Jump to content

ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை


Recommended Posts

ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை

 

கார் பழுதடைந்திருந்ததால், ஆட்டோவில் பயணித்தாள் சாவித்திரி. இது வரை எத்தனை கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்து போயிருக்கிறாய்? ஆட்டோ டிரைவர் கோவிந்தனிடம் ஆவலோடு கேட்டாள்.
குறைஞ்சது இருபது பேராவது இருக்குமாம்.
உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்காங்களா?  தினமும் ஒரு ரவுண்டு வருவா கர்ப்பிணி பெண்கள் அமர்ந்த ஆட்டோவில் உட்கார்ந்தாலாவது   ஒரு குழந்தை பிறக்காதாங்கற ஆதங்கம் தான் அதுக்கு காரணம். கோவிந்தனின் பதிலில் நம்பிக்கையும் ஏமாற்றமும் கலந்திருந்தது. அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிறுத்த சொல்லி தன் விஸிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள்.
நீ செய்றது பெரிய தொண்டு உன் மனைவியின்  நம்பிக்கை வீண் போகாமலிருக்க நீயும்., அவளும் ஆஸ்பத்திரியில்  என்னை வந்து பாருங்கள். தேவையான வைத்தியங்களை இலவசமாக  செய்து உங்கள் மடியில் ஒரு குழந்தையை தவழ வைக்க வேண்டியது  என் பொறுப்பு நிபுணரான டாக்டர் சாவித்திரி கோவிந்தனுக்கு கடவுளாக தெரிந்தாள்.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.