Jump to content

எம் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா வடக்கு முதல்வருக்கு - கேப்பாப்பிலவு மக்கள் கேள்வி


Recommended Posts

எம் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா வடக்கு முதல்வருக்கு - கேப்பாப்பிலவு மக்கள் கேள்வி
 
 
 
எம் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா வடக்கு முதல்வருக்கு - கேப்பாப்பிலவு மக்கள் கேள்வி
ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­துப் போடு­வ­தற்கு முத­ல­மைச்­ச­ருக்கு நேரம் இருக்­கின்­றது. எங்­க­ளின் குறை­க­ளைக் கேட்­ட­தற்­குத்­தான் அவ­ருக்கு நேர­மில்­லையா?.இவ்­வாறு கேப்­பா­பி­ல­வில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­கள் கேள்வி எழுப்­பி­னர். 
 
கேப்­பா­பி­ல­வில் நில விடு­விப்­புக்­காக தொடர் போராட்­டத்தை மக்­கள் முன்­னெ­ டுத்­துள்­ள­னர். நேற்று 19 ஆவது நாளா­க­வும் போராட்­டம் தொடர்ந்­தது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், கேப்­பா­பி­ல­வில் போராட்­டம் நடை­பெ­றும் இடத்­துக்கு நேற்­று நேரில் சென்­றார். அங்கு வைத்து போராட்­டம் தொடர்­பில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்த முத­ல­மைச்­சர் சிறிது நேரத்­தில் வெளி­யே­றி­னார். 
 
“19 நாள்­க­ளா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தால் பல­ருக்கு காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்­சர் எங்­க­ளைப் பார்க்க வரு­கின்­றார் என்­ப­தற்­காக நாங்­கள் வீடு­க­ளில் இருந்­த­வர்­க­ளை­யும் அழைத்­துக் கொண்டு வந்­தோம். ஆனால் முத­ல­மைச்­சர் வந்த வேகத்­தி­லேயே சென்று விட்­டார். ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­துப் போடு­வ­தற்கு நேரம் இருக்­கின்­றது. எங்­கள் குறை­க­ளைக் கேட்­ப­தற்­குத்­தான் நேர­மில்­லையா?. எல்­லோ­ரும் எங்­களை ஏமாற்­று­கின்­றார்­கள்.
 
 அர­சாக இருந்­தா­லும் சரி, அமைச்­சர்­க­ளாக இருந்­தா­லும் சரி எங்­கள் பிர­தி­நி­தி­க­ளாக இருந்­தா­லும் சரி எல்­லோ­ரும் கண்­து­டைப்­புக்­கா­கவே வரு­கின்­ற­னர். நாங்­கள் போரா­டித்­தான் காணி­களை மீட்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. எங்­க­ளு­டைய தலை எழுத்து இந்த வெயி­லில் கிடந்து நாங்­கள் சாக வேண்­டி­ யுள்­ளது. முத­ல­மைச்­ச­ருக்கு அரு­கில் இருப்­ப­வர்­களே நேரம் போய்­விட்­டது வாங்கோ என்று அழைத்­துச் செல்­கின்­ற­னர்.”- என்று குறை­பட்­டுக் கொண்­ட­னர் போராட்­டத்­தில் ஈடு­ப­டும் மக்­கள்.
 
“யாழ்ப்­பா­ணத்­தில் முத­ல­மைச்­ச­ருக்கு அவ­சர சந்­திப்பு உள்­ளது. உங்­கள் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் அவ­ருக்கு எல்­லாம் தெரி­யும். நாங்­க­ளும் எடுத்­துக் கூறி­யுள்­ளோம்.” -என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் க.சிவ­நே­சன்அந்த மக்­க­ளி­டம் தெரி­வித்­தார்.  

http://www.onlineuthayan.com/news/25014

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.