Jump to content

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுகிறார்களா 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்?! - பி.ஜே.பியின் அடுத்த அதிரடி


Recommended Posts

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுகிறார்களா 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்?! - பி.ஜே.பியின் அடுத்த அதிரடி

பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன்

 சசிகலா அணியிலிருந்து ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆறு எம்எல்ஏ-க்கள் மாற சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களை அணி மாற்றும் வேலையில், பி.ஜே.பி தலைமைக்கு நெருக்கமான காவிவேட்டி அணிந்த மனிதர் ஈடுபட்டுவருகிறார். 

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் அதிகார மோதல் வலுவடைந்துள்ளது. இதன்விளைவு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இருப்பினும், சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி ஆட்சியை அமைத்துவிட்டார். அவரது தலைமையிலான அமைச்சரவை, நிதிநிலை பட்ஜெட்டையும் தாக்கல்செய்துவிட்டது. மழை நின்ற பிறகும் தூரல் ஓயாதது போல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுவது வாடிக்கையாகிவிட்டது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், பகிரங்கமாகவே முதல்வருக்கு மிரட்டல் விடுத்தார். இன்னும் சில எம்எல்ஏ-க்கள் ரகசியமாக அமைச்சர்களிடமும் கட்சித்தலைமையிடமும் மிரட்டி காரியத்தைச் சாதித்துவருகின்றனர். 

 எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆட்சியமைக்க பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த வாய்ப்புகளை அந்த அணி சரியாகப் பயன்படுத்தவில்லை. இதனால், மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி மீது வருத்தம். இருப்பினும், தங்களை நம்பி, அ.தி.மு.க-விலிருந்து துணிச்சலாகப் பிரிந்து வந்த பன்னீர்செல்வத்தை கைவிட, பி.ஜே.பி நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லை. இதனால், பி.ஜே.பியின் மேலிடத்துக்கு நெருக்கமான காவிவேட்டி அணிந்த நபர் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவர், எம்எல்ஏ-க்களை அணிமாற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 
 

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், "சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ள காவிவேட்டி அணிந்த நபர், சசிகலா அணியில் விருப்பம் இல்லாமல் இருப்பவர்களைக் கணக்கெடுத்து அவர்களிடம் தூது அனுப்பினார். அந்த வலையில் முதற்கட்டமாக ஆறு எம்எல்ஏ-க்கள் விழுந்துள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர், நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, எம்எல்ஏ விடுதிகளில் அந்த எம்எல்ஏ-க்கள் தங்காமல், ஓட்டலுக்கு வந்துவிடுகின்றனர். அவர்களுக்கு, அந்த நட்சத்திர ஓட்டலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டலில் காவிவேட்டி அணிந்த நபர், எம்எல்ஏ-க்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டார். விரைவில் அந்த ஆறு எம்எல்ஏ-க்களும் சசிகலா அணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாற உள்ளனர்" என்றனர். 

எடப்பாடி பழனிச்சாமி

 ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் பேசியவர்கள், "சசிகலா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் விருப்பம் இல்லாமல் உள்ளனர். அவர்கள், 'இரட்டைஇலை' சின்னத்துக்காக அந்த அணியில் உள்ளனர். இரட்டை இலை சின்னம் அணி மாறினால் நிச்சயம் சசிகலாவின் கூடாரம் காலியாகிவிடும். வரும் மார்ச் 23-ம் தேதிக்குள் முடிவு தெரிந்துவிடும். ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை நம்பி போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு, இந்தத் தேர்தல்மூலம் நல்ல பாடம் கற்பிக்கப்படும். பி.ஜே.பி உதவியுடன் எம்எல்ஏ-க்கள் அணி மாறுவது என்பது எல்லாம் பொய். அவர்களே விருப்பப்பட்டு அணி மாறுகின்றனர்"என்றனர். 

 பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தையுடன் நம்மிடம் பேசிய அணி மாறும் மனநிலையிலிருக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், "கூவத்தூர் ரிசார்ட்டில் எங்களை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், எங்களால் எதையும் செய்யமுடியவில்லை. மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்தோம். மற்ற கட்சிகளைப் போல குடும்ப அரசியல் அ.தி.மு.க-விலும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. சசிகலா, டி.டி.வி.தினகரன் என அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை நாங்கள் விரும்பவில்லை. எங்களைப் போல மனவேதனையுடன் அ.தி.மு.க-வுக்காக டி.டி.வி. தினகரனின் நடவடிக்கைகளை பொறுத்துக்கொண்டு இருக்கும் எம்எல்ஏ-க்கள் அதிகம் பேர் அங்கு உள்ளனர். அவர்களும் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்கள்"என்றார். 

 நம்மிடம் பேசிய எம்எல்ஏ-விடம் காவிவேட்டி அணிந்த நபரின் பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு, 'ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்துதான் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நீங்கள் குறிப்பிடுவதைப் போல காவிவேட்டி அணிந்த நபர் யாரும் எங்களிடம் பேசவில்லை' என்றார். 

 அணி மாற்ற நடத்தப்பட்ட பேரம்குறித்து உள்விவரம் தெரிந்த வட்டாரங்கள் கூறுகையில், ''ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாற விரும்பிய எம்எல்ஏ-க்களுக்கு 5 சி வரை பேரம் பேசப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு சி கொடுக்கப்பட்டுள்ளது. அணி மாறியதும் அவர்களுக்கு மீதமுள்ள தொகை கொடுக்கப்படும். சசிகலா தரப்பில் எம்எல்ஏ-க்களுக்கு கொடுக்கப்பட்ட உறுதியை அந்தத் தரப்பு காப்பாற்றவில்லை. இந்த அதிருப்தியிலும் சில எம்எல்ஏ-க்கள் உள்ளனர். அவர்களுக்கும் பா.ஜ.க. தரப்பிலிருந்து தூது விடப்பட்டுள்ளது"என்றனர்

http://www.vikatan.com/news/tamilnadu/84143-6-more-mlas-to-move-from-sasikala-team-to-ops-team.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.