Jump to content

சோபாசக்த்தியின் 'மாயோள்'


Recommended Posts

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354

இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்தியில் அது பற்றிப் பேசுகிறேன்.


மனதைப் புரட்டிப்போடும் ஒரு படைப்பை நுகர்ந்தபின், அது பற்றி யாரிடமாவது பேசாது இருப்பது முடியாதகாரியம். இன்று காலை வேலைக்குப் போகும் போது புகையிரதத்தில் இக்கதையினைப் படித்தேன். வேலைக்கு லீவு போட்டுவிட்டுப் பதிவெழுதுவோமா என்று தோன்றியது. இன்றைய நாள் முழுவதும் கதையின் அதிர்வை ஒளித்துவைக்க முடியவில்லை. இப்போது வீடு மீழும் புகையிரத்தில் இருந்து இதனை எழுதுகிறேன். இங்கு இருவிடயம் பேசுவது எனக்கு அவசியமாகிறது. ஓன்று கதை. மற்றையது கதைசொல்லி. முதலில் கதைசொல்லி பற்றிப் பேசிவிடுகிறேன்.


அனைத்துப்படைப்பாளிகளும் தமது அனுபவத்தில் இருந்தே படைப்புக்களை உருவாக்குகின்றனர். ஆனால், இயன்றவரை தமது அனுபவத்தின் மூலத்தை மறைப்பதை அனைவரும் அவசியமாகக் கருதுகின்றனர். இதற்கு சட்டரீதியான பிரச்சினைகள், தாம் தம்மைப் பற்றிக் கட்டிவைத்திருக்கும் விம்பத்தினைக் காத்துக்கொள்ளல் முதலான ஒரு முனைக்காரணங்களும், அனுபவங்கள் சார்;ந்த படைப்பாளியின் வாசிப்பு சார்;ந்து உள்ளார்ந்து படைப்பாளிக்குள் எழும் அதிர்வுகளால் பார்த்த படம் மாறிப்போவது போன்ற பிறிதொரு முனைக்காரணங்களுமாகப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுய அனுபவத்தை மறைப்பதை அனைவரும் தலையாய கடனாகச் செய்துவருகின்றனர். இந்தக் கதையில் மாறாக, சோபாசக்தி இதனை ஒரு வாக்குமூலமாக முன்வைக்கிறார். விடுதலை வேண்டி உளவியல் மருத்துவரின் கதிரையில் அமர்ந்திருக்கும் மனிதனைப்போல் கொட்டிவிடுகிறார். தன்னைப் புரிந்துகொள்ளும் படியும் மன்னிக்கும் படியுமாக இலக்கின்றி இறைஞ்சுகிறார். ஆனால் இங்கு ஒரு பிரச்சினை எழுகிறது. கதை கதையாகவின்றி வாக்குமூலமாக வருகையில், வாசகர்கள் நீதிபதிகளாகிறார்கள்.

சோபாசக்தி இங்கு கோருவது கல்லெறிகளையும், தண்டனைகளையம், வசைகளையும் அதனூடான ஒரு ஆன்ம ஈடேற்றத்தையுமே. ஆனால் வாசகரால் அவரிற்கு அதனைக் கொடுக்க முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஓன்று சோபா தன்னைச் சார்ந்து புனிதர் விம்பத்தை வளர்க்காதமையினால், அவர் சார்ந்து வாசகர் எதையும் சாத்தியம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஏந்தப் பாவத்தையும் அவர்களால் சோபாவில் பாவம் என்று பார்;க்க முடியாதபடி சோபாசக்த்தி என்பவர் பெறுமதிகளைக் கடந்தவராக, எந்தப் பாதாளத்திற்கும் தீமைகளோடு சேர்ந்து பயணிக்கக் கூடியவராக, காமப்பேரரசாக, தூசண வார்த்தைகளைச் சுவாசிப்பராக, விலைமாதரோடே புளங்குபவராக இன்னும் எத்தனையோவாக, மொத்தத்தில் புனிதங்களின் எதிர்ப்பதமாக வாசகரின் மனங்களில் வேரூன்றி இருக்கிறார். இதை இப்படி உருவாக்கியதே சோபா தான். 

இயக்கத்தை விட்டுவெளியேறி தெற்கில் தண்டவாளத்தில் நடந்த பதின்மப் பையன் முதற்கொண்டு, எந்தப் படைப்பாகட்டும் சோபாவின் ஆண் குறியும் அதிலிருந்து வெளியேறும் சுரப்புக்களும் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமானவை. இரண்டு வகை வாசகர்கள் சோபாவிற்கு இருக்கிறார்கள்., ஒன்று ஆயத்தப்படாத ஆரம்பநிலையில் தெரியாத்தனமாகச் சோபாசத்தியின் கதையினை வாசிக்க ஆரம்பித்துப் பதின்வயதுப் பையன் பார்த்த நீலப்படம் போன்று அரைவேக்காட்டாய் சோபாவின் கதைகளை விளங்கி அதன் நிமித்தம் ஒரு பயங்கர விம்பத்தைக் கதைசொல்லி சார்ந்து உருவாக்கிக் கொண்டவர்கள். மற்றையவர்கள், நன்கு புரிந்து படித்து, கதைசொல்லியின் படைப்பாளி அனுமதிப்பத்திரத்தை அங்கீகரித்துக் கொண்டவர்கள். இங்கு வேடிக்கை என்னவெனில், இந்த இரு சாராரில் எவராலும் சோபா இரஞ்சும் நீதியினை இக்கதை மூலம் அவரிற்குக் கொடுக்க முடியப்போவதில்லை. ஏனெனில் முதலாமவர் கட்டமைத்து வைத்திருக்கும் பயங்கர பாத்திரத்திற்குள் இந்தப் பாவம் மிகச்சாதாரணம். இரண்டாமவரிற்கோ, இதை ஏன் பாவன் என்று சொல்ல வேண்டும் என்ற மனநிலை இம்சைப் படுத்தும். 

கதைக்கு மேலால் இந்தவாக்குமூலம் சார்ந்து மேற்படி எழுகின்ற அதிர்வுகள் அடக்கமுடியா ஆர்ப்பரிப்பை உள்ளார்ந்து உண்டுபண்ணுகின்றன.

இனிக் கதைக்குள் வந்தால். அட அட அட, எத்தனை இலகுவாக இந்த மனிதரால் இப்பிடிப் பின்னிப் பெடலெடுக்க முடிகிறது. கதையினைப் படிக்கின்ற புனிதர்களிற்குத் தாம் சுயவின்பத்தில் ஈடுபட்டோம் என்று தன்னும் தமக்குள்ளாகவேனும் ஒத்துக்கொள்வது கூடச் சிலசமயம் அசாத்தியமாகலாம். ஆனால், முதன் முதலில் பதின்மத்தில் அதுவும் இலங்கையில் இந்த அனுபவத்தைக் கதைசொல்லி வருணித்த விதத்தில் உணரவில்லை என்று எவரேனும் கூறின், ஒன்றில் அவர்கள் பொய் சொல்லுகிறாhகள் அல்லது அவர்கள் ஜடங்களாவே பிறந்திருக்கிறார்கள். முதற் தடைவ விந்து வெளியேறியதும், பயப்படாதவர் இருப்பது, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சிய யாழ்ப்பாணத்தில் சாத்தியமாயின் அவர்கள் அசாதாரண மனிதர்கள். ஐம்பதுகளை எட்டும் சோபா சக்த்தியால் அந்தத் தருணத்தை இத்தனை தத்ரூபமாக விளக்க முடிவது மலைப்பேற்படுத்துகிறது. அது மட்டுமன்றி வேளாங்கன்னியினை அதற்குள் கொண்டுவந்து...பின்னிப் பெடலெடுத்திட்டான்யா..

பதின்மத்தில் தொடங்கி ஐம்பது வரை, காமம் புரியாத புதிராகக் கதைக்குள் இழையோடித் தொடர்கிறது. காமம் சார்ந்து பயங்களும், புரியாமைகளும் குளப்பங்களுமே வெளிப்படுகின்றன. "குற்றவுணர்வு என்பது உள்ளார்ந்ததாக, நன்கு புரியப்பட்டதாக, உண்மையானதாக, தன்னுடையதாகக் கதைசொல்லியால் முன்வைக்கப்படுகின்ற அதே நேரம் காமம் என்பது வெளியில் இருந்து வந்ததாக, விசித்திரமானதாக, புரியாததாக, தண்டனை பெற்றுக் கொடுப்பதாகவே வெளிப்படுகிறது. இதனால்த்தான், நூலகராக இருந்த திருவின் அக்காவைத் தூக்கி அப்புறப்படுத்தி விட்டு, மாயோளைக் கதைக்குள் கதைசொல்லி கொண்டுவருகிறார். மாயோளை வெளியில் இருந்து வந்தவளாக, விசி;த்திரமான பெயருடையளவாக, தனக்குத் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவளாக, மதிலில் பார்த்த தூசணவார்த்தை போன்றிருக்கிறது ஆனால் அவள் பெயர் அதுவல்ல என்பதாக, புரிகிறது ஆனால் புரியவில்லை என்பதைக் குறியிடுவதற்காக மாயோள் என்று பெயரிடுகிறார்.

அதாவது. தனக்கும் தனது வாசகரிற்கும் நன்கு தெரிந்த ஒரு வார்த்தையினை எடுத்து அதில் ஒரு எழுத்தை மாற்றி அதன் முன்னால் மாயை என்ற சொல்லைச் சேர்த்துக் கதைசொல்லி மாயோளைப் பிரசவிக்கிறார்;. அதனால் தான் இந்தக் கதைக்கு 'மாயோள்' என்பது அற்புதமான தலைப்பாக இருந்திருக்கும் என்றேன். ஆனால் அது இலக்கியத்திற்கு. இங்கு வாக்குமூலமாக விடுதலை கோரப்படுவதால் 'காயா' என்ற தலைப்புத் தவிர்க்கமுடியாததாகிப் போகின்றது.

என்னதான் சோபாசக்த்தி வாக்குமூலத்தை வைத்து விடுதலை கோரினும், நெஞ்சை நிமிர்த்திப் பிளந்து காட்டினும் தனியே அவரால் சமூகத்தை எதிர்கொள்ளவோ அல்லது சமூகம் எடுக்கிற முடிவை எடுக்கட்டும் என்று விட்டுவிடவோ முடியாதபடி பாதியில் பயம் அவரைப் பற்றிக் கொள்கிறது.
அங்கங்கு தனக்காகத் தானே வாதிட்டுகொள்வதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. தான் அத்தனை கெட்டமனிதன் அல்ல என்றும் சொல்லிக் கொள்ளுகிறார். ஆதானால் தான் பெரதேனியாவில் படித்த மீசை மளித்த திருச்செல்வம் மாயோளின் மார்பைப் பிடித்த கதையும் அதற்காக இயக்கப் பொறுப்பாளனாகத் தான் வளங்கிய தண்டனை பற்றியும் இந்தக் கதைக்குள் பேசுகிறார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற யாழ்ப்பாணத்தானின் பாவபுண்ணிய மனநிலையையும் தனக்குத் துணைக்களைக்கிறார். திருவின் வாயாலேயே அதனைச் சொல்லவும் வைக்கிறார். திருகோணமலைச் சாமியாரும் பவானியும் குவியமும் என்று பேசுகிறார். ஒரு முனையில் நீதிகோரித் திறந்த கையுடன் முன்வரும் சோபா பாதியில் பயம் பற்றிக் கொள்ள நாயகன் கமலகாசனைப் போல் 'அவனை நிறுத்தச் சொல்லு இவனை நிறுத்தச் சொல்லு' என்று புலம்புவதையும் தவிர்கமுடியாதவராகிப் போகிறார். அந்தத் தவிப்புக் கதையினை இலக்கியத்தரத்தில் எங்கோ உயரத்தில் தூக்கி அமர்த்துகிறது.

பெறுமதிகளிலிருந்து விட்டுவிடுபடல் என்பது ஞானிக்கும் முற்றாகச் சாத்தியப்பட்டுவிடுவதில்லை. அத்தனை பெறுமதிகளையும் எத்தனை நக்கல் பண்ணினும் பெடபீலியாவினைக் கடந்து சென்றுவிட முடியாதவராகக் கதைசொல்லி பாவமன்னிப்புக் கோரிப் பம்முவதைப் பாத்ததுச் சமூகம் தனது முப்பதாயிரம் வருடத்து வேரைக் காட்டி முறுவலிக்கிறது.

இன்றைய நாள் முழுவதும் நான் ஏறி மிதந்து திரிந்த அலாடினின் பாயாக இக்கதை எனக்குள் பதிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர் இன்னுமொருவனின் விமர்சனத்தை நுகர்கிறேன். மகிழ்ச்சி நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

மிகவும் அருமையான விமரிசனம்!

எனது இளவயதில்...எஸ்.பொ. எழுதிய தீ, வீ, சடங்கு  போன்ற நூல்களைத் தேடி வாசித்தேன்!

அதில் ஒரு விலை மாதை....புணர்ச்சியை...அதில் அவர் வர்ணித்த விதம் என்னுள் ஒரு அருவருப்பை..அந்த நேரத்தில் என்னுள் உருவாக்கி விட்டிருந்தது!

அவரது சரியான வர்ணிப்பு இப்போது நினைவில் இல்லை!

இருப்பினும் சில வார்த்தைகள் நன்றாக நினைவிருக்கின்றன!  அவளது பெண்குறி ..என்பதும்...பலரின் விந்துப் பீச்சல்களால்...அவளது மன்மத பீடம் ஈரமாக நனைந்திருந்தது என்பதும் அவளது தொடைகளின் இடைவெளிகள் விந்துகள் வழிந்தோடிய வாய்க்கால்கள் போல இருந்தன என்பதும் நினைவில் உள்ளது!

பின்னர் அந்த அதிசயமான மனிதரை...சிட்னியில் சந்தித்து அளவளாவவும்..அவரை எனது மகிழுந்தில் ஏத்தி ..இறக்கும் அருமையான சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தும்....அந்த இளமைக்கால எழுத்தின்...அருவருப்பை....என்னிலிருந்து கழட்டி எறியவே முடியவில்லை!

இருவருமே..அவரது அற்புத படைப்புகளைப் பற்றி...அலசி ஆராய்ந்த போதும்...அந்த வர்ணனையைப் பற்றி என்னால் அளவளாவ முடியவில்லை!

அது ஏன் என்ற கேள்விக்கு எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை!

என்னுள்ளும் ஒரு பலவீனம் மறைந்துள்ளது என்று தான் நினைக்கிறேன்!

அதே ....அசிங்கமான உணர்வு...மீண்டும்... சோபாவின் கதையை வாசித்த போதும் ஏற்படுவதை ,,என்னால் தவிர்க்க முடியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமூடியின்றி எழுதப்பட்ட கதைக்கு இன்னுமொருவனின் விமர்சனம் மிக அருமை. பிரசவம் அருவருப்பென்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சாமலா இருக்கிறோம். நல்லதொரு விமர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kavallur Kanmani said:

முகமூடியின்றி எழுதப்பட்ட கதைக்கு இன்னுமொருவனின் விமர்சனம் மிக அருமை. பிரசவம் அருவருப்பென்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சாமலா இருக்கிறோம். நல்லதொரு விமர்சனம்.

அருமையான கருத்து அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இன்னுமொருவன்,  இப்போது தான் முதன் முதல் உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்.
மிகவும் ஆழமான அவதானிப்போடு, மிக அழகாக எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் / கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபாசக்தியின் கதையை இன்னுமொருவனின் குறிப்புக்களைப் படித்த பின்னர் மீண்டும் ஒருதடவை படித்தேன். இத்தோடு முன்று தரம் படித்திருப்பேன். ஆனாலும் நான் தேடும் ஏதோ ஒன்று கதையில் இல்லை. அது என்னவென்று எனக்கும் புரியவில்லை.

கதை பெறுமதிகளும், விழுமியங்களும் கொண்ட ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த சாதாரணனின் கதை. சமூகப் பயங்களும், சமயப் பின்னணிகளும் நிறைந்த இடத்தில் வளர்ந்ததால் ஊத்தையான விடயங்கள் என்று தொடர்ந்தும் சொல்லப்படுபவற்றை அப்படியில்லை என்று முழுவதுமாக மறுதலிக்க முடியாது. 

கதை சொல்லியைவிட அவரது நண்பன் திருவின் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சுத்தியின் ஆக்கங்களைப் படிப்பதில்லை. காரணம்.. தனது அரைகுறை விளக்கங்களை சமூகத்தின் பிம்பமாக பிரதிபலிக்க முயல்பவர் அவர். இந்த விமர்சனத்தின் படி பார்த்தாலும்.. இன்னும் அவர் பழைய உலகுக் குரங்காகவே உள்ளார் என்று தெரிகிறது. மனிதனாகவில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களின் பின் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. ஆம், சஹாரா, மிக நீண்டநாட்களின் பின் உரையாடுகிறோம், மகிழ்ச்சி.

புங்கையூரான், உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. கேழ்விகள் பிறந்துவிட்டால், விடைகள் வந்தே தீரும்.
 
நன்றி காவலூர்கண்மணி மற்றும் சசிவர்ணம் உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும். 

காவலுர்கண்மணியிடம் பலதடவை கேட்கவேண்டும் என்று பின் மறந்து போவது, இன்று ஞாபகம் இருப்பதால் கேட்கிறேன், உங்கள் பின்னூட்டங்கள் அனேக நேரங்களில் தாய்மை நிறைந்தவகையாக, நம்பிக்கையூட்டுவனவாக தலைமைத்துவப் பண்புகளுடன் வெளிப்படுவதை அவதானிதிருக்கிறேன். அனேகமாக யாராவது உங்களிடம் மனப்பாரத்துடன் வந்தால் இழகிய மனதோடு செல்ல வைப்பீர்கள் என்று தோன்றுகிறது. ஆலோசனைத் துறையில் அல்லது கற்பித்ற் துறையில் பணி புரிகிறீர்களா?

கிருபன், நீங்கள் சொல்வது சரி. வுழமையாகக் கதைசொல்லி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பணியினையும் செய்து எடிற்றிங்கும் முடித்துப் படமாகக் கொடுப்பார். இம்முறை ஒரு தயாரிப்பாளரிடம் கதைசொல்வது போன்று கருவை மட்டும் போட்டிருக்கிறார். ஏனெனில் அவரும் ஒரு கதைமாந்தராய் இருப்பதனால். எனவே, ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு, வசனம் அனைத்தும் வாசகரிடம் விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு 'ஓப்பின் சோர்ஸ்' காப்புரிமம் போல. எனவே இதைப் படமாக்குவது முற்றுமுழுதாக வாசகரின் கைகளில். இன்னமும் சொல்வதானால் கதைக்களம் மட்டுமே சொல்லப்ட்டிருகிறது, கதை எழுதுவது வாசகரிடம் விடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் தேடுவது முடிக்கப்பட்ட படமாக இருக்குமோ?

நன்றி நெடுக்காலபோவான் உங்கள் கருத்திற்கு. விம்பம் என்பது ஒரு பெரிய பூதம். சோபாசக்தி வில்லன் வேடத்தை ஆர்ப்பாட்டமாகத் தானே போட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாள கட்டின்றி வாழ முனைந்ததாகத் தோன்றுகிறது. எனினும், இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் பெடபீலியா மட்டுமல்ல. இக்கதையில் ஒரு இடத்தில் பவானி பாத்திரம் 'எழுத்தில் மட்டும் தான் உங்களிற்கெல்லாம் புரட்சி' என்று சொல்லும். இது விதவைக் கலியாணம் என்ற சலிப்பேற்றும் முனையில் கதைக்குள் வந்திருந்தாலும், நிஜத்தில் இது சோபாசக்த்தியின் சுயவிமரிசனம். ஏனெனில், கதைபடித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தையாகப் பார்க்கமுடியாது அவளின் அடிப்படைப் பெண்மையில் சிக்குண்டமை உண்மையில் மிகப்பாரிய பிற்போக்குத் தனம். அடிப்படையில் மனிதன் விலங்கு என்பதைத் தாண்டி மனவெளியில் தான் மனிதன் மனிதனாகிறான். மனவெளயில் குவியம் அவசியம் என்றபோதும் பன்முகப் பார்வை தவிர்க்க முடியாதது. உலகில் 'ஓடிப்பஸ் சின்ட்றோம்' போன்ற ஏகப்பட்ட விடயங்கள் இருப்பது புரியப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதன் என்ற கட்டமைப்பு அத்தகைய விலங்கிச்சைகளை வென்றதாக முன்வருகிறது. ஒழுக்கம் போன்ற சொல்லாடல் வாயிலாக அவை கட்டுப்படுத்தப்படினும் விஞ்ஞான விளக்கங்கள் பின்னணி ஆகின்றன.


அந்தவகையில், நண்பனிற்குத் துரோகம் மற்றும் பெடபீலியா போன்றன மேலோட்டமாகப் பேசப்படினும், அடிப்படையில் கதைசொல்லி தனது பிறழ்வைத் தானுணர்ந்து, அதனைப் புரியமுடியாமல் உழன்று, புரியாதன அனைத்தும் கொடுக்கும் பயத்தால் பாதிக்கபட்டு அந்தப் பயத்திற்கு நிவாரணி தேடி எழுதுகிறார். எந்தப் பயத்திற்கும் நிவாரணி பயத்தை அதன் முகத்தில் பார்ப்பது தான். அந்தவகையில் இதைத் திறந்தவெளியில் கிறியேற்றிவாகப் பேசத்துணிந்த பாத்திரத்தைப் பார்த்துப் பிரமிக்காதிருக்க முடியவில்லை. நிச்சயம் இது மிகவும் 'கருப்புப் பக்கம்'. ஆனால் கருப்புப் பக்கங்களைப் பேசாப்பொருட்கள் ஆக்குவதால் சமூக முன்னேற்றம் சாத்தியமாகப் போவதில்லை. 
 
 

Link to comment
Share on other sites

'காயா' கதையை கிருபன் இணைத்த அன்று அது ஷோபா சக்தி எழுதிய கதை என்பதால் தவற விடாமல் வாசிக்க வேண்டும் என குறித்து வைத்து இருந்தேன். பின் இன்னுமொருவன்  (இன்னுமொருவன் என்று இங்கு குறிப்பிடினும் உங்களை 'இன்னொருவன்' என்றே மனது உச்சரிக்கின்றது) நீங்கள் தனித்து ஒரு விமர்சனத்தினை இக் கதைக்கு எழுதியிருப்பதால், கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என நினைத்து கதையை நேற்று வாசித்து முடித்தேன்.

வாசித்து முடித்தபின்,உங்கள் விமர்சனம் என் பின்னூட்டத்தில் செல்வாக்கு செலுத்தி விடும் என் நினைத்து  எனது பின்னூட்டங்களை இட்ட  பின் தான் உங்கள் பதிவை  வாசிக்க வேண்டும் என முடிவெடுத்து இப்பதான் வாசித்தேன்.

உங்கள் விமர்சனம் கதையை இன்னொரு தளத்தில் வைத்து பார்க்க தூண்டுகின்றது. இது நான் பார்க்காத ஒரு கோணம். கதை சொல்லி தான் இயக்கத்தில் இருக்கும் போதும் சுய இன்பம் அனுபவிக்க இயக்கம் தடை செய்யவில்லை என்று சொன்னது கூட ஒரு விதத்தில்  தனக்காக வாதிட்டுக் கொண்டதாக இருக்கலாம் என இப்ப நினைக்கின்றேன். ஆனால் பவானியை இறுதியில் கண்டா பின் ஏன் அவளை தவிர்க்க நினைக்கின்றார் என்பதை புரிய முடியவில்லை. ஆண்களின் பாவ மன்னிப்பையா கதை சொல்லி எதிர்பார்க்கின்றார்?

தன்னை வெளிக் காட்டாது  இன்னொரு புனை பெயரில் ஷோபா இக் கதையை எழுதியிருப்பேன் எப்படியான கருத்துக்கள் எம்மிடம் இருந்து வரும்  எனவும் யோசித்து பார்க்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பெண்ணின் மார்பில் கை வைச்ச திரு தன்னுடைய மனிசி குழந்தை இல்லை என்பதற்காக அந்த சாமியாரிட்ட போய் தனிமையில் போய் இருந்திட்டு வந்திடுவா என்று பயப்படுறது இருக்கே...ஆண்களது குணமே அது தான்tw_dissapointed:

On ‎16‎/‎03‎/‎2017 at 0:02 PM, Innumoruvan said:

நீண்ட நாட்களின் பின் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. ஆம், சஹாரா, மிக நீண்டநாட்களின் பின் உரையாடுகிறோம், மகிழ்ச்சி.

புங்கையூரான், உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. கேழ்விகள் பிறந்துவிட்டால், விடைகள் வந்தே தீரும்.
 
நன்றி காவலூர்கண்மணி மற்றும் சசிவர்ணம் உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும். 

காவலுர்கண்மணியிடம் பலதடவை கேட்கவேண்டும் என்று பின் மறந்து போவது, இன்று ஞாபகம் இருப்பதால் கேட்கிறேன், உங்கள் பின்னூட்டங்கள் அனேக நேரங்களில் தாய்மை நிறைந்தவகையாக, நம்பிக்கையூட்டுவனவாக தலைமைத்துவப் பண்புகளுடன் வெளிப்படுவதை அவதானிதிருக்கிறேன். அனேகமாக யாராவது உங்களிடம் மனப்பாரத்துடன் வந்தால் இழகிய மனதோடு செல்ல வைப்பீர்கள் என்று தோன்றுகிறது. ஆலோசனைத் துறையில் அல்லது கற்பித்ற் துறையில் பணி புரிகிறீர்களா?

கிருபன், நீங்கள் சொல்வது சரி. வுழமையாகக் கதைசொல்லி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பணியினையும் செய்து எடிற்றிங்கும் முடித்துப் படமாகக் கொடுப்பார். இம்முறை ஒரு தயாரிப்பாளரிடம் கதைசொல்வது போன்று கருவை மட்டும் போட்டிருக்கிறார். ஏனெனில் அவரும் ஒரு கதைமாந்தராய் இருப்பதனால். எனவே, ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு, வசனம் அனைத்தும் வாசகரிடம் விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு 'ஓப்பின் சோர்ஸ்' காப்புரிமம் போல. எனவே இதைப் படமாக்குவது முற்றுமுழுதாக வாசகரின் கைகளில். இன்னமும் சொல்வதானால் கதைக்களம் மட்டுமே சொல்லப்ட்டிருகிறது, கதை எழுதுவது வாசகரிடம் விடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் தேடுவது முடிக்கப்பட்ட படமாக இருக்குமோ?

நன்றி நெடுக்காலபோவான் உங்கள் கருத்திற்கு. விம்பம் என்பது ஒரு பெரிய பூதம். சோபாசக்தி வில்லன் வேடத்தை ஆர்ப்பாட்டமாகத் தானே போட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாள கட்டின்றி வாழ முனைந்ததாகத் தோன்றுகிறது. எனினும், இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் பெடபீலியா மட்டுமல்ல. இக்கதையில் ஒரு இடத்தில் பவானி பாத்திரம் 'எழுத்தில் மட்டும் தான் உங்களிற்கெல்லாம் புரட்சி' என்று சொல்லும். இது விதவைக் கலியாணம் என்ற சலிப்பேற்றும் முனையில் கதைக்குள் வந்திருந்தாலும், நிஜத்தில் இது சோபாசக்த்தியின் சுயவிமரிசனம். ஏனெனில், கதைபடித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தையாகப் பார்க்கமுடியாது அவளின் அடிப்படைப் பெண்மையில் சிக்குண்டமை உண்மையில் மிகப்பாரிய பிற்போக்குத் தனம். அடிப்படையில் மனிதன் விலங்கு என்பதைத் தாண்டி மனவெளியில் தான் மனிதன் மனிதனாகிறான். மனவெளயில் குவியம் அவசியம் என்றபோதும் பன்முகப் பார்வை தவிர்க்க முடியாதது. உலகில் 'ஓடிப்பஸ் சின்ட்றோம்' போன்ற ஏகப்பட்ட விடயங்கள் இருப்பது புரியப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதன் என்ற கட்டமைப்பு அத்தகைய விலங்கிச்சைகளை வென்றதாக முன்வருகிறது. ஒழுக்கம் போன்ற சொல்லாடல் வாயிலாக அவை கட்டுப்படுத்தப்படினும் விஞ்ஞான விளக்கங்கள் பின்னணி ஆகின்றன.


அந்தவகையில், நண்பனிற்குத் துரோகம் மற்றும் பெடபீலியா போன்றன மேலோட்டமாகப் பேசப்படினும், அடிப்படையில் கதைசொல்லி தனது பிறழ்வைத் தானுணர்ந்து, அதனைப் புரியமுடியாமல் உழன்று, புரியாதன அனைத்தும் கொடுக்கும் பயத்தால் பாதிக்கபட்டு அந்தப் பயத்திற்கு நிவாரணி தேடி எழுதுகிறார். எந்தப் பயத்திற்கும் நிவாரணி பயத்தை அதன் முகத்தில் பார்ப்பது தான். அந்தவகையில் இதைத் திறந்தவெளியில் கிறியேற்றிவாகப் பேசத்துணிந்த பாத்திரத்தைப் பார்த்துப் பிரமிக்காதிருக்க முடியவில்லை. நிச்சயம் இது மிகவும் 'கருப்புப் பக்கம்'. ஆனால் கருப்புப் பக்கங்களைப் பேசாப்பொருட்கள் ஆக்குவதால் சமூக முன்னேற்றம் சாத்தியமாகப் போவதில்லை. 
 
 

கண்மனி அக்காவை பற்றி எழுதினது சரி...ரதியின் எழுத்துக்களை வாசிக்கும் போது எப்படியான ஆள் ஞாபகத்திற்கு வருகிறார்?

Link to comment
Share on other sites

நன்றி விசுகு தும்பளையான் நந்தன் அபாரிஜதன் இணையவன்.

ரதியின் கேழ்விக்கு சிறிய பதில் என்பதால் அதை முதலில் எழுதிவிட்டு செல்லலாம். ஒவ்வொரு முகமூடி சார்ந்து ஒவ்வொரு விம்பம் மனதில் இருக்கும். ரதியின் பதிவுகளை வாசிக்கும் போது எனது மனதில் வரும் உருவம் மின்சாரக்கனவு படத்தின் வெண்ணிலவே பாடல் காட்சியில் வரும் கஜோல். ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. அது அப்படித்தான் பதிவாகியிருக்கிறது.

நிழலி, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. காயா கதை ஏற்கனவே இணைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருப்பதை இப்போது தான் பார்;த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதும் சரி, இயக்கம் கூட சுயவின்பத்தைத் தடைசெய்யவில்லை என்பதும் கூட நீங்கள் சொல்வதுபோல் அவர் தனக்காகத் தானே வாதிடுவது தான். 

பவானியை அவர் தவிர்த்தது, இந்தக் கதை எழுதிய பின்னர் அல்லவே. குறிப்பிட்ட சம்பவம் குழந்தை சார்ந்து திருவின் வீட்டில் நிகழ்ந்த அடுத்த நொடிகளில், அவர் திரு வீட்டில் இருந்து கிழம்பிவரும் போது தானே பவானியைத் தவிர்த்தார். அந்த நாளில் அவர் பவானியை மட்டும் தவிர்க்கவில்லை. திருவையும் தவிர்த்தார், குழந்தை காயாவையும் தவிர்த்தார், இன்னமும் சொல்வதானால் தனது விம்பத்தைத் தான் கண்ணாடியில் பார்ப்பதைக் கூட அவர் தவிர்க்கவே முனைந்தார். எங்காவது ஒரு பொந்திற்குள் ஓடிச்சென்று ஒளித்துவிடத் துடித்த தருணம் அது அவரிற்கு. குற்ற உணர்வின் உச்சக் கட்டம். 

நிச்சயம் இந்தக் கதை சோபா சக்த்தி எழுதினார் என்று தெரிவதனால் எமது கதைசொல்லி பற்றிய எண்ணங்கள் அதிகமாகின்றன. இதை வெறும் இலக்கியமாக வைத்துப் பார்க்க முடியவில்லை. இதை ஒத்த தருணங்கள் இலக்கியத்தில் அற்புதமாகக் கையாளப்பட்டு நிறைந்து கிடக்கின்றன. ஆனால் இங்கு சோபா எழுதிய வாக்குமூலம் என்பது தான் இந்தக் கதைக்கு ஒரு மேலதிக பரிமாணத்தைக் கொடுகிறது. அவர் கோரும் ஆன்ம ஈடேற்றத்தை எம்மால் அவரிற்குக் கொடுக்க முடியாது (அது அவரே தவம் செய்து அடைய வேண்டியது. மனவெளியில் ஆழத்தோண்டி அகழ்வாராய்ச்சி அவரிற்கு அவசியப்படும். விடுதலை கிடைக்கும் ஆனால் அது அவரால் மட்டுமே பெறப்படக்கூடியது) என்றபோதும், இலக்கியத் தரத்தில் இந்தக் கதையின் அடுக்கடுக்கான பரிமாணங்கள் சார்ந்து மனந்திறந்து கைதட்டலாம். மிகவும் திறமைசாலி.

நான் ஏற்கனவே எனது பின்னூட்டதில் குறிப்பிட்டதைப் போல, இது குழந்தையுடன் நிகழ்ந்த அந்த ஒரு சம்பவத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. 'விட்டு விடுதலையான' ஒரு மனிதனாகத் தன்னை வரித்துக் கொண்டு, சமூகத்தின் தன்னைப் பற்றிய மதிப்பீடுகளை காலால் உதைத்த படி வாழ்ந்த அல்ல வாழத்தலைப்பட்ட ஒரு மனிதன் சமூகம் தனது கழுத்தில் கட்டிப் பிடித்திருக்கும் சுருக்குக் கயிற்றை உணர்ந்த தருணம். சமூகம் என்பது வெளியில் அல்ல அது தனக்குள்ளாக இருக்கிறது என்பதை அவர் உணர்ந்த தருணம். அவை அனைத்துக்கும் மேலால் கதை வாசித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தை பாத்திரமாகப் பார்க்க முனைந்து தோற்றுப் போய், அந்தக் குழந்தையின் அடிப்படை விலங்கியல் தன்மையில் மட்டும் புதையுண்டு போன ஒரு இலக்கிய ஜாம்பவான் தனது அறிவின் வங்குறோத்துத் தனத்தைத் தானுணாந்து தளர்ந்து போன தருணம். இங்கு அவரிற்குள் வெளிப்படும் பயம் தனது அறிவு தன்னைக் கைவிட்டதை நினைத்தும் தான் எழுகிறது.

எனக்கு இங்கு மிகப்பிரமிப்பாக இருந்தது என்னவெனில். சோபாசக்தி எமது மனங்களில் அவரைப் பற்றி உண்டாக்கி வைத்திருக்கும் விம்பம் உண்மையாயின், அவர் உண்மையில் ஒரு 'ப்ளேபோயாக' இருந்து பெண்கள் சார்ந்து நன்கு பரிட்சயமுடையவராயிருப்பின், இக்கதையில் அவர் குறிப்பிடும் கட்டுப்பாட்டை மீறிய விந்து வெளியேற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. இது ஒரு பதின்மப் பையனிற்கு நிகழ்ந்திருப்பின் புரிவது இலகு. ஒரு வேளை ஒரு இலக்கிய ஜாம்பவானின் மனத்தில் கற்பனையின் வீச்சு என்னைப் போன்ற சாதாரண மனிதர் புரியமுடியாப் பரிமாணத்தில் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் பார்வைக்கு..

இக் கதை என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதை இலக்கியப் படைப்பு சார்ந்த ஒரு Head Game என்ற அடிப்படையிலேயே அணுகினேன். இம்முறை ஒரு தற்கொலைத் தாக்குதல் முயற்சியை செய்துள்ளார். 

அவருக்கு குற்ற உணர்வு இருப்பின் மன வள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் தவிர அவரின் இப் பதிவு சமூகத்தின் இருட்டுப்பக்கங்களை பார்பதற்கு வழிசெய்கின்றது எனபதற்கில்லை. அலலது சமூகத்தின் இருட்டுப்பக்கங்கள் இப்படியானது என்று இருட்டின் இயல்பாகவும் இதைக் கருத முடியாது. சமூகத்தில் அங்காங்கே நடக்கும் நடைமுறையில் இருந்து விலகிய செயற்பாடுகளை சமூகத்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு என சொல்வதற்கில்லை. 

சமூகம் தனது பண்பாடு பாரம்பரியத்தின் ஊடாக ஒழுக்க விதிகளின் ஊடாக காம உணர்வுகளை அகமும் புறமுமாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஒரு விலங்கு நிலையில் இருந்த மானுடத்தின் பண்பட்ட நிலை என்பது புறச்சூழலை அனுசரித்தல் கட்டுபடுதல் போராடுதல் போன்ற அமசங்களை அடக்கியது. சனக்கூட்டம் நிரம்பிய பொது இடத்தில் உடலின் காம அசைவுகள் அறைக்குள் இருப்பது போல் இருக்காது. உடல் அதற்கு பண்பட்டது. மகள் அககா தங்கை குழந்தைகள் போனற விடயத்திலும் எமது உடல் அசைவுகள் பண்பாட்டால் பழக்கவழக்கத்தால் ஒரு இயல்புநிலைக்கு உட்பட்டு கட்டுப்பட்டது. ஒரு சமூகம் சார் படைப்புகளை செய்யும் ஒருவரின் இத்தகைய அனுபவத்தில் இருந்து எதையும் புரிவதற்கில்லை.

வள்ளுவன் அற ஒழுக்கத்தை எழுதியதன் பின்னால் ஒழுக்க கேடுகள் நிறைந்த சமூகத்திற்கான தேவைகள் அதற்கு காரணமாக இருந்தது. எப்போதும் இவ்வாறன படைப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். அது சார்ந்தே சமூகம் நகரும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகன்,அப்படியாயின் சமூகத்தின் இருட்டு பக்கங்களை ஒருத்தரும் எழுதக் கூடாதா?....அப்படி எழுதினால் சமுதாயம் கெட்டு விடுமா?...இருட்டு பக்கங்கள் மூலம் எப்படி ஒரு மனிதன் இந்த உலகத்தில் வாழ்க் கூடாது எனத் தெரிந்து கொள்ளமாம் தானே:unsure:

Link to comment
Share on other sites

நன்றி உங்கள் கருத்திற்கு சுகன். உண்மையில் விவாதங்கள் இன்றைய நிலையில் பண்டைய விடயமாகிப்போய்விட்டன. சந்தை அதையே விரும்புகிறது. அதனால் உங்களைப் போன்ற ஆழ்ந்த விவாதங்கள் எதிர்த்தரப்பி;ல் அமையும் போது மகிழ்வாக இருக்கிறது—விவாதிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதனால்.

உங்கள் கருத்தில் இருக்கும் கோபம் புரிகிறது. ஆனால் என்னால் உடன் படமுடியவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்ல முன்னர், இப்படி சோபாசக்த்தி எழுதியதால் அவரிற்கு கிடைக்கும் உளவியல் பற்றி பேச முனைவதற்கு முன்னர், குறைந்தபட்ச பொதுநலம் என்று ஒன்றைத் தன்னும் கூறலாம். 

அதாவது, சோபா தன்னாலே புரியமுடியாத பிறழ்வு ஒன்று தனக்குள் நிகழ்வதாகத் தானே கூறுகிறார். இது சார்ந்து அவர் விமோசனம் தேடுகையில், சோபாசக்த்தியினைத் தெரிந்த, திரு போன்ற இதர பெற்றோர்கள், சோபாவின் மடியில் குழந்தைகள் அமர்வதைத் தவிர்க்கலாம். உலகில் கட்டுப்பாட்டை மீறிய பிறழ்வுகள் இருக்கவே செய்கின்றன. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் அத்தகைய பிறழ்வுகளை தம்மில் உணர்பவர்கள் இருட்டிற்குள் சென்றுவிடுகிறார்கள். தீர்வைத் தேடுவதற்குப் பதில் தொடர்ந்து துன்பம் விளைவித்தபடி வாழ்கிறார்கள். அந்தவகையில், தனது பிறழ்வைப் பொதுவெளியில் பேசுவதைப் பாராட்ட வேண்டும். குறைந்தபட்சம், இருட்டில் ஒரு குருடன் விளக்கினை எடுத்துச் செல்வது போலாவது இதனைப் பார்க்கலாம். தனக்குத் தான் ஒளி தெரியவில்லை என்றாலும், மற்றையவர்கள் அந்த ஒளியினைப் பார்த்துத் தன்னோடு மோதாது செல்லட்டும் என்ற அளவிலேனும் இந்தக் கதையினை ஒரு குப்பி விளக்காகவேனும் பார்க்க முடியும். 

இனி சமூகம் என்பது என்னதான் பொதுமையானதாய் உணரப்பட்டுப் போதிக்கபடினும், அதன் பிரயோகம் என்பது ஒவ்வொரு மனிதனதும் தனித்துவத்தில் தான் தங்கியிருக்கிறது. சமூகமாக வாழ்வதற்கு இன்ன விடயங்கள் அனுகூலமானவை என்பதில் பொது உடன்பாடு அடையப்படினும், சமூகத்தால் சராசரி மனிதனிற்கான விதிகளையே அடையமுடியும். விதிமுறித்தல் நாளாந்தம் அனைத்து முனைகளிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன--இல்லாது போனால் சமூகத்தில் ஏழை பணக்காரன் எங்கனம் சாத்தியம்? 

சுpல விதிமீறல்களைச் சமூகம் வியப்புடன் பார்க்கும், கைதட்டவும் கூடும். சுpலவற்றைக் காறித்துப்பும். சுமூகம் காறித்துப்பும் அனைத்து விதிமுறித்தல்களில் சமூக்தினைப் பயப்பிடுத்தும் விடயங்கள் இருக்கும். பயம் பிறப்பதற்கு இரண்டு அம்சங்கள் அடிப்படை, மிகமுக்கியமானது புரியாமை. அடுத்தது, புரியாத விடயங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியாது என்ற அங்கலாய்ப்பு. புரியாத விடயங்களைப் புரிவதற்கு முனைவது கடினமானது, அதற்கு ஒரு விலை உண்டு, அந்த விலையினைப் கொடுப்பதற்குப் பதில் பொதுப்புத்தி புரியாத விடயங்களை அகற்றிவிடல் வினைத்திறன் மிக்கது என்று எடுத்துரைக்கும். உடனே புரியாதன சார்ந்து நாம் காறித்துப்பத் தொடங்கி விடுகிறோம்.

சனநெரிசலான இடத்தில் ஒரு மனிதனின் காம உணர்வுகள் அறைக்குள் இருப்பதைப் போல் இருக்காது என்ற உங்களின் உதாரணத்திற்கு வருவோம். சமூகம் பொதுவெளி நாகரிகம் என்று ஒன்றை வரையறுத்துள்ளது. ஓத்துக்கொள்கிறேன். அவ்விதிப்படி மனிதன் உடைகளிற்குள் உடலை மறைத்துத் தான் வருகிறான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அனைவரது மனங்களும் விதிகளின் பரிந்துரைக்கேற்ப மட்டுமே சிந்திக்கும் என்பது ஏற்புடையதல்ல. சனக்கூட்டத்தில் சில மனிதர்கள் காமம் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலர் உடமைகளைக் கொள்ளையடித்தல் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலரிற்கு அர்த்தமின்றி துவேசம் மற்றும் வெறுப்பு உணர்வுகள் தோன்றி கூட்டத்தில் சிலரைக் கொன்றுவிடத்தோன்றும். இப்படி சமூக ஒழுங்குகளி;ற்கு முரணான எத்தனையோ எண்ணங்கள் சர்வசாதாரணமாய் சனக்கூட்டத்தில் நிகழும். 

ஆனால் பெரும்பான்மை மனிதரிற்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஒழுக்கம் என்ற மென்பொருள் அத்தகைய விதிமுறித்தல்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தும். சிலர் சற்று சாகச உணர்வில் கட்டுண்டு கொஞ்சம் விதிமுறிப்பர் (நமது திரைப்படங்கள் காட்டும் பேருந்து உரசல்கள் போல). மிகச்சிலரில் ஒழுக்க மென்பொருள் வினைத்திறனற்றுப் போகும். அதை நாம் மறுத்து விட முடியாது.
சமூகத்தின் ஒழுக்கம் என்பது தன்னைத் தக்கவைத்தல் என்ற ஒரே நோக்கத்தில் எழுவது. இது அனைத்து உயிரனத்திற்குமான பொதுப்பெறுமதி என்பதனால் ஒழுக்கம் சாத்தியப்படுகிறது. ஆனால் பிறழ்வுகள் இல்லாது கூர்ப்பு இல்லை. மரபணுக்களின் திரிபுகள் கூட ஒருவகையில் பார்த்தால் பிறழ்வுகள் தானே. அக்கா அம்மா தங்கை மகள் ஏன் நண்பி சார்ந்து கூட மனிதனின் மனம் ஒழுக்க விதிகளின் படி மட்டும் தான் சிந்திக்கும் என்ற நிலை நன்றாகத் தான் இருக்கும் ஆனால் இயற்கை அவ்வாறானது அல்ல. பிறழ்வான எண்ணங்கள் தோன்றும் போது அதை மனதின் அடி ஆழத்திற்குள் புதைத்துவிட முனைவது இயல்பு. பலரிற்கு அது சாத்தியப்படும். சுpலரிற்கு இது முடியாது இருக்கும். 

பெண்களின் உடலியல் வளர்ச்சிகள் சார்ந்து சமூகம் கூட்டாக அணுகுகிறது. ஆனால் ஆண்களின் உடல் சார்ந்து பொதுப்பேச்சு மிகக்குறைவு, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சும் புராதன சமூகங்களில் இது அதிகம். பதின்மத்தில் உடல் வளர்சியில் நித்திரையில் நிகழும் விந்துவெளியேற்றங்களோடு சம்பந்தப்பட்ட கனவுகளில் மிகப்பெரும்பான்மையானவை ஒழுங்களை மீறுவனவாகவே அமையும். அப்படி இருக்கையில் சித்தசுவாதீனம் உள்ள மனிதரின் மனங்களில் அனைத்தும் ஒழுக்கங்களின் பிரகாரம் மட்டுமே நிகழும் என்று நினைப்பது சாத்தியமற்றது.

இந்தக்கதை ஒருவேளை சோபாசகத்திக்கு நிகழாது, இது வாக்குமூலமாக அல்லாது, திரு குடும்பம் உண்மையில் இல்லாது, வெறும் கற்பனையில் நிகழ்ந்ததாகக் கூட இருக்கலாம். இது ஒருவேளை சோபாசக்தியின் கவனிப்புப் பெறுவதற்கான தற்கொலைத்தாக்குதல் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு பேசப்பட்ட விடயம் சமூகத்தில் இல்லாது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடந்த சகல கருத்தாடல்களை மட்டும் தான் பார்த்துள்ளேன்.கதை வாசிக்கவில்லை.வாசித்து பின் கருத்து எழுதாலாம் என்று இருக்கிறேன்.இன்நொருமவன் அடிக்கடி களத்துக்கு வர வேண்டும் என விரும்பிருவர்களில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நீங்கள் என்னிடம் பல முறை கேட்கநினைத்து மறந்து போன விடயங்களை எழுதியிருந்தீர்கள் உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருப்பதால் பதில் எழுத  தயக்கமாக இருந்ததால் பதில் எழுத தாமதித்து விட்டேன். மன்னிக்கவும்.; உங்கள் கணிப்புக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

On 24/03/2017 at 3:08 PM, ரதி said:

சுகன்,அப்படியாயின் சமூகத்தின் இருட்டு பக்கங்களை ஒருத்தரும் எழுதக் கூடாதா?....அப்படி எழுதினால் சமுதாயம் கெட்டு விடுமா?...இருட்டு பக்கங்கள் மூலம் எப்படி ஒரு மனிதன் இந்த உலகத்தில் வாழ்க் கூடாது எனத் தெரிந்து கொள்ளமாம் தானே:unsure:

சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை யாரும் எழுதக் கூடாது என்பது எனது கருத்தல்ல. இதை இருட்டுப் பக்கத்திற்கு அடயாளப்படுத்துவது தான் ஏற்புடையதல்ல என்பதே எனது கருத்து. இந்த சம்பவத்தின் ஊடாக சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை நாம் புரிந்துகொள்ளதில் உடன் பாடு இல்லை. 

சம்மந்தப்பட்டவர் பாலிலயல் வரட்சிக்கு உட்பட்டவர் இல்லை. அவருக்கு பெண் உடல் முன்போல் ஈர்பதில்லை என்றும் கூறுகின்றார். சிறுமியின் தகப்பன் பாலியல் ரீதியான அத்துமீறலை செய்து அதற்கு நபர் தண்டனையும் வழங்கியுள்ளார். சம்மந்தப்பட்டவர் பாலியல் சார்ந்த நூல்களைப் படித்துள்ளார். சம்மந்தப்பட்டவருக்கு தூக்கத்தில் ஸ்கலிதமாகியதையும் சொல்லியுள்ளார். காந்திக்கு எழுபது வயதில் நடந்ததை உதாரணமா கூறியுள்ளார். 

சம்மந்தப்பட்டவர் சிறுமியைய வன்புணர்வுக்கு உட்படுத்தவில்லை. எதுவிதமான துஸ்பிரயோகமும் செய்யவில்லை. சிறுமிக்கு எதுவும் தெரியாது. சிறுமியால் உணரப்படவில்லை. சட்டட ரிதியில் எந்த சிக்கலுக்குள்ளும் இந்த சம்பவம் செல்லாது. சிறுமி இறுக்காவிட்டால் இந்த சம்பவம் வெளிவந்திருக்குமா இல்லையா என்பது சந்தேகமே !

இந்த சம்பவத்தில் சிறுமி நபர் மடியில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பது தெரியாது. அது குறித்த குறிப்பு இல்லை. இவர் உடலில் மாறுதல் ஏற்படும் போது வாஷ்ரூம் போகவேணும் என்று சந்தர்ப சூழலை மாற்ற முனையவில்லை. 

இங்கே குற்றம் ? அல்லது குற்ற உணர்வை முன்வைப்பது அதை நியாயப்படுத்துவதற்கான பின்புலக் காரணங்களை விபரிப்பது ஏன் நடந்தது என்று சிந்திப்பது காறித்துப்பி தனக்குத் தானே தண்டிப்பது என அனைத்தும் நபரே செய்கின்றார்  விரும்பினால் குற்றவாளியும் அவரே நீதிபதியும் அவரே. வாசகனுக்கு இங்கே மிச்சம் இருப்பது எதுவும் இல்லை. 

தீவிரமான பாலியல் வரட்சிக்கு உட்பட்டு. விரக்கதி பாதிப்புகளை பின்புலத்தில் சந்தித்து குற்ற உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அது உளவியல் சார்ந்தோரல் ஆரயப்பட்டு அதை நாம் அறியும் பட்சத்தில் அதன் புரிதல் வேறு. இந்தச் சம்பவத்தின் புரிதல் வேறு.

இதை ஒரு சமூக இருட்டை அடயாளப்படுத்தும் விளக்கக அதைக் கொண்டு தேட முற்படின். இருட்டுக்குள் ஒருவர் நபர் போலவே நிற்பார். என்ன செய்ய முடியும் ? ஐயோ பாவம் என்று விட்டு திரும்ப வேண்டியதுதான்.

இதிலிருந்து சுதாரித்துக்கொள்வதானால் குடும்பத்தில் தந்தையின் நண்பர்கள் வரும்போது பெண் குழந்தைகளை "அங்கிள் வாரர் ஓடி ஒழிந்துகொள்ளுங்கள் "  என்பது போல் ஆகிவிடும்.

இது சமூக்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு அல்லது அடயாளம் என்பது ஒரு விபரீதத்தை ஆமோதிப்பதாகும். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற எங்கள் வழக்கும் அன்பு பாசம் நட்பு நண்பன் என்ற மானுடத்தின் உயர்ந்த குணங்களும் நிர்மூலமாகும். விதிவிலக்குகள் விதிகளாக அடயாளப்படுத்த முடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

மற்றபடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் உண்டு. அவைகளை உள்வாங்கிக் கொள்கின்றேன். 

 

On 25/03/2017 at 10:42 AM, Innumoruvan said:

நன்றி உங்கள் கருத்திற்கு சுகன். உண்மையில் விவாதங்கள் இன்றைய நிலையில் பண்டைய விடயமாகிப்போய்விட்டன. சந்தை அதையே விரும்புகிறது. அதனால் உங்களைப் போன்ற ஆழ்ந்த விவாதங்கள் எதிர்த்தரப்பி;ல் அமையும் போது மகிழ்வாக இருக்கிறது—விவாதிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதனால்.

உங்கள் கருத்தில் இருக்கும் கோபம் புரிகிறது. ஆனால் என்னால் உடன் படமுடியவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்ல முன்னர், இப்படி சோபாசக்த்தி எழுதியதால் அவரிற்கு கிடைக்கும் உளவியல் பற்றி பேச முனைவதற்கு முன்னர், குறைந்தபட்ச பொதுநலம் என்று ஒன்றைத் தன்னும் கூறலாம். 

அதாவது, சோபா தன்னாலே புரியமுடியாத பிறழ்வு ஒன்று தனக்குள் நிகழ்வதாகத் தானே கூறுகிறார். இது சார்ந்து அவர் விமோசனம் தேடுகையில், சோபாசக்த்தியினைத் தெரிந்த, திரு போன்ற இதர பெற்றோர்கள், சோபாவின் மடியில் குழந்தைகள் அமர்வதைத் தவிர்க்கலாம். உலகில் கட்டுப்பாட்டை மீறிய பிறழ்வுகள் இருக்கவே செய்கின்றன. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் அத்தகைய பிறழ்வுகளை தம்மில் உணர்பவர்கள் இருட்டிற்குள் சென்றுவிடுகிறார்கள். தீர்வைத் தேடுவதற்குப் பதில் தொடர்ந்து துன்பம் விளைவித்தபடி வாழ்கிறார்கள். அந்தவகையில், தனது பிறழ்வைப் பொதுவெளியில் பேசுவதைப் பாராட்ட வேண்டும். குறைந்தபட்சம், இருட்டில் ஒரு குருடன் விளக்கினை எடுத்துச் செல்வது போலாவது இதனைப் பார்க்கலாம். தனக்குத் தான் ஒளி தெரியவில்லை என்றாலும், மற்றையவர்கள் அந்த ஒளியினைப் பார்த்துத் தன்னோடு மோதாது செல்லட்டும் என்ற அளவிலேனும் இந்தக் கதையினை ஒரு குப்பி விளக்காகவேனும் பார்க்க முடியும். 

இனி சமூகம் என்பது என்னதான் பொதுமையானதாய் உணரப்பட்டுப் போதிக்கபடினும், அதன் பிரயோகம் என்பது ஒவ்வொரு மனிதனதும் தனித்துவத்தில் தான் தங்கியிருக்கிறது. சமூகமாக வாழ்வதற்கு இன்ன விடயங்கள் அனுகூலமானவை என்பதில் பொது உடன்பாடு அடையப்படினும், சமூகத்தால் சராசரி மனிதனிற்கான விதிகளையே அடையமுடியும். விதிமுறித்தல் நாளாந்தம் அனைத்து முனைகளிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன--இல்லாது போனால் சமூகத்தில் ஏழை பணக்காரன் எங்கனம் சாத்தியம்? 

சுpல விதிமீறல்களைச் சமூகம் வியப்புடன் பார்க்கும், கைதட்டவும் கூடும். சுpலவற்றைக் காறித்துப்பும். சுமூகம் காறித்துப்பும் அனைத்து விதிமுறித்தல்களில் சமூக்தினைப் பயப்பிடுத்தும் விடயங்கள் இருக்கும். பயம் பிறப்பதற்கு இரண்டு அம்சங்கள் அடிப்படை, மிகமுக்கியமானது புரியாமை. அடுத்தது, புரியாத விடயங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியாது என்ற அங்கலாய்ப்பு. புரியாத விடயங்களைப் புரிவதற்கு முனைவது கடினமானது, அதற்கு ஒரு விலை உண்டு, அந்த விலையினைப் கொடுப்பதற்குப் பதில் பொதுப்புத்தி புரியாத விடயங்களை அகற்றிவிடல் வினைத்திறன் மிக்கது என்று எடுத்துரைக்கும். உடனே புரியாதன சார்ந்து நாம் காறித்துப்பத் தொடங்கி விடுகிறோம்.

சனநெரிசலான இடத்தில் ஒரு மனிதனின் காம உணர்வுகள் அறைக்குள் இருப்பதைப் போல் இருக்காது என்ற உங்களின் உதாரணத்திற்கு வருவோம். சமூகம் பொதுவெளி நாகரிகம் என்று ஒன்றை வரையறுத்துள்ளது. ஓத்துக்கொள்கிறேன். அவ்விதிப்படி மனிதன் உடைகளிற்குள் உடலை மறைத்துத் தான் வருகிறான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அனைவரது மனங்களும் விதிகளின் பரிந்துரைக்கேற்ப மட்டுமே சிந்திக்கும் என்பது ஏற்புடையதல்ல. சனக்கூட்டத்தில் சில மனிதர்கள் காமம் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலர் உடமைகளைக் கொள்ளையடித்தல் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலரிற்கு அர்த்தமின்றி துவேசம் மற்றும் வெறுப்பு உணர்வுகள் தோன்றி கூட்டத்தில் சிலரைக் கொன்றுவிடத்தோன்றும். இப்படி சமூக ஒழுங்குகளி;ற்கு முரணான எத்தனையோ எண்ணங்கள் சர்வசாதாரணமாய் சனக்கூட்டத்தில் நிகழும். 

ஆனால் பெரும்பான்மை மனிதரிற்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஒழுக்கம் என்ற மென்பொருள் அத்தகைய விதிமுறித்தல்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தும். சிலர் சற்று சாகச உணர்வில் கட்டுண்டு கொஞ்சம் விதிமுறிப்பர் (நமது திரைப்படங்கள் காட்டும் பேருந்து உரசல்கள் போல). மிகச்சிலரில் ஒழுக்க மென்பொருள் வினைத்திறனற்றுப் போகும். அதை நாம் மறுத்து விட முடியாது.
சமூகத்தின் ஒழுக்கம் என்பது தன்னைத் தக்கவைத்தல் என்ற ஒரே நோக்கத்தில் எழுவது. இது அனைத்து உயிரனத்திற்குமான பொதுப்பெறுமதி என்பதனால் ஒழுக்கம் சாத்தியப்படுகிறது. ஆனால் பிறழ்வுகள் இல்லாது கூர்ப்பு இல்லை. மரபணுக்களின் திரிபுகள் கூட ஒருவகையில் பார்த்தால் பிறழ்வுகள் தானே. அக்கா அம்மா தங்கை மகள் ஏன் நண்பி சார்ந்து கூட மனிதனின் மனம் ஒழுக்க விதிகளின் படி மட்டும் தான் சிந்திக்கும் என்ற நிலை நன்றாகத் தான் இருக்கும் ஆனால் இயற்கை அவ்வாறானது அல்ல. பிறழ்வான எண்ணங்கள் தோன்றும் போது அதை மனதின் அடி ஆழத்திற்குள் புதைத்துவிட முனைவது இயல்பு. பலரிற்கு அது சாத்தியப்படும். சுpலரிற்கு இது முடியாது இருக்கும். 

பெண்களின் உடலியல் வளர்ச்சிகள் சார்ந்து சமூகம் கூட்டாக அணுகுகிறது. ஆனால் ஆண்களின் உடல் சார்ந்து பொதுப்பேச்சு மிகக்குறைவு, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சும் புராதன சமூகங்களில் இது அதிகம். பதின்மத்தில் உடல் வளர்சியில் நித்திரையில் நிகழும் விந்துவெளியேற்றங்களோடு சம்பந்தப்பட்ட கனவுகளில் மிகப்பெரும்பான்மையானவை ஒழுங்களை மீறுவனவாகவே அமையும். அப்படி இருக்கையில் சித்தசுவாதீனம் உள்ள மனிதரின் மனங்களில் அனைத்தும் ஒழுக்கங்களின் பிரகாரம் மட்டுமே நிகழும் என்று நினைப்பது சாத்தியமற்றது.

இந்தக்கதை ஒருவேளை சோபாசகத்திக்கு நிகழாது, இது வாக்குமூலமாக அல்லாது, திரு குடும்பம் உண்மையில் இல்லாது, வெறும் கற்பனையில் நிகழ்ந்ததாகக் கூட இருக்கலாம். இது ஒருவேளை சோபாசக்தியின் கவனிப்புப் பெறுவதற்கான தற்கொலைத்தாக்குதல் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு பேசப்பட்ட விடயம் சமூகத்தில் இல்லாது இல்லை. 

நன்றி இன்னுமொருவன்

உங்கள் பார்வையின் பெரும்பான்மையான நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இந்தச் சம்பவத்தை சமூக வெளிக்குள் நகர்த்தி அதன் இருட்டுப் பக்கத உணர்வது என்பதில் உடன் பாடு இல்லை. ஏனேனில இக்கதையில் ஒரு புத்திசாலித்தனம் உளவியல் கேம் ஆடியிருந்தால்... என்றோரு சந்தேகம் விசாரணைக் கோணத்திலேயே இக்கதையை அணுக என்னை தூண்டுகின்றது. சந்தேகத்துக்கு உட்பட்ட எதுவும் சமூகத்தின் எந்தப் பக்கத்தையும் அடயாளப்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பம் இல்லை.  

மேலும் கதையை விட உங்கள் பதிவினூடாக நிறைய சிந்திக்க முடிந்தது. அந்தவகையில் உங்களுக்கு நன்றி. அடிக்கடி எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎/‎03‎/‎2017 at 2:27 AM, சண்டமாருதன் said:

சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை யாரும் எழுதக் கூடாது என்பது எனது கருத்தல்ல. இதை இருட்டுப் பக்கத்திற்கு அடயாளப்படுத்துவது தான் ஏற்புடையதல்ல என்பதே எனது கருத்து. இந்த சம்பவத்தின் ஊடாக சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை நாம் புரிந்துகொள்ளதில் உடன் பாடு இல்லை. 

சம்மந்தப்பட்டவர் பாலிலயல் வரட்சிக்கு உட்பட்டவர் இல்லை. அவருக்கு பெண் உடல் முன்போல் ஈர்பதில்லை என்றும் கூறுகின்றார். சிறுமியின் தகப்பன் பாலியல் ரீதியான அத்துமீறலை செய்து அதற்கு நபர் தண்டனையும் வழங்கியுள்ளார். சம்மந்தப்பட்டவர் பாலியல் சார்ந்த நூல்களைப் படித்துள்ளார். சம்மந்தப்பட்டவருக்கு தூக்கத்தில் ஸ்கலிதமாகியதையும் சொல்லியுள்ளார். காந்திக்கு எழுபது வயதில் நடந்ததை உதாரணமா கூறியுள்ளார். 

சம்மந்தப்பட்டவர் சிறுமியைய வன்புணர்வுக்கு உட்படுத்தவில்லை. எதுவிதமான துஸ்பிரயோகமும் செய்யவில்லை. சிறுமிக்கு எதுவும் தெரியாது. சிறுமியால் உணரப்படவில்லை. சட்டட ரிதியில் எந்த சிக்கலுக்குள்ளும் இந்த சம்பவம் செல்லாது. சிறுமி இறுக்காவிட்டால் இந்த சம்பவம் வெளிவந்திருக்குமா இல்லையா என்பது சந்தேகமே !

இந்த சம்பவத்தில் சிறுமி நபர் மடியில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பது தெரியாது. அது குறித்த குறிப்பு இல்லை. இவர் உடலில் மாறுதல் ஏற்படும் போது வாஷ்ரூம் போகவேணும் என்று சந்தர்ப சூழலை மாற்ற முனையவில்லை. 

இங்கே குற்றம் ? அல்லது குற்ற உணர்வை முன்வைப்பது அதை நியாயப்படுத்துவதற்கான பின்புலக் காரணங்களை விபரிப்பது ஏன் நடந்தது என்று சிந்திப்பது காறித்துப்பி தனக்குத் தானே தண்டிப்பது என அனைத்தும் நபரே செய்கின்றார்  விரும்பினால் குற்றவாளியும் அவரே நீதிபதியும் அவரே. வாசகனுக்கு இங்கே மிச்சம் இருப்பது எதுவும் இல்லை. 

தீவிரமான பாலியல் வரட்சிக்கு உட்பட்டு. விரக்கதி பாதிப்புகளை பின்புலத்தில் சந்தித்து குற்ற உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அது உளவியல் சார்ந்தோரல் ஆரயப்பட்டு அதை நாம் அறியும் பட்சத்தில் அதன் புரிதல் வேறு. இந்தச் சம்பவத்தின் புரிதல் வேறு.

இதை ஒரு சமூக இருட்டை அடயாளப்படுத்தும் விளக்கக அதைக் கொண்டு தேட முற்படின். இருட்டுக்குள் ஒருவர் நபர் போலவே நிற்பார். என்ன செய்ய முடியும் ? ஐயோ பாவம் என்று விட்டு திரும்ப வேண்டியதுதான்.

இதிலிருந்து சுதாரித்துக்கொள்வதானால் குடும்பத்தில் தந்தையின் நண்பர்கள் வரும்போது பெண் குழந்தைகளை "அங்கிள் வாரர் ஓடி ஒழிந்துகொள்ளுங்கள் "  என்பது போல் ஆகிவிடும்.

இது சமூக்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு அல்லது அடயாளம் என்பது ஒரு விபரீதத்தை ஆமோதிப்பதாகும். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற எங்கள் வழக்கும் அன்பு பாசம் நட்பு நண்பன் என்ற மானுடத்தின் உயர்ந்த குணங்களும் நிர்மூலமாகும். விதிவிலக்குகள் விதிகளாக அடயாளப்படுத்த முடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

மற்றபடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் உண்டு. அவைகளை உள்வாங்கிக் கொள்கின்றேன். 

 

நன்றி இன்னுமொருவன்

உங்கள் பார்வையின் பெரும்பான்மையான நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இந்தச் சம்பவத்தை சமூக வெளிக்குள் நகர்த்தி அதன் இருட்டுப் பக்கத உணர்வது என்பதில் உடன் பாடு இல்லை. ஏனேனில இக்கதையில் ஒரு புத்திசாலித்தனம் உளவியல் கேம் ஆடியிருந்தால்... என்றோரு சந்தேகம் விசாரணைக் கோணத்திலேயே இக்கதையை அணுக என்னை தூண்டுகின்றது. சந்தேகத்துக்கு உட்பட்ட எதுவும் சமூகத்தின் எந்தப் பக்கத்தையும் அடயாளப்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பம் இல்லை.  

மேலும் கதையை விட உங்கள் பதிவினூடாக நிறைய சிந்திக்க முடிந்தது. அந்தவகையில் உங்களுக்கு நன்றி. அடிக்கடி எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

 

உந்த சம்பவம் அவரின்ட மனதை உறுத்தியிருக்கும்...யாருக்காவது சொல்லோனும் என்று நினைச்சிருப்பார்...எழுத்தாற்றல் இருப்பதால் எழுதி தன்ட மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/03/2017 at 4:56 AM, சண்டமாருதன் said:

அவருக்கு குற்ற உணர்வு இருப்பின் மன வள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் தவிர அவரின் இப் பதிவு சமூகத்தின் இருட்டுப்பக்கங்களை பார்பதற்கு வழிசெய்கின்றது எனபதற்கில்லை. அலலது சமூகத்தின் இருட்டுப்பக்கங்கள் இப்படியானது என்று இருட்டின் இயல்பாகவும் இதைக் கருத முடியாது. சமூகத்தில் அங்காங்கே நடக்கும் நடைமுறையில் இருந்து விலகிய செயற்பாடுகளை சமூகத்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு என சொல்வதற்கில்லை

 

On 18/03/2017 at 10:39 AM, Innumoruvan said:

. ஒரு வேளை ஒரு இலக்கிய ஜாம்பவானின் மனத்தில் கற்பனையின் வீச்சு என்னைப் போன்ற சாதாரண மனிதர் புரியமுடியாப் பரிமாணத்தில் இருக்கலாம்.

 பிராண்ஸில் வெளியான‌ குறும்பட‌ வட்டத்தில் உள்ளவ்ர்களின் மத்தியில் உருவாக்கி வைத்துள்ள‌ விமபமும் தமிழ்ர்களின் இலக்கிய மட்டத்தில் உருவாக்கிய விம்பமும் வேறு வேறாக  இருக்கும் என்பது எனது கணிப்பு....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.