Jump to content

எங்களுக்கு தான்


Recommended Posts

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி தொடர்பாக, தேர்தல் கமிஷன் நாளை மறுநாள், முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது. 'தேர்தல் கமிஷனின் முடிவு, சசிகலாவின் பதவியை பறிக்கும்; எங்களுக்கு சாதகமாக இருக்கும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி
உற்சாகம் அடைந்துள்ளது. இந்த முடிவை எதிர்பார்த்துள்ள, சசிகலா அணியில் தற்போது உள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பலர், அணி மாற தயாராகி வருகின்றனர்.

 

Tamil_News_large_173372820170320000347_318_219.jpg

'அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என, அறிவிக்கக் கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். இதற்கு விளக்கம் கோரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சார்பில், தேர்தல் கமிஷனிடம், பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. பன்னீர் அணியினரும், 61 பக்க பதில் மனுவை தாக்கல் செய்தனர்.

இதன் பின், மார்ச், 15ல், டில்லி சென்ற பன்னீர் அணியினர், தலைமை தேர்தல் கமிஷனர், நஜீம் ஜைதியை சந்தித்து, 'அ.தி.மு.க., பொதுச்செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது

என்றும், கட்சி சட்ட விதிகளின் படி, இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தமாக அறிவிக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினர். அதற்கு வலு சேர்க்கும் வகையில், தொழில் நுட்ப ரீதியிலான, ஆவணங்களையும் ஒப்படைத்தனர். இது, சசிகலா அணியினரை ஆட்டம் காண வைத்துள்ளது.
 

நடந்தது என்ன?


சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதும், அவரது வீட்டிற்கு தினமும்ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்து, மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. ஜெ., மரணத்திற்கு நீதி விசாரணை கோரி, 31 இடங்களில், உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இவற்றில், ஏராளமான, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அவர்களின் கையெழுத்துடன் கூடிய முழு விபரங்களையும், வீடியோ ஆதாரங்களையும், பன்னீர் அணியின், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், 'பக்கா'வாக பதிவு செய்துள்ளனர். இவற்றை தொகுத்ததில், கட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களான, 1.53 கோடி பேரில், 1.2 கோடி பேர், பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமாக இருக்கும் விபரம் தெரிய வந்தது.
இவை, ஆவணங்களாக தேர்தல் கமிஷனிடம் வழங்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் அணி யினரின் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான முயற்சி, சசிகலா தரப்பிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

பகீரத முயற்சி: அ.தி.மு.க., பொதுச் செயலராக

 

தன்னைத் தானே, சசிகலா அறிவித்தது செல்லுமாஎன்ற விவகாரத்தில், தேர்தல் கமிஷன், நாளை மறுநாள் முக்கிய தீர்ப்பை வழங்க உள்ளது. இதனால், டில்லி பிரமுகர்கள் மூலம், பன்னீர் திட்டத்தை முறியடிக்க, சசிலா தரப்பு பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், வரும், 24ல், அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள்
ஒதுக்கப்பட உள்ளன. அதனால், சசிகலா நியமனம் செல்லாது என்றும், தினகரனை அவர் துணை பொதுச்செயலராக்கியது உட்பட, அவரின் எந்த நியமனமும் செல்லாது என்றும், தேர்தல் கமிஷன் தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையில், பன்னீர் அணியினர் உற்சாகமாக உள்ளனர்.
 

எங்களுக்கு தான்


இந்த விவகாரத்தில், பன்னீர் அணிக்கு சாதகமாக முடிவு வந்தால், அந்த அணிக்கு தாவ, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் பலர் தயாராக உள்ளனர். இதற்கிடையே, தேனி மாவட்டம், பெரிய குளத்தில், பன்னர்செல்வம் நேற்று அளித்த பேட்டியில், ''தேர்தல் கமிஷனிடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து கூறியுள்ளோம். 22ல், கட்சி விதிகளை எடுத்து கூறுவோம். அ.தி.மு.க., எங்கள் கட்சி. இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் பெறுவோம்,'' என, நம்பிக்கையோடு கூறினார்.

'தேர்தல் கமிஷன் தீர்ப்பு சாதகமாக வரலாம். அதனால் தான், பன்னீர் அவ்வளவு நம்பிக்கை யோடு பேசுகிறார்' என, அவரது அணியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதற்கேற்ப, ஆர்.கே.நகர் தொகுதியிலும், தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1733728

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.