Jump to content

இரட்டை இலையை தக்கவைக்க... டி.டி.வி. தினகரனின் ஆயுதம்!


Recommended Posts

இரட்டை இலையை தக்கவைக்க... டி.டி.வி. தினகரனின் ஆயுதம்!

தினகரன்

.தி.மு.க தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கான கெடு புதன்கிழமை முடிவடைகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன், இரட்டை இலையைத் தக்கவைக்க கடைசி ஆயுதமாக தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடம் தனித்தனியாகக் கடிதம் வாங்கியுள்ளார். அந்தக் கடிதங்களை எல்லாம் தொகுத்து, இத்தனை பேரின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது. தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்ற கடிதத்துடன் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் முன்னேற்பாடுகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஆதரவுக் கடிதங்களை தினகரன் தரப்பில் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உள்ளனர். 

அ.தி.மு.க தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்திருந்தனர். சசிகலா நியமனமும் அதைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நியமனமும் செல்லாது என்றும் அதற்கான காரணங்களை விளக்கியும் தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னமும் தங்களுக்குத்தான் தர வேண்டும் என்றும் பன்னீர் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். 

இதற்கு, சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மறுத்து ஓ.பி.எஸ் தரப்பில் மீண்டும் மனுக் கொடுத்தனர். இந்தநிலையில், தேர்தல் ஆணையம், சசிகலா அணியினரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா தரப்புக்கு இரட்டை இலைச்சின்னம் முக்கியப் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

ஏற்கெனவே, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு அந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ, எம்.பி-க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களின்  கையெழுத்து அடங்கிய பொதுக்குழு வருகைப்பதிவேட்டை தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா தரப்பைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இந்தப் பொதுக்குழுக் கூட்டம் என்பது, ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதற்கு முன்னர் நடந்து என்பதால், இந்த விளக்கத்தில் தேர்தல் ஆணையம் திருப்தி அடையவில்லை. 

இந்தநிலையில், சசிகலா தரப்பினர் வருகிற புதன்கிழமைக்குள் (22-3-2017) தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் சசிகலாவை ஆதரிக்கும் அந்தந்த மாவட்ட செயலாளரின் நேரடிப் பார்வையில், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர கழக செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் உள்ளிட்டவர்களிடம் சசிகலாவை ஆதரித்து தனித்தனியாக ஆதரவு கடிதம் வாங்கப்பட்டது. அந்தக்கடிதங்களை மாவட்டச் செயலாளர்கள் நேற்று, சென்னைக்கு கொண்டுவந்தனர். 

துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில், 19-ம் தேதி இரவு 10 மணி வரை உட்கார்ந்து, கடிதங்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களிடமும் நீண்ட நேரம் தனித்தனியாக பேசினார். 

இந்த ஆலோசனையின்போது, தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்போகும் விளக்கங்கள் பற்றி விவாதித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை கிடைக்காமல் முடங்கிப்போனால், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளை எவ்வாறெல்லாம் பிரித்து ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் தினகரன் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

தினகரன்

கடிதங்களை சரிபார்த்து, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பான்மையான பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆதரவு கடிதம் அளித்துள்ளனர். இதனால், எப்படியும் இரட்டை இலை சின்னம் தங்களுக்குக் கிடைத்துவிடும் என்று தினகரன் தரப்பு நம்பிக்கையில் இருக்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/84093-what-plan-does-dinakaran-have-to-retain-aiadmks-symbol.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.