Jump to content

கண்ணைக் கவரும் விண்வெளிச் சுற்றுலா


Recommended Posts

 

நியூமெக்ஸிகோவுக்கு மேலே 30 கிமீ உயரத்தில் நீங்கள் அற்புதமான சூர்யோதய காட்சியை காணலாம்.
இந்த காணொளியில் காண்பது வெறும் முன்னோட்டக்கலனே.
விரைவில் சுற்றுலாப்பயணிகள் இந்த காட்சிகளை கண்டபடி வானில் மிதக்கலாம்; பயணிக்கலாம். பரவசப்படலாம்.
“விண்வெளி சுற்றுலா என்பது மறக்க முடியாத சுகானுபவமாக இருக்கவேண்டும்”, என்கிறார் வோல்ர்ட் வியூ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேபெர் மெக்கல்லம்.
“மெதுவாக மேலெழும்பி அற்புத காட்சிகளை பொறுமையாக கண்டு களித்து ரசித்தபடி மெள்ள மீண்டும் பூமிக்குதிரும்பவேண்டும்”.
இரண்டுமணிநேரம் மேலெழும் பயணத்துக்கு தற்போதைய கட்டணம் $75,000 என்று விற்கப்படுகிறது.
மற்ற விண்வெளி விமானங்கள், ராக்கெட்கள் செல்லும் அதிகபட்ச உயரத்துக்கு இந்தக்கலன் பயணிக்கப்போவதில்லை.
“ஆனால் இதில் பயணிப்பது மற்றவற்றைவிட சாந்தமான, மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும் அற்புத அனுபவமாக அமையும்” என்கிறார் டேபெர் மெக்கல்லம்.
“ராக்கெட் பயணம் பிரமிப்பளிக்கலாம். சந்தேகமில்லை. ஆனால் என்னளவில் பயணம் என்பது இன்ப அனுபவமாக இருப்பது அவசியம். அருகில் நண்பரோடு, அமைதியாக அமர்ந்து, கையில் ஷேம்பெய்ன் கோப்பையுடன் விண்ணில் மிதப்பதே தனி அனுபவம்” என்கிறார்.
இந்த கலன் காற்றின் போக்கிலும் மாறும் உயரத்தைப்பொருத்தும் தன் பயணத்தை மேற்கொள்ளும்.
இதிலுள்ள கூடைப்பந்து அளவிலான பாரசூட், உங்களை மெதுவாக மண்ணில் இறங்க உதவும்.

http://www.bbc.com/tamil/science-39186907

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது  பூமி, மேலிருந்து பார்க்க மிகவும் அழகானது.
அதற்கு.... 75,000 டாலர்கள் செலவழித்துப் பார்ப்பது,  கோடீஸ்வரர்களுக்கு  மட்டுமே... சாத்தியம்.
"ஏழைக்கு... ஏற்ர , எள்ளுருண்டை மாதிரி.... "  
விமானப் பயணங்களின் போது.... முகில் இல்லாமல்,  காணக்  கிடைத்தது லாபம், என்று... 
திருப்பதிப்  பட்டுக்  கொள்ள வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.