Jump to content

உப்புக்கஞ்சி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை :cool:

சோற்றுக் கஞ்சியில் சிறிது உப்பு சேர்த்துவிட்டால் உப்புக்கஞ்சி தயார்.  mange7.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அவிந்தவுடன் தேங்காய்பாலும் உப்பு போட்டுக் குடிக்கிறது...அடிக்க வாறேல்ல சொல்லிப்போட்டன்

சில பேர் றால்,முருங்கையிலை எல்லாம் போட்டுக் காச்சுவினம்...அதையா அண்ணா கேட்கிறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது சரியாய் தெரியவில்லை ஆனால் ஊரில காடாத்து செய்து போட்டு வந்ததும் உப்புக் கஞ்சி என்று சகோதரி ரதி சொன்னதுபோல் முருங்கை இலை போட்டுக் காச்சுவார்கள். அதை வருபவர்களுக்கு கொடுப்பார்கள்....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீட்டில் குத்தரிசியில் தான் கஞ்சி.வழமையாக சோறு ஆக்குவது போல் கொஞ்சம் கூடுதாக தண்ணீர் விட்டு உப்பு கொஞ்சம் சுண்ட போட்டால் சரி.

இதற்குள் தேங்காய் பால் விடலாம்.வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது தூளாக வெட்டிப் போடலாம்.

இதுவே நல்ல தடிமன் மூக்கடைப்பு என்றால் கொஞ்ச றால் முருங்கை இலையும் போட்டு நிறைய தேசிக்காயும் விடலாம்.

சுவை இருப்பின் நண்பர்களிடம் கூறுக

குறை இருப்பின் என்னிடம் கூறுக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காச்கல் தடிமன் வந்தால் மேலே ஈழப்பிரியன்சொன்னதுபோல் செய்வது புளிக்கஞ்சி. தனிய குத்தரிசியை நல்லா அவியவிட்டு உப்பு மட்டும்போட்டு மசித்து குடிப்பது உப்புக்கஞ்சி. இதற்கு வேறுஎதுவும் சேர்ப்பதில்லை. வயிற்றைப் பிரட்டினால் இது நல்லது என்று சொல்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை :cool:

ஏன் தாத்தா ப்ளு வந்திச்சா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

ஏன் தாத்தா ப்ளு வந்திச்சா...?

இங்கு பரவலாக... ஒரு வைரஸ் காய்ச்சல்  பரவுகின்றது யாயினி.
தாத்தாவுக்கும் வந்திட்டுது போலை கிடக்கு... 
காய்ச்சலுக்கு, உப்புக்  கஞ்சி குடிக்க... அந்தமாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தாத்தாவுக்கும் வந்திட்டுது போலை கிடக்கு...

   4.gifsmileys-praying-622061.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இங்கு பரவலாக... ஒரு வைரஸ் காய்ச்சல்  பரவுகின்றது யாயினி.
தாத்தாவுக்கும் வந்திட்டுது போலை கிடக்கு... 
காய்ச்சலுக்கு, உப்புக்  கஞ்சி குடிக்க... அந்தமாதிரி இருக்கும்.

ஒரு எட்டு பார்த்திட்டு வராமல் என்ன குசும்பு வேண்டி கிடக்குtw_blush: 

அப்படி என்ன அவசரமா இருக்கும்  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அதனுடன் கொஞ்ச வெந்தயமும் போட்டு நன்கு அவிந்ததும் தேவையான உப்பு சேர்த்து தேவை என்றால் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, முனிவர் ஜீ said:

ஒரு எட்டு பார்த்திட்டு வராமல் என்ன குசும்பு வேண்டி கிடக்குtw_blush: 

அப்படி என்ன அவசரமா இருக்கும்  :rolleyes:

போய்  பார்க்கலாம் தான்.... 
ஆனா.... எனக்கு... அவரின், வைரஸ் காய்ச்சல்  தொத்தீடும்  என்று பயமாக இருக்கிறது. :grin:

குமாரசாமி அண்ணை...  விரைவில் நலம் பெற்று, 
யாழ்களத்துக்கும், முகநூலுக்கும்  வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

போய்  பார்க்கலாம் தான்.... 
ஆனா.... எனக்கு... அவரின், வைரஸ் காய்ச்சல்  தொத்தீடும்  என்று பயமாக இருக்கிறது. :grin:

குமாரசாமி அண்ணை...  விரைவில் நலம் பெற்று, 
யாழ்களத்துக்கும், முகநூலுக்கும்  வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

ஓ வைரஸ் காய்ச்சலா அண்ணை மீண்டும் கஞ்சி குடிச்சி தெம்பாக வாங்கோ என்ன 

நன்றாக தண்ணீர் அல்லது இளநீர் பருகவும் அங்கே இளநீர் கிடைக்குமா என்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20.3.2017 at 3:27 PM, ராசவன்னியன் said:

சோற்றுக் கஞ்சியில் சிறிது உப்பு சேர்த்துவிட்டால் உப்புக்கஞ்சி தயார்.  mange7.gif

அது சோத்துக்கஞ்சி.:grin:

On 20.3.2017 at 7:57 PM, ரதி said:

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அவிந்தவுடன் தேங்காய்பாலும் உப்பு போட்டுக் குடிக்கிறது...அடிக்க வாறேல்ல சொல்லிப்போட்டன்

சில பேர் றால்,முருங்கையிலை எல்லாம் போட்டுக் காச்சுவினம்...அதையா அண்ணா கேட்கிறீங்கள்?

உது சாம்பாரின் ஆரம்பக்கட்டம் தங்கச்சி

On 20.3.2017 at 8:17 PM, suvy said:

எனக்கும் இது சரியாய் தெரியவில்லை ஆனால் ஊரில காடாத்து செய்து போட்டு வந்ததும் உப்புக் கஞ்சி என்று சகோதரி ரதி சொன்னதுபோல் முருங்கை இலை போட்டுக் காச்சுவார்கள். அதை வருபவர்களுக்கு கொடுப்பார்கள்....!  

மனிசன் தலையிடி காய்ச்சலுக்கு மருந்து கேட்டால் இந்தாள் காடாத்துறதிலை நிக்கிறார்.tw_tounge_xd:

On 20.3.2017 at 9:29 PM, ஈழப்பிரியன் said:

எமது வீட்டில் குத்தரிசியில் தான் கஞ்சி.வழமையாக சோறு ஆக்குவது போல் கொஞ்சம் கூடுதாக தண்ணீர் விட்டு உப்பு கொஞ்சம் சுண்ட போட்டால் சரி.

இதற்குள் தேங்காய் பால் விடலாம்.வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது தூளாக வெட்டிப் போடலாம்.

இதுவே நல்ல தடிமன் மூக்கடைப்பு என்றால் கொஞ்ச றால் முருங்கை இலையும் போட்டு நிறைய தேசிக்காயும் விடலாம்.

சுவை இருப்பின் நண்பர்களிடம் கூறுக

குறை இருப்பின் என்னிடம் கூறுக.

செய்முறைக்கு நன்றி ஈழம்பிரியன் :grin:

On 20.3.2017 at 9:44 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காச்கல் தடிமன் வந்தால் மேலே ஈழப்பிரியன்சொன்னதுபோல் செய்வது புளிக்கஞ்சி. தனிய குத்தரிசியை நல்லா அவியவிட்டு உப்பு மட்டும்போட்டு மசித்து குடிப்பது உப்புக்கஞ்சி. இதற்கு வேறுஎதுவும் சேர்ப்பதில்லை. வயிற்றைப் பிரட்டினால் இது நல்லது என்று சொல்வார்கள். 

ரொம்ப தாங்ஸ் 

On 20.3.2017 at 10:23 PM, யாயினி said:

ஏன் தாத்தா ப்ளு வந்திச்சா...?

வந்திச்சே! வந்து சிப்பிலி ஆட்டிச்சே!
ஒரு மருந்துக்கும் சொல்லுக்கேக்கேல்லை...
அதுவா வந்திச்சு....அதுவா போயிடிச்சு..

On 21.3.2017 at 4:45 AM, தமிழ் சிறி said:

இங்கு பரவலாக... ஒரு வைரஸ் காய்ச்சல்  பரவுகின்றது யாயினி.
தாத்தாவுக்கும் வந்திட்டுது போலை கிடக்கு... 
காய்ச்சலுக்கு, உப்புக்  கஞ்சி குடிக்க... அந்தமாதிரி இருக்கும்.

நான் குடிச்சது கோழிசூப்பு....கிட்டத்தட்ட உப்பு கஞ்சி நிவாரணம்.:)

On 21.3.2017 at 7:27 AM, ராசவன்னியன் said:

   4.gifsmileys-praying-622061.gif

thank you

On 21.3.2017 at 0:18 PM, முனிவர் ஜீ said:

ஒரு எட்டு பார்த்திட்டு வராமல் என்ன குசும்பு வேண்டி கிடக்குtw_blush: 

அப்படி என்ன அவசரமா இருக்கும்  :rolleyes:

நலம் விசாரிக்க யாழ்களம் இருக்கும் போது நெடுந்தூர பயணம் ஏன்?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21.3.2017 at 0:54 PM, தமிழரசு said:

பச்சரிசியை தண்ணீர் விட்டு அவிய விட்டு அதனுடன் கொஞ்ச வெந்தயமும் போட்டு நன்கு அவிந்ததும் தேவையான உப்பு சேர்த்து தேவை என்றால் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறலாம்.

ம்....இப்போது ஞாபகம் வருகின்றது tw_thumbsup:.......ஊரில் குடித்திருக்கின்றேன். நல்ல சுவையானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.