன்

' இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலை தெரிந்துவிடும். ' தேர்தல் ஆணைய விவகாரத்தை நேரடியாக சசிகலாவே கையில் எடுத்துவிட்டார். தினகரன் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதையும் அவர் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெயானந்த் மேற்பார்வையிலேயே அனைத்து விவகாரங்களும் கையாளப்படுகின்றன' என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களம் இறங்குகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா குடும்பத்துக்குள் முட்டல், மோதல்கள்  அதிகரித்துவிட்டன. குறிப்பாக, ' பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் ஒப்புதல் பெறாமலேயே தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டார் தினகரன். இந்த நடவடிக்கையை சசிகலா ரசிக்கவில்லை' என்கின்றனர், கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள். இதுகுறித்து நம்மிடம் விரிவாக விளக்கினர். " சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த மாதம் 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர், சிறை சென்ற நாளில் இருந்து அவருடைய தம்பி திவாகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகள் யாரும் பெங்களூரு பக்கமே தலைகாட்டவில்லை. காரணம், டி.டி.வி.தினகரன், டாக்டர்.வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள்... ஆட்சி அதிகாரத்திலும் கட்சி அதிகாரத்திலும் கோலோச்சி வந்ததுதான். ஐஏஎஸ் பணியிட மாற்றம், நிர்வாகிகள் சேர்ப்பு போன்ற பல விஷயங்களில் தன்னிச்சையாகவே இயங்கிவந்தார் தினகரன். இந்நிலையில், ஆர்.கே.நகர் வேட்பாளர் விவகாரத்திலும் சசிகலா கவனத்துக்குத் தவறான தகவல்களைக் கொண்டுசென்றார். ' நிர்வாகிகள் போட்டியிடுவதற்கே பயப்படுகின்றனர்' என சசிகலாவிடம் கூறினார். வேட்பாளராக அவர் தன்னைத்தானே அறிவித்த அன்று, ' அக்கா சொல்லித்தான் இத்தனையும் நடக்கிறதா?' எனக் கொந்தளித்தார் திவாகரன்.

ஜெயானந்த்இதன்பின்னர், தன்னுடைய மகன் ஜெயானந்தை பெங்களூரு சிறைக்கு அனுப்பி சசிகலாவை சந்திக்க வைத்தார். கட்சியில் நடக்கும் விவகாரங்கள் அனைத்தையும் சசிகலாவிடம் எடுத்துக் கூறினார்.                   ' இப்படியே போனால், நம் கையைவிட்டு அனைத்தும் பறிபோய்விடும்' என விளக்கியுள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ' தேர்தல் ஆணைய விவகாரங்களை திவாகரனே பார்த்துக்கொள்ளட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இன்று காலை தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில், திவாகரன் மகன் ஜெயானந்த் கலந்துகொள்கிறார். அவருடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்க இருக்கிறார். ' நம்முடைய தரப்பு வாதத்தை எடுத்து வைக்க சல்மான் குர்ஷித் சரியானவர்' என சசிகலா சொன்னதையடுத்து, டெல்லியில் தங்கியிருந்து அவருடைய அனுமதியைப் பெற்றார் திவாகரன். பன்னீர்செல்வம் அணிக்காக தேர்தல் ஆணையத்தில் வாதாட, முன்னாள் அமைச்சர் கபில் சிபலை அணுகியுள்ளனர். இதை அறிந்து, காங்கிரஸ் தொடர்புகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தியது சசிகலா தரப்பு. இந்த நடவடிக்கைகள் எதுவும் தினகரனுக்குத் தெரியாது. இன்று, தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில், டெல்லி பிரதிநிதி என்ற அடிப்படையில் தளவாய் சுந்தரம் வருவதையும் திவாகரன் தரப்பினர் விரும்பவில்லை" என்றார் விரிவாக. 

" கார்டன் நிர்வாகத்தை டாக்டர் வெங்கடேஷ் கவனித்துவருகிறார். ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் விவேக் ஜெயராமன், சில தொழில்களைக் கவனித்துவருகிறார். பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக கட்சி நிர்வாகத்தை தினகரன் கையில் ஒப்படைத்தார், சசிகலா. சிறைக்குள் நடக்கும் விவகாரங்களை முழுமையாக அறிந்த விவேக், தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதையும் கொந்தளிப்புடன் கவனித்துசல்மான் குர்ஷித்வந்தது திவாகரன் தரப்பு. கட்சி மற்றும் ஆட்சியின் அனைத்து முடிவுகளையும் சசிகலா ஒப்புதல் இல்லாமலேயே தினகரன் செய்து வருவதாகவும் ஆவேசப்பட்டனர். ' கட்சியை விட்டு சசிகலா நீக்கப்பட்ட நேரத்தில், அதை வரவேற்று மொட்டை அடித்துக்கொண்டவர்களை எல்லாம் தினகரன் கட்சியில் சேர்த்துவிட்டார்' என 'நமது எம்.ஜி.ஆர்-ல் வந்த அறிவிப்புகளையும் சசிகலாவிடம் காண்பித்தனர். இப்படி நடக்கும் என்பதை அறிந்து, ' சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' எனப் பேசி வந்தார் தினகரன். ' குடும்ப உறவுகளுக்கு இடமில்லை என்றால், இவருக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம்? இவர் குடும்ப உறுப்பினர் இல்லையா?' எனக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஐஏஎஸ் பணியிட மாற்றம், அரசு ஒப்பந்தங்கள் என அனைத்திலும் தினகரன் சொல்வதே சட்டமாக இருக்கிறது. பணியிட மாற்றம் தொடர்பாக குடும்ப உறவுகள் ஏதேனும் சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட நபரை தொலைதூரத்துக்கு பணியிட மாற்றம்செய்யும் பணிகளிலும் இறங்கினார். 'இனியும் பொறுத்திருக்க முடியாது' என்ற நிலையில்தான், அனைத்து விவகாரங்களையும் சசிகலா கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். அதன்பின்னர்தான், டெல்லி விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை திவாகரனிடம் ஒப்படைத்தார்" என்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

" மத்திய அரசின் முழுப் பார்வையும் பன்னீர்செல்வம் அணியின் பக்கமே இருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் இரட்டை இலை சின்னம் சசிகலா பக்கம் சென்றுவிடக்கூடாது' என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள், பேரவை நிர்வாகிகள் உள்பட ஆறாயிரம் பேரின் கையெழுத்துடன்கூடிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கிறோம். ' கட்சியின் உறுப்பினர் அட்டைகூட சசிகலாவிடம் இல்லை' என்பதை ஆதாரத்துடன் ஆணையத்தின் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் எங்களுக்கே இருக்கிறது. ஒரு சில நிர்வாகிகள், ஆதாயத்துக்காக சசிகலா பக்கம் நிற்கின்றனர். கட்சியின் சின்னம் எங்கள் கைக்கு வந்துவிட்டால், மற்றவர்களும் எங்கள் பின்னால் வருவார்கள். ' ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுவது உறுதி' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர் நம்பிக்கையோடு. 

'இரட்டை இலை யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும். ' ஆட்சி அதிகாரத்தில் யாருக்கு செல்வாக்கு?' என சசிகலா குடும்பத்தில் நடக்கும் சண்டைகள் அவ்வளவு எளிதில் முடிக்கு வருவது போல தெரியவில்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/84277-why-did-salman-khurshid-stand-for-sasikala---divakarans-surprising-move.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.