Jump to content

நல்ல தமிழ் கேட்ப்போம்..


Recommended Posts

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது ஆகச் சிறந்த ஆட்டம் என கம்மின்ஸ் கூறியது ஏன்? - அப்படி என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் டி20 போட்டி என்றாலே விறுவிறுப்பு, திருப்பங்கள், இருக்கையின் நுனியில் அமரவைக்கும் முடிவு, ரத்தக்கொதிப்பை ஏற்றும் தருணங்கள், இதயத்துடிப்பை எகிற வைக்கும் தருணங்கள் பெரும்பாலும் இருக்கும். அவை அனைத்தும் நேற்றைய பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஆட்டத்தை நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நம்பலாம். கடைசிப்பந்து வரை யார் பக்கம் ஆட்டம் முடியும் என்று கணிக்க முடியாத அளவுக்கு பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. சிறந்த டி20 ஆட்டங்களுள் ஒன்றாக இந்த ஆட்டத்தைக் குறிப்பிடலாம். கடைசி ஓவரின் கடைசிப் பந்துவரை பஞ்சாப் பேட்டர்கள் வெற்றிக்காகப் போராடினார்கள், அதேநேரம், பதற்றத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் உனத்கட் வெற்றியைத் தவறவிட்டுவிடுவாரோ என்ற படபடப்பு என அனைத்தும் தொற்றிக்கொண்டு ரசிகர்களின் டென்ஷனை உச்சத்துக்கு கொண்டு சென்றது. உனத்கட் வீசிய ஒரு பந்தில்தான் ஆட்டத்தின் முடிவு தலைகீழானது. கடைசி ஓவரை தொடக்கத்தில் இருந்து மோசமாக வீசிய உனத்கட் அந்தஒரு பந்தையும் வழக்கம்போல் மோசமாக வீசியிருந்தால், வெற்றியை பஞ்சாப்பிடம் தூக்கிக்கொடுத்துவிட்டு சன்ரைசர்ஸ் சென்றிருக்கும். ஆக, பஞ்சாப்பின் தோல்வி, சன்ரைசர்ஸ் வெற்றி அனைத்தும் ஒரு பந்தில்தான் முடிவு செய்யப்பட்டது. முல்லான்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 2 ரன்களில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, நிகர ரன்ரேட்டும் 0.344 ஆக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடைசிவரை இழுத்தடித்து வந்தது நிகர ரன்ரேட்டை பெரிதாக உயர்த்தவில்லை. மாறாக பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளி்ல் 3 தோல்விகள், 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் மைனஸ் 0.196 என 6-வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களைக் கடப்பதே கடினம் என்ற நிலையில் இருந்தது. ஆனால், அந்த அணியை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகக் கொண்டு சென்றவர் ‘அன்கேப்டு’ வீரர் நிதீஷ்குமார் ரெட்டிதான். நிதீஷ் குமார் ரெட்டி 37 பந்துகளில் 64(5சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) ரன்கள் சேர்த்தும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். சன்ரைசர்ஸ் அணி நீண்டகாலத்துக்கு பின் சிறந்த ஆல்ரவுண்டர்களையும், இளம் வீரர்களையும் அடையாளம் கண்டுள்ளது. இளம் வீரர்கள் மீது சன்ரைசர்ஸ் அணி செய்த முதலீடு வீண்போகவில்லை. அப்துல் சமது (25), ஷான்பாஸ் அகமது (14) அபிஷேக் சர்மா (16) என இளம் வீரர்கள் பல நேரங்களில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இதுபோன்ற இளம் வீரர்கள் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு இதுபோன்ற ஆட்டத்தின் மூலம் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஓவரில் அஷுதோஷ் 2 பவுண்டர்கள் உள்பட 11 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை நகர்த்தினார் போராடிய பஞ்சாப் வீரர்கள் அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டர்கள் அஷுதோஷ், சஷாங் இருவரும் கடைசிப் பந்துவரை தங்கள் அணியின் வெற்றிக்காகப் போராடினார்கள். ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி என அனைவரும் நினைத்த நேரத்தில் சஷாங்க், அஷுதோஷ் இருவரும் இணைந்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தையும் இருவரும் மாற்ற முயன்றனர். ஆனால், ஒரு பந்தில் அனைத்தும் மாறியது. சஷாங் 46 ரன்களிலும், அஷுதோஷ் 33 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும். பஞ்சாப் சிறப்பாக பந்துவீசி தொடங்கினாலும் எங்கள் பேட்டர்கள் 182 ரன்கள் அடித்துவிட்டார்கள். அதையும் நாங்கள் டிபெண்ட் செய்திருக்கிறோம். இம்பாக்ட் வீரரின் சிறப்பே பேட்டிங் வரிசையை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல முடியும். 150 ரன்கள் சேர்த்திருந்தால், நிச்சயமாக தோற்றிருப்போம். "புதிய பந்து எப்போதுமே விக்கெட்டை பெற்றுக்கொடுப்பதில் முக்கியம்வாய்ந்தது. எங்கள் பெஞ்ச் வலிமை, வீரர்கள் செயல்பாடு மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய பந்தில் நானும், புவியும் சிறப்பாக பந்துவீசி இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்பமாக அமைந்தது. இரு அணிகளிலும் ஏராளமான இடதுகை, வலது பேட்டர்களும், பந்துவீச்சாளர்களும் இருப்பதால் ஆட்டம் கடும் நெருக்கடியாகச் சென்றது. நிதீஷ் குமார் சிறப்பான பங்களிப்பு செய்தார். அவரின் பேட்டிங்கால் 180 ரன்கள் வந்தது,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS ஆட்டத்தை மாற்றிய ஓவர்கள் கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 78 ரன்கள் தேவை என அசாதாரண இலக்கு இருந்தது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. நிதிஷ் குமார் வீசிய 16-வது ஓவரில் ஜிதேஷ் சர்மா சிக்ஸர் அடித்தநிலையில் விக்கெட்டை இழந்தார். அந்த ஓவரில் பஞ்சாப் 11 ரன்கள் சேர்த்தது. 6-ஆவது விக்கெட்டுக்கு சஷாங்குடன், அஷுதோஷ் சேர்ந்தார். புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் சஷாங் சிங் 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார். கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் கம்மின்ஸ் 18-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அஷுதோஷ் 2 பவுண்டர்கள் உள்பட 11 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே அணியை நகர்த்தினார். கடைசி 12 பந்துகளில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 19-ஆவது ஓவரில் அஷுதோஷ், சஷாங் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து 10 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன. பஞ்சாப் அணி வென்றுவிடுமா அல்லது தோல்வியைத் தழுவுமா என்ற பரபரப்பு அரங்கில் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது. திக்..திக்.. கடைசி ஓவர் 20-ஆவது ஓவரை உனத்கட் வீசினார். உனத்கட் வீசிய முதல் பந்தில் அஷுடோஷ் மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் பதற்றமடைந்த உனத்கட் தொடர்ந்து 2 வைடு பந்துகளை வீசி, கூடுதலாக 2 ரன்களைக் கொடுத்தார். 2-வது பந்தில் லாங்ஆன் திசையில் அஷுதோஷ் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 2 பந்துகளில் வெற்றிக்கு 14 ரன்களை பஞ்சாப் சேர்த்தது. கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் அஷுதோஷ் 2 ரன்கள் சேர்த்தார். 3 பந்துகளில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. 4-வது பந்திலும் அஷுதோஷ் 2 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார். 2 பந்துகளில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை. 5-வது பந்தை உனத்கட் மீண்டும் வைடு பந்தாக வீசினார். இதில் கூடுதலாக ஒரு ரன் கிடைக்க வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 5-வது பந்தில் அஷுதோஷ் மிட்விக்கெட்டில்தூக்கி அடிக்க பவுண்டரி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இந்த ஒரு பந்து தான் ஆட்டத்தை மாற்றிய சூத்திரதாரியாக இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில் சஷாங் சிங் ஒரு சிக்ஸர் அடிக்க 2 ரன்னில் பஞ்சாப் அணி தோற்றது. கடைசி ஓவரில் மட்டும் அஷுதோஷுக்கு 3 கேட்சுகளை பஞ்சாப் அணி கோட்டைவிட்டும், வெற்றிபெற்றுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹர்பிரித் பிரார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர், ரபாடா ஓவரில் ஒரு சிக்ஸர், சாம்கரன் ஓவரில் ஒரு சிக்ஸர் என நிதிஷ் குமார் பந்துகளை பறக்கவிட்டார் சன்ரைசர்ஸை மீட்ட ஆபத்பாந்தவன் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் நேற்றைய ஆட்டத்தில் 150 ரன்களைக் கடப்பதே கடினமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் (21),அபிஷேக் (16), மார்க்ரம் (0), திரிபாதி (11), கிளாசன் (9) என விரைவாக ஆட்டமிழக்க 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் என பரிதாபமாக இருந்தது. இதனால் 120 முதல் 130 ரன்களில் ஆட்டம் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால், நிதிஷ் குமார் ரெட்டி (64) அப்துல் சமது கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர். ஷான்பாஸ் அகமது கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 14 ரன்களைச் சேர்த்தார். 10 ஓவர்களில் 64 ரன்கள் இருந்த சன்ரைசர்ஸ் அணியை அடுத்த 10 ஓவர்களில் 182 ரன்கள்வரை இழுத்துவந்தனர், கடைசி 10 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் நிதிஷ்குமார் 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஹர்பிரித் பிரார் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர், ரபாடா ஓவரில் ஒரு சிக்ஸர், சாம்கரன் ஓவரில் ஒரு சிக்ஸர் என நிதிஷ் குமார் பந்துகளை பறக்கவிட்டார். அதிலும் பிரார்வீசிய 15வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என அவரைக் குறிவைத்து வெளுத்து 32 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். நிதிஷ் குமார் மட்டும் நடுவரிசையில் நிலைத்து பேட் செய்யாமல் இருந்திருந்தால் சன்ரைசர்ஸ் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி (64) அப்துல் சமது கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றனர் பஞ்சாப் அணி எங்கே கோட்டைவிட்டது? பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் சிறப்பாகவே செயல்பட்டனர், கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். அதனால்தான் சனரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. அதிலும் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் நெருக்கடி அளிக்க முடிந்தது. ஆனால், 10 ஓவர்களுக்கு மேல் அதிலும் 16 ஓவர்கள் வரை ஆட்டம் கையைவிட்டு சென்றது. இந்த 6 ஓவர்களுக்குள்தான் நிதீஷ்குமார் ரெட்டி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சாகப் பறக்கவிட்டார். அதிலும் சாம்கரன், ஹர்பிரித் பிரார், இருவரின் ஓவர்களும் குறிவைக்கப்பட்டது. பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவண் நேற்று 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார், கூடுதலாக வேறு சில பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தால், அல்லது இம்பாக்ட் வீரராக களமிறக்கி இருந்தால், சன்ரைசர்ஸ் ஸ்கோரை கட்டுப்படுத்தி இருக்கலாம். பட மூலாதாரம்,SPORTZPICS பேட்டிங்கில் பேர்ஸ்டோ இந்த சீசன் தொடங்கியதில் இருந்து சரியாக ஆடவில்லை. இந்த ஆட்டத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சை மோசமான ஷாட் மூலம் அடிக்க முயன்று பேர்ஸ்டோ டக்அவுட்டில் வெளியேறினார். கேப்டன் தவண், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருக்க வேண்டும். இருவரும் குறைந்தபட்ச ஸ்கோர் செய்திருந்தால், கடைசி நேரத்தில் சஷாங்சிங், அஷுதோஷுக்கு நெருக்கடி வந்திருக்காது. இருவரும் இருந்த ஃபார்மிற்கு வெற்றியை எளிதாக பெற்றுக் கொடுத்திருப்பார்கள். பேர்ஸ்டோவை அமரவைத்து, ஜிதேஷ் சர்மாவை கீப்பிங் செய்ய வைக்கலாம், பேர்ஸ்டோவுக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன் அல்லது ரிலோ ரூஸோ இருவரில் ஒருவரை ஆட வைக்கலாம். நடுவரிசையில் சாம்கரன் (29) சிக்கந்தர் ராசா (28), ஜிதேஷ் சர்மா (19) ஆகியோர் சிறந்த கேமியோ ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஆனால், அஷுடோஷ், சஷாங்க் சிங் இருவரின் பேட்டிங்கும் நேற்றை ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸ் என்றுதான் கூற முடியும். பந்துவீச்சில் சாம்கரன், ஹர்பிரித் பிரார் தவிர்த்து 3 பேருமே சிறப்பாக பந்துவீசினர். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் தனது முதல் இரு ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அருமையாகப் பந்துவீசியிருந்தார். டெத் ஓவர்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சும் கட்டுக்கோப்பாக இருந்ததால்தான் ஷான்பாஸ் அகமதுவால் பெரிதாக அடிக்க முடியவில்லை. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cglx9ez4kpxo
    • Published By: DIGITAL DESK 3   10 APR, 2024 | 09:27 AM   காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (09) காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில், குறித்த இளைஞன் நேற்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசேதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/180863
    • மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடு - இனி யாரெல்லாம் செய்யலாம்? கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 9 ஏப்ரல் 2024 மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் தண்ணீரை பீய்ச்சியடிக்க புதிய கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்கும் இந்த விழாவில் பக்தர்கள் விரதமிருந்து அழகர் போல வேடம் தரித்து தண்ணீரை சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிக்க திடீர் கட்டுப்பாடு ஏன்? அந்த கட்டுப்பாடுகள் என்ன? திருவிழாவில் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க இனி அனுமதி பெறுவது எப்படி? சைவம் - வைணவம் இணைந்து கொண்டாடும் சித்திரை திருவிழா மதுரை திருவிழாக்களில் மிக முக்கியமாக சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். மன்னர் திருமலை நாயக்கர் இரண்டு சமயத்தையும் இணைத்து ஒரே திருவிழாவாக மாற்றினார் என வரலாறுகள் கூறுகின்றன. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தின் பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமியை தரிசனம் செய்து ராமராயர் மண்டகப்படி தீர்த்தவாரி என்று அழைக்கப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வைபவம் நடைபெறும். இது கள்ளழகரை குளிர்விக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்க முன்பு ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டு சிறிய குழாய் மூலம் தண்ணீர் சுவாமியை நோக்கி பீய்ச்சி அடிப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏர் பிரஷர் பம்பு மூலமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால், கடந்த ஆண்டும் பக்தர்கள் பலர் அந்தத் தடை செய்யப்பட்ட பம்பை பயன்படுத்தினர். இந்த ஆண்டுத் திருவிழா ஏப்ரல்-12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 22-ல் நடைபெறுகிறது. நீதிமன்ற உத்தரவு என்ன? இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "சித்திரை திருவிழாவின் போது ஏர் பிரஷரை பயன்படுத்தி தண்ணீர் தெளிக்கப்படுவதால் சுவாமி சிலை பாதிக்கப்படுவதுடன் பெண்கள், குழந்தைகள் மீதும் அத்துமீறி தண்ணீர் தெளிக்கப்படுகிறது. ஆகவே, பாரம்பரிய முறைப்படி, ஆட்டுத்தோல் மூலமாகவே தண்ணீரை பீய்ச்சி அடிக்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் விசாரணைக்கு வந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். “திருவிழாக்களில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. விழாக்கள் சமூகமாக நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். நேர்த்திக்கடன் செலுத்த விரதம் இருந்து வருபவர்கள், கோவில் நிர்வாகத்திடன் அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே வைகை ஆற்றில் இறங்கி சுவாமி மீது பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோலைப் பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சியடிக்க அனுமதி வழங்க வேண்டும். அழகர் மலையிலிருந்து வைகை ஆற்றங்கரை வரை வரும் வழியில் சுவாமி மீது தண்ணீர் தெளிக்காமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மீது தண்ணீர் தெளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”, என அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.   "பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சியடிக்க வேண்டும்" நான்கு தலைமுறைகளாக ஆட்டுத்தோல் கைப்பை விற்பனை செய்யும் காரியாபட்டியைச் சேர்ந்த சமுத்திர பாண்டி பிபிசி தமிழிடம் பேசியது. “மதுரை கீழமாசி வீதி பகுதியில் சித்திரை திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக காரியாபட்டியில் இருந்து வந்து 200-க்கும் மேற்பட்ட ஆட்டுத் தோல் கடைகளை அமைத்து விற்பனை செய்வோம்,. ஆட்டுத்தோல் விலை 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இதில் தண்ணீர் நிரப்பி முன்பு பித்தளை, தங்கம்,வெள்ளி போன்ற பல்வேறு உலோகங்களான சிறிய குழாய்களைப் பயன்படுத்திஅழகர் மீது தண்ணீர் பீய்ச்சப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 100 முதல் 150 மீட்டர் தூரம் இருக்கக்கூடிய சாமி மீது தண்ணீரை பீய்ச்சுவதற்காக ஏர் பிரஷர் பம்புகளை பயன்படுத்துகிறார்கள். இதனை தடை செய்ததை வரவேற்கிறோம். பாரம்பரிய முறைப்படியே தண்ணீர் பீய்ச்சியடிக்க வேண்டும்”, என்றார். படக்குறிப்பு, சமுத்திர பாண்டி, ஆட்டுத்தோல் கைப்பை விற்பவர் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் திருவிழா தொடங்கியது எப்படி? இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் சித்தரவீதிகாரன் கூறியது “திருமலை நாயக்கர் காலத்திலிருந்து சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அப்போதே கள்ளழகர் திருவிழாவில் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தின் போது சுவாமியின் மீது விரதமிருந்து வந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வழக்கம் துவங்கி இருக்கிறது. இந்தத் திருவிழா கோடைகாலத்தில் நடைபெறுவதால் மக்களிடையே ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காகவே இது பின்பற்றப்பட்டு இருக்கலாம். தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து வர இயலாது. எனவே ஆட்டுத்தோல் பையை பயன்படுத்தி அதன் மூலம் மக்களை வெப்பம் தணிப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கலாம்.”, என்றார் அவர். படக்குறிப்பு, சித்தரவீதிகாரன், எழுத்தாளர் "பக்தர்களை குழப்பமடையச் செய்யும் நடைமுறை" 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் பீய்ச்சி அடித்து வரும் பக்தர் பிரசாந்த் பிபிசி தமிழிடம் பேசினார். "நாங்கள் மூன்று தலைமுறையாக அழகருக்காக விரதமிருந்து ஆண்டுதோறும் அழகர் போல உடை அணிந்து மதுரையை அழகர் அடைந்தவுடன் எதிர்சேவை செய்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அன்று தண்ணீர் பீய்ச்சி அடித்து எங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகிறோம். ஆனால் திடீரென அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என சொல்கிறார்கள். இது அனைத்து பக்தர்களுக்கும் சென்று சேர்வது மிகவும் கடினம். நீதிமன்றம் ஏர் பம்புகளை பயன்படுத்தத் தடை விதித்து இருக்கிறது. அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை தருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏர் பம்பு பக்தர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. அதனை தடை செய்தால் போதுமானது. ஆனால் முன் பதிவு செய்து தான் தண்ணீர் பீய்ச்ச வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது திருவிழாவின் போக்கை வருங்காலத்தில் மாற்றிவிடும் இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்", என்றார்.   படக்குறிப்பு, பிரசாந்த், பக்தர் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அழகர் கோயிலின் செயல் அலுவலரும் இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையர் லெ. கலைவாணன், "கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பொழுது பக்தர்கள் விரதமிருந்து அழகரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பது வழக்கம். இதில் ஏர் பிரஷர் பம்புகளை பயன்படுத்தி சிலை மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது அத்துமீறி தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நிலை இருந்து வந்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த ஆண்டு அனுமதி பெற்று பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்ச அனுமதி கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட இருக்கிறது. அழகருக்கு விரதம் இருந்து தண்ணீர் பீய்ச்ச விரும்பும் பக்தர்கள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உள்ள அலுவலகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆதார் அட்டை இரண்டு புகைப்படத்துடன் நேரில் வந்து பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுச் செல்லலாம். தற்பொழுது மண்டகப் பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதால் அது முடிந்த பிறகே இந்த பணிகள் தொடங்கும். வரும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்கப்படும். சிலையின் மீது கெமிக்கல் கலந்து தண்ணீரை அடிக்கக் கூடாது, பிரஷர் பம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவே இது நடைமுறை செய்யப்பட்டுள்ளது", என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cl7lwdk48yko
    • Published By: DIGITAL DESK 7   09 APR, 2024 | 05:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறாது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க யானை சின்னம் அல்லாத வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதானியுமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெற இருக்கும் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறும் எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி தேர்லும் பொதுத் தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் இடம்பெறாது. அவ்வாறு நடத்தவும் முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டும். பொதுத் தேர்தலுக்கு செல்ல இன்னும் காலம் இருக்கிறது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது நிச்சயமாகும். என்றாலும் அவர் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார்.தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் நடவடிக்கையின் அடித்தள நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்வதே எமது நோக்கம்.  பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 80 வீதமானவர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கிறது என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கிறார். அதேபோன்று ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான, சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றவரான ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது இலக்கு. அதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.  ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இன்னும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வர இருக்கின்றனர். சஜித் பிரேமதாசவும் மீண்டும் எம்முடன் இணைந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளி்க்க  முன்வர வேண்டும் என்றே நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முன்வருமாக இருந்தால் அதனை நாங்கள் மிகவும் அன்புடன் வரவேற்க தயாராக இருக்கிறோம். அதேநேரம் சஜித் பிரேமதாச எம்முடன் இணையாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் எமது நண்பர்கள் பலர் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்வார்கள். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதனை கண்டுகொள்ளலாம் என்றார். https://www.virakesari.lk/article/180842
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 5 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 43 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.