Jump to content

நானும் ஒரு அகதி தான்! (பகுதி ஒன்றும், பகுதி இரண்டும்!)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

5202616980_5c4567dd93.jpg

அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது!

விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்!

அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்!

ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள்  சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன், மூக்கிலிருந்து வெளியே சிந்தத் தயாராகவிருந்த நீர்த்திவலைகள் மூக்கின் நுனியிலேயே உறைந்து போவதை உணர்ந்தான் ! ஒருவாறு கடைக்குள் நுழைந்தவனின் காதில்...ஒரு தமிழ் அக்கா,,அங்கே வேலை செய்யும் புதிதாக வந்த தமிழ் இளைஞர்களை, அதிகாரத் தொனியில் அதட்டிக் கொண்டிருந்தது கேட்டது! அந்த இளைஞர்கள், மருத்துவ...பொறியியல்...மற்றும் கணனியியல் மாணவர்களாகவோ மட்டுமன்றிப் பட்டதாரிகளாகக் கூட இருக்கக் கூடும்! ஏதோ சில காரணங்களுக்காக...அக்காவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க…சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால்….ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மிதிப்பதில்..ஒரு தனி மகிழ்ச்சி அடைவான் என்பது எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டே ஓமப் பக்கைற்றைத் தேடிக் கொண்டிருந்தவனை, பின்னாலிருந்து 'தம்பி என்னைத் தெரியுதோ' என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது!

அந்தக் குரலுக்குரியவரை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை  எனினும் நீங்கள்..என்று அவன் இழுக்கவும்.. தம்பி.. என்ன ‘கறையான் பிட்டியையும்' மறந்து போட்டியோ எண்டதும்,,,,சோமண்ணையா நீங்கள்,,என்று கேட்டான்!

என்ன மாதிரி,,,இங்க... என்று கேட்க...தம்பி..அதைப்பற்றி ஒரு மகாபாரதமே எழுதலாம் என்று கூறியவர்..தம்பி..அந்தத் தங்கச்சி எங்கட பக்கமே பார்த்துக்  கொண்டிருக்குது போல கிடக்குது! பெரிய வில்லங்கமாய்ப் போயிரும்! உன்ர போன் நம்பரைத் தந்திட்டுப் போ...நான் வேலை முடிய உனக்கு அடிக்கிறன் என்று சொல்லியபடியே..அவனது போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்! குடிநீரைக் குடிச்சுப் போட்டு..நல்ல நித்திரையொண்டு அடிக்கவேணும் என்று நினைத்திருந்தவன் கனவெல்லாம்...கண் முன்னே தவிடு பொடியாவதை உணர்ந்தான்! இந்த ‘அடி' என்ற வார்த்தை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது,,என்று நினைத்த படி...இண்டைக்கு சோமண்ணை வந்த பிறகு...ஒரு முறையான அடி..அடிக்கத் தடிமன் இருந்த இடம் தெரியாமல் போயிரும் என்று தனக்குத் தானே, சமாதானமும் செய்து கொண்டான்!

இரவு எட்டு மணி போல...வீட்டுக்கதவு தட்டப்படவே...யாரென்று கேட்காமலேயே சந்திரன் கதவைத் திறக்கவும்...பேபரில் சுத்திய நெப்போலியன் போத்திலுடன்...சோமண்ணை நின்றிருந்தார்!

தம்பி...வர வர உலகம் சின்னதாகிக் கொண்டே வருகின்றது என்று கூறியவர், நீ வந்து கனகாலமெல்லே ...வலு பெரிய வீட்டில இருப்பாய் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..என்று சொல்லி இழுத்தார்! தமிழனுக்கே எனச் சில தனிக்குணங்கள் உண்டு என்பதும்...அதை இலகுவில் மாற்றமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததால்...அதை விடுங்கண்ண,, உங்கட கதையைச சொல்லுங்கோ..என்று அவரிடம் சொன்னான்!

தம்பி அதையேன் கேக்கிறாய்….நான் உலகத்திலை கேள்விப்படாத தேசங்களுக்கிள்ளாலை எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறேன்! சின்ன வயதிலை ஒரு சாத்திரி என்ர சாதகத்தைப் பாத்துப்போட்டு...தம்பி உனக்குப்  பிற தேசம் போற பலனிருக்கெண்டு சொல்ல...அவருக்குப் பிடரியில ஒரு தட்டுத் தட்டிப் போட்டு...இனிமேல் ஒருத்தருக்கும் சாத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லிப் போட்டு வந்தனான்!

இப்ப பார்...பிரான்சுக்கில்லாள பூந்து லண்டனுக்கிள்ளை நிக்கிறன்!

அண்ணை...உங்கட பக்கம் அவ்வளவு பிரச்சனை இருக்கேல்லைத்தானே என்று கேட்கவும்...இஞ்ச பார்...நான் சொல்லுறதைக் கவனமாய்க் கேள்!

கம்பசுக்கு முன்னால ஒரு பஸ்ஸில வந்த நம்ம பெடியனை..பஸ்ஸை விட்டு இறக்கி ஆமிக்காரன் சுட்டவனெல்லே! நீயும் அப்ப அங்க தானே இருந்தனி? அந்த நேரம் நானும்...யோகர் கடைக்கு முன்னால நிண்டு சிகரட் பத்திக்கொண்டு நிண்டனான்! வெடிச்சத்தம் கேட்டவுடனேயே..யோகற்றை பின்வளவுகுள்ள ஒளிச்சுப்போட்டன்!  கொஞ்ச நேரத்தால வெளியால வரவும் ஆமிக்காரர் பஸ்ஸுக்குள்ள இருந்ததைக் கவனிக்காமல் வெளியால வந்திட்டன்! அப்ப ஒருத்தர் என்னைப்பிடிச்சு..என்ன நடந்தது எண்டு விவரமாய் விசாரிக்க...நானும் மளமளவெண்டு...நான் கண்டதைச் சொல்ல வெளிக்கிட...இதைக்கண்ட ஒரு ஆமிக்காரன் துவக்கிக் கொண்டு வந்து என்ற நெஞ்சில வைச்சிட்டான்! என்னையறியாமலே கையைத் தூக்கிட்டன்! எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில ஏதொ சொல்ல..அவனும் ...யன்ன..யன்ன..எண்டு என்னைக் கலைச்சு விட்டிட்டான்! அண்டைக்குத் தான் முருகனில எனக்கு முதன் முதலா நம்பிக்கை வந்திட்டுது! அடுத்த நாள்,வழக்கம் போல யோகர் கடைக்கு வந்தால்...எல்லாரும் என்னைப் பார்த்த படி..! நானும் பின்னால திரும்பிப் பாத்தன்...ஒருத்தரையும் காணேல்ல! சரி...இண்டைக்கு என்ன இழவோ தெரியாது எண்டு நினைத்தபடியே..ஒரு சிகரட்டைப் பத்த வைச்ச படி நடந்தன்! கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ரபடம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..!   

அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது!

ஐயா பெரிய படிப்புப் படிச்சுப் பட்டம் வாங்கிக்கொண்டு வந்திட்டார்! அது தான் பேப்பரில படம் வந்திருக்குது!

வழக்கமாய்..அவள் பேசுற போது...வலக்காதால வாங்கி இடக்காதால விட்டிருவன்!

நான் கணக்கிலேயே எடுக்கிறதே இல்லை! ஆனால் அண்டைக்குப் பேசின பேச்சு...என்ர வேட்டியைக் கழட்டித் தலையில கட்டின மாதிரி இருந்திச்சுது!

அது சன்னதமாடினால்...சன்னதம் முடியிற நேரம் வரைக்கும் நானே வாயே திறக்கிறது கிடையாது!

சன்னதம் முடிஞ்சுது எண்டதை அறிவிக்கக் கடைசியாய் ஒரு வசனம் வரும்!

 

'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?'

அண்டையான் பேச்சு...என்னை நல்லாச் சுட்டுப்போட்டுது! 

 

(இன்னும் கொஞ்சமிருக்கு! )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் சோமண்ணைக்கு அர்ச்சனை கொஞ்சம் கம்மிதான்.... தொடருங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை லண்டனா சிட்னியா?
சோமண்ணையைப் பார்த்தா லண்டன் மாதிரி தெரியுது!

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?'

Bilderesultat for vadivelu

தொடருங்கள் புங்கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ற படம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..!   

அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது!

சோமண்ணை... தன்ரை,  மனிசியின்ரை  குணம் தெரிஞ்சும்....
அந்த வீரகேசரி பேப்பரை, ஏன் மனிசியிட் டை  காட்டினவர் ?
நல்லா வேணும்.... வேண்டிக் கட்டட்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கையூரன்
மேலுள்ள படம் அல்பேர்ட்டன் ஈலிங் ரோடு  இல் இருக்கும் சாக்கோணி உணவுக்கடை, மரக்கறி கடையும் உண்டு . குஜராத்தியின் கடை,  எங்கடை ஆக்கள் பலர் அதில் வேலை செய்திருக்கிறார்கள். வந்த காலத்தில் சம்பளம்  £1.50 ஒரு மணித்தியாலத்திற்கு என்று கேள்விப் பட்டுள்ளேன். புழிஞ்சு எடுத்து போட்டுத்தான் விடுவார்கள். நாரியை பிடித்திக் கொண்டு ஒரு நொண்டலுடன் நடந்தால் கேப்பார்கள், " தம்பி நீயும் பட்டேலிடம் வேலை செய்யிறியோ எண்டு". சாக்கோணி உணவுக் கடையும், மரக்கறி கடையும் தமிழர்களுக்கு சிலை கட்டிட வேண்டும், உழைச்சுக் கொடுத்ததுக்கு.

சோமண்ணை படப்போகும் அவலம் இப்பவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

இருந்தாலும் சோமண்ணைக்கு அர்ச்சனை கொஞ்சம் கம்மிதான்.... தொடருங்கள்....!  tw_blush:

ஆரம்பத்தில இருந்த பழக்கப் படுத்துக் கொண்டு வந்தால்....அர்ச்சனை பெரிசாகத் தெரியாது!

பழகினாலும்....சில வேளைகளில் மூன்றாம் திருவிழா அர்ச்சனைக்கும், தேர்த் திருவிழா அர்ச்சனைக்கும் வித்தியாசம் இருக்கும் தானே சுவியர்!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..!

17 hours ago, ஈழப்பிரியன் said:

புங்கை லண்டனா சிட்னியா?
சோமண்ணையைப் பார்த்தா லண்டன் மாதிரி தெரியுது!

மூக்குக்குள்ளை உறைஞ்சு போற அளவுக்கு...சிட்னியில ஒரு நாளும் குளிர் வராது!

ஊரில மாசி மாதத்துக் குளிர் மாதிரி...விடியக் காலமையில போர்த்துக் கொண்டு படுத்திருக்க...அந்த மாதிரி இருக்கும்~

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, ஈழப்பிரியன்!

நீங்கள் வந்த நேரம் அடிச்ச வெயிலுக்குப்...புங்குடுதீவே ...பிச்சை வாங்க வேண்டும்!tw_blush:

16 hours ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for vadivelu

தொடருங்கள் புங்கை 

நன்றி...ஜீவன்!

இதுக்குத்தான் நம் முன்னோர்கள்...பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று ஒழுங்கு பட்த்தியுல்லார்கள்!

கிருகஸ்தம்...ஒருவனை....நிச்சயம்....முனிவனாக்கும்!

நான் சொல்லுறதை நம்பாவிட்டால்...சுவையரை அல்லது குமாரசாமி அண்ணரை...ஒரு முறை கேட்டுப்பார்க்கவும்,!:cool:

பட்டால் தானே தெரிகின்றது...தொட்டால் சுடுவது நெருப்பென்று...! ( கவிஞர் கண்ணதாசன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய புங்கையைக் காணவில்லை. தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே லண்டனில் நடக்கும் கதை மிச்சத்தை காணோம்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/03/2017 at 4:14 AM, தமிழ் சிறி said:

சோமண்ணை... தன்ரை,  மனிசியின்ரை  குணம் தெரிஞ்சும்....
அந்த வீரகேசரி பேப்பரை, ஏன் மனிசியிட் டை  காட்டினவர் ?
நல்லா வேணும்.... வேண்டிக் கட்டட்டும். :grin:

சோமண்ணை காட்டின காரணம் வேற...!

அதை விளங்கிக்கொள்ளுற அளவுக்கு....மனுசி மார் எல்லோருக்கும் வாய்க்கிறது இல்லை!

மனுசிமார் பேசுறதை எல்லாம் பெரிசு படுத்தக் கூடாது!

அவர்களுக்கு ஒரு நாளும் 'அதிக இரத்த அழுத்தம்' போன்ற நோய்கள் ஒரு நாளும் கிட்ட வராது!

நன்றி...தமிழ்சிறி  ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி)

 

 

“உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?”

என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத்  தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்!

சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது!

தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்!

சரியண்ணை...இப்ப என்ன பிளான்?

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ?

சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா?

அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை!

ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது!

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை!

கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது!

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது!

தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை!

இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்!

இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா  அல்லது நியூசீலாந்து தான்!

(சுபம்…)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை சோமண்ணை அவுஸ் வரும் போது மாட்டேன் என்று சொல்லாமல் உங்க வீட்டில ஒரு அறை கொடுக்க வேணும்.

நிஜங்களை மனதில் வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்பதும் அச்சம் அற்றுப்போன தன்மையும் மனிதவாழ்க்கையை எங்கெங்கோ எல்லாம் இழுத்துச் செல்கிறது. அதர்மங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை... தர்மத்தை மட்டுமே துன்பங்கள் சூழ்கின்றன. அநுபவப்பாடங்கள் அசராத துணிவை கொடுக்கின்றன. வல்லவன் வாழ்வான் என்பதே புதுமொழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் துணிச்சலுடன் செய்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாட்டுப் பட்டு விடுவார்கள்....! இது கதையான போதிலும் அங்கங்கு நடப்பவையே.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களில் கொஞ்சம் கடினம் ...........
இப்போதும் பிடிக்க வேண்டும் என்றால் பிடிக்க முடியும் 
அவர்களுக்கு அதில் இஸ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

க்ரெடிட் கார்ட் கொம்பனிகள் ....
செலவு என்று ஒரு வருடத்திற்கு இத்தனை மில்லியன் என்று 
ஒவ்வரு வருட தொடக்கத்திலும் ஒரு பட்டியல் போடுவார்கள் 
அவர்கள் பட்ஜட்டுக்குள் சோமண்ணை ஆட்கள் நிற்பதால் .... அவர்களுக்கும் சோமண்ணை 
போன்றவர்களுக்கும்  பிரச்சனை இல்லை.

நீதி நேர்மையோடு இருக்கிற எங்களை போன்றவர்கள் ஒருநாள் பிந்தினாலும் 
ஒரு $35 வாங்கி அதை நிறுவி கொள்வார்கள். 
எங்களுக்கும் அவர்களுக்கும்தான் பிரச்சனை.
காரணம் 
லாபம் ஈட்டிக்கொடுக்கும் பட்ஜெட்டை நிரப்ப வேண்டிய ஒரு 
தார்மீக கடமை எமக்கு உண்டு . 

Link to comment
Share on other sites

19 hours ago, புங்கையூரன் said:

 

நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி)

 

 

“உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?”

என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத்  தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்!

சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது!

தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்!

சரியண்ணை...இப்ப என்ன பிளான்?

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ?

சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா?

அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை!

ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது!

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை!

கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது!

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது!

தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை!

இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்!

இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா  அல்லது நியூசீலாந்து தான்!

(சுபம்…)

நன்றாக இருக்கு அண்ணா ஆனால் கடைசிப் பகுதியை அவசரத்தில் எழுதி முடிச்ச ஒரு பிரமை.

இப்ப சொல்லுங்கோ சோமண்ணையை நாங்கள் எப்பிடியுங்கோ உள்ளுக்க விடுறது. பிறகு மனிசன் அவுஸ் பாங்கயெல்லாம் நாஸ்த்தி பண்ணிப்போடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

 

தொடர்ந்த உரையாடலில்... தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்... தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

------

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

-------

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்ல சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

------

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி... மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

Tiger Balm Red (with Cinnamon Oil) 19g   Logo of Virakesari  

சந்திரனுக்கு... தடிமன் வரப்போகுது  என்று அறிகுறி தெரிந்திருந்தால், பேசாமல்  "ரைகர்  பாமை"    மூக்கிலை  தடவிப் போட்டு, குப்புற படுக்கிறதை விட்டுட்டு.... உந்தக் குளிருக்கை,  "ஓமப் பக்கற்" வாங்கப் போனதால்... எவ்வளவு பிரச்சினை வந்ததது என்று சோமண்ணையை கண்ட  பிறகு   புரிந்திருப்பார்.  :grin:

சோமண்ணையை நோக்கி... ஆமிக்காரன் துவக்கை நீட்டிய படம்,  வீரகேசரி பேப்பரில் வந்ததை பார்த்து, அவர் அந்தப் பேப்பரை வாங்கி.. பத்திரப் படுத்திய போதே, அவரின்  "மாஸ்டர் பிளான்" வேலை செய்யத் தொடங்கிதை... அவரின் மனிசி கூட அறிந்திருக்க மாட்டார்.  :D:

அந்த ஒரு படம்,  சோமண்ணையை..... பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, இந்தோனேசியா வரை கொண்டு போய்..
இனி  அவுஸ்திரேலியா,  நியூசீலாந்துக்கும்  கொண்டு போகப் போகுது.
சோமண்ணையின்  அவுஸ்திரேலியா  "புரோகிராம்" முடிந்தவுடன்,  ஜேர்மனிக்கு  ஆளை அனுப்பி வையுங்கோ புங்கை. ஆளைப் பார்க்க..... ஆசையாயிருக்கு.tw_smiley:

-----

புங்கையூரான்.... சிலர்  செய்யும், செயலை வெளிக்கொணர்ந்த  எழுத்துநடை அழகு.
இடையிடையே... அதில் நகைச் சுவையை தூவிய விதம், கதைக்கு  இன்னும்  சிறப்பு.
கதையை அவசர பட்டு முடித்து விடட மாதிரி... ஒரு உணர்வு.
சோமண்ணையின்... இங்கிலாந்து ஜில்மால்களையும், தமிழ்நாட்டில் அவரின் உல்லாசத்தையும் கொஞ்சம்  விரிவாக தொட்டிருக்கலாம்  என்பது, எனது அபிப்பிராயம். 
மொத்தத்தில்..... கதை அருமை புங்கையூரான்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, புங்கை! vil-cligne.gif

இதற்குத்தான் தமிழர்களை தமிழனே நம்புவதும் இல்லை..!!

எனக்குத் தெரிந்து சில நிறுவனங்களில் வேலை செய்தவர்கள், நிறுவனத்தில் சம்பளச் சான்றிதழ் வாங்கி வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்ற பின், சகட்டு மேனிக்கு லோன் போட்டு பணத்தை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு வீடோ, நிலமோ,தொழிலிலோ முதலீடு செய்துவிட்டு, மத்தியக் கிழக்கு நாடுகளிடமிருந்து காணாமல் ஓடி ஒளிந்தவர்கள் மிக அதிகம்.. இதனால் எங்கள் நிறுவனமும் வங்கிகளில் லோன் வாங்க தடை செய்யப்பட்ட பட்டியலில் இன்றும் உள்ளது..

சொந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம், இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, தொடர்ந்து சென்று அவர்களை பிடித்து பணத்தை வசூலிக்கும் செலவு மிக அதிகமாக இருக்கும், இரு நாட்டு சட்ட சிக்கல்களும், தாமதங்களும் இவர்களுக்கு மிக அனுகூலமாக இருப்பதால், இப்படி லோன் கொடுக்கும் வங்கிகளை ஏமாற்றுகிறார்கள்..

சிலரின் கள்ளத்தனத்தால் மற்றோருக்கு அளெசகரியம் அதிகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவுப்பகுதி நல்லாய் இருக்குப் புங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


உண்மையிலேயே பலரது அனுபவங்களை கதையாகப் (....!) பதிவுசெய்து செல்கிறது. பாராட்டுகள். 
லண்டனில், எனது நண்பரொருவர் வாடகைக்கெடுத்த வீட்டிலே முன்பிருந்தவர் செய்தஏமாற்றுச் செயல்கரணியமாக அவர் ஒரு கடனைப்பெறமுடியாத நிலையிருந்ததாகக் கூறியிருந்தார். எத்தனை பேரது தரிசனமோ சோமண்ணை.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2017 at 8:32 AM, Ahasthiyan said:

தொடருங்கள் புங்கையூரன்
மேலுள்ள படம் அல்பேர்ட்டன் ஈலிங் ரோடு  இல் இருக்கும் சாக்கோணி உணவுக்கடை, மரக்கறி கடையும் உண்டு . குஜராத்தியின் கடை,  எங்கடை ஆக்கள் பலர் அதில் வேலை செய்திருக்கிறார்கள். வந்த காலத்தில் சம்பளம்  £1.50 ஒரு மணித்தியாலத்திற்கு என்று கேள்விப் பட்டுள்ளேன். புழிஞ்சு எடுத்து போட்டுத்தான் விடுவார்கள். நாரியை பிடித்திக் கொண்டு ஒரு நொண்டலுடன் நடந்தால் கேப்பார்கள், " தம்பி நீயும் பட்டேலிடம் வேலை செய்யிறியோ எண்டு". சாக்கோணி உணவுக் கடையும், மரக்கறி கடையும் தமிழர்களுக்கு சிலை கட்டிட வேண்டும், உழைச்சுக் கொடுத்ததுக்கு.

சோமண்ணை படப்போகும் அவலம் இப்பவே தெரிகிறது.

வணக்கம், அகஸ்தியன்..!

நான் அங்கு வாழ்ந்த காலத்தில்..சக்கோனி என்று மட்டும் தான் பெயர் இருந்ததாக நினைவு! இப்போது படத்தைத் தேடினால்...சக்கோனிஸ் என்று வருகின்றது! அந்தக்காலத்தில் அவர்கள் கொடுத்த சம்பளம்..மணிக்கு...இரண்டு பவுண்கள்!  ** அக்கா தான் அந்த நேரம்...கடைக்குப் பொறுப்பாக இருந்தா எண்டு நினைக்கிறேன்! 

நான் ஒரு தரம் வெங்காய மூடை வாங்கிய போது...ஒரு தமிழ் முதியவரிடம்..இதைத் தூக்கிக்கொண்டு போய்..ஐயாவின்ர கார் டிக்கியியிலை வையும் என்று அவ கூறவும்...நானும் பரவாயில்லை ..நானே தூக்கிக் கொண்டு போகிறேன் என்று சொல்லிப் பார்த்தும், நீங்கள் தான் இவயைளைப் பழுதாக்கிறீங்கள் எண்டு என்னோடையும் ஏறி விழுந்தா அந்த அக்கா!

இப்பிடித்தான் நம்ம சனம் அந்த நாளையில வேலை செய்தது..!

இப்ப..எல்லாம் மாறியிருக்கும் எண்டு நினைக்கிறேன்!

வரவுக்கும்...கருத்துக்கும் மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமரின்ட படத்தை அனுப்பிவிடுங்கோ அவுஸ் இமிகிரேசன் காரங்களிடம் மாட்டிவிடுவம்...:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக நடக்கும் ஒர் விடையம் தான் புங்கை. சுவாரசியமாக எழுதிள்ளீர்கள். சோமன்ணை இங்கிலாந்து குளிராகவும் செலவு கூடுதலான நாடு என்றபடியால் அவுசுக்கு வந்திருக்கலாம். அவுஸ் இலங்கையை ஒத்த காலநிலை.

மேலும் புங்கை நீங்கள் ஒர் தமிழாசிரியரா? என்னுடையா வாழ்விலும் இப்படி பல அனுபவபவங்கள் உண்டு புங்கை அனால் 
அவற்றை கட்டுக்கோப்பாக, சுவரசியமாக , உவமான உவமேயங்களுடன் எழுத வருகின்றது இல்லை. நேரம் இருந்தால் ஒரு திரிதிறந்து எப்படி எழுதுவது என்று சில டிப்ஸ் தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை! கலக்கீட்டியள்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

வழமையாக நடக்கும் ஒர் விடையம் தான் புங்கை. சுவாரசியமாக எழுதிள்ளீர்கள். சோமன்ணை இங்கிலாந்து குளிராகவும் செலவு கூடுதலான நாடு என்றபடியால் அவுசுக்கு வந்திருக்கலாம். அவுஸ் இலங்கையை ஒத்த காலநிலை.

மேலும் புங்கை நீங்கள் ஒர் தமிழாசிரியரா? என்னுடையா வாழ்விலும் இப்படி பல அனுபவபவங்கள் உண்டு புங்கை அனால் 
அவற்றை கட்டுக்கோப்பாக, சுவரசியமாக , உவமான உவமேயங்களுடன் எழுத வருகின்றது இல்லை. நேரம் இருந்தால் ஒரு திரிதிறந்து எப்படி எழுதுவது என்று சில டிப்ஸ் தருவீர்களா?

வணக்கம்...கொழும்பான்!

உங்கள் கேள்வி...உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்திய படியால்..அதிகம் ஆறிப் போக விடாமல், உடனே பதிலளிக்க வேண்டிய அவசரம் உள்ளது!

உங்கள் பதிவுகளிலிருந்து..உங்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு எடை போட்டு வைத்திருந்தேன்! எனது வாழ்க்கையும் கிட்டத் தட்ட உங்களதைப் போன்றது தான்!

தமிழ் படிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை! சாதாரண தரத்துடன்..தமிழுக்கு விடை கொடுக்க வேண்டி ஏற்பட்டது! நாங்கள் படித்த கல்லூரியில்...விஞ்ஞானப் பிரிவுக்குப் போகாமல்...கலைப்பிரிவுக்குச் செல்வது ஒரு 'சாதிக் குறைவு' மாதிரிப் பார்க்கப்பட்டது! அதே போலவே..கணிதப் பிரிவுக்குப் போகாமல்..உயிரியல் பிரிவுக்குச் செல்வதும் அவ்வாறே பார்க்கப்பட்டது! நீரோட்டத்துக்கு எதிராகப் பயணிக்கும் வலுவோ..அல்லது சுயமாக முடிவெடுக்கும் துணிவோ எம்மிடம் அப்போது இருக்கவில்லை! எனினும்...பிற்காலத்தில்..இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டதும் உண்டு! பின்னர்..பல்கலைப் படிப்பிலிருந்து .எல்லாமே ஆங்கில  மொழியில் தான்! ஒன்று இழக்கப்படும் போது தான்...அதை அடைய வேண்டும் என்ற ஆவல் அதிகரிப்பதுண்டு!

எனவே...சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம்..திருக்குறள்..கல்கி..ஆனந்த விகடன்..கல்கண்டு..போன்றவற்றையும் மற்றும் எஸ்.பொ. செங்கை ஆழியான், ஆகியோரது நூல்களையும்..மற்றும் 'நிலக்கிழி' ( எழுதியவர் நினைவில் இல்லை), டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை, சிரித்திரன் போன்றவை..தமிழை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! தற்செயலாக ஒரு கவியரங்கில். பங்கு பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டபோது தயங்கிய படியே முதலின் பங்கேற்றேன்! பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் தலைமை தாங்கியதாக நினைவுண்டு!  கவியரங்கு முடிந்ததும்..பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் மேடையிலேயே புகழ்ந்து தள்ளிய போது..ஒரு மூலையிலிருந்து நாணத்தால் நனைத்து போனவர்களின் நானும் ஒருவன்! 

அதன் பின்னர்...உங்களைப் போலவே...ஊர் உலகமெல்லாம் திரிந்த படி...இருக்கிறேன்! சில வேளைகளில்..எழுதவேண்டும் என்ற உந்துதல் வரும் போதெல்லாம்...நேரமின்மை தடுத்துவிடும்! ஆனால் யாழில் எழுதத் தொடங்கிய பினனர்..எழுதும் ஆர்வம் தானாக ஏற்பட்டது! போற்றினாலும்...தூற்றினாலும்...ஒரு உள் வீடு என்ற உணர்வை யாழ் எப்போதுமே எனக்குத் தந்தது! மேலோட்டமாகப் பார்க்கும் போது...யாழின் வாசகர்கள்...இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் போலத் தோன்றினாலும்..அவர்களது தமிழின் மீதான ஆர்வம் மிகவும் ஆழமானது! அந்த ஆர்வமே..அவர்களையும்..எம்மையும்...ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றது!

எது வேணுமானாலும் எழுதுங்கள்! எனக்குத் தெரிந்த அளவில் ஏதாவது...இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கலாம் என நான் கருதினால்...உங்களுக்குத் தனிமடலில் தெரிவிப்பேன்!

மீண்டும் கூறுகின்றேன்! முதலிள் எழுதுங்கள்!

யாழ் எமது வீடு மாதிரி..! 

யாழின் பிறந்த தினத்தை...உங்கள் முதல் அனுபவப் பகிர்வுடன் ..கல கலப்பாகக் கொண்டாடுவோம்!

 

On 20/03/2017 at 4:42 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழைய புங்கையைக் காணவில்லை. தொடருங்கள் 

எழுத்துக்கள்..பொதுவாக...எழுதும் நேரத்தில்...என்ன மன நிலை இருக்குமோ...அதையே பிரதி பலிக்கும் என்று நினைக்கிறேன், சுமே!

அதே போல....வாசகியின் அல்லது வாசகனின் எதிர்ப்பார்ப்பைப் பொறுத்தே...அவர்களது கருத்துக்களும் மாறுபடும்!

 

காலம் எங்களைப் புடம் போடுகின்றது!

அதனால்...பழைய புங்கையைத் தேடினால்...ஏமாற்றம் தான் மிஞ்சும்!:rolleyes:

 

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி..சுமே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.