Jump to content

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை?


Recommended Posts

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை?

   பன்னீர்செல்வம்       

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க பொதுச்செயலாளராக  சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல்ஆணையத்திடம் கொடுத்துள்ள புகார்தான் தமிழக அரசியலில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.'அ.தி.மு.க-வில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருப்பவரை மட்டுமே கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்' என்ற கட்சியின் விதிகளை ஓ.பி.எஸ். அணி தங்களின் புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் புகாருக்கு பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டார். எனினும் அந்த நோட்டீசுக்கு சசிகலா முதலில் பதில் அளிக்காமல், அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் பதில் அளித்தார். அதில், "சசிகலாவை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்தவித சட்டமீறலும் இல்லை. எனவே, சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஓ.பி.எஸ் அணிக்குச் செல்லுமா இரட்டைஇலை?

தினகரன் அனுப்பியிருந்த பதிலைத் தேர்தல் கமி‌ஷன் ஏற்கவில்லை. அ.தி.மு.க நிர்வாகிகளாக ஏற்கெனவே இருப்பவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன், தினகரனின் பதிலை நிராகரித்து விட்டது. இதனால், சுதாரித்துக் கொண்ட சசிகலா தரப்பு, உடனடியாக 70 பக்கத்துக்கு பதில் மனு தயார் செய்து, சிறையில் உள்ள சசிகலா கையெழுத்திட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தது. சசிகலாவின் பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருந்தார் என்ற தகவல் தற்போது கசியத் தொடங்கியுள்ளது."வி..கே. சசிகலாவாகிய நான், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சரியான வழிகாட்டுதல்படியே தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.  கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் என்னைத் தேர்வு செய்தனர். 'என்னை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது' என்று புகார் கொடுத்தவர்கள்தான், கடந்த டிசம்பர் 29-ம் தேதி என்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு முன்மொழிந்தனர். தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதோடு, இந்திய அளவில் பலமான மூன்றாவது பெரிய கட்சியாகவும் இருக்கிறது. கட்சியை விட்டு வெளியேறியவர்களும், வெளியேற்றப்பட்டவர்களும் கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். அவர்கள்தான் இந்தப் புகாரை அளித்துள்ளனர் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று சசிகலா தனது பதிலில் தெரிவித்துள்ளார். 

                                பன்னீர்செல்வம் - சசிகலா                                     

சசிகலா தரப்பு தெரிவித்துள்ள பதிலும், அ.தி.மு.க.-வின் விதிகளும் ஒன்றோடு ஒன்று பொருந்துகிறதா என்றால், அதுவும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள் மூத்த நிர்வாகிகள். "அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து ஐந்தாண்டுகள்  இருந்துள்ள ஒருவர்தான், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு  போட்டியிட முடியும். அவரைத் தேர்வு செய்வது என்பது அடுத்தக்கட்ட நிலை" என்கிறது கட்சி விதி. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, சசிகலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, அப்போது பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். சசிகலாவுடன் அவரது கணவர் நடராஜன், வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின்  உறவினர்கள் வி.என். திவாகரன், டி.டி.வி. தினகரன், பாஸ்கரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் உள்ளிட்ட ஏராளமானோரை ஜெயலலிதா அப்போது கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. தன்னுடைய காலகட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இப்படிப் பலரை நீக்கியிருக்கிறார். 'செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால் மீண்டும் சிலரை, மன்னித்து தாயுள்ளத்தோடு கட்சியில் சேர்த்துக் கொண்டதாக' பின்னர் அறிவிப்பும் செய்திருக்கிறார். நீக்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் போன்றோர் விபரம் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவது வழக்கம்.

2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவை நீக்கி எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக, 2012 மார்ச் 31-ம் தேதி அன்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் மூலம் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பார்த்தால், வரும் 31-ம் தேதி வந்தால்தான் சசிகலா கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடையும். 'சசிகலாவோடு சேர்த்து நீக்கப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை அப்படியே தொடர்கிறது, சசிகலாவை மட்டும்தான் கட்சியில் மீண்டும் சேர்த்துள்ளேன்' என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி பார்த்தால், தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட டி.டி.வி. தினகரன் இல்லை. இப்படிப்பட்ட குழப்பமான நிலையில்தான் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி புகார் அளித்துள்ளது. அந்தப் புகாருக்கு டி.டி.வி. தினகரன் பதில் கொடுத்ததே தேர்தல் கமிஷனிடம் 'ட்ரையல்' பார்த்தது போன்றதுதான். தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டிருந்தாலோ, பெற்றுக்கொண்டு மௌனமாக இருந்திருந்தாலோ சசிகலா நியமனம் செல்லும் என்பதை உறுதி செய்து கொண்டிருக்கலாம். ஆனால், "நாங்கள் சசிகலா பதிலைத்தான் கேட்டோம்" என்று தேர்தல் கமிஷன் அனுப்பிய பதில், டி.டி.வி. தினகரன் அனுப்பிய பதிலைவிட வேகமாக இருந்தது. தினகரனின் பதில் நிராகரிக்கப்பட்ட மறுநிமிடமே சசிகலா தரப்பினரின் சுதி குறையத் தொடங்கி விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அ.தி.மு.க. உள்கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளரை தேர்வு செய்யவோ, நீக்கவோ அவைத் தலைவருக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. அவைத் தலைவர் நினைத்தால், பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்தே இல்லாமல், ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பொதுச்செயலாளரை நீக்கி விடலாம். அப்படி ஒரு நீக்கம் எந்தக் காலத்திலும் நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் மிகவும் நம்பிக்கையானவர்களையே அவைத்தலைவர் பொறுப்பில் வைத்திருந்தார் ஜெயலலிதா. பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்படுவோர், அந்தப் பதவிக்கு வந்ததும், அவர் நினைத்தால், அவைத்தலைவரை மாற்றும் அதிகாரம் உண்டு. அதற்கு யார் கையெழுத்தும் தேவையில்லை. நாவலர் நெடுஞ்செழியன், புலவர் புலமைப்பித்தன் ஆகியோரைத் தொடர்ந்து மதுசூதனன்  அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் பொறுப்பை தற்போது வகித்து வருகிறார். மதுசூதனனையும் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளராக பதவியில் இருப்போர் நீக்கலாம், ஆனால் நீக்குகிறவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளராக இருக்க வேண்டும். தமது நியமனத்தை நியாயப்படுத்தி சசிகலா தரப்பில் அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்துக்கு தேர்தல் கமிஷனில் இருந்து இன்னும் பதில் வரவில்லை. பதில் வர தாமதமாகிற காரணத்தாலேயே சசிகலா தரப்பு இதில் வெற்றி பெற்று விட்டதாகவோ, ஓ.பி.எஸ். தரப்பு தோற்று விட்டதாகவோ கருதமுடியாது. தேர்தல் ஆணையம், இதற்கான பதிலை எப்போது வேண்டுமானாலும் தரலாம். ஆனால், தமிழகத்தில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் கமிஷன் பதிலை அதிக நாளைக்கு தள்ளிப்போட முடியாது... சசிகலா மீது புகார் கொடுத்த ஓ.பி.எஸ்.  தரப்பிடம் இப்போது கட்சியின் சின்னமும், கட்சியும் இல்லை, புகாரில் சிக்கியிருக்கும் சசிகலா தரப்பில்தான் சின்னமும், கட்சியும் இருக்கிறது. கட்சியின் அவைத்தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் கூடி கட்சிக்கு புதிய நியமனப் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அதேவேளையில், கட்சியின் பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, வாக்களித்துதான் தேர்வு செய்ய முடியும். அந்த வாக்களிப்பில் முறைகேடு நடந்துள்ளது என்று பொதுக்குழுவில் வாக்களிக்கும் தகுதியுள்ள ஒருவர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தால் அந்த தேர்தல் செல்லாது என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்க முடியும்.


                                      பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி                     

ஏற்கெனவே, பொதுக்குழு உறுப்பினர்களை மிரட்டியும், கடத்தியும்தான் கையெழுத்து வாங்கி பொதுக்குழுவைக் கூட்டினார்கள் என்று சசிகலா தரப்பினர் மீது பல புகார்கள் தேர்தல் கமிஷனின் பார்வைக்குப் போயிருப்பதால், சசிகலா தரப்புக்கு நூறு சதவீத சிக்கல் உள்ளது. இந்த உள்கட்சி விவகாரம் தெரிந்த காரணத்தாலோ, என்னவோ மதுசூதனன் தரப்பினர் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளனர். மிகவும் இக்கட்டான இந்த காலகட்டத்தில் ஓ.பி.எஸ். அணிக்கு, மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் திரும்ப ஆரம்பித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக, இரட்டை இலை சின்னம்  எந்த அணிக்கு கிடைக்கிறதோ அந்த அணிக்கு சின்னத்தோடு சேர்த்து கட்சியும் வந்து விடும்... ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கு இப்போதுள்ள  சட்ட சிக்கலை மொத்தமாகக் களைய மாதக்கணக்கில் ஆகலாம், ஆனால் அதற்கு இப்போது போதுமான அவகாசம் இல்லை. ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இடைத்தேர்தலில் இரட்டை  இலை யாருக்கு என்று சொல்ல வேண்டிய கட்டாயம் தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டிருக்கிறது. "தேர்தலில் போட்டியிட சின்னம் கண்டிப்பாகத் தேவை. சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னத்தை தேர்தல் கமிஷனே ஒதுக்கி விடுவதால் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை... கோடானகோடி தொண்டர்களை கையில் வைத்திருக்கும் ஒரு கட்சிக்கு, அதன் சின்னம்தான், தொண்டர்களின் வாக்குகளை உறுதி செய்கிறது. சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய, நடைமுறையில் இருக்கும் ஒரு கட்சியின் விதிமுறைகளே தேர்தல் கமிஷனால் பெரும்பாலும் பின்பற்றப்படும்" என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள். அப்படி கட்சி விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், அது  சசிகலா தரப்புக்கு சாதகமான நிலையில் இல்லை என்பதே நடைமுறையில் உள்ள நிஜம்!

http://www.vikatan.com/news/tamilnadu/83624-o-panneerselvam-faction-may-get-aiadmk-party-symbol.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.