Jump to content

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று


Recommended Posts

இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று

கூப்ரூ மலையின் மகள்

மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க
செம் மல்லிகை பூத்திருக்கும்
கூப்ரூ மலையின் மகளே
நெடிய விரத்தினை முடித்து உணவருந்து!

துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில்
இனியும் பசியோடிராதே!

உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள்
ஒவ்வொரு உணவு வேளையிலும்
கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த 
குற்ற மனம் இனியேனும் தணியட்டும்

வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும்
மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும்
இத்தோடு முடிந்துபோக
நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு

நிர்வாணங்களினால் போரிட்ட
மணிப்பூரிகளின் பசியை சுமந்து
வெறு வயிற்றில் கனவு நிறைத்த 
இரும்புப் பெண்ணே
ஏதுமறியாக் குழந்தை போல
மிதமானது உன் இருதயம்.

சாவு விளையாடப்
பசியால் வறண்டு பாலைபோலத் தகித்த 
உன்னுடல் வலிய ஆயுதம்

மரணம் நெருங்க மறுத்து 
தோல்வியை தழுவச் செய்த
கொதித்தடங்கா உன் குரல் பெருந்தீ

தோழியே, குண்டுகளின் உற்பத்திக்கான பூமியில்
இனியும் உன் மெல்லிய இதயத்தால் போரிடாதே

யோனிகளுக்குள் இராணுவக் குறிகளைச் சொருக
துப்பாக்கிகளை நீட்டும் அதிகாரம்
காரணமேதுமின்றிக் கைதாக்கவும்
காணமல் போகச் செய்தலுக்குமாக ஆண் மக்கள்
எதிர்காலம் மாண்ட குழந்தைகள்
எல்லாத் திசைகளிலும் சூரியனை எதிர்பார்க்கும் விழிகள்
துளியேனும் வேறுபாடற்றன நம் நிலங்கள்

எம் பிரியமிகு
கூப்ரூ மலையின் மகளே
திலீபனைப் புதல்வனாய் பெற்ற எம் தேசமறியும்
நெடிதுயிர்த்தவுன் பசி வேட்கையை போக்கியிராதது 
பல்லாண்டுகளின் பின்னரான உணவு

விடுதலைப் பசியில்
உழலும் உன் இருதயம்
¤

இரோம் சர்மிலாவுக்கு

தீபச்செல்வன்

நன்றி: குமுதம்

17309113_10154772856918801_8631978617444

Link to comment
Share on other sites

நான்கு வார்த்தையோடு முடிந்த இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கை!
------------------------ --------- --------------------------
கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார். அவர் ஒரு கவிஞரும் கூட. தட...தடவென ராணுவ வீரர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் அங்கு ஓடி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரற்ற உடல் தரையில் பொத்தென்று விழுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது. ஏன்.. எதற்கு என்றே தெரியாமல் சக உயிர்கள் செத்து விழுவதைப் பார்த்து பதை பதைக்கிறார் அந்தப் பெண். கண் முன்னே சக உயிர்கள் பறிக்கப்படுவதைக் கண்டு கதறித் துடிக்கிறார். தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வி கூட கேட்காமல் சுட்டுக் கொல்லும் அந்த அதிகாரத்துக்கு பெயர்தான் ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act, or AFSPA எனப்படுவது. இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இந்த சட்டம் இருக்கிறது. யார் மீதாவது சந்தேகம் எழுந்தால்... ஏன்... என்னவென்று விசாரிக்காமல் சுடலாம். அது 12 வயது சிறுவனாக இருந்தாலும் கூட பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்து இளைஞர்களும் செத்து மடிந்ததற்கு இந்த சட்டம்தான் காரணம். கொதித்து எழுந்த அந்தக் கவிஞர் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார். அவர்தான் இரோம் ஷர்மிளா ஷானு.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அந்த சிறப்பு சட்டத்தை நீக்க உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஒருநாள் இரு நாள் இல்லை. 16 ஆண்டுகள் உண்ணாவிரதம். போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டு மூக்கு குழாய் வழியாக திரவ உணவு மட்டுமே இத்தனை ஆண்டுகள் செலுத்தப்பட்டது. ஆனால், இரோமின் நோக்கத்துக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை.

''நான் உயிருடன் இருக்க விரும்புகிறேன்... உயிர் வாழ ஆசைப்படுகிறேன்... திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்... அன்பு செய்ய விரும்புகிறேன்... எனது உண்ணாவிரதத்தை கைவிடத் தயார். ஆனால், அதற்கு முன், மணிப்பூரில் AFSPA சட்டம் நீக்கப்பட வேண்டுமென டெல்லி நீதிமன்றத்தில் கடைசியாக இரோம் கோரிக்கை வைத்தார். விடிவு காலம் பிறக்கவில்லை. சட்டத்தின் வாயிலாக முடிவு கிடைக்காத நிலையில்தான் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வழியாக அந்தச் சட்டத்துக்கு முடிவு கட்ட ஷர்மிளா எண்ணிணார். மக்களை நம்பி தேர்தல் களத்தில் குதித்தார்.. துபாள் தொகுதியில் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார். 
ஆனால், இரோமுக்கு கிடைத்ததோ... வெறும் 90 ஓட்டுகள். நோட்டாவுக்கு கூட ஷர்மிளாவை விட அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. எந்த மண்ணின் மக்களுக்காக 16 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் இளமையை தொலைத்துப் போராடினாரோ... அதே மக்கள்தான் ஷர்மிளாவின் கனவை கொடூரமாக கொன்று போட்டுள்ளனர்.

மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்ட இரோம் இப்போது விரக்தியின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ராணுவத்தை எதிர்த்துப் போராடிய போது வராத கண்ணீர் இரோமின் கண்களில் இப்போது வழிகிறது. அந்த விரக்தி அவரது ரசிகர்கள் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்திலும் தெரிகிறது. 'அந்த 90 பேருக்கு நன்றி' என்கிறது அந்த வேதனைப் பேஸ்புக் பதிவு, ' இன்னொரு முறை அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கவே மாட்டேன் என்கிற அந்த முகத்தில் எத்தனை வேதனை.

அமான்மணி... மனைவியை கொலை செய்த வழக்கில், சிறை சென்றவர். சிறையில் இருந்தவாறே உ.பி. தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார். முப்தார் அன்சாரி... இவர் யார் தெரியுமா... மாஃபியா கும்பல் தலைவர்... சிறையில் இருக்கும் இவருக்கும் மக்கள் வெற்றி மாலை சூடியுள்ளனர். இப்படி... குற்றப்பின்னணியுள்ள 143 பேர் உ.பி.யில் தற்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கின்றனர்.

பதினாறு ஆண்டுகாலம் போராடிய அந்த கவிஞரின் போராளியின் அரசியல் வாழ்க்கையை' 'thanks for 90 votes' என்ற வார்த்தையுடன் முடித்து வைத்திருக்கிறார்கள் ஜனநாயக வாதிகள்,

- எம்.குமரேசன்1f4dd.png?

Image may contain: 1 person, sitting and indoor
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரின் மனிதெளரிமைப்போராளி இரோம் சர்மிளாவின் தேர்தல் தோல்வியும் யாழ்குடாநாட்டுமக்களில் கள்ள மெளனத்தனமும்

கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் உண்ணாநிலை நோன்பினை மணிப்பூரில் கடைப்பிடித்த இரோம் சர்மிளா எனும் மனித உரிமைப்போராளி நேற்றையதினம் நடைபெற்ற மாநிலத்தின் அரசமைப்பதற்கான தேர்தலில் வெறும் தொண்ணூறு வாக்குகள்பெற்று படுதோல்வியைச்சந்தித்திருக்கிறார் இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் மணிப்பூரின் குடிமக்கள் அனைவரும் அவரைத் தமது மிகவும் விருப்பத்துக்கான அரசியல்தலைவராகவே வரிந்துகட்டியிருந்தனர்

அதாவது நோட்டா எனும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை எனும் அதிகப்பிரசங்கித்தனமான ஓட்ட்ளித்த வாக்காளர்களுக்குக்கூட கொஞ்சமேனும் யோசித்து இரோம் சர்மிளாவுக்கு வாக்களிக்கவில்லை அதாவது நோட்டாவுக்கு ஓட்டளித்தவர்களது சிந்தனை அறிவை நாம் சந்தேகப்படவேண்டிய நிலையிலேயே உள்ளது இரோம் சர்மிளா அவர்களைகூட நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் கவனிக்காதுவிட்டமை அவர்களது சமூகம்மீதான அறிவின் அடர்த்தியில் சந்தேகத்தை உண்டாக்குகிறது ஆகையால்தான் இரோம் சர்மிளா பெற்ற வாக்குகளைவிட நோட்டாவுக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் அதிகம்.

அதாவது இரண்டாயிரமாம் வருடத்தில் மணிப்பூரில் பேரூந்துக்காக தெருவில் காத்திருந்த பத்துப் பொதுமக்களைக் கண்டமேனிக்குச் சுட்டுக்கொன்றதனுடானான சூழலில் இப்படியான உரிமைமீறலுக்கு இந்திய ஆயுதப்படையினருக்காக ஆயிரத்துத்தொளாயிரத்துஐம்பத்தெட்டில் கொண்டுவரப்பட்ட ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டத்தை நீக்கச்சொல்லியே கடந்த பதினாறு வருடங்களாக உண்ணாநொன்பைத் தொடர்ந்து அதற்கான தேவையோ அல்லது அப்படித் தொடர்ந்து உண்ணாநோன்பிருப்பதால் ஆட்சியதிகாரம் பதினாறு வருடங்களில் செய்யததை இனிமேல் செய்யாது எனத்தோன்றியதால் அண்மையில் உண்ணாநொன்பை முடித்துக்கொண்டார். அதன் பின்னரான அரசியல் முன்னெடுப்பிலேயே இப்படிப் பரிதாபமான தொல்வி நிலை.

ஈழப்போரின்போது முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் இன்னல்களுக்குள் முடக்கபட்டு மிகப்பெரிய இனவழிப்பு நடைபெற அனைத்துத் தரப்பும் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கையில் யாழ் குடா நாடு தன்னைக் கூடாநாடாக மாற்றியமைத்திருந்தது அதாவது அங்கிருக்கும் தைழர்கள் எல்லோரும் வாய்மூடி மெளனிகளாக மட்டும் இருக்கவில்லை அப்படி மெளனமாக இருந்திருந்தாலே எமை அழிக்க நினைப்பவன் கொஞ்சமேனும் யோசித்திருப்பான் எங்கு பார்த்தாலும் இராணுவப்புலனாய்வுத்துறை இராணுவ முகாம்கள் அனைத்தும் சித்திரவதைக்கூடமாக மாற்றப்பட்டது இதில் ஊரெழு எனும் கிராத்தில் இருந்த இராணுவ முகாமை தமிழர்கள் இறைச்சிக்கடை என்றுதான் அழைப்பர் ஆகையால் தெருவில் இறங்கி வன்னி நிலப்பரப்பில் நடைபெறும் மிகப்பெரிய இனவழிப்புக்கு எதிர்ப்புக்காட்டமுடியாது எனினும் அம்மக்கள் வீட்டைவிட்டு வெளியெ வராமல் இருந்திருப்பார்களேயானாலும் அது மக்கள் தங்கள் எதிப்பினை எதோ ஒரு வழியில் வெளிக்காட்டுகிறார்கள் என சிங்களம் புரிந்திருக்கும்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா தற்போது தென்னகத்தில் இளைய தளபது எனப்பெயர் எடுத்திருக்கும் நடிகர் விஜை திருமணம் செய்தது யாழ்குடாநாட்டிலிருந்து இடப்பெயர்ந்து இப்போது லண்டனில் வாழும் குடும்பத்தைச்சேர்ந்த பெண்ணை, அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அதாவது வீடு தோட்டம் துரவு இவைகள் அனைத்தும் யாழில் இருக்கவே செய்கிறது அதைப்பார்த்துப் பக்குவப்படுத்தவும் வந்தைடத்தில் இரண்டுபாடல்களைப்பாடி பரவசமாகவும் இசையமைப்பாளர் விஜைஆண்டனியுடன் இராணுவத்தால் களமிறக்கப்பட்டார்கள் யாழ்குடாநாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள் அனைத்திலும் அங்கிருக்கும் இராணுவத்தினர்க்கு புத்துணர்ச்சிக்கான இசைநிகழ்சியை நடாத்தி எஞ்சியநேரத்தில் யாழில் நிலைகொண்டுள்ள ஐம்பத்தி இரண்டாம் படையணி அம்பத்தி ஓராம் படையணி ஐம்பதாம் படையணி உங்களுக்குப் பெருமையுடன் வழங்கும் தென்னகத்து சினிமா இசையமைப்பளர் விஜை ஆண்டனி தென்னகத்தின் இளையதளபதி விஜையது அம்மாவுடன் இணைந்துநடாத்தும் மாபெரும் இசைத்திருவிழா என பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு நடாத்தப்பட்ட இசை நிகழ்சி எனும் முக்கல் முனகல் மற்றும் நாக்கமூக்கப் பாடல் அடங்கிய களியாட்டத்துக்கு யாழ் குடாநாட்டின் குஞ்சு குருமான் இளையோர் வயோதிபர் படிச்சவன் படிக்காதவன் எனும் வயதுவேறுபாடு இல்லாது கலந்து களியாட்ட சோதியில் இணைந்தார்கள்.

நாம் இப்போது கூறுகிறோமே இந்த யாழ்ப்பாணத்து மெத்தப்படிச்ச சனம் அனைவரும் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது புலிகள் இல்லாமற் போகவேண்டும் கொழும்புப்பாதை சீக்கிரம் திறக்கபடல்வேண்டும் பொருள்கள்தட்டுப்பாடுஇல்லாது கிடைக்கவேண்டும் என நல்லூர்க்கந்தனுக்கு நெய் விளக்கும் சூடமும் கொளுத்தி வேண்டுதல் வைத்தவர்கள்

இரோம் சர்மிளாவின் கதையும் இதுவே இவர் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்திவைத்துவிட்டு பேசாம ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகலாம்

எந்த இனத்துக்காக அவ்வினத்தின் இளையோர் இரவுபகல் பாராது போராடி தமது உயிர்களை ஆகுதியாக்கினார்களோ அதே இனம் அந்தமண்ணின் பிறிதொரு நிலப்பரப்பில் சொல்லெணாத்துன்பங்களையும் மரணத்தையும் எதிர்கொண்டபோது வாயைப்பொத்தி வாளாதிருந்ததற்கு இணையானதே இரோம் சர்மிளாவை இன்று மணிப்பூர் மக்கள் நிராகரித்தது.

ஒரு இனம் தனது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதத் தவிர்த்து தனது போராடவேண்டிய போராட்டகளத்தில் இருக்கவேண்டிய தேவையை வேறொருவர் செய்யட்டும் என புலிகளது தலையிலும், இரோம் சர்மிளாவினது தலையிலும் சுமத்திவிட்டதன் விளைவை மணிப்பூர் மக்களும் ஈழத்தின் மக்களும் இப்போது அனுபவிக்கிறார்கள், இப்போது போராட்டக்களம் வெறுமையாக்கப்பட்டதும் புலிகளையும் இரோம் சர்மாவையும் நிராகரிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.