Jump to content

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம்


Recommended Posts

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே நாடு முதலிடம் பிடித்துள்ளது.

 
 
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம்
 
சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.

531B7A71-F344-41C1-A1E5-1D28C4DDB88C_L_s

இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் வருமாறு:-

1.நார்வே(7.537)
2.டென்மார்க்(7.522)
3.ஐஸ்லாந்து(7.504)
4.சுவிட்சர்லாந்து(7.494)
5.பின்லாந்து(7.469)
6.நெதர்லாந்து(7.377)
7.கனடா(7.316)
8.நியூசிலாந்து(7.314)
9.ஆஸ்திரேலியா(7.284)
10.ஸ்வீடன்(7.284)

http://www.maalaimalar.com/News/World/2017/03/20190951/1074952/worlds-happiest-country-list-norway-gets-first.vpf

 

 

 

மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 122-வது இடம்!

collage_23555.jpg

வ்வொரு வருடமும் உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று 'வேர்ல்டு ஹேப்பினஸ் ரிப்போர்ட்' பட்டியலிட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல்,  மற்றும் தனிப்பட்ட வாழக்கை என அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது? என்ற அடிப்படை தகுதிகளோடு கணக்கிடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்த வருடம் நார்வே முதல் இடத்தையும், டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கின்றன. இந்த வகையில் இந்தியா 122 வது இடத்தையும், பாகிஸ்தான் 80 வது இடத்தையும், நேபாளம் 99 வது இடத்தையும், ஸ்ரீலங்கா 110 வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

சென்ற வருட கணக்கின் படி நார்வே 4 வது இடத்திலும், இந்தியா 118 வது இடத்திலும் இருந்தது. 155 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துகணிப்பின் படி நார்வே அரசு தனது மக்களை மகிழ்சியாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தியதால் நான்காம் இடத்திலிருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதுபோல சென்ற ஆண்டு 118 வது இடத்தில் இருந்த இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற காரணத்தில் 122 வது இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/india/84166-the-happiest-populated-countries-india-got-122-rank.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா...
இவ்வளவு குண்டுவெடிப்பு, தீவிரவாத பிரச்சனைக்குள் இருந்தாலும் பாக்கிகள் 80 வது இடத்தில் ஹேப்பி அண்ணாச்சி...:unsure:

Link to comment
Share on other sites

நாங்க ஏழாவது இடத்தில இருக்குறோம் மக்களே..! :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ இது சரியாக தெரியவில்லை ...........
சும்மா எதோ சித்து விளையாட்டிற்கு யாரோ செய்த குல்மால் மாதிரி இருக்கு. 

பிஜி தீவு மக்கள் செல்வந்தராக இல்லாது விடடாலும் மிக மகிழ்ச்சியாகவும் 
ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.

இந்த சர்வே செய்தவர்கள் எல்லா நாட்டிற்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை 
மொத்தம் 196 நாடுகளில் ஒரு வருடத்தில் இரண்டுநாள் படி சென்றால் கூட முடியாது.
குழுக்களாக பிரிந்து சென்றால் ..........?
இறுதி முடிவு மாற்றம் அடைய வாய்ப்பிருக்கு 

இவை அரசுகளின் சேவைகள் அடிப்படையில் வைத்தே 
கணிக்க பட்டிருக்கு 
அதாவது ஒரு அரசு எவ்வளவு சேவைகளை மக்களுக்கு அளிக்கிறது என்பதில் 
இருந்த்து தொடங்குகிறார்கள் என்று எண்ணுகிறேன். அதோடு வேலை வாய்ப்பு வீதம் 
கணக்கில் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன் 
அதனால்தான் ஸ்கேண்டிநேவியன் நாடுகள் இடம் பிடிக்கின்றன 

இதை வைத்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது ...........
சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
ஈழ தமிழரை பொறுத்தவரை ஒரு சர்வே செய்தால் ....?
ஒன்றும் இல்லாத காலத்தில் நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையே மகிழ்ச்சி என்பார்கள் 
இப்போ எல்லாம் இருக்கும் மகிழ்ச்சி இருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

நாங்க ஏழாவது இடத்தில இருக்குறோம் மக்களே..! :D:

லாங் கொலிடே ஜீவன் சிவாவைப் பார்க்கத் தெரியுதே.... நோர்வே நம்பர் ஒன் தான் என்று. ?

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

லாங் கொலிடே ஜீவன் சிவாவைப் பார்க்கத் தெரியுதே.... நோர்வே நம்பர் ஒன் தான் என்று. ?

இருந்தாலும் உலகத்தில இரண்டாவது பெரிய நாட்டை கட்டி காப்பாற்றி ஏழாவது இடம் வாறது பெரிய விசயமல்லோ?! tw_blush: 

Link to comment
Share on other sites

2 minutes ago, இசைக்கலைஞன் said:

இருந்தாலும் உலகத்தில இரண்டாவது பெரிய நாட்டை கட்டி காப்பாற்றி ஏழாவது இடம் வாறது பெரிய விசயமல்லோ?! tw_blush: 

ஆங் அதுதானே !

அவுஸ்திரேலியா வாவது 10 ஆவது இடததில் இருக்கு, ஆனால் பாவம் பிரித்தானியர்கள் தான் 19 ஆம் இடத்துக்கு போய்ட்டினம். எப்படித்தான் அங்கு சனம் இருக்கினமோ பாவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆங் அதுதானே !

அவுஸ்திரேலியா வாவது 10 ஆவது இடததில் இருக்கு, ஆனால் பாவம் பிரித்தானியர்கள் தான் 19 ஆம் இடத்துக்கு போய்ட்டினம். எப்படித்தான் அங்கு சனம் இருக்கினமோ பாவம்

அட பாருடா....

எங்கண்ட காலணிக்காரருக்கு வந்த சந்தோசத்த..

பிள்ளயள் நல்லா இருக்கட்டும் எண்டு ஆனந்தக் கண்ணீர்...

 

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே, 122-ஆவது இடத்தில இந்தியா

 
 

உலகிலேயே மிக அதிக மகிழ்ச்சியான நாடு நார்வே என கண்டறியப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி அறிக்கை: உலகிலேயே மிக அதிக மகிழ்ச்சியான நாடு நார்வேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மகிழ்ச்சி அறிக்கை என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் 122-ஆவது இடத்தில் இந்தியா, இலங்கைக்கு 120-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இருந்த அண்டை நாடான டென்மார்க்கை பின்தள்ளி நார்வே முதலிடத்தை பிடித்தது.

உள்ளார்ந்த மகிழ்ச்சியை கணிக்கும் உலக மகிழ்ச்சி அறிக்கை, மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதற்கு காரணம் என்ன என்று ஆராய்கிறது.

டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் நிலையில், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு பட்டியலில் இறுதி இடத்தை பிடித்திருக்கிறது.

மகிழ்ச்சி அறிக்கையில் 122-ஆவது இடத்தில் இந்தியா,படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவும், பட்டியலின் உயர்வான இடங்களை பிடிக்க, அமெரிக்காவும் பிரிட்டனும் முறையே 14 மற்றும் 19 -வது இடங்களை பிடித்துள்ளன.

ஆஃப்ரிக்காவில் சஹாராவை ஒட்டியுள்ள நாடுகளும், உள்நாட்டு சண்டை மிகுந்த நாடுகளும் குறைவான மகிழ்ச்சியுடையதாக இருக்கின்றன. 155 நாடுகள் கொண்ட பட்டியலில், சிரியா 152-வது இடத்தையும், ஏமன் மற்றும் தெற்கு சூடான் 146, 147 வது இடத்தையும் பிடித்துள்ளன.

சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது.

உலகில் மகிழ்ச்சியான - சோகமான நாடுகள்

முதல் 10 மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:

நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன்.

மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள்

ஏமன், தெற்கு சூடான், லிபியா, கினியா, டோகோ, ரவாண்டா, சிரியா, தான்சானியா, புருண்டி மற்றும் மத்திய ஆஃப்ரிக்க குடியரசு

ஆண்டுதோறும் 150 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

"அது பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மேல் நோக்கிச் செல்லும் ஒரு ஏணியை கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று கூறி அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

"ஏணியின் மேற்புறம் இருக்கும் படியானது, உங்கள் வாழ்க்கையின் மிகவும் சிறப்பானது என்றும், கடைசிப்படி வாழ்க்கையின் மிக மோசமானது என்றும் வைத்துக்கொண்டால், இப்போது நீங்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் (படியில்) இருப்பதாக சொல்வீர்கள்?" இதற்கு கிடைக்கும் பதிலின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டின் சராசரி மதிப்பெண்ணை அடிப்படையாக பார்த்தால், நார்வே 7.54 என்ற அதிக மதிப்பெண்ணும், மத்திய ஆஃப்ரிக்க குடியரசு 2.69 மதிப்பெண்ணும் பெற்றுள்ளது. இதைத்தவிர, ஒரு நாட்டை விட மற்றொன்று எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பவை குறித்த தரவுகளையும் இந்த அறிக்கை ஆய்வு செய்கிறது.

பொருளாதார பலம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில்), சமூக ஆதரவு, ஆயுட்காலம், தெரிவு செய்யும் சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலில் இருந்து பாதுகாப்பு போன்ற காரணிகளையும் கவனத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

இந்தியா, இலங்கையில் மகிழ்ச்சியின் தரவரிசை என்ன?

இந்தப் பட்டியலில் இந்தியா எந்த நிலையில் இருக்கிறது? கடந்த ஆண்டை விட ஒரு நிலை கீழிறங்கி, இந்தியா 122 -ஆவது இடத்தில் இருக்கிறது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் இந்தியாவை விட மகிழ்ச்சி பட்டியலில் நாடுகள் என்று பட்டியலில் இந்தியாவை முந்திவிட்டன.

மகிழ்ச்சியின் அளவு குறைந்து வரும் பட்டியலில், இந்தியா, வெனிசுலா, செளதி அரேபியா, எகிப்து, ஏமன் போட்ஸ்வானா உள்ளிட்ட பத்து நாடுகள் உள்ளன.

இந்தப் பட்டியலில், சோமாலியா 76, சீனா 79, பாகிஸ்தான் 80, இரான் 105, பாலஸ்தீனிய பகுதிகள் 108, பங்களாதேஷ் 110 வது இடத்தையும் பிடிக்க, இந்தியா 122 -வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இல்லை.

அமெரிக்காவிலும் மகிழ்ச்சியின் அளவு குறைந்து வருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'

இந்த ஆண்டின் ஐ.நா.வின் மகிழ்ச்சி தொடர்பான அறிக்கையில் "அமெரிக்கர்களின் மகிழ்ச்சியை மறுசீரமைப்பது" என்ற அத்தியாயமும் இடம் பெற்றிருக்கிறது. அதில், அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மகிழ்ச்சியான மனோநிலை ஏன் குறைந்து வருகிறது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

"அமெரிக்கா, பொருளாதார வளர்ச்சிக்கு பிரத்யேக கவனம் கொடுப்பதை விட, நாட்டில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை, ஊழல், தனிமை, அவநம்பிக்கை போன்ற பன்முக சமூக நெருக்கடிகளை சீரமைக்கவேண்டும் அது மிகவும்அவசியமானது" என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

"அமெரிக்காவின் சிக்கல் என்பது சிறியது, ஒரு சமூக பிரச்சனை, அது ஒரு பொருளாதாரம் சார்ந்தது அல்ல"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்குவதாக, இந்த அறிக்கையை வெளியிட்ட நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான தொடரமைப்பின் இயக்குனர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.

'அமெரிக்கர்களுக்கு அதிகரிக்கும் செல்வம், குறையும் நிம்மதி'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமத்துவமின்மையை அதிகரிப்பதை இலக்காக கொண்டு அவர்கள், மேல் நிலையில் இருப்பவர்களுக்கு வரியை குறைப்பது, மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு பங்களிப்பதில் இருந்து விலகுவது, உணவிற்கான பங்களிப்பை குறைத்து இராணுவத்திற்கான செலவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் தவறான திசையில் செல்வதாக நான் நினைக்கிறேன்" என்று ரியூட்டர்ஸ் சொல்கிறார்.

"வெள்ளை சட்டை" வேலைகளை மேற்கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தினரை விட, "நீலச் சட்டை" அணியும் தொழிலாளர்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் இந்த அறிக்கை, ஆனால் வேலையில் இருப்பதும் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம் என்று தெரிவிக்கிறது.

"நல்ல ஊதியத்துடன் வேலையில் இருப்பவர்கள் அதிக திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள்" என்று சொன்னாலும், தொடக்கத்தில் ஏற்படும் திருப்தியும், மகிழ்ச்சியும் நாளடைவில் குறைந்து போகும் லா ஆஃப் டிமினிஷிங் என்ற கோட்பாடு, இங்கே வேலை செய்கிறது. "ஊதியத்தை விட 100 ரூபாய் அதிகமாக கிடைத்தால் கீழ்நிலையில் இருக்கும் சிலருக்கு அதிக மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அது, அதிகமாக வருமானம் ஈட்டும் ஒருவருக்கு பெரிதாக தோன்றுவதில்லை".

ஐந்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்த வருடாந்திர அறிக்கையில், நோர்டிக் நாடுகளே முதல் இடங்களை பிடித்துள்ளன.

பட்டியலில் நோர்டிக் நாடுகளின் ஆதிக்கம், அதிலும் குறிப்பாக டென்மார்க், சொல்வது என்னவென்றால், "ஹ்யூக்" எனப்படும் அன்பு, ஆதரவு மற்றும் அமைதியாக இருக்கும் அந்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பிற நாடுகள் ஏற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கிறது.

http://www.bbc.com/tamil/global-39343650

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி இவ்வளவு துயரங்களை தாங்கியும் 16வது இடத்தில் இருப்பதையிட்டு புளகாங்கிதம் அடைகின்றேன்.:grin:
16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க.:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.