Jump to content

டில்லியில் இன்று நசீமை சந்திக்கிறார் பன்னீர்: பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை


Recommended Posts

டில்லியில் இன்று நசீமை சந்திக்கிறார் பன்னீர்:
பொது செயலர் விவகாரத்தில் இறுதி விசாரணை
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், நாளை மனு தாக்கல் துவங்க உள்ளதால், அ.தி.மு.க., பொதுச் செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்பதை, விரைவாக அறிவிக்கும்படி, தலைமை தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து வலியுறுத்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், இன்று டில்லி செல்கிறார்.

 

Tamil_News_large_173033020170314230943_318_219.jpg

அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, தேர்தல் நடத்தி, கட்சி உறுப்பினர்களால், பொது செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், சசிகலா அவ்வாறு தேர்வு செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகள்மேலும், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவர், கட்சியில் ஐந்து ஆண்டுகள்
உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அந்த தகுதியும் அவருக்கு இல்லை.

சசிகலா, 2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, 2012ல் மீண்டும் சேர்க்கப்பட்டார். அவர் அடிப்படை உறுப்பினராகி, ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறாததால், அவர் பொதுச் செயலராக முடியாது.எனவே, அவர் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர்செல்வம் அணியினர், ராஜ்ய சபா,எம்.பி., மைத்ரேயன் தலைமையில், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர். அதை ஏற்ற தேர்தல் கமிஷன், பதில் அளிக்கும் படி,

சிறையில் உள்ள சசிகலாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சார்பில், துணை பொதுச் செயலர் தினகரன், பதில் அனுப்பினார். அதை, தேர்தல் கமிஷன் ஏற்க மறுத்துவிட்டது.

அதை தொடர்ந்து, 10ம் தேதி, 70 பக்கங்கள் கொண்டபதில் மனுவை, தேர்தல் கமிஷனுக்கு, சசிகலா அனுப்பினார். அதை, புகார்தாரர் என்ற அடிப்படை யில், மைத்ரேயனுக்கு அனுப்பி, அதற்குரிய விளக்கத்தை, 14க்குள் அனுப்பும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
 

மனு தாக்கல்


அதன்படி, மைத்ரேயன் உள்ளிட்டோர், நேற்று டில்லி சென்று, தேர்தல் கமிஷனில், 61 பக்க விளக்கத்தை அளித்தனர். சசிகலா அளித்த பதில் ஒவ்வொன்றும் தவறானது என, ஆதாரங்களுடன் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுமா, செல்லாதா என, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்காத நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.

தேர்தலில், சசிகலா அணியினரும், பன்னீர் அணியினரும் களமிறங்க முடிவு செய்துள்ளனர். சசிகலா நியமனம் செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், பன்னீர் அணியினர் கை ஓங்கும்.
மேலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழும். எனவே, விரைவாக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரியும், இரட்டை இலை சின்னம் கோரியும், தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்க, பன்னீர் அணியினர் முடிவு செய்தனர்.

அதன்படி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அவரது ஆதரவாளர்கள், இன்று

 

காலை, 6:15 மணிக்கு,விமானம் மூலம் டில்லி செல்கின்றனர். மதியம், 12:00 மணிக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்திக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, விஸ்வநாதன், ராஜ்யசபா, எம்.பி., மைத்ரேயன், முன்னாள், எம்.பி., மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, பாண்டியராஜன், எம்.பி.,க்கள் சுந்தரம், அசோக்குமார் ஆகியோரும் செல்கின்றனர்.
 

சசி அணியும் தீவிரம்!


அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தால் மட்டுமே, கட்சியையும், ஆட்சியையும் தக்க வைக்க முடியும் என்பதை, சசிகலா குடும்பத்தினர் அறிந்து உள்ளனர். எனவே, பன்னீர்செல்வம் அணியினருக்கு சாதகமாக, தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து விடாமலிருக்க, சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர், டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1730330

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.