Jump to content

நானும் ஒரு அகதி தான்! (பகுதி ஒன்றும், பகுதி இரண்டும்!)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

5202616980_5c4567dd93.jpg

அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது!

விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்!

அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்!

ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள்  சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே வந்தவன், மூக்கிலிருந்து வெளியே சிந்தத் தயாராகவிருந்த நீர்த்திவலைகள் மூக்கின் நுனியிலேயே உறைந்து போவதை உணர்ந்தான் ! ஒருவாறு கடைக்குள் நுழைந்தவனின் காதில்...ஒரு தமிழ் அக்கா,,அங்கே வேலை செய்யும் புதிதாக வந்த தமிழ் இளைஞர்களை, அதிகாரத் தொனியில் அதட்டிக் கொண்டிருந்தது கேட்டது! அந்த இளைஞர்கள், மருத்துவ...பொறியியல்...மற்றும் கணனியியல் மாணவர்களாகவோ மட்டுமன்றிப் பட்டதாரிகளாகக் கூட இருக்கக் கூடும்! ஏதோ சில காரணங்களுக்காக...அக்காவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க…சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால்….ஒரு தமிழன் இன்னொரு தமிழனை மிதிப்பதில்..ஒரு தனி மகிழ்ச்சி அடைவான் என்பது எவ்வளவு உண்மை என நினைத்துக்கொண்டே ஓமப் பக்கைற்றைத் தேடிக் கொண்டிருந்தவனை, பின்னாலிருந்து 'தம்பி என்னைத் தெரியுதோ' என்ற குரல் திரும்பிப் பார்க்க வைத்தது!

அந்தக் குரலுக்குரியவரை உடனடியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை  எனினும் நீங்கள்..என்று அவன் இழுக்கவும்.. தம்பி.. என்ன ‘கறையான் பிட்டியையும்' மறந்து போட்டியோ எண்டதும்,,,,சோமண்ணையா நீங்கள்,,என்று கேட்டான்!

என்ன மாதிரி,,,இங்க... என்று கேட்க...தம்பி..அதைப்பற்றி ஒரு மகாபாரதமே எழுதலாம் என்று கூறியவர்..தம்பி..அந்தத் தங்கச்சி எங்கட பக்கமே பார்த்துக்  கொண்டிருக்குது போல கிடக்குது! பெரிய வில்லங்கமாய்ப் போயிரும்! உன்ர போன் நம்பரைத் தந்திட்டுப் போ...நான் வேலை முடிய உனக்கு அடிக்கிறன் என்று சொல்லியபடியே..அவனது போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டார்! குடிநீரைக் குடிச்சுப் போட்டு..நல்ல நித்திரையொண்டு அடிக்கவேணும் என்று நினைத்திருந்தவன் கனவெல்லாம்...கண் முன்னே தவிடு பொடியாவதை உணர்ந்தான்! இந்த ‘அடி' என்ற வார்த்தை எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது,,என்று நினைத்த படி...இண்டைக்கு சோமண்ணை வந்த பிறகு...ஒரு முறையான அடி..அடிக்கத் தடிமன் இருந்த இடம் தெரியாமல் போயிரும் என்று தனக்குத் தானே, சமாதானமும் செய்து கொண்டான்!

இரவு எட்டு மணி போல...வீட்டுக்கதவு தட்டப்படவே...யாரென்று கேட்காமலேயே சந்திரன் கதவைத் திறக்கவும்...பேபரில் சுத்திய நெப்போலியன் போத்திலுடன்...சோமண்ணை நின்றிருந்தார்!

தம்பி...வர வர உலகம் சின்னதாகிக் கொண்டே வருகின்றது என்று கூறியவர், நீ வந்து கனகாலமெல்லே ...வலு பெரிய வீட்டில இருப்பாய் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன்..என்று சொல்லி இழுத்தார்! தமிழனுக்கே எனச் சில தனிக்குணங்கள் உண்டு என்பதும்...அதை இலகுவில் மாற்றமுடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்ததால்...அதை விடுங்கண்ண,, உங்கட கதையைச சொல்லுங்கோ..என்று அவரிடம் சொன்னான்!

தம்பி அதையேன் கேக்கிறாய்….நான் உலகத்திலை கேள்விப்படாத தேசங்களுக்கிள்ளாலை எல்லாம் பூந்து விளையாடியிருக்கிறேன்! சின்ன வயதிலை ஒரு சாத்திரி என்ர சாதகத்தைப் பாத்துப்போட்டு...தம்பி உனக்குப்  பிற தேசம் போற பலனிருக்கெண்டு சொல்ல...அவருக்குப் பிடரியில ஒரு தட்டுத் தட்டிப் போட்டு...இனிமேல் ஒருத்தருக்கும் சாத்திரம் சொல்லக்கூடாது என்றும் சொல்லிப் போட்டு வந்தனான்!

இப்ப பார்...பிரான்சுக்கில்லாள பூந்து லண்டனுக்கிள்ளை நிக்கிறன்!

அண்ணை...உங்கட பக்கம் அவ்வளவு பிரச்சனை இருக்கேல்லைத்தானே என்று கேட்கவும்...இஞ்ச பார்...நான் சொல்லுறதைக் கவனமாய்க் கேள்!

கம்பசுக்கு முன்னால ஒரு பஸ்ஸில வந்த நம்ம பெடியனை..பஸ்ஸை விட்டு இறக்கி ஆமிக்காரன் சுட்டவனெல்லே! நீயும் அப்ப அங்க தானே இருந்தனி? அந்த நேரம் நானும்...யோகர் கடைக்கு முன்னால நிண்டு சிகரட் பத்திக்கொண்டு நிண்டனான்! வெடிச்சத்தம் கேட்டவுடனேயே..யோகற்றை பின்வளவுகுள்ள ஒளிச்சுப்போட்டன்!  கொஞ்ச நேரத்தால வெளியால வரவும் ஆமிக்காரர் பஸ்ஸுக்குள்ள இருந்ததைக் கவனிக்காமல் வெளியால வந்திட்டன்! அப்ப ஒருத்தர் என்னைப்பிடிச்சு..என்ன நடந்தது எண்டு விவரமாய் விசாரிக்க...நானும் மளமளவெண்டு...நான் கண்டதைச் சொல்ல வெளிக்கிட...இதைக்கண்ட ஒரு ஆமிக்காரன் துவக்கிக் கொண்டு வந்து என்ற நெஞ்சில வைச்சிட்டான்! என்னையறியாமலே கையைத் தூக்கிட்டன்! எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில ஏதொ சொல்ல..அவனும் ...யன்ன..யன்ன..எண்டு என்னைக் கலைச்சு விட்டிட்டான்! அண்டைக்குத் தான் முருகனில எனக்கு முதன் முதலா நம்பிக்கை வந்திட்டுது! அடுத்த நாள்,வழக்கம் போல யோகர் கடைக்கு வந்தால்...எல்லாரும் என்னைப் பார்த்த படி..! நானும் பின்னால திரும்பிப் பாத்தன்...ஒருத்தரையும் காணேல்ல! சரி...இண்டைக்கு என்ன இழவோ தெரியாது எண்டு நினைத்தபடியே..ஒரு சிகரட்டைப் பத்த வைச்ச படி நடந்தன்! கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ரபடம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..!   

அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது!

ஐயா பெரிய படிப்புப் படிச்சுப் பட்டம் வாங்கிக்கொண்டு வந்திட்டார்! அது தான் பேப்பரில படம் வந்திருக்குது!

வழக்கமாய்..அவள் பேசுற போது...வலக்காதால வாங்கி இடக்காதால விட்டிருவன்!

நான் கணக்கிலேயே எடுக்கிறதே இல்லை! ஆனால் அண்டைக்குப் பேசின பேச்சு...என்ர வேட்டியைக் கழட்டித் தலையில கட்டின மாதிரி இருந்திச்சுது!

அது சன்னதமாடினால்...சன்னதம் முடியிற நேரம் வரைக்கும் நானே வாயே திறக்கிறது கிடையாது!

சன்னதம் முடிஞ்சுது எண்டதை அறிவிக்கக் கடைசியாய் ஒரு வசனம் வரும்!

 

'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?'

அண்டையான் பேச்சு...என்னை நல்லாச் சுட்டுப்போட்டுது! 

 

(இன்னும் கொஞ்சமிருக்கு! )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் சோமண்ணைக்கு அர்ச்சனை கொஞ்சம் கம்மிதான்.... தொடருங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை லண்டனா சிட்னியா?
சோமண்ணையைப் பார்த்தா லண்டன் மாதிரி தெரியுது!

Link to comment
Share on other sites

7 hours ago, புங்கையூரன் said:

'அது தான் நான் உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்?'

Bilderesultat for vadivelu

தொடருங்கள் புங்கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

கடைக்குப் போனால்...அங்க வீரகேசரிப் பேப்பர்ல..என்ற படம்..ஆமிக்காரன் எனக்கு முன்னால் துவக்கைத் தூக்கிப் பிடிச்சபடி …..!   

அப்பிடியே பேப்பரை வாங்கிக் கொண்டு வீட்டை வந்து...மனுசியிட்டைக் காட்டினால்...மனுசி சன்னதமாடத் தொடங்கீட்டுது!

சோமண்ணை... தன்ரை,  மனிசியின்ரை  குணம் தெரிஞ்சும்....
அந்த வீரகேசரி பேப்பரை, ஏன் மனிசியிட் டை  காட்டினவர் ?
நல்லா வேணும்.... வேண்டிக் கட்டட்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கையூரன்
மேலுள்ள படம் அல்பேர்ட்டன் ஈலிங் ரோடு  இல் இருக்கும் சாக்கோணி உணவுக்கடை, மரக்கறி கடையும் உண்டு . குஜராத்தியின் கடை,  எங்கடை ஆக்கள் பலர் அதில் வேலை செய்திருக்கிறார்கள். வந்த காலத்தில் சம்பளம்  £1.50 ஒரு மணித்தியாலத்திற்கு என்று கேள்விப் பட்டுள்ளேன். புழிஞ்சு எடுத்து போட்டுத்தான் விடுவார்கள். நாரியை பிடித்திக் கொண்டு ஒரு நொண்டலுடன் நடந்தால் கேப்பார்கள், " தம்பி நீயும் பட்டேலிடம் வேலை செய்யிறியோ எண்டு". சாக்கோணி உணவுக் கடையும், மரக்கறி கடையும் தமிழர்களுக்கு சிலை கட்டிட வேண்டும், உழைச்சுக் கொடுத்ததுக்கு.

சோமண்ணை படப்போகும் அவலம் இப்பவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

இருந்தாலும் சோமண்ணைக்கு அர்ச்சனை கொஞ்சம் கம்மிதான்.... தொடருங்கள்....!  tw_blush:

ஆரம்பத்தில இருந்த பழக்கப் படுத்துக் கொண்டு வந்தால்....அர்ச்சனை பெரிசாகத் தெரியாது!

பழகினாலும்....சில வேளைகளில் மூன்றாம் திருவிழா அர்ச்சனைக்கும், தேர்த் திருவிழா அர்ச்சனைக்கும் வித்தியாசம் இருக்கும் தானே சுவியர்!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..!

17 hours ago, ஈழப்பிரியன் said:

புங்கை லண்டனா சிட்னியா?
சோமண்ணையைப் பார்த்தா லண்டன் மாதிரி தெரியுது!

மூக்குக்குள்ளை உறைஞ்சு போற அளவுக்கு...சிட்னியில ஒரு நாளும் குளிர் வராது!

ஊரில மாசி மாதத்துக் குளிர் மாதிரி...விடியக் காலமையில போர்த்துக் கொண்டு படுத்திருக்க...அந்த மாதிரி இருக்கும்~

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, ஈழப்பிரியன்!

நீங்கள் வந்த நேரம் அடிச்ச வெயிலுக்குப்...புங்குடுதீவே ...பிச்சை வாங்க வேண்டும்!tw_blush:

16 hours ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for vadivelu

தொடருங்கள் புங்கை 

நன்றி...ஜீவன்!

இதுக்குத்தான் நம் முன்னோர்கள்...பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று ஒழுங்கு பட்த்தியுல்லார்கள்!

கிருகஸ்தம்...ஒருவனை....நிச்சயம்....முனிவனாக்கும்!

நான் சொல்லுறதை நம்பாவிட்டால்...சுவையரை அல்லது குமாரசாமி அண்ணரை...ஒரு முறை கேட்டுப்பார்க்கவும்,!:cool:

பட்டால் தானே தெரிகின்றது...தொட்டால் சுடுவது நெருப்பென்று...! ( கவிஞர் கண்ணதாசன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய புங்கையைக் காணவில்லை. தொடருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே லண்டனில் நடக்கும் கதை மிச்சத்தை காணோம்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/03/2017 at 4:14 AM, தமிழ் சிறி said:

சோமண்ணை... தன்ரை,  மனிசியின்ரை  குணம் தெரிஞ்சும்....
அந்த வீரகேசரி பேப்பரை, ஏன் மனிசியிட் டை  காட்டினவர் ?
நல்லா வேணும்.... வேண்டிக் கட்டட்டும். :grin:

சோமண்ணை காட்டின காரணம் வேற...!

அதை விளங்கிக்கொள்ளுற அளவுக்கு....மனுசி மார் எல்லோருக்கும் வாய்க்கிறது இல்லை!

மனுசிமார் பேசுறதை எல்லாம் பெரிசு படுத்தக் கூடாது!

அவர்களுக்கு ஒரு நாளும் 'அதிக இரத்த அழுத்தம்' போன்ற நோய்கள் ஒரு நாளும் கிட்ட வராது!

நன்றி...தமிழ்சிறி  ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி)

 

 

“உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?”

என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத்  தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்!

சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது!

தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்!

சரியண்ணை...இப்ப என்ன பிளான்?

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ?

சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா?

அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை!

ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது!

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை!

கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது!

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது!

தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை!

இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்!

இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா  அல்லது நியூசீலாந்து தான்!

(சுபம்…)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை சோமண்ணை அவுஸ் வரும் போது மாட்டேன் என்று சொல்லாமல் உங்க வீட்டில ஒரு அறை கொடுக்க வேணும்.

நிஜங்களை மனதில் வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எப்படியும் வாழலாம் என்பதும் அச்சம் அற்றுப்போன தன்மையும் மனிதவாழ்க்கையை எங்கெங்கோ எல்லாம் இழுத்துச் செல்கிறது. அதர்மங்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை... தர்மத்தை மட்டுமே துன்பங்கள் சூழ்கின்றன. அநுபவப்பாடங்கள் அசராத துணிவை கொடுக்கின்றன. வல்லவன் வாழ்வான் என்பதே புதுமொழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித் துணிச்சலுடன் செய்தாலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மாட்டுப் பட்டு விடுவார்கள்....! இது கதையான போதிலும் அங்கங்கு நடப்பவையே.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களில் கொஞ்சம் கடினம் ...........
இப்போதும் பிடிக்க வேண்டும் என்றால் பிடிக்க முடியும் 
அவர்களுக்கு அதில் இஸ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

க்ரெடிட் கார்ட் கொம்பனிகள் ....
செலவு என்று ஒரு வருடத்திற்கு இத்தனை மில்லியன் என்று 
ஒவ்வரு வருட தொடக்கத்திலும் ஒரு பட்டியல் போடுவார்கள் 
அவர்கள் பட்ஜட்டுக்குள் சோமண்ணை ஆட்கள் நிற்பதால் .... அவர்களுக்கும் சோமண்ணை 
போன்றவர்களுக்கும்  பிரச்சனை இல்லை.

நீதி நேர்மையோடு இருக்கிற எங்களை போன்றவர்கள் ஒருநாள் பிந்தினாலும் 
ஒரு $35 வாங்கி அதை நிறுவி கொள்வார்கள். 
எங்களுக்கும் அவர்களுக்கும்தான் பிரச்சனை.
காரணம் 
லாபம் ஈட்டிக்கொடுக்கும் பட்ஜெட்டை நிரப்ப வேண்டிய ஒரு 
தார்மீக கடமை எமக்கு உண்டு . 

Link to comment
Share on other sites

19 hours ago, புங்கையூரன் said:

 

நானும் ஒரு அகதி தான்....( இறுதிப்பகுதி)

 

 

“உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டன்…?”

என்ற கேள்விக்குப் பின்னால்...ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பது சோமண்ணைக்கு நன்றாகத்  தெரியும்! எவருடைய கலியாணன வீடு அல்லது சாமத்திய வீடு அல்லது கோவில் திருவிழா போன்றவற்றுக்குப் போக வெளிக்கிடும் போது இந்த அர்ச்சனையும் மறக்காமல் நடக்கும்! அதாவது தன்னிடம் போதிய நகைகள் இல்லை என்பதைத் தான் சோமண்ணனின் மனைவி அடிக்கடி நக்கலாக...அவனது இயலாமையைச் சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறாள்!

சரி...சோமண்ணை... அண்ணியையும், பிள்ளையளையும் கூப்பிடேல்லையே என்று சந்திரன் கேட்கவும்….ஏன் நான் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கேல்லியே என்ற பதிலும் சுடச் சுட வந்தது!

தொடர்ந்த உரையாடலில்...தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்...தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

போதாக்குறைக்கு அங்க போடுற பாட்டுக்களே..எங்கட பக்திப் பாட்டுக்கள் தான்! சீர்காழி தொடக்கம் ...பெங்களூர் ரமணியம்மாள் வரைக்கும் பாடுவினம்! ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' எண்ட பாட்டுக்குக் காப்பிலியள் ஆடிற ஆட்டத்தை நீ பாக்க வேணுமே…..! நிச்சயமாய் ஆயிரம் கண் வேண்டும்!

சரியண்ணை...இப்ப என்ன பிளான்?

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

சரி..சந்திரன்...நான் சில வேளைகளில்..அந்த மரக்கறிக் கடையிலும் ‘காசுவலாய்' வேலை செய்யிறனான்!! உன்ர வீட்டில ஒரு அறையை எனக்குத் தாவன்{ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாடகையைத் தந்திடுவன்! எனக்கும் இஞ்ச வேற ஒருத்தரும் இல்லைக்கண்டியோ?

சரி...அண்ணை! இப்ப ஒரு அறை இருக்குது..ஆனால் கொஞ்சம் சின்னன், பரவாயில்லையா?

அட...எனக்கென்னத்துக்குப் பெரிய அறையை? என்று கேட்டவர்,உரத்த குரலில் முருகா என்றார்! தொடர்ந்து சாப்பாட்டையும் நானும் நீயும் சேர்ந்து சமைப்பம் எண்டு சொல்ல...சந்திரனால் மறுத்துச் சொல்ல முடியவில்லை!

ஒரு வருஷம் ஒரு பிரச்சனையுமில்லாமல் தான் போனது!

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்லச் சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

அதன் பின்னர்...சோமண்ணையும் அவனை அழைக்கவில்லை ! அவனும் சோமண்ணையை அழைப்பதற்கு அவனிடம் நம்பரும் இல்லை!

கடனட்டைக் கடிதங்கள் மட்டும் ...முன்பு ,மாதம்...மாதம் வந்தவை...இப்போது கிழமைக்குக் கிழமை என்று வரத் தொடங்கின! அவற்றுள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடிதம் கூடக் கிடந்தது கண்டு...சோமண்ணை மேல் அவனுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது!

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி...மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

நீண்ட நாட்களின் பின்னர் சோமண்ணையிடமிருந்து...ஒரு கடிதம் வந்திருந்தது!

தம்பி..எனக்கு அங்க திரும்ப வாற உத்தேசம் இப்ப இல்லை!

இப்ப இந்தோனேசியாவில நிக்கிறன்!

இப்ப என்ர இலக்கு...அவுஸ்திரேலியா  அல்லது நியூசீலாந்து தான்!

(சுபம்…)

நன்றாக இருக்கு அண்ணா ஆனால் கடைசிப் பகுதியை அவசரத்தில் எழுதி முடிச்ச ஒரு பிரமை.

இப்ப சொல்லுங்கோ சோமண்ணையை நாங்கள் எப்பிடியுங்கோ உள்ளுக்க விடுறது. பிறகு மனிசன் அவுஸ் பாங்கயெல்லாம் நாஸ்த்தி பண்ணிப்போடுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

 

தொடர்ந்த உரையாடலில்... தான் அகதி அந்தஸ்து எடுத்ததற்கு...அந்த வீரகேசரிப் படம்...தான் துரும்பு போல இருந்தது என்றும்... தான் பிரான்ஸில் பல பெரிய கொம்பனிகளில் வேலை செய்ததாகவும்...ஆனால் அந்த வேலைகளின் விபரங்களைக் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது என்றும் சோமண்ணை கூறினார்!

சரி அண்ணை...அப்ப லண்டனிலை எங்கை வேலை செய்யிறீங்கள்?

அதடாப்பா….வெம்பிளிப் பக்கத்துக்குள்ள ஒரு பேக்கறி ஒண்டு கிடக்கு!

அங்கை தான் வேலை செய்யிறது! என்னைப் போல கன பேர் அங்க வேலை செய்யினம்!

அப்போ… உங்களுக்கு பாஷைப் பிரச்சனையை ஒண்டும் இல்லையா அண்ணை?

நீ என்னடாப்பா…விஷயம் விளங்காத ஆளாய் இருக்கிறாய்?.போறணையில பாண் போட்டெடுகிறதுக்கு என்னதுக்கப்பு இங்கிலீசு?

------

இஞ்சை பார் சந்திரன்! எனக்கெண்டு ஒரு பிளானும் இப்ப இல்லை! அந்த முருகப் பெருமானின் அருளால தான் ...என்ர படம் வீரகேசரிப் பேப்பரில வந்தது எண்டு நிச்சயமாய் நான் நம்பிறன்! பிரான்சில வேலை செய்யிற காலத்தில...அங்கத்தை வங்கியளில   ‘ஒரிஜினல் பவுண்' வாங்கலாம்! இது வரையில ஒரு பன்னிரெண்டு வரையில சேர்த்து வச்சிருக்கிறன்!

அப்போது சந்திரன் சற்றும் எதிர் பாராத விதமாய் இஞ்சை பார்….என்ர நெஞ்சைப் பார் என்று தனது சேட்டைத் திறந்து காட்டினார்! அவரது கழுத்தில் ஒரு தடித்த தங்கச் சங்கிலி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது! அதில் நீல நிற /ஓம்' பென்டன் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது!

-------

சோமண்ணைக்கு வாற கடிதங்களில்….முக்காவாசிக்கு மேல ‘கடனட்டை' சம்பந்தமாகத் தான் இருப்பதைச் சந்திரன் கவனித்திருந்தான்!

இரண்டு வேலை செய்யிற மனுஷனுக்கு ...ஒரு பெரிய செலவும் இல்லை! குடுக்கிறாங்களாக்கும் என்று நினைத்து ...அதனை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

இருந்தால் போல சோமண்ணை….சந்திரன் உன்னிட்டை ஒருக்காக் கதைக்க வேணும் ...என்றார!

சரி சொல்லுங்கோவன் அண்ணை..என்று சந்திரன் கூறவும்...நான் ஒருக்கா இந்தியாவுக்குப் போயிற்று வரப்போறன்! அங்க மனுசியும் பிள்ளையளும் வருகினம்! என்ன தான் கோப தாபங்கள் இருந்தாலும்..ஒண்டுக்கை ஒன்டல்லவா? என்று வழிந்தார்!

அதோட...ஆறு படை வீடுகளுக்கும் ...வாறதெண்டு என்ர முருகனுக்கு ஒரு நேர்த்தியும் வைச்சிருக்கிறன்! ஆறு படை வீடுகளுக்கும்...போயிற்று வரவேணும்! போகா விட்டால் தெய்வக் குற்றமாக்கிப் போயிரும்!

சரியண்ணை...நல்ல விஷயம் தானே...போயிற்றுச் சந்தோசமாய்த் திரும்பி வாங்கோவன் என்று சந்திரன் சொல்ல….அவரது முகமெல்லாம் பல்லாகியது!

அவரைச் சந்திரனே...ஹீத்ருவுக்குக்  கொண்டு போய் இறக்கியும் விட்டான்!

தம்பி...இந்தா இதைப்பிடி..என்று முன்னூறு பவுண்களை அவனிடம் கொடுத்தார்! தம்பி...இதை வைச்சுக்கொள்ளு..என்று சொல்ல சந்திரனும், பரவாயில்லை அண்ணை...நீங்க சுகமாய்ப் போயிற்று வாங்கோ..வந்த பிறகு பாத்துக் கொள்ளுவம் என்று கூற...தம்பி..மனிச வாழ்க்கை நிலையில்லாதது..நாளைக்கு என்ன நடக்கும் என்று ஒருத்தருக்கும் தெரியாது

என்று வற்புறுத்திப் பணத்தை அவனிடம் கொடுத்தார்!

அவர் போய் ...இரண்டு நாட்களின் பின்னர் தான் திருச்சியில் நிற்பதாகவும், மனுசி பிள்ளையளைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியிருந்தார்! சந்திரனும்….ஆறு படை வீடுகளிலும் முருகனைத் தான் விசாரித்ததாகச் சொல்லவும் என்று சிரித்த படியே கூறிவிட்டுப் போனை வைத்து விட்டான்!

------

இன்னுமொரு மாதம் போக...கடனட்டைக் கொம்பனி ஆட்களே வந்து தட்டத் தொடங்கத் தான் ...அவனுக்கு ஓடி வெளிச்சது!

கதவைத் தட்டுற ஆக்களுக்கு விளக்கமளிச்சே சந்திரன் களைச்சுப் போனான்!

தற்செயலாக… ஒரு கடனட்டைக் கடிதத்தைத் திறந்து பார்க்க...சென்னை, திருச்சி... மதுரை...எல்லா இடமும் நிறைய.நகைகளும் புடவைகளும் வாங்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரிய வந்தது!

இப்போது அவனை அறியாமலே….சந்திரனும்…’முருகா' என்று உரத்த குரலில் கூறினான்!

Tiger Balm Red (with Cinnamon Oil) 19g   Logo of Virakesari  

சந்திரனுக்கு... தடிமன் வரப்போகுது  என்று அறிகுறி தெரிந்திருந்தால், பேசாமல்  "ரைகர்  பாமை"    மூக்கிலை  தடவிப் போட்டு, குப்புற படுக்கிறதை விட்டுட்டு.... உந்தக் குளிருக்கை,  "ஓமப் பக்கற்" வாங்கப் போனதால்... எவ்வளவு பிரச்சினை வந்ததது என்று சோமண்ணையை கண்ட  பிறகு   புரிந்திருப்பார்.  :grin:

சோமண்ணையை நோக்கி... ஆமிக்காரன் துவக்கை நீட்டிய படம்,  வீரகேசரி பேப்பரில் வந்ததை பார்த்து, அவர் அந்தப் பேப்பரை வாங்கி.. பத்திரப் படுத்திய போதே, அவரின்  "மாஸ்டர் பிளான்" வேலை செய்யத் தொடங்கிதை... அவரின் மனிசி கூட அறிந்திருக்க மாட்டார்.  :D:

அந்த ஒரு படம்,  சோமண்ணையை..... பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, இந்தோனேசியா வரை கொண்டு போய்..
இனி  அவுஸ்திரேலியா,  நியூசீலாந்துக்கும்  கொண்டு போகப் போகுது.
சோமண்ணையின்  அவுஸ்திரேலியா  "புரோகிராம்" முடிந்தவுடன்,  ஜேர்மனிக்கு  ஆளை அனுப்பி வையுங்கோ புங்கை. ஆளைப் பார்க்க..... ஆசையாயிருக்கு.tw_smiley:

-----

புங்கையூரான்.... சிலர்  செய்யும், செயலை வெளிக்கொணர்ந்த  எழுத்துநடை அழகு.
இடையிடையே... அதில் நகைச் சுவையை தூவிய விதம், கதைக்கு  இன்னும்  சிறப்பு.
கதையை அவசர பட்டு முடித்து விடட மாதிரி... ஒரு உணர்வு.
சோமண்ணையின்... இங்கிலாந்து ஜில்மால்களையும், தமிழ்நாட்டில் அவரின் உல்லாசத்தையும் கொஞ்சம்  விரிவாக தொட்டிருக்கலாம்  என்பது, எனது அபிப்பிராயம். 
மொத்தத்தில்..... கதை அருமை புங்கையூரான்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு, புங்கை! vil-cligne.gif

இதற்குத்தான் தமிழர்களை தமிழனே நம்புவதும் இல்லை..!!

எனக்குத் தெரிந்து சில நிறுவனங்களில் வேலை செய்தவர்கள், நிறுவனத்தில் சம்பளச் சான்றிதழ் வாங்கி வங்கிகளில் கடனட்டைகளைப் பெற்ற பின், சகட்டு மேனிக்கு லோன் போட்டு பணத்தை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு வீடோ, நிலமோ,தொழிலிலோ முதலீடு செய்துவிட்டு, மத்தியக் கிழக்கு நாடுகளிடமிருந்து காணாமல் ஓடி ஒளிந்தவர்கள் மிக அதிகம்.. இதனால் எங்கள் நிறுவனமும் வங்கிகளில் லோன் வாங்க தடை செய்யப்பட்ட பட்டியலில் இன்றும் உள்ளது..

சொந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம், இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து, தொடர்ந்து சென்று அவர்களை பிடித்து பணத்தை வசூலிக்கும் செலவு மிக அதிகமாக இருக்கும், இரு நாட்டு சட்ட சிக்கல்களும், தாமதங்களும் இவர்களுக்கு மிக அனுகூலமாக இருப்பதால், இப்படி லோன் கொடுக்கும் வங்கிகளை ஏமாற்றுகிறார்கள்..

சிலரின் கள்ளத்தனத்தால் மற்றோருக்கு அளெசகரியம் அதிகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவுப்பகுதி நல்லாய் இருக்குப் புங்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


உண்மையிலேயே பலரது அனுபவங்களை கதையாகப் (....!) பதிவுசெய்து செல்கிறது. பாராட்டுகள். 
லண்டனில், எனது நண்பரொருவர் வாடகைக்கெடுத்த வீட்டிலே முன்பிருந்தவர் செய்தஏமாற்றுச் செயல்கரணியமாக அவர் ஒரு கடனைப்பெறமுடியாத நிலையிருந்ததாகக் கூறியிருந்தார். எத்தனை பேரது தரிசனமோ சோமண்ணை.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2017 at 8:32 AM, Ahasthiyan said:

தொடருங்கள் புங்கையூரன்
மேலுள்ள படம் அல்பேர்ட்டன் ஈலிங் ரோடு  இல் இருக்கும் சாக்கோணி உணவுக்கடை, மரக்கறி கடையும் உண்டு . குஜராத்தியின் கடை,  எங்கடை ஆக்கள் பலர் அதில் வேலை செய்திருக்கிறார்கள். வந்த காலத்தில் சம்பளம்  £1.50 ஒரு மணித்தியாலத்திற்கு என்று கேள்விப் பட்டுள்ளேன். புழிஞ்சு எடுத்து போட்டுத்தான் விடுவார்கள். நாரியை பிடித்திக் கொண்டு ஒரு நொண்டலுடன் நடந்தால் கேப்பார்கள், " தம்பி நீயும் பட்டேலிடம் வேலை செய்யிறியோ எண்டு". சாக்கோணி உணவுக் கடையும், மரக்கறி கடையும் தமிழர்களுக்கு சிலை கட்டிட வேண்டும், உழைச்சுக் கொடுத்ததுக்கு.

சோமண்ணை படப்போகும் அவலம் இப்பவே தெரிகிறது.

வணக்கம், அகஸ்தியன்..!

நான் அங்கு வாழ்ந்த காலத்தில்..சக்கோனி என்று மட்டும் தான் பெயர் இருந்ததாக நினைவு! இப்போது படத்தைத் தேடினால்...சக்கோனிஸ் என்று வருகின்றது! அந்தக்காலத்தில் அவர்கள் கொடுத்த சம்பளம்..மணிக்கு...இரண்டு பவுண்கள்!  ** அக்கா தான் அந்த நேரம்...கடைக்குப் பொறுப்பாக இருந்தா எண்டு நினைக்கிறேன்! 

நான் ஒரு தரம் வெங்காய மூடை வாங்கிய போது...ஒரு தமிழ் முதியவரிடம்..இதைத் தூக்கிக்கொண்டு போய்..ஐயாவின்ர கார் டிக்கியியிலை வையும் என்று அவ கூறவும்...நானும் பரவாயில்லை ..நானே தூக்கிக் கொண்டு போகிறேன் என்று சொல்லிப் பார்த்தும், நீங்கள் தான் இவயைளைப் பழுதாக்கிறீங்கள் எண்டு என்னோடையும் ஏறி விழுந்தா அந்த அக்கா!

இப்பிடித்தான் நம்ம சனம் அந்த நாளையில வேலை செய்தது..!

இப்ப..எல்லாம் மாறியிருக்கும் எண்டு நினைக்கிறேன்!

வரவுக்கும்...கருத்துக்கும் மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமரின்ட படத்தை அனுப்பிவிடுங்கோ அவுஸ் இமிகிரேசன் காரங்களிடம் மாட்டிவிடுவம்...:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக நடக்கும் ஒர் விடையம் தான் புங்கை. சுவாரசியமாக எழுதிள்ளீர்கள். சோமன்ணை இங்கிலாந்து குளிராகவும் செலவு கூடுதலான நாடு என்றபடியால் அவுசுக்கு வந்திருக்கலாம். அவுஸ் இலங்கையை ஒத்த காலநிலை.

மேலும் புங்கை நீங்கள் ஒர் தமிழாசிரியரா? என்னுடையா வாழ்விலும் இப்படி பல அனுபவபவங்கள் உண்டு புங்கை அனால் 
அவற்றை கட்டுக்கோப்பாக, சுவரசியமாக , உவமான உவமேயங்களுடன் எழுத வருகின்றது இல்லை. நேரம் இருந்தால் ஒரு திரிதிறந்து எப்படி எழுதுவது என்று சில டிப்ஸ் தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை! கலக்கீட்டியள்.tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

வழமையாக நடக்கும் ஒர் விடையம் தான் புங்கை. சுவாரசியமாக எழுதிள்ளீர்கள். சோமன்ணை இங்கிலாந்து குளிராகவும் செலவு கூடுதலான நாடு என்றபடியால் அவுசுக்கு வந்திருக்கலாம். அவுஸ் இலங்கையை ஒத்த காலநிலை.

மேலும் புங்கை நீங்கள் ஒர் தமிழாசிரியரா? என்னுடையா வாழ்விலும் இப்படி பல அனுபவபவங்கள் உண்டு புங்கை அனால் 
அவற்றை கட்டுக்கோப்பாக, சுவரசியமாக , உவமான உவமேயங்களுடன் எழுத வருகின்றது இல்லை. நேரம் இருந்தால் ஒரு திரிதிறந்து எப்படி எழுதுவது என்று சில டிப்ஸ் தருவீர்களா?

வணக்கம்...கொழும்பான்!

உங்கள் கேள்வி...உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்திய படியால்..அதிகம் ஆறிப் போக விடாமல், உடனே பதிலளிக்க வேண்டிய அவசரம் உள்ளது!

உங்கள் பதிவுகளிலிருந்து..உங்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு எடை போட்டு வைத்திருந்தேன்! எனது வாழ்க்கையும் கிட்டத் தட்ட உங்களதைப் போன்றது தான்!

தமிழ் படிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை! சாதாரண தரத்துடன்..தமிழுக்கு விடை கொடுக்க வேண்டி ஏற்பட்டது! நாங்கள் படித்த கல்லூரியில்...விஞ்ஞானப் பிரிவுக்குப் போகாமல்...கலைப்பிரிவுக்குச் செல்வது ஒரு 'சாதிக் குறைவு' மாதிரிப் பார்க்கப்பட்டது! அதே போலவே..கணிதப் பிரிவுக்குப் போகாமல்..உயிரியல் பிரிவுக்குச் செல்வதும் அவ்வாறே பார்க்கப்பட்டது! நீரோட்டத்துக்கு எதிராகப் பயணிக்கும் வலுவோ..அல்லது சுயமாக முடிவெடுக்கும் துணிவோ எம்மிடம் அப்போது இருக்கவில்லை! எனினும்...பிற்காலத்தில்..இதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டதும் உண்டு! பின்னர்..பல்கலைப் படிப்பிலிருந்து .எல்லாமே ஆங்கில  மொழியில் தான்! ஒன்று இழக்கப்படும் போது தான்...அதை அடைய வேண்டும் என்ற ஆவல் அதிகரிப்பதுண்டு!

எனவே...சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம்..திருக்குறள்..கல்கி..ஆனந்த விகடன்..கல்கண்டு..போன்றவற்றையும் மற்றும் எஸ்.பொ. செங்கை ஆழியான், ஆகியோரது நூல்களையும்..மற்றும் 'நிலக்கிழி' ( எழுதியவர் நினைவில் இல்லை), டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை, சிரித்திரன் போன்றவை..தமிழை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! தற்செயலாக ஒரு கவியரங்கில். பங்கு பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டபோது தயங்கிய படியே முதலின் பங்கேற்றேன்! பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் தலைமை தாங்கியதாக நினைவுண்டு!  கவியரங்கு முடிந்ததும்..பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் மேடையிலேயே புகழ்ந்து தள்ளிய போது..ஒரு மூலையிலிருந்து நாணத்தால் நனைத்து போனவர்களின் நானும் ஒருவன்! 

அதன் பின்னர்...உங்களைப் போலவே...ஊர் உலகமெல்லாம் திரிந்த படி...இருக்கிறேன்! சில வேளைகளில்..எழுதவேண்டும் என்ற உந்துதல் வரும் போதெல்லாம்...நேரமின்மை தடுத்துவிடும்! ஆனால் யாழில் எழுதத் தொடங்கிய பினனர்..எழுதும் ஆர்வம் தானாக ஏற்பட்டது! போற்றினாலும்...தூற்றினாலும்...ஒரு உள் வீடு என்ற உணர்வை யாழ் எப்போதுமே எனக்குத் தந்தது! மேலோட்டமாகப் பார்க்கும் போது...யாழின் வாசகர்கள்...இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் போலத் தோன்றினாலும்..அவர்களது தமிழின் மீதான ஆர்வம் மிகவும் ஆழமானது! அந்த ஆர்வமே..அவர்களையும்..எம்மையும்...ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றது!

எது வேணுமானாலும் எழுதுங்கள்! எனக்குத் தெரிந்த அளவில் ஏதாவது...இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கலாம் என நான் கருதினால்...உங்களுக்குத் தனிமடலில் தெரிவிப்பேன்!

மீண்டும் கூறுகின்றேன்! முதலிள் எழுதுங்கள்!

யாழ் எமது வீடு மாதிரி..! 

யாழின் பிறந்த தினத்தை...உங்கள் முதல் அனுபவப் பகிர்வுடன் ..கல கலப்பாகக் கொண்டாடுவோம்!

 

On 20/03/2017 at 4:42 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பழைய புங்கையைக் காணவில்லை. தொடருங்கள் 

எழுத்துக்கள்..பொதுவாக...எழுதும் நேரத்தில்...என்ன மன நிலை இருக்குமோ...அதையே பிரதி பலிக்கும் என்று நினைக்கிறேன், சுமே!

அதே போல....வாசகியின் அல்லது வாசகனின் எதிர்ப்பார்ப்பைப் பொறுத்தே...அவர்களது கருத்துக்களும் மாறுபடும்!

 

காலம் எங்களைப் புடம் போடுகின்றது!

அதனால்...பழைய புங்கையைத் தேடினால்...ஏமாற்றம் தான் மிஞ்சும்!:rolleyes:

 

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி..சுமே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
    • லண்டனில் கோழி இறைச்சிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்திய இலங்கை தமிழர் - பிரான்ஸுக்கு நாடு கடத்தப்படுகிறார் Published By: RAJEEBAN   26 MAY, 2024 | 02:21 PM   பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்த இலங்கையரை பிரிட்டன் பிரான்ஸுக்கு நாடு கடத்தவுள்ளதாக சன் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. சதாசிவம் சிவகங்கன் என்ற நபரையே பிரான்ஸுக்கு நாடு கடத்த பிரிட்டன் தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வருடம் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என தீர்ப்பு வழங்கியதுடன் ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித்திருந்தது. இலங்கையிலிருந்து 2003இல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அகதியான இவருக்கு அங்கு வாழ்வதற்கான சகல அனுமதிகளையும் பிரிட்டன் வழங்கியிருந்தது. சிவகங்கனின் மனைவியும் பிள்ளைகளும் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவர்.  லண்டனின் தென்மேற்கு பகுதியில் வசித்துவந்த இவர் பிரிக்ஸ்டனில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையொன்றில் தொழில் புரிந்துவந்தார். இதே வேளை கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையை சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்திய கும்பலின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார். ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக 14 பேருக்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. பிரிட்டிஸ் அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளின் சார்பில் இவரை 2022இல் முதலில் கைதுசெய்திருந்தனர். பிரான்ஸ் விடுத்த பிடியாணையை அடிப்படையாக வைத்து இவரை நாடு கடத்துமாறு 2022 நவம்பரில் நீதிபதியொருவர் உத்தரவிட்டார். எனினும் தனது மனைவி உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் தனது துணை அவருக்கு என தெரிவித்து சிவகங்கன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். எனினும், வெள்ளிக்கிழமை நீதிபதி அவரது மனுவை நிராகரித்துள்ளார். உலகின் பல நாடுகளில் செயற்படும் ஐரோப்பிய பரந்துபட்ட குற்றவாளி கும்பலின் முக்கிய நபராக இவர் விளங்கினார் என நீதிமன்ற ஆவணம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184514
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.