Jump to content

அந்தக் காலத்து ‘ஹிட்டர்’!


Recommended Posts

அந்தக் காலத்து ‘ஹிட்டர்’!

 

 
 
 
cricket_3144549f.jpg
 
 
 

கிரிக்கெட்டைப் பற்றி மிக நன்றாக எழுதுபவர் என்ற பாராட்டைப் பெற பலரிடையே போட்டி உண்டு. யார் சிறந்த கிரிக்கெட் எழுத்தாளர் என்பதில் இப்போது சர்ச்சை கிடையாது. ஆஸ்திரேலியரான கிடியான் ஹைக்தான் அது. அவரே ஒரு வித்தியாசமான கிரிக்கெட் வீரர். (டான் பிராட்மன் ‘இன்வின்சிபிள்ஸ்’ என்ற பெயருள்ள அணியில் 1948-ல் விளையாடினார். கிடியானின் அணிப் பெயர் ‘தி வின்சிபிள்ஸ்’. பிராட்மன் அணியின் பெயருக்கு ‘வெல்ல முடியாதவர்கள்’ என்று பொருள். கிடியானின் அணியோ ‘வெல்ல முடியும்’ என்று எதிராளிக்கு நம்பிக்கை ஊட்டும் அணி!) கிரிக்கெட் விளையாட்டின் நுட்பம் குறித்து அவருக்கு ஆழ்ந்த ஞானம்.

அதைவிடவும் அதன் வரலாறு, வம்பு குறித்து மேலும் ஞானம். கிடியானுக்கு கிரிக்கெட் உலகம் நல்ல பரிச்சயம்; வெளி உலகும் அதைவிட பரிச்சயம். மெல்போர்ன் நகரின் குற்றங்கள் குறித்தும் ஒரு சமூக அமைப்பின் அலுவலகம் குறித்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இந்த அனுபவத்தை எல்லாம் கிரிக்கெட் பற்றி எழுதவும் அவர் பயன்படுத்துகிறார்.

1950-களிலும் 1960-களிலும் நிலவிய ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் சமூக வரலாற்றைத் தனது புத்தகங்களில் எழுதியிருக்கிறார். சுழல்பந்து வீச்சாளர் ஜேக் ஐவர்சன் பற்றிய வரலாறு, ‘தி சம்மர் கேம்’ ஆகிய இரண்டும் கனமான ஆக்கங்கள். அதே சமயம் குறைந்த பக்கங்கள், ஆழ்ந்த தகவல்களை உள்ளடக்கியவை. ஷேன் வார்னே பற்றிய சிறு புத்தகம் வார்னேயின் வீசும் திறனையும் ஆளுமையையும் நன்கு வெளிக்கொணர்ந்திருந்தது.

அற்புதமான மட்டையாளர்

கிடியானின் சமீபத்திய புத்தகம் ‘ஸ்ட்ரோக் ஆஃப் ஜீனியஸ்’. 1905-ல் ‘தி ஓவல்’ திடலில் வீச்சாளர் வீசிய பந்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விக்டர் ட்ரம்பர் கிரீஸிலிருந்து எகிறிக் குதித்து வெளியே வந்து அடிக்கும் அரிய புகைப்படம் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற புகைப்படம் அது. பல லட்சம் முறை அந்தப் புகைப்படத்தைப் பலர் பார்த்து ரசித்துள்ளனர். அந்தப் புத்தகத்தின் நாயகனான ட்ரம்பர், சாகா வரம் பெற்றுவிட்டார். அவரைப் புகைப்படமாக எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பெல்தாமும்தான். பெல்தாம் மிகுந்த செல்வந்தராக வாழ்ந்தார். பெல்தாமின் சகாவான சி.பி. ஃப்ரை என்பவரும் கிரிக்கெட் ஞானம் உள்ளவர்.

பிற்காலத்தில் வரும் டி.ஆர்.எஸ். முறை குறித்து ஃப்ரை அப்போதே கூறிவிட்டார். “பேட்ஸ்மனைத் தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் கருவி எதிர்காலத்தில் வரும்பட்சத்தில், நடுவரைவிட அதை நாடும் நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறியிருக்கிறார். கிரிக்கெட் பற்றி எழுதி பிரபலமடைந்த நெவில் கார்டஸ் என்பவரும் இவர்களுடைய சமகாலத்தவர்.

வாக்னர் என்பவரின் இசைத் திறமைக்கும் டர்னரின் கலைத் திறமைக்கும் ட்ரம்பரை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் கார்டஸ். “ட்ரம்பரின் பேட்டிங் திறமையை மறப்பேன் என்றால், கண்ணுக்கு விருந்தாக இருக்கும் சூரிய அஸ்தமனம், மேகம் சூழ்ந்த மலை முகடு, சிம்பொனி இசையின் இனிமை, ரோஜாவின் முழு மலர்ச்சி ஆகிய அனைத்தையுமே மறந்துவிடுவேன்” என்று கவித்துவமாகக் குறிப்பிட்டிருக்கிறார் கார்டஸ். கிரிக்கெட்டின் பொற்காலத்தவர் ட்ரம்பர் என்பது நெவில் கார்டஸின் கருத்து.

1890-லிருந்து முதல் உலகப் போர் மூண்ட காலம் வரையில், கிரிக்கெட்டின் பொற்காலம் என்று அவர் வர்ணிக்கிறார். டபிள்யு. ஜி. கிரேஸ் விளையாடிய காலத்தில் பொற்காலம் தொடங்குகிறது. பிறகு விக்டர் ட்ரம்பர், கே.எஸ். ரஞ்சித் சிங், பந்து வீச்சாளர்கள் வில்பிரெட் ரோட்ஸ், ஹக் ட்ரம்பிள், எஸ்.எஃப். பார்னஸ் வழியாகத் தொடர்கிறது. அப்போது ஆடியவர்கள் முழு நேர ஆட்டக்காரர்கள் அல்லர். ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அது தேசிய உணர்வின் மோதல்களாகவே இருந்தன. ஜேக் ஹாப்ஸ் இக்காலத்தில் இடம்பெறுகிறார்.

உத்வேகம் தந்த படம்

முதல் உலகப் போர் தொடங்கிய சில ஆண்டுகளுக்கெல்லாம் தன்னுடைய 37-வது வயதில் ட்ரம்பர் இறந்துவிடுகிறார். சிறந்த ஆட்டத் திறனும் நல்ல பண்புகளும் கொண்ட அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பெல்தாம் எடுத்த புகைப்படம் ட்ரம்பரை அடுத்த தலைமுறைகளுக்கும் அறிமுகப்படுத்தியது. 1905-ல் எடுத்த இந்த புகைப்படம், 1927-ல் சிட்னி மெயிலில் மறு பிரசுரம் ஆகும் வரை பலருக்குத் தெரியாது. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆடும் அத்தனை இடங் களிலும் ட்ரம்பரைப் பற்றிப் பேசாதவர்களே கிடையாது. டென்னிஸ் லில்லி, ஸ்டீவ் வாவ், பிராட்மன் உள்ளிட்ட மாபெரும் கிரிக்கெட் நட்சத்திரங்களின் வீடுகளைக்கூட அந்தப் புகைப்படம் அலங்கரித்தது. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து உத்வேகம் பெற்றவர்கள்தான்.

ட்ரம்பரின் ரசிகர்களில் கே.எஸ். ரஞ்சித் சிங்கும் ஒருவர். நியூசவுத் வேல்ஸ் அணிக்காக ட்ரம்பர் பேட் செய்தபோதே அவர் சிறந்த வீரராக வருவார் என்று கணித்தவர் ரஞ்சித் சிங். “வெகு விரைவிலேயே இந்த நாட்டின் மிகப் பெரிய கிரிக்கெட் வீரராக இவர் பெயரெடுப்பார்” என்று ரஞ்சித் சிங் பாராட்டினார். ட்ரம்பர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையும் குறிப்பிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஏ.இ.நைட், அவரைப் புகழ்ந்து எழுதியிருந்தார். “பந்துகளை எப்படிப் போட்டாலும் அதை எதிர்கொள்ளும் பாணி மட்டுமல்ல, அதை அடிக்கும் நேர்த்தியும் ரசிகர்களால் ஆர்வமாகப் பார்க்கப்பட்டது; வீசப்படும் பந்து அவருடைய மட்டையைத் தொட்டு, பிறகு எல்லைக் கோட்டை நோக்கி விரைவது வரை எழுந்து நின்று மெளனமாகப் பார்க்கும் ரசிகர் கூட்டம், அது எல்லையைக் கடந்த பிறகு செய்யும் ஆர்ப்பரிப்பு இருக்கிறதே, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது” என்று புகழ்ந்திருப்பார் நைட்.

இந்தப் புத்தகத்தில் ரஞ்சித் சிங்கைப் போலவே வசந்த் ராய் என்பவரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, விளையாட்டு நிகழ்வுகளையும் விளையாட்டு வீரர்கள் பற்றிய தகவல்களையும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார் வசந்த் ராய். நான் படித்த கிரிக்கெட் பற்றிய முதல் சில புத்தகங்களில் ரஞ்சித் சிங்கைப் பாராட்டி வசந்த் ராய் எழுதிய புத்தகமும் அடங்கும். விக்டர் ட்ரம்பரைப் பாராட்டும் தொகுப்பு நூலையும் வசந்த் ராய் எழுதியிருக்கிறார். தான் போயே இராத ஒரு நாட்டின், பார்த்தே இராத ஒரு கிரிக்கெட் வீரரைப் பற்றி வசந்த் ராய் பெருந்தன்மையோடு புத்தகம் எழுதியிருக்கிறார்!

விக்டர் ட்ரம்பரின் பேட்டிங் திறமையைப் போலவே அவருடைய எளிமையும் அழகான நற்குணங்களும் அவருக்கு நிறைய நண்பர்களையும் ரசிகர்களையும் பெற்றுத்தந்திருக்கின்றன. “சூரியனின் ஸ்பரிசம், புல்லின் பசுமை, திறந்தவெளியின் ஓசை ஆகியவற்றில் பெருமகிழ்ச்சி அடைபவர் ட்ரம்பர். பேட் செய்வதை வெகு எளிதாகவே மேற்கொள்வார். ஆனால், ஒவ்வொரு இன்னிங்ஸையும் சாகசம்போல நிகழ்த்திவிடுவார்” என்று அவருடைய சமகாலத்தவரான ஒரு கிரிக்கெட் வீரர் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இன்னொரு பிராட்மேன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பார்வையில் பல வழிகளிலும் ட்ரம்பர், டான் பிராட்மனின் இன்னொரு பிரதிதான். “ட்ரம்பர் கவிதை என்றால், பிராட்மன் காப்பியம். ட்ரம்பர் ஏதென்ஸைச் சேர்ந்தவர் என்றால், பிராட்மன் ஸ்பார்ட்டாவைச் சேர்ந்தவர். ட்ரம்பர் எட்வர்டின் காலத்தவர், பிராட்மன் ஃபோர்ட் காலத்தவர்” என்று ஹைக் ஒப்பிடுகிறார். இங்கிலாந்தில் 1930-ல் பயணம் மேற்கொண்ட பிராட்மனின் கிரிக்கெட் சாதனைகளை ஆர்தர் மைய்லி பதிவுசெய்திருக்கிறார்.

வார்த்தைகளால் சுருக்கி எழுத முடியாதவர் ட்ரம்பர் என்று சி.பி. ஃபிரை ஒரு முறை எழுதியிருக்கிறார். ஆனால், ஹைக் அவரை நன்றாகவே எழுத்தில் வடித்திருக்கிறார். இந்தப் புத்தகம் கிரிக்கெட் வரலாறு மற்றும் கிரிக்கெட் புகைப்படம் என்ற இரண்டுக்கும் அற்புதமான பங்களிப்பைச் செய்திருக்கிறது.

கிரிக்கெட்டைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம் என்றால் அது சி.எல்.ஆர். ஜேம்ஸ் எழுதிய ‘பியாண்ட் எ பவுண்டரி’ என்ற புத்தகம்தான். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள். கிடியான் ஹைக் எழுதிய ‘ஸ்ட்ரோக் ஆஃப் ஜீனியஸ்’ இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. ஹைக்கின் புத்தகம் புதியனவற்றை புதிய முறையில் கண்டு சொல்கிறது. ஒரு ஆட்டக்காரரின் ஆட்டத் திறமையையும் அவருடைய குணாதிசயத்தையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆட்டத்தையும் அதன் நுணுக்கங்களையும் விவரிக்கிறது. கொந்தளிப்பான நிலையிலிருந்து மாறிக்கொண்டிருக்கும் ஒரு தேசத்துக்கும் கண்டத்துக்கும் அத்தகவல்களைத் தெரிவிக்கிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

கிடியானின் சமீபத்திய புத்தகம் ‘ஸ்ட்ரோக் ஆஃப் ஜீனியஸ்’. 1905-ல் ‘தி ஓவல்’ திடலில், வீச்சாளர் வீசிய பந்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விக்டர் ட்ரம்பர் கிரீஸிலிருந்து எகிறிக் குதித்து வெளியே வந்து அடிக்கும் அரிய புகைப்படம் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற புகைப்படம் அது. பல லட்சம் முறை அந்தப் புகைப்படத்தைப் பலர் பார்த்து ரசித்துள்ளனர். அந்தப் புத்தகத்தின் நாயகனான ட்ரம்பர், சாகா வரம் பெற்றுவிட்டார். அவரைப் புகைப்படமாக எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பெல்தாமும்தான்!

http://tamil.thehindu.com/opinion/columns/அந்தக்-காலத்து-ஹிட்டர்/article9588696.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.