Jump to content

யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு


Recommended Posts

யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

 

 

 யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
 

நாட்டில் நிலவிய மூன்று தசாப்தகால யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரை மேற்கோள்காட்டி தி ஐலண்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஆயுதமேந்திப் போராடிய குழு மற்றும் இலங்கை அரசாங்கம் என இருதரப்பினரும் மீறியுள்ளதாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

2015 ஆம் ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் தற்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் மீளாய்வு செய்யப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தி ஐலண்ட் கூறியுள்ளது.

நிலைமாற்று நீதி நடைமுறைகள், காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மற்றும் இந்த முரண்பாட்டிற்கு நியாயமானதும், ஏற்றுக் கொள்ளத் தக்கதுமான ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை வகுத்தல் போன்ற விடயங்களை இந்தத் தீர்மானம் ஆராய்வதாக புதுடில்லியில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் என்றும் தி ஐலண்ட் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/03/யுத்தத்தில்-150000-இற்கும்-மே/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நவீனன் said:

ஏற்றுக் கொள்ளத் தக்கதுமான ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை வகுத்தல் போன்ற விடயங்களை இந்தத் தீர்மானம் ஆராய்வதாக புதுடில்லியில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

3050 ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

3050 ...

too early !

டில்லியில் போய்  இதை முணு முணுக்கிற தலைவர் 
நாட்டுக்கு வந்ததும் ...........
ஒரு கொளுகொடடையை எடுத்த்து வாய்க்குள் ஒட்டி விடுவார்.
யாரும் வேறு நாட்டில் இருந்து சந்திக்க வந்தாலும் 
வாய்க்குள் இருந்து ஒன்று வராது ! 

Link to comment
Share on other sites

யாரைத்தான் நம்புவதோ தமிழன் நெஞ்சம்....!! :shocked: 

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனையா....? :unsure: 

தி ஐலண்ட் பத்திரிகையையா....?? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.