Jump to content

திரை விமர்சனம்: குற்றம் 23


Recommended Posts

திரை விமர்சனம்: குற்றம் 23

 

 
 
 
k23_3140777f.jpg
 
 
 

செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின் னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்தான் குற்றம் 23.

பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் பாவ மன்னிப்பு கேட்டு அங்கே வரும் ஒரு பெண் காணாமல் போகிறார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நோக்கில் உதவி ஆணையர் வெற்றிமாறன் (அருண் விஜய்) விசாரணையில் இறங்குகிறார். சம்பவம் நடக்கும்போது தேவாலயத்துக்குச் சென்ற தென்றல் (மஹிமா) முதலான சிலர் கூறும் தக வல்களை வைத்துக்கொண்டு விசார ணையை முன்னெடுக்கிறார்.

கருவுற்ற பெண்கள் சிலர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது இந்த வழக்கை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் மீதிக் கதை.

குற்றச் சம்பவங்களையும் புலனாய்வை யும் விறுவிறுப்புடனும் யதார்த்தமாகவும் சித்தரிக்கிறார் இயக்குநர் அறிவழகன். விசாரணையிலிருந்து விலகிச் செல்லாமல் காதல் உள்ளிட்ட விஷயங்களை அடக்கி வாசித்திருப்பதால் திரைக்கதை கச்சித மாகவே நகர்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படத்துக்கான முடிச்சுகளைக் கனமாக அமைத்திருக்கிறார். ஆனால், அந்த முடிச்சுகளை அவிழ்க்கும்போது இருக்க வேண்டிய சுவாரஸ்யமும் பரபரப்பும் போதிய அளவு கூடவில்லை. இரண்டாம் பாதியின் நீளமும் ஃபிளாஷ்பேக் காட்சியின் இழுவையுமே அதற்கான காரணங்கள்.

படத்தின் மையமே குழந்தைப் பேறு தொடர்பான வம்சி கிருஷ்ணாவின் உணர்ச்சி தான். அவரது பிரதான நோக்கம் குழந்தை சார்ந்ததுதானே? இதில் பணம் கேட்டு மிரட் டும் கிளைக் கதை எதற்கு? பிரச்சினை பணமா, குழந்தையா என்பதில் தெளிவில்லை. குழந்தைதான் முக்கியம் என்றால் கரு வுற்ற பெண்களிடம் உண்மையைச் சொல்லா மல் இருந்திருக்கலாம். பணம்தான் முக் கியம் என்றால் படத்தின் ஜீவனே சிதைந்து போகிறது. பணம் நண்பர்களுக்காக, எனக்கு எமோஷன்தான் முக்கியம் என்று வம்சி சொல்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவ மனை நிர்வாகம் தங்கள் வாடிக்கை யாளர்களை ஏமாற்றும் காட்சிகள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருத்துவமனை வம்சியிடம் ஏமாறும் விதம் பலவீனமாக உள்ளது.

விசாரணையை மேற்கொள்ளும் அதி காரிக்கு நெருக்கமானவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டுவது இதுபோன்ற கதைகளில் வழக்கம். இந்தப் படத்திலும் அது தப்பாமல் இடம்பெற்றிருக்கிறது. மஹிமா போலீஸிடம் முழு உண்மையைச் சொல்லாமல் தவிர்ப்பது ஏற்கும்படி இல்லை.

செயற்கைக் கருத்தரிப்பின் செயல்முறை, அதில் நடக்கக்கூடிய முறைகேடுகள், அந்தத் தீர்வுக்குப் பின்னால் இருக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள், உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றை இயக்குநர் வலுவுடன் பதிவுசெய்திருக்கிறார். தேவை யான பின்னணித் தகவல்களைத் திரட்டு வதில் திரைக்கதைக் குழு சிரத்தையோடு உழைத்திருக்கிறது. நாயக சாகசத்தை முன்னிறுத்தாமல் புலனாய்வை இயல்பாக நகர்த்திச் செல்வது திரைக்கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. பலவீனங்களை மீறிப் படத்தைக் காப்பாற்றும் அம்சங்கள் இவை.

அருண் விஜய்க்கு இது முக்கியமான படம். போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரம், மிடுக்கு, தோற்றம், உடல்மொழி, விசாரிக்கும் தொனி ஆகியவற்றில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். உணர்ச்சி நடிப்பிலும் குறைவைக்கவில்லை. மாஸ் ஹீரோ பில்டப் இல்லாமல் இயல்பாக அறிமுகம் ஆவது, பதறாமல் திட்டம் தீட்டுவது போன்றவை நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன.

மஹிமா பாத்திரத்தோடு அழகாகப் பொருந்திப்போகிறார். குழந்தைக்கான ஏக்கம், செயற்கைக் கருத்தரிப்பு குறித்த மன உளைச்சல் ஆகியவற்றைக் கச்சிதமாகச் சித்தரித்து மனதைக் கரைக்கிறார் அபிநயா.

முதல் பாதியில் சோதிக்கும் தம்பி ராமையா, இரண்டாம் பாதியில் அர்விந்த் ஆகாஷை விசாரிக்கும் காட்சியில் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கிவிடுகிறார். வம்சி கிருஷ்ணா, அர்விந்த் ஆகாஷ், விஜயகுமார், கல்யாணி நடராஜன், சுஜா வாருணி ஆகியோரின் பங்களிப்புகள் நேர்த்தியானவை.

பாஸ்கரனின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்குக் கூடுதல் பலம். தொடுவானம் பாடல் சோகத்தை மீட்டுகிறது. அர்விந்த் ஆகாஷுடன் அருண் விஜய் மோதும் சண்டைக் காட்சி இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவப் பின்னணியில் குற்றவியல் கதையை விறுவிறுப்பாகக் கொடுக்க முயற்சிக்கும் இந்தப் படம் இரண்டாம் பாதியில் தன் பிடியை நழுவவிடுகிறது. அடுக்கடுக்கான முடிச்சுகளைப் போடும் இயக்குநர் அவற்றுக்கிடையேயான தொடர்பை நிலைநாட்டுவதிலும் சிக்கல் களை அவிழ்ப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். என்றாலும், செயற்கைக் கருத்தரிப்பு, தாய்மை உணர்வு, மருத்துவத் துறையிலுள்ள முறைகேடுகள் ஆகியவற்றைக் கையாளும் விதத்தில் கவனிக்க வைக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-குற்றம்-23/article9573211.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது..

'ஈரம்' படத்தின் இயக்குநர் அறிவழகன் இப்படத்திலும் சிறப்பாக உழைத்து, திரில்லர் கதையை கொடுத்துள்ளார்.. சிறு லாஜிக் ஓட்டைகளை மறந்து, இப்படத்தை திரையரங்கில் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம். vil-yes.gif

மணிரத்தினத்தின் குப்பையான 'காற்று வெளியிடை' படத்துடன் ஒப்பிடுகையில், 'குற்றம் 23' ஆயிரம் மடங்கு திறம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இன்று தான் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது..

'ஈரம்' படத்தின் இயக்குநர் அறிவழகன் இப்படத்திலும் சிறப்பாக உழைத்து, திரில்லர் கதையை கொடுத்துள்ளார்.. சிறு லாஜிக் ஓட்டைகளை மறந்து, இப்படத்தை திரையரங்கில் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம். vil-yes.gif

மணிரத்தினத்தின் குப்பையான 'காற்று வெளியிடை' படத்துடன் ஒப்பிடுகையில், 'குற்றம் 23' ஆயிரம் மடங்கு திறம்!

கன நாட் களின் பின் நல்ல ஒரு படம் பார்த்த திருப்தி இப்பதான் பார்த்து முடிந்தது அதை நீங்களுன் எழுத நானும் எழுதுகிறேன் சூப்பர் நடிப்பு நல்ல கதை  படம் சூப்பர்  :107_hand_splayed:

Link to comment
Share on other sites

பாக்கலாம் வகை // அருணுக்கு ஒரு புனர்ஜென்மமாக அமையலாம் 

காற்று வெளியிடையுடன் ஒப்பிட வேண்டாம் // குப்பை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இப்படத்தை மறுபடியும் பார்க்கலாமென இருக்கிறேன்..! tv_smiley_13.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இன்று இப்படத்தை மறுபடியும் பார்க்கலாமென இருக்கிறேன்..! tv_smiley_13.gif

நானும் சில நல்ல படங்களை வைத்து இருக்கிறேன் அதில் இதுவும் ஒன்று எந்த பெரிய நடிகர் படங்களும் இல்லை  துருவங்கள் பதினாறும் இதில் அடங்கும் tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.