Jump to content

பால் சுரக்கும் ஆண்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பால் சுரக்கும் ஆண்கள்.

தாத்தாவை சீண்டி விட்டு 

தாவி ஓடுகையில் தாவிவரும் 

கைத்தடியும் காலில் பட்டுவிட

பாதத்தில் பால் சுரக்கும்.

 

அழுக்கு முந்தானையில்

அதிரசம் முடிந்து வைத்து 

உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு 

என்ற பாட்டியின் பாசத்தில் - என் 

கேசத்தில் பால் சுரக்கும்.

 

கன்னத்தில் நீர் உறைந்திருக்க 

கட்டிலில் தான் படுத்திருக்க 

தான் அடித்த தழும்பில் பரிவுடன்  

தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும்.

 

அண்ணனுக்கு அடித்ததென்று 

கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து 

பாக்கட்டில் பணம் வைக்கும் 

சித்தப்புவிடம் பால் சுரக்கும்.

 

ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி 

விளையாட அக்காவும் அழுதுநிக்க 

அங்குவரும் மாமாவின் கையின் 

கிளுவந் தடியில்  பால் சுரக்கும்.

 

எண்ணை வைக்க அடம்பிடிக்கும் 

என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும்

 நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும்

முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும்.

 

களைத்து வரும் வேளை காத்திருந்து 

முத்தத்தால் முகம் துடைத்து 

கட்டியவள் காப்பிதர இரு 

கண்களிலும் பால் சுரக்கும்.

 

எகிறிவரும் எட்டுவயது மகள் 

பாய்ந்து மார்பினில் ஒட்ட 

பக்குவமாய் பற்றிக் கொள்ளும் 

பத்து விரலும் பால் சுரக்கும்.

 

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்ரை சுய சரிதை போலை கிடக்கு....:)
பழைய நினைவுகளை கிளறிய கவிதை.....tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை பால் சுரக்கும் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையெனும் வீணையின் நரம்புகளை....அனுபவங்கள் எனும் விரல்கள் அழகாக மீட்டியிருக்கின்றன!

விளைவு....சுவியரின் கவிதை!

அழகு...சுவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

கடந்த கால அனுபவங்களை மீட்க வைக்கும் அழகிய கவிதை  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

 மிக மிக அருமை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.3.2017 at 11:08 AM, suvy said:

கன்னத்தில் நீர் உறைந்திருக்க 

கட்டிலில் தான் படுத்திருக்க 

தான் அடித்த தழும்பில் பரிவுடன்  

தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும்.

அருமையான நினைவு மீட்டல், சுவி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதை  

Link to comment
Share on other sites

ஆண்கள் தோற்றத்தில் முரடாயினும் பாசத்தில் மிக மென்மையானவர்கள். பெண்கள் அழுது கரைந்தாலும் ரப்பர் போன்றவர்கள் லேசில் உடைய மாட்டார்கள். ஆண்கள் அன்பு பாசம் போன்றவற்றில் அதிகம் உடைந்துபோவர்கள்.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை சுவி அண்ணா. அப்பாவி ஆண்கள் எங்களுக்காக நாங்கள் தான் எழுதி ஆறுதல் பட வேண்டி இருக்கு

4 hours ago, சண்டமாருதன் said:

ஆண்கள் தோற்றத்தில் முரடாயினும் பாசத்தில் மிக மென்மையானவர்கள். பெண்கள் அழுது கரைந்தாலும் ரப்பர் போன்றவர்கள் லேசில் உடைய மாட்டார்கள். ஆண்கள் அன்பு பாசம் போன்றவற்றில் அதிகம் உடைந்துபோவர்கள்.

 

உண்மை உண்மை உண்மை...!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/03/2017 at 3:40 PM, குமாரசாமி said:

சுவியர்ரை சுய சரிதை போலை கிடக்கு....:)
பழைய நினைவுகளை கிளறிய கவிதை.....tw_thumbsup:

அதே...! அதே ! கு. சா....! அன்று உடலில் வலித்தது , இன்று உணர்வினில் வருடுது....! நன்றி கு. சா...   tw_blush:

On 14/03/2017 at 5:52 PM, ஈழப்பிரியன் said:

எமது வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை பால் சுரக்கும் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

சில நினைவுகள் வீட்டில் தினமும் வடிக்கும் சாதம்போல. எங்கும் நிகழ்ந்திருக்கும்....! நன்றி ஈழப்பிரியன்....!  tw_blush:

On 14/03/2017 at 10:54 PM, புங்கையூரன் said:

வாழ்க்கையெனும் வீணையின் நரம்புகளை....அனுபவங்கள் எனும் விரல்கள் அழகாக மீட்டியிருக்கின்றன!

விளைவு....சுவியரின் கவிதை!

அழகு...சுவியர்!

அதே...அதே.... வெரி நைஸ்....! நன்றி புங்கை....!  tw_blush:

On 14/03/2017 at 11:02 PM, Kavallur Kanmani said:

கடந்த கால அனுபவங்களை மீட்க வைக்கும் அழகிய கவிதை  வாழ்த்துக்கள்

நீங்களும் நல்லா வாங்கிக் கட்டியிருக்கிறீங்கள் போல.... நன்றி சகோதரி....!  tw_blush:

On 15/03/2017 at 0:05 AM, நிலாமதி said:

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

 மிக மிக அருமை  

இதுதான் இன்றைய யதார்த்தம் சகோதரி.......நன்றி சகோதரி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/03/2017 at 4:55 AM, தமிழ் சிறி said:

அருமையான நினைவு மீட்டல், சுவி. 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்....!  tw_blush:

On 17/03/2017 at 8:36 PM, Ahasthiyan said:

அழகிய கவிதை  

நன்றி அகஸ்தியன்....!  tw_blush:

On 24/03/2017 at 4:57 PM, சண்டமாருதன் said:

ஆண்கள் தோற்றத்தில் முரடாயினும் பாசத்தில் மிக மென்மையானவர்கள். பெண்கள் அழுது கரைந்தாலும் ரப்பர் போன்றவர்கள் லேசில் உடைய மாட்டார்கள். ஆண்கள் அன்பு பாசம் போன்றவற்றில் அதிகம் உடைந்துபோவர்கள்.

உண்மை சண்டமாருதன் ..... பெண்கள் எதையும் உடனுக்குடனே அழுது கவலையை கரைத்து விடுவார்கள். ஆண்கள்தான் எதையும் தாங்கிக்கொண்டு கடந்து போக வேண்டி உள்ளது....!  tw_blush: 

On 24/03/2017 at 9:31 PM, நிழலி said:

நல்ல கவிதை சுவி அண்ணா. அப்பாவி ஆண்கள் எங்களுக்காக நாங்கள் தான் எழுதி ஆறுதல் பட வேண்டி இருக்கு

 

உண்மை உண்மை உண்மை...!!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நிழலி.....!  tw_blush:

கருத்துக்கள் பகிர்ந்தவர்களுக்கும் மேலும் விருப்பு புள்ளி இட்டு ஊக்குவித்தவர்களுக்கும் அன்புடன் நன்றிகள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

On ‎14‎.‎03‎.‎2017 at 11:08 AM, suvy said:

அழுக்கு முந்தானையில்

அதிரசம் முடிந்து வைத்து 

உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு 

என்ற பாட்டியின் பாசத்தில் - என் 

கேசத்தில் பால் சுரக்கும்.

 

எண்ணை வைக்க அடம்பிடிக்கும் 

என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும்

 நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும்

முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும்.

இவை என் அனுபவங்கள். மீட்டிப்பார்த்துப் பழைய நினைவுகளைத் தேனாகச் சுவைக்கவைத்த சுவியருக்கு நன்றிகள். Bildergebnis für அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறதுபாஞ்ச்....வீட்டுக்கு வீடு வாசல்படி.....! நன்றி பாஞ்ச்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.