Jump to content

அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர்.


Recommended Posts

gallerye_00173360_1734508.jpg

அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.

 

Tamil_News_large_1734508_318_219.jpg

சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்திய போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், மேஜையை தட்டி வரவேற்றனர்.
விவாதத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியது குறித்து, பன்னீர் அணியில் உள்ள, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சில ஆலோசனைகள் வழங்கினார்.

 

நெருங்கும் தீர்ப்பு


பன்னீர் அணியில் உள்ள செம்மலையுடன், அமைச்சர்கள் ராஜூ, உதயகுமார் ஆகியோர், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சபைக்கு வந்த போது, சில அமைச்சர்கள், அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர்மாற்றத்திற்கு, தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவது தான் காரணம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரே விமானத்தில் பயணித்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் சந்தித்து பேசிய தகவல், கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரனை கலக்கம் அடைய செய்துள்ளது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பெரியகுளம் தொகுதியில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அதை முடித்து, நேற்று முன்தினம், மதுரையிலிருந்து சென்னைக்கு, விமானம் மூலம் திரும்பினார்.
 

ரகசிய தகவல்கள்



மதுரை விமான நிலையத்தில், ராஜேந்திர பாலாஜியை கண்டதும், அங்கு திரளாக கூடியிருந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'சசிகலா ஒழிக, தினகரன் ஒழிக' என, கோஷமிட்டனர். அதை பார்த்த அமைச்சர்,
எந்த எதிர்ப்பும் காட்டாமல், ஒதுங்கி போய் விட்டார்.

 

பின், இருவரும் ஒரே விமானத்தில் பயணித்தனர்.அப்போது, பன்னீர் செல்வத்திடம் ராஜேந்திர பாலாஜி, சில ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிரடி மாற்றம்


இதுகுறித்து, பன்னீர் அணி வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலாவின் தம்பி திவாகரன் சிபாரிசில், மாவட்ட செயலர், அமைச்சர் பதவிக்கு உயர்ந்தவர் ராஜேந்திர பாலாஜி. அந்த விசுவாசத்தில், சசிகலா அணியில் உள்ளார். ஆனாலும், பன்னீர்செல்வம் மீது மிகுந்த மரியாதை உள்ளவர்.அதனால், கூவத்துார் சொகுசு விடுதியில், சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, பன்னீர்செல்வம் அணிக்கு வருவதற்கு தயாராக இருந்துள்ளார். இருப்பினும், அவரை, சசிகலா குடும்பத்தினர் தடுத்து விட்டனர்.
விமானத்தில், பன்னீரிடம் பேசிய போது, 'என் கட்டுப்பாட்டில், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், உங்கள் அணிக்கு வருவோம்' என, அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும், பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதிலும், தேர்தல் கமிஷன் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின்னர், அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றம் ஏற்படும். அதற்கு அச்சாரம் தான், இந்த சந்திப்புகள்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1734508

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நவீனன் said:

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், உங்கள் அணிக்கு வருவோம்' என, அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும், பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதிலும், தேர்தல் கமிஷன் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின்னர், அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றம் ஏற்படும்.

 

ஆமா அதிரடி மாற்றம் நிகழும்..!

image.jpg


டிஸ்கி :

தமிழருடைய வாழ்வில் என்றும் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் "வாழை இலையை" தேர்தல் கமிசனிடம் கேட்கவும் .!!.நீங்கள் வாழை இலையில் கட்டி கொடுக்கும் புரியாணி பார்சலை தின்று போட்டு நன்றி மறந்து வேறு சின்னத்திற்கு ஓட்டு போடுவானா..? ரெல் மீ!!  :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.