Jump to content

அடுத்தவர்களுக்கு உதவுவுது சிறப்பு... ஆனாலும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார்.

சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது. அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.

விசித்திர உலகம் :

உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும். தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்ஞானம், ஆன்மீகம் என இரண்டுமே கலந்த உண்மை

புன்னகை :

நம்மை சுற்றியிருப்பவர்கள் யார் என நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிறு புன்னகையோ, துக்கமோ சுற்றியிருப்பவர்களை ஈர்த்துவிடும். ஆகவே சுற்றி எந்த மாதிரி மனிதர்களை நீங்கள் வைத்திருக்க வெண்டும் என்று முதலில் தீர்மானியுங்கள். சாணக்கியரின் கூற்றுப்படி நீங்கள் கீழ்கண்ட மனிதர்களுக்கு உதவியே செய்யக் கூடாது. பாவம் புண்ணியம் பார்த்து செய்தால் அவை உங்கள் வாழ்க்கையில் பரிதாபத்தையே தரும் என்று சொல்கிறார். அவர்கள் யார் என பார்க்கலாமா?

#1- பிரச்சனைகொண்ட மனிதன் : சிலர் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். தீர ஆராய்ந்தால் அவர்களின் குணமே காரணமாகும். மோசமான குணம் கொண்டவர்கள் இப்படி பிரச்சனைகளை சிக்கிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவ முன்வந்தால் நீங்களும் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புண்டு.

#2- உண்மையில்லாத மனிதன் : சிலரிடம் உண்மையே இருக்காது. எப்போதும் போலித்தனமான வேஷம் கட்டிக் கொண்டு நல்லவர்களாக பேசுவார்கள். பொய் எப்போதும் பேசுவார்கள். அவர்களுக்கு உதவினால் உங்களை பிரச்சனையில் மாட்டிவிடுவார்கள் என்பது 100 சதவீதம் உண்மை.

#3- கவலை தோய்ந்தவர்கள் : எப்போதும் ஏதாவது பறிகொடுத்தவர் போல் தனிமையகவும், கவலையாகவுமே சிலர் இருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். இவர்களை சமாதனப்படுத்தினாலோ அல்லது உதவினாலோ அவர்களின் எதிர்மறை உங்களையும் தாக்கும் அபாயம் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆண்கள் மீதோ அல்லது பெண்கள் மீதோ விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்கு முழுக்க அவர்களின் சுய நலமே காரணமாகும்.

#4- முட்டாள்கள் : முட்டாள்களுக்கு உதவ நீங்கள் வரிந்து கொண்டு நீங்கள் போனால் நீங்களும் முட்டாளாகிப் போவார்கள். அவர்களுக்கு புரிந்து கொள்ளவும் இயலாது. அவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுவார்கள். ஆகவே முட்டாள்களுக்கு உதவுவது ஆபத்தே.

Read more at: http://tamil.boldsky.com/insync/life/2017/chanankys-niti-never-help-ro-do-good-these-4-people/slider-pf85417-014655.html

Link to comment
Share on other sites

உந்த நான்குவகையிலும் ஏதோ ஒன்றில் அடங்காத ஒருவர் ஏன் உதவிகேக்கபோகின்றார்?

சந்திர குப்தனின் மகனுக்கு களண்டுபோட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Knowthyself said:

உந்த நான்குவகையிலும் ஏதோ ஒன்றில் அடங்காத ஒருவர் ஏன் உதவிகேக்கபோகின்றார்?

சந்திர குப்தனின் மகனுக்கு களண்டுபோட்டுது

 
 

யுனி செமன்ஸ்ரர் லீவு. ரெயின் ஸ்ரைக், உள்நோக்கத்துடன் பெடியளைக் வெட்டிவிட்டு.... யுனில இருந்து வீடு திரும்ப நம்ம கார் ரெடி... 

ஹி...ஹு...நாலு.... பிகருங்களுக்கு லிப்ட் கொடுத்து நம்ம காரில ஸ்ரைலா ஊருக்கு கிளம்ப... ரயர் பிளாட் ஆகுது.

அந்த நேரம் பார்த்து ஜிம்மில இருந்து வெளிய வாறீங்க...

அட... விடுங்க... இதுக்குப் போயெல்லாம்... ஜக்கா... நான் தூக்கிறன்... நீங்கள் ஆறுதலா மாத்துங்க... என்று சொல்லி உதவிக்கு வருவீங்க பாருங்க.... அது!!! :grin:

இதில பாருங்க...

நீங்க flat tire உடன் நிக்கிறீர்கள்.

நான் ஜிம்மில் இருந்து வெளியே வருகிறேன்.

நிலைமை பார்த்து விட்டு அப்படியே ஓரமா நிக்கும் பிகரின் ஒன்றின் காதில் சொல்கிறேன். 'அய்யய்யோ, இந்தாள் காரிலேயே... போன கிழமை தண்ணிய போட்டு ஓடி போலீசில் மாட்டி கோர்ட்டில் கேஸ்.

இவரை நம்பியா... 

இதுல நான் சாணக்கியர்... பிகருக்களுக்கு... ரூல் நம்பர் 4.

(உதவுவதும்.... உதவி பெறுவதும் ஒண்ணுதான்... ஹி ஹீ.) :grin::grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.