Jump to content

“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive


Recommended Posts

“தினகரனா... யார் சார் அது...?” - ஆர்.கே.நகர் வல ஆச்சரியம்! #VikatanExclusive

ஆர் கே நகர்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டியின் காரணமாக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசியலுக்குள் நடைபெற்ற  காய்நகர்த்தல்கள் இந்தியாவையே உற்றுப் பார்க்கவைத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறைசென்றுவிட, அவர் முன் மொழிந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளார். கட்சிப் பொறுப்பிலோ, டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வின் துணைப்பொதுச் செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா. ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக உள்ளது.

ஜோதிஇதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனை 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு இடையே ஆர்.கே.நகர் தொகுதி இந்த இடைத் தேர்தலை சந்திக்கப் போகிறது. இதுகுறித்து அந்தத் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களுடைய தற்போதைய மனநிலை என்ன என்பது குறித்து தொகுதி மக்களைச் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி, இல்லத்தரசி  

"அ.தி.மு.க-தான் இந்தத் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்று வந்தது. இனி யார் வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. தீபா, சுஜாதாதினகரன் இவர்கள் எல்லாம் யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு இவர்கள் எல்லாம் உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அரசியலில் குதித்துள்ளார்கள். ஏற்கெனவே பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முன்னிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். எனவே அவருடைய தலைமை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம்."

சுஜாதா, இல்லத்தரசி

"அ.தி.மு.க-வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. இதில் வருகிற தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை. ஏற்கெனவே ஜெயலலிதா முன்னிறுத்தி விட்டுச் சென்றவருடைய சார்பில் நிறுத்தப்படுகிற ஷமீம்வேட்பாளர்களை விரும்புகிறோம். அதாவது பன்னீர்செல்வம் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்." என்றார்.

ஷமீம், (தனியார் நிறுவன  ஊழியர்)

"மக்கள் நலத்திட்டம் தொடர்பாக எந்த அரசு அதிகாரியை அணுகினாலும் பொதுமக்களுக்கு மரியாதை தருவதில்லை. அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. ஜெயலலிதா இறந்தபிறகு, இந்தத் தொகுதியில்லட்சுமி எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவே இல்லை. முதியோர் பென்ஷன் தொகை மற்றும் விதவை பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா இடத்தில் உட்கார்ந்துகொண்டால் மட்டும் போதுமா? பொதுமக்களின் நலனை பார்க்க வேண்டாமா?" என்று கொதித்தார்

லட்சுமி, (வியாபாரி)

''தேர்தல் வந்து என்ன எங்களுக்கு நல்லது நடக்கப் போகுது.? இந்த இடைத்தேர்தல் எங்களுக்குத் தேவையில்லை. அசோக்அம்மா இருந்தபோது இந்த தொகுதிக்கு சில நலத்திட்டங்களை செய்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் இல்லாதபோது இந்த தொகுதியில் இனி என்ன நடக்கப்  போகிறது.? சசிகலாவோ அல்லது அவர்களுடைய ஆதரவாளர்களோ வந்தால் ரவுடியிசம்தான் அதிகரிக்கும். அம்மா மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் வந்துள்ளனர். அ.தி.மு.க-விலிருந்தே மற்றொருவரும் வந்துள்ளார். அவருடைய பெயர் எல்லாம் எனக்குத் தெரியாது." எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

அசோக்,  (தொழிலாளர்)

''அ.தி.மு.க என்ற கட்சியே சிதறு தேங்காய் போன்று மூன்றாக சிதறிக் கிடக்கிறது. அதனால், ஜெயலலிதா பிரபாகரன்இறந்தபோதே அ.தி.மு.க என்ற 'சாம்ராஜ்யம்' சரிந்துவிட்டது. புதிதாக வந்துள்ளவர்களை மக்கள் ஏற்கமட்டார்கள். தி.மு.க-வை  தற்போது பலமுள்ள கட்சியாக மக்கள் பார்க்கிறார்கள். இந்தத் தொகுதியில், தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது." என்றார்.

பிரபாகரன், (தொகுதிவாசி)

ஜெயந்தி"இடைத்தேர்தலை மக்கள் மிகுந்த வெறுப்புணர்வோடு பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டு அந்தக் கட்சி அழிவை நோக்கிச் செல்கிறது. தி.மு.க-வில் கடந்தமுறை நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனே இந்தமுறையும் நிறுத்தப்படலாம் என்று தகவல் வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணத்தை அள்ளி இறைப்பார்கள். அதுதான் இந்தத் தேர்தலில் நடக்கப்போகிறது'' என்றார் ஆதங்கமாக.   

ஜெயந்தி, (மாணவி)

''நாங்கள் யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை. இரண்டு கட்சிகளுமே பிடிக்கவில்லை. யார் தலைமையாக இருக்கிறார்கள் போன்ற எந்த விவரமும் இல்லை. குழப்பமாக உள்ளது. எனவே இந்ததேர்தலை நாங்கள் விரும்பவில்லை." என்றார் விரக்தியாக

கோகிலா, (மாணவி)

''பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில், நமது சமூகம் சீரழிந்துள்ளது. குழந்தைகள், பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கோகிலாபாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. வரக்கூடியவர்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வருகிறார்களே தவிர, இந்த சமூக நலன் கருதி ஆட்சிக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. இந்தத் தேர்தலில் எங்களுடைய வாக்கை செலுத்த விரும்பவில்லை." என்றார் கோபமாக.

வழக்கமான அ.தி.மு.க - தி.மு.க மோதலாக இல்லாமல், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க-வின் அடுத்த அதிகாரம் யார்? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாடே உற்றுப்பார்க்கும் இந்தத் தேர்தலில், தொகுதி மக்கள் யாரைத் தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

http://www.vikatan.com/news/coverstory/83542-rk-nagar-byelection-is-nearing-parties-are-yet-to-decide-its-candidate-here-is-the-people-unaware-of-the-candidates.html

Link to comment
Share on other sites

மக்கள் அதிகமாக திட்டுவார்கள். அப்பதான் வாக்குக்கு அதிக பணம் கொடுப்பார்கள். tw_blush: ஏற்கனவே தினகரன் தரப்பு வாக்குக்கு 10,000 அளவில் கொடுக்கிறார்களாம்.. tw_astonished:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.