Jump to content

வாழும் வரை போராடு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எலி ஒன்றுக்கு யானைப் பசி.

வளையில் இருந்து, உணவு தேடக் கிளப்பியது.

அதன் துரதிஷ்ட்டம் ஒரு காக்கைக்கும் யானை பசி... அதுவும் உணவு தேடி கிளம்பி, பறந்து வந்தது.

இருவரதும் துரதிஷ்ட்டம் ஒன்றை ஒன்று கண்டு கொண்டன.

வளையில் புகுந்து தப்பலாம், ஆனாலும் நெடு தூரம் ஓட வேண்டும். அத்ற்கு முன்னரே, காக்கா தூக்கி கொண்டு பறந்து விடும்.

எலி வளைக்குள் ஓடி ஒழியுமுன்னரே லபக்கென்று கெவ்விக் கொண்டோட காக்கா தயாரானது.

பார்த்தது எலி. பயந்து ஓடினால் உயர் தப்பிக்க வழி இல்லை. 

சாவு நிச்சயம் தான். ஆனாலும் போராடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தது.

ஓடாமல் எதிர்த்து உறுதியுடன் நின்றது. 

ஆகா... திரத்திப் பிடிக்கும் வேலை இல்லாது, அப்படியே பயத்தில் நிக்கிறதே என்று மகிழ்வுடன் சாவகாசமாக அருகில் வந்தது காகம்.

அவ்வளவு தான். ஒரே பாய்ச்சலில் காகத்தின் அலகினை கெவ்விக் பிடித்துக் கொண்டது எலி.

பிடியை விடடால், உயிர் காலி. பிடியினை விடுவிக்காவிடில் காகமும் காலி.

பல மணி நேர ஜீவ மரணப் போராடட்ம.

இறுதியில் மனிதர்கள் தலையீட்டில் இரண்டுமே தப்பி செல்கின்றன.

அதுதான்... சரணடைந்து உயிருடன் அடிமையாக இருப்பதிலும், சண்டையிட்டு உயிரை விடுவதே மேல்.

கீழே உள்ள லிங்கினை அழுத்தி வீடியோவைப் பாருங்கள்.

https://www.vibby.com/watch?vib=m1_yapcr7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

ஏற்கனவே பாத்திட்டன் 

இந்த மாதிரி ஒரு கதை முன்னோட்டம் உடன் பார்த்திருக்க மாட்டியளே...

ஏனெண்டா, இப்ப தான் எழுதி பதிந்தேனே.. ஹி ...ஹீ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   நல்ல படிப்பினையாக பகிர்வு ....நன்றி . 

வலையில் (net ) என்பதை   வளை  யில் (எலிப்பொந்து ) என திருத்தி விடவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

   நல்ல படிப்பினையாக பகிர்வு ....நன்றி . 

வலையில் (net ) என்பதை   வளை  யில் (எலிப்பொந்து ) என திருத்தி விடவும். 

மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு படிப்பினைக் கதை ...நாதம்!

அது சரி...காகம் ஏன் பறக்க முயற்சிக்கவில்லை?

காகம் பறக்கும் போது..ரன்வேயில் ஓடித்தான் பறக்க வேண்டும் இல்லை!

இருந்த இடத்திலிருந்தே மேலெழுந்து அதனால் பறக்க முடியும் என நினைக்கிறேன்!

தமிழ்ப்படம் மாதிரி..முடிவு சப்பெண்டு போட்டுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

நல்ல ஒரு படிப்பினைக் கதை ...நாதம்!

அது சரி...காகம் ஏன் பறக்க முயற்சிக்கவில்லை?

காகம் பறக்கும் போது..ரன்வேயில் ஓடித்தான் பறக்க வேண்டும் இல்லை!

இருந்த இடத்திலிருந்தே மேலெழுந்து அதனால் பறக்க முடியும் என நினைக்கிறேன்!

தமிழ்ப்படம் மாதிரி..முடிவு சப்பெண்டு போட்டுது!

 

காலுக்கில அமத்தி, அடிக்கலாம் என்று வந்திருப்பார். 

பறக்க முடியாமைக்கு பாரம், காரணமாக இருக்கலாம். 

எதிர்பாரா அதிர்ச்சி, முதலுக்கே மோசம்... பிச்சைவேண்டாம் நாயை பிடி கதையாய் போட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

இது எலியா அல்லது எலியா:unsure:

இது எலியா இல்லை ஏலியனா என்று கேட்க்கிறீர்களா   tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இந்த மாதிரி ஒரு கதை முன்னோட்டம் உடன் பார்த்திருக்க மாட்டியளே...

ஏனெண்டா, இப்ப தான் எழுதி பதிந்தேனே.. ஹி ...ஹீ.

நந்தர்! கதையை வேறை விதமாய் யோசிச்சு பாத்திட்டார் போலை கிடக்கு:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நந்தர்! கதையை வேறை விதமாய் யோசிச்சு பாத்திட்டார் போலை கிடக்கு:grin:

அரசியலுக்குள்ள இருந்த ஒரு விடயத்தினை... சமூக சாளரத்தினுள் கொண்டு வர, 'இன்னாடா இது... எங்கோயோ பார்த்தமே, வேற மாதிரி வருதே' என்று நந்தனார் கொளம்பீட்டார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இது எலியா இல்லை ஏலியனா என்று கேட்க்கிறீர்களா   tw_blush:

 

நன்றி சகோதரி சுட்டிக்காட்டியதற்க்குtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டு பகுதியுமே வெல்லாத படியால்... உங்கள் முதுழொழி பொருந்தாது.

ஆகவே தலைப்பை மறுபடி பிரியத்துடன் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் இருக்கு ஆனால் சுத்தினின்று கரையிற காகங்கள் எல்லாம் நம்ம இனம்போல , சேர்ந்து வந்து குந்தியிருந்தால் எல்லாக் காகமும் பசியாறி இருக்கும்....! :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.