Jump to content

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு


Recommended Posts


‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு
 

article_1489560285-article_1479829865-prதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது.   

சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட ‘கால அவகாசம்’ வழங்குவது தொடர்பில் ஒரு வகையிலான இணக்கம் காணப்பட்டுள்ளது.  

‘காலஅவகாசம்’ வழங்குவது தொடர்பிலான உரையாடல்களில் ஆரம்பம் முதலே ஈ.பி.ஆர்.எல்.எப் தன்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை.   

article_1489561988-01-new.jpg

வவுனியாச் சந்திப்பிலும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் மாகாண சபை உறுப்பினர்களும் அதே நிலைப்பாட்டில் இருந்தனர். சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்கிற விடயத்தை ஊடகக் குறிப்பிலும் இடம்பெறச் செய்திருக்கின்றார்கள்.   

ஆனால், காலஅவகாசம் வழங்குவது தொடர்பிலான உரையாடல்களில் ஆரம்பத்தில் எதிர்வினையாற்றிய பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ‘காலஅவகாசம்’ என்கிற பதத்தினை நீக்கிவிட்டு, காலஅவகாசம் வழங்குவதற்கு இணங்கியிருக்கின்றார்கள்.  

வவுனியாச் சந்திப்பு இரண்டு விடயங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றது. ‘முக்கிய தீர்மானமொன்றைத் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான, வாதப்பிரதி வாதங்களின் பின்னர் எடுத்திருக்கின்றோம்’ என்று நிரூபிப்பதற்காகவும் ‘கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடம் எப்போதுமே ஆளுமையோடு இருந்து வருகின்றது’ என்று நிரூபிப்பதற்காகவும் ஆகும்.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற விடயத்தில் தமிழ்த்தேசியப் பரப்புக்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை.

ஆனால், கடந்த 16 மாதங்களில் இலங்கை அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பெரும் ஏமாற்றமான நிலையே இருக்கின்றது. அப்படியான நிலையில், மீண்டும் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்குவது தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளைக் கலைந்து போகச் செய்துவிடும் என்கிற உணர்நிலை இருக்கின்றது. அதனை முழுமையாக நிராகரித்துவிடவும் முடியாது.  

ஆயினும், அரசியல் என்பது சந்தர்ப்பங்களைக் கையாள்வதும், தக்க வைப்பதும் என்கிற ரீதியில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில்தான் வெற்றி தங்கியிருக்கின்றது.

அதன்போக்கில், இலங்கையைச் சர்வதேச தீர்மானம் ஒன்றினூடாகத் தொடர்ந்தும் பிடித்து வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.

இலங்கை அரசு திமிறி ஓடினாலும் அது இணங்கிய விடயம் சார்ந்து சர்வதேச சதிராட்டத்துக்குள் சிக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் மறுதலிக்க முடியாதது. அதன்போக்கிலேயே கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் பீடத்தினால் ‘கால அவகாசம்’ பற்றிய விடயம் கையாளப்பட்டிருக்கிறது.

article_1489562017-6257-new.jpg 

பொறுப்புக் கூறலுக்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் பிரித்தானியா தீர்மானமொன்றை கொண்டு வரப்போகின்றது என்கிற விடயம் அறிவிக்கப்பட்டதும், கூட்டமைப்பின் பேச்சாளரும் சர்வதேச விவகாரங்களைக் கையாள்பவருமான எம்.ஏ.சுமந்திரன், அவசர அவசரமாக ஜெனீவா சென்றார்.   

அங்கு, பிரித்தானியத் தீர்மானம் தொடர்பில் அவர், 2015 செப்டெம்பர் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் எந்தச் சரத்தும் மாற்றப்படக் கூடாது என்பதோடு, கால அவகாசத்துக்கான வரையறை மற்றும் அதுசார் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு என்பன அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.   

எனினும், கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடம், எந்தவித கலந்தாய்வும் இன்றி கால அவகாசம் வழங்குவதற்கு இணங்கிவிட்டது என்கிற விடயம் மேல் மட்டத்துக்கு வந்தது. அதே தருணத்தில், தென்னிலங்கை சில சிவில் அமைப்புகளினாலும் இலங்கையின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக கண்காணிப்புடன் கூடிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்கிற விடயம் சார்ந்து ஐக்கிய நாடுகளுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கப்பட்டது.   

அந்த விண்ணப்பத்தில் என்ன விடயம் எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியாமலேயே பலரும் கையெழுத்திட்டு சிக்கிக் கொண்டு முழித்தார்கள். அந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தருணத்திலேயே சுமந்திரன் ஜெனீவாவில் காலஅவகாசத்துக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு வந்திருந்தார்.  

ஏற்கெனவே, கால அவகாசத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், அவசர அவசரமாகத் தம்மைச் சுற்றவாளிகள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.  

 அதன் தொடர்ச்சியே, கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கால அவகாசத்துக்குத் தம்மால் இணங்க முடியாது என்று தெரிவித்து, ஐக்கிய நாடுகளுக்கும் இராஜதந்திர வட்டாரங்களுக்கும் கடிதம் எழுத வைத்திருக்கலாம். (11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற விடயத்திலேயே குழப்பம் நீடிக்கின்றது. சிலர் தாம் கைச்சாத்திடவில்லை என்றும் வாதிட்டார்கள். இறுதியில் எட்டுப்பேர் என்று சொல்லப்பட்டது.)  

16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கூட்டமைப்பில் 11 உறுப்பினர்கள் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ(!) தீர்மானத்துக்கு எதிராக இருக்கின்றார்கள் என்கிற விடயம், உட்கட்சி ஜனநாயகம் சார்ந்த விடயமாக மாறியது. அதனை, மாற்றுத் தரப்புகள் எடுத்துக் கையாள ஆரம்பித்ததும் சம்பந்தனும் சுமந்திரனும் ஆரம்பத்தில் சற்று அரசியல் யதார்த்தம் பேசிக் கையாள நினைத்தார்கள்.

ஆனால், அது, ஊடகங்களிலும் சிவில் சமூகத் தளத்திலும் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடத்துக்கு எதிரான முக்கிய துரும்பாகக் கையாளப்பட ஆரம்பித்ததும் தங்களுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டி வந்தது. அதன்போக்கிலேயே, வவுனியாச் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் அவர்கள் வென்றும் இருக்கின்றார்கள்.  

சுமந்திரன், அடிக்கடி கூறி வருகின்ற விடயம், “லேபிள்கள் முக்கியமல்ல; உள்ளடக்கமே முக்கியம். அரசியல் தீர்வு விடயத்திலும் ‘சமஷ்டி’ என்கிற சொல் முக்கியமல்ல; அதன் உள்ளடக்கம், அதாவது அதிகாரப் பங்கீட்டின் அளவே முக்கியம்” என்று. இப்போதும், அவர் அதனையே செய்திருக்கின்றார். ‘காலஅவகாசம்’ என்கிற பதத்தினை நீக்கிவிட்டு, கால அவகாசத்துக்கு இணங்கச் செய்திருக்கின்றார்.  

ஆனால், வவுனியாச் சந்திப்புச் சார்ந்து இன்னமும் இருக்கின்ற விமர்சனம், கூட்டமைப்பின் முக்கிய தீர்மானமொன்றை எடுக்கின்ற போது, பங்காளிக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது.

அந்தவகையில், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைமையை தவிர்த்திருப்பது ஏற்புடையதல்ல. அதற்காகவே, ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டமாக அதுநடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது. இது, உண்மையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரனை மேலும் மேலும் கோபப்படுத்தி அகற்றுவதற்கான போக்கிலானது.  

இப்போது இருக்கின்ற இன்னொரு கேள்வி, கால அவகாசம் வழங்குவதற்குத் தாம் இணங்கவில்லை என்று ஏற்கெனவே கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள் என்பதேயாகும். ஏனெனில், அவர்களின் நிலைப்பாடு இப்போது மாறியிருக்கின்றது. இங்கு நிலைப்பாட்டு மாற்றம் என்பது அவர்களின் ஆளுமை சார் விடயத்திலும் முக்கிய தாக்கம் செலுத்தும்.   

அது, கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடம் என்று தொடர்ச்சியாக சொல்லப்படும் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் முன்னால் இவர்களினால் நின்று பிடிக்க முடியவில்லை என்பது சார்ந்தது.

இது, கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. ஆளுமை சார் அரசியலே தமிழ்த் தேசியப்பரப்பு வேண்டி நிற்பது. அப்படியான நிலையில், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.  

அரசியல் தலைமைகள் மீது மக்கள் என்றைக்குமே அதீத நம்பிக்கைகளை வெளிப்படுத்தியதில்லை. விமர்சனங்களோடு மட்டுமே அணுகி வந்திருக்கின்றார்கள்.   

அப்படிப்பட்ட நிலையில், மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இடையிலான வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பிலான விடயமொன்று முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வெற்றிடத்தினை சிவில் சமூக அமைப்புகளினாலும் செயற்பாட்டாளர்களினாலும் நிரப்ப முடியும்.

ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் அந்த இடைவெளி அப்படியேதான் இருக்கின்றது. அண்மைய நாட்களில்தான் மாணவர்களும் ஊடகவியலாளர்களும் அதனை நிரப்ப முயற்சிக்கின்றார்கள்.  

article_1489562069-new.jpg

சிவில் சமூக அமைப்புகளினாலும் செயற்பாட்டாளர்களினாலும் அந்த இடைவெளியை ஏன் நிரப்ப முடிவில்லை என்கிற கேள்வி எழலாம்; பதில் இலகுவானது. இங்கு பெரும்பாலான சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகள் போலலே செயற்பட எத்தனிக்கின்றார்கள்.

மக்களை அறிவூட்டுதல் என்கிற விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்கள் அரசியல் யதார்த்தங்களைப் புறந்தள்ளி, மக்களினால் இலகுவாக எழுப்பக் கூடிய கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாமல், அதி சிக்கலான அல்லது விளங்கிக் கொள்ள முடியாத வகையில் விடயங்களைக் கையாள்கின்றார்கள்.   

அத்தோடு, நேருக்கு நேரான மோதல் தன்மையொன்றைஅரசியல்வாதிகளோடு நடத்த எத்தனிக்கின்றார்கள். அப்போது, அவர்களும் அரசியல்வாதிகள் போலவே நடந்து கொள்கின்றார்கள்.

அண்மையில், யாழ். ஊடக அமையத்தில் பேசிக் கொண்டிருந்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரனின் ஒரு மணித்தியாலம் நீண்ட பேச்சிலும் அதனையே உணர்ந்து கொள்ள முடிந்தது.  

ஜெனீவா அரங்கு மீண்டும் திறந்திருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியப் பரப்புக்குள்ளும் அதுசார் அரங்கேற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன.

ஆனால், தனிப்பட்ட ரீதியில் சிலரினால் வெற்றிகள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற நிலை தாண்டி, மக்களினை அறிவூட்டி விடயங்களை சாத்தியப்படுத்த முடியவில்லை என்கிற விடயம் தோல்வியின் பக்கத்திலேயே இருக்கின்றது.

அந்தத் தோல்விக்கு அரசியல் தலைமைகள் மாத்திரமல்ல, சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் ஊடகங்களும் முக்கிய கர்த்தாக்களாகும்.  

- See more at: http://www.tamilmirror.lk/193246/-க-ல-அவக-சம-வழங-க-ய-வவ-ன-ய-சந-த-ப-ப-#sthash.eEpqnvN2.dpuf

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.