Jump to content

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்: மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்


Recommended Posts

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்: மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்

 

 
ஓ. பன்னீர்செலவ்வம்(இடது), வி.கே.சசிகலா( வலது). | கோப்புப் படம்.
ஓ. பன்னீர்செலவ்வம்(இடது), வி.கே.சசிகலா( வலது). | கோப்புப் படம்.
 
 

அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார்.

அதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், சசிகலாதான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து, 70 பக்கங்கள் கொண்ட பதிலை வழக்கறிஞர்கள் மூலம் சசிகலா அனுப்பினார். அதில், அதிமுக சட்ட விதிகளின்படியே பொதுச் செயலாளர் நியமனம் நடந்ததாகவும், தன்னை முன்மொழிந்தவர்களே இப்போது எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சசிகலாவின் பதிலுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 61 பக்கங்கள் கொண்ட விளக்கத்தை தயாரித்தனர். அதை தேர்தல் ஆணையத்திடம் மைத்ரேயன் எம்.பி. 14-ம் தேதி வழங்கினார்.

'பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சி பொதுக் குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ கிடையாது. தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை. எனவே, சசிகலா நியமனம் செல்லாது. விதிகளை மாற்றுவதற்கு மட்டுமே பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என அதிமுக விதிகளில் கூறப்பட்டுள்ளது' என விளக்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் இன்று (புதன்கிழமை) நேரில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ''அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்தோம்.

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்'' என்றார்.

இந்நிலையில், இரு தரப்பினரின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-பொதுச்-செயலாளர்-விவகாரம்-மார்ச்-20ம்-தேதிக்குள்-முடிவை-அறிவிப்பதாக-தேர்தல்-ஆணையம்-தகவல்/article9585140.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

 

 

இரட்டை இலை சின்னம் வேண்டும்: தேர்தல் கமிஷனில் பன்னீர் வாதம்

 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும்' என, தேர்தல் கமிஷனில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பினர் வாதிட்டு
உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலராக, அவரது தோழி சசிகலா பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நடந்த அரசியல் மாற்றங்களால், அ.தி.மு.க., இரண்டாகப் பிரிந்தது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவானது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. தன் உறவினரான தினகரனை, கட்சியின் துணைப் பொதுச் செயலராக அறிவித்துவிட்டு, பெங்களூரு சிறைக்கு சென்றார் சசிகலா.

கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். அதற்கு சசிகலா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அந்த பதில் மீதும், தன் தரப்பு விளக்கத்தை பன்னீர்செல்வம் தரப்பு அறிக்கையாக தாக்கல் செய்தது.

அறிக்கை தாக்கல்

இந்த சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், மூத்த நிர்வாகிகள் மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர், தலைமை தேர்தல்
கமிஷனர் நசீம் ஜைதியை, டில்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது, மிக விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டதாவது:

அ.தி.மு.க.,வில் பொதுச் செயலரை, தேர்தல் நடத்தி, அனைத்து அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வர். கட்சியில், இடைக்கால பொதுச் செயலர் என்ற பதவியே கிடையாது. அந்தப்
பதவிக்கு சசிகலாவின் பெயர் அறிவிக்கப்பட்டதே தவிர, அவரை தேர்ந்தெடுக்கவில்லை. அதனால், சசிகலா பதவியேற்றது செல்லாது என, அறிவிக்க வேண்டும்.

கட்சியின் விதிகளின்படி, பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்தி, புதியவரை தேர்வு செய்யும் வரை, அடுத்த மூத்த நிர்வாகிதான், பொதுச் செயலர் பொறுப்பை ஏற்று நடத்த முடியும்; அதன்படி, அவைத் தலைவர் தான் கட்சியை நடத்த முடியும்.இடைக்கால பொதுச் செயலராக சசிகலா பதவியேற்றது, செயல்படுவது செல்லாது. இந்த நிலையில், அவர் பல்வேறு நியமனங்கள் செய்தும், சிலரை கட்சியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவுகளும் செல்லாது என, அறிவிக்க வேண்டும்.

அதிகாரம்

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. அதில், கட்சியின் வேட்பாளரை அவைத் தலைவர் தான் தேர்ந்தெடுக்க முடியும். கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும், கட்சி சின்னமான இரட்டை இலையை ஒதுக்கும் அதிகாரம் எங்களுக்கே தரப்பட வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

மார்ச் 20க்குள் முடிவு

சசிகலாவின் பதவியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, அதற்கு அளிக்கப்பட்ட பதில் வந்துள்ள நிலையில், இந்தப் பிரச்னையில், வரும், 20ம் தேதிக்குள் தன் முடிவை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது; இதை தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

ஏட்டிக்குப் போட்டி

பன்னீர்செல்வம் தரப்பினர், தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்துள்ள நிலையில், ஏட்டிக்கு போட்டியாக, சசிகலா தரப்பினரும், அவரை சந்திக்க அவகாசம் கேட்டுள்ளனர்.லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், சசிகலா தரப்பினர், நசீம் ஜைதியை இன்று சந்திக்க உள்ளனர்.

பா.ஜ.,வுடன் கூட்டணியா?

தலைமை தேர்தல் கமிஷனருடனான சந்திப்புக்கு பின், பன்னீர்செல்வம் கூறியதாவது:

சசிகலா இடைக்கால பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார்; தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியின் சட்டவிதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. அதன்படி, கட்சியின் பொதுச் செயலருக்கு உள்ள அதிகாரங்களை சசிகலா பயன்படுத்த முடியாது. புதிய நிர்வாகிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ளவர்களை நீக்கவோ, அவருக்கு அதிகாரம் கிடையாது.

அதேபோல் பொதுச் செயலர் பதவி காலியாக இருந்தால், புதியவரை தேர்ந்தெடுக்கும் வரை, கட்சியின் அடுத்த மூத்த தலைவரே, கட்சியை வழிநடத்த வேண்டும். அதன்படி, அவைத் தலைவர் தான் கட்சியை வழிநடத்த வேண்டும். இதையே தலைமை தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்தினோம்.

அதன்படி, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில், கட்சி வேட்பாளரை அறிவிக்கவும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் எங்கள் தரப்புக்கே அதிகாரம் உள்ளது என்பதை திட்டவட்டமாக, தகுந்த ஆதாரங்களுடன் கூறியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ''எங்கள் கட்சித் தலைமை அதை
முடிவு செய்யும். விரைவில் நல்ல செய்தி வரும்,'' என, பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1731152

Link to comment
Share on other sites

இரட்டை இலை சின்னம் யாருக்கு? - இரு அணிகளையும் விசாரணைக்கு அழைத்தது தேர்தல் ஆணையம்

பதிவு: மார்ச் 17, 2017 19:39

 
 

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை, இரு அணிகளிடமும் 22-ம் தேதி விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 
 
 
 
இரட்டை இலை சின்னம் யாருக்கு? - இரு அணிகளையும் விசாரணைக்கு அழைத்தது தேர்தல் ஆணையம்
 
புது டெல்லி:

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இதனையடுத்து சசிகலா நியமனம் தொடர்பாக மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவெடுக்க உள்ளதாக தேர்தல் ஆணையமும் அறிவித்தது.

அதேசமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது. ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனோஜ் பாண்டியன் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார்.

EF297B41-EEDE-4D0A-B98E-42A8AAC1ECBF_L_s

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது 22-ம் தேதி முடிவு செய்யப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வருகின்ற 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் ஆஜராக வேண்டும்.விசாரணைக்குப்பின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது அன்றிரவே முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/17194011/1074404/Election-Commission-called-admk-both-teams-to-decide.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.