Jump to content

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für wilkinson schaving raser   Bildergebnis für wilkinson blade razor

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா?

தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் மென்மையாக ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தால், தங்கள் சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் முடியை அகற்றி வருகின்றனர். அதில் கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் அகற்றுகின்றனர். 

அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! 
மேலும் உடலில் வளரும் முடியை அகற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்றவை பொதுவான வழிகள். இதில் ஷேவிங் முறையைத் தான் நிறைய பேர் பின்பற்றுகின்றனர். ஏனெனில் இந்த வழியால் நமக்கு வலி இருக்காது. 

அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்த பின் அரிப்பு ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!!
ஆனால் மிகவும் மென்மையான பகுதியான பிறப்புறுப்பில் வளரும் முடியை எப்போதுமே ஷேவிங் செய்யக்கூடாது என்பது தெரியுமா? ஏனெனில் அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

காரணம் #1: பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று இருக்கும் மற்றும் தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

காரணம் #2:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும். மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும்.

காரணம் #3:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்வதால், அவ்விடத்தில் சீழ் பிடித்த பருக்கள் அதிகம் வரக்கூடும்.

காரணம் #4:  பிறப்புறுப்பில் வளரும் முடி, உடலுறவினால் இனப்பெருக்க உறுப்பு மருக்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்

காரணம் #5:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியில் உள்ள இயற்கை எண்ணெய், இயற்கை உராய்வுப்பொருளாக செயல்படும்.

காரணம் #6:  முக்கியமாக பிறப்புறுப்பில் வளரும் முடி நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவும்.

காரணம் #7:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் பாலியல் நோய்களின் தாக்கம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். முக்கியமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் வேகமாக தாக்கும்.

குறிப்பு:  இருப்பினும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி உங்களுக்கு தொந்தரவாக இருப்பின், ட்ரிம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் பாதுகாப்பை வழங்கும் ஓர் வழியும் கூட.

நன்றி தற்ஸ் தமிழ்.
 

Link to comment
Share on other sites

தற்ஸ் தமிழ் போன்றவற்றின் மருத்துவக் குறிப்புகளை நம்பினால் அவ்வளவுதான். மிச்சத்தினை எழுத வெக்கமாக இருக்கு tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தற்ஸ் தமிழ் போன்றவற்றின் மருத்துவக் குறிப்புகளை நம்பினால் அவ்வளவுதான். மிச்சத்தினை எழுத வெக்கமாக இருக்கு tw_blush:

இந்தப்பகுதியில்பதியும் அளவுக்கு வந்ததே பெரும்வளர்ச்சி  தானே?

எதற்கு வெட்கம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் #8:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் வியர்வைப் பிசுபிசுப்பான இடங்களில் ஆனந்தமாக குடும்பம் நடத்தும் சிறு உயிரிகளான பேன், பொடுகு, கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளின் வாழ்விடத்தை அழித்த பாவம் வந்து சேரும்?

முடிக்கற்றைகளில் வாழும் அழகிய சிறு உயிரி ஒன்றைப் பாருங்கள். இதனை எப்படி அழிக்க மனம் வரும்??

Demodex-3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

காரணம் #8:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் வியர்வைப் பிசுபிசுப்பான இடங்களில் ஆனந்தமாக குடும்பம் நடத்தும் சிறு உயிரிகளான பேன், பொடுகு, கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளின் வாழ்விடத்தை அழித்த பாவம் வந்து சேரும்?

முடிக்கற்றைகளில் வாழும் அழகிய சிறு உயிரி ஒன்றைப் பாருங்கள். இதனை எப்படி அழிக்க மனம் வரும்??

Demodex-3.jpg

அவன் அவன் பாரிய கற்பனைகளோடு ....
எதிர்கால வாழ்வை நோக்கி 
நாளும் நாளும் வளர்ந்து வருகிறான்.

வாழ்ந்து முடித்தவர்கள் 
தயவு செய்து இப்படி அசிங்கம் 
பண்ணாதீர்கள்!

இந்த புழுவை பார்த்ததில் இருந்து 
நெஞ்சுக்கு ஒரு நெருடலாக இருக்கிறது.

(நெடுக்கர் ஒரு திரி திறந்து இருந்தார் பல வருஷம் முன்பு ... பின்பு இப்போது யாரோ தூசு தட்டி 
மீண்டும் கொஞ்ச நாள் ஓடிச்சு. "ஏன் குமரிகளை பேபி என்று அழைக்கினம் என்று?" அப்போ இப்படி தோன்றிச்சு ...பேபியாய்  இருப்பதால் அப்படி அழைக்கிறார்களோ என்று? 
ஆனால் நியானி அண்ணருக்கு பயத்தில் எழுதவில்லை) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

இந்த புழுவை பார்த்ததில் இருந்து 
நெஞ்சுக்கு ஒரு நெருடலாக இருக்கிறது.

அஞ்சற்க! 

இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தே வாழுகின்றன.

முடிகளை வளரவிடுவதும், மழித்து மொழுமொழுவென்று வைத்திருப்பதும் ஒவ்வொரு காலத்தில் உள்ள ஃபாசனைப் பொறுத்தது.?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் முழு சவரம் முக்கால்சவரம் என்று நிறைய பணம் பண்ணுகிறார்கள்.பேசாமல் அந்த கடை ஒன்று திறந்தா ஓகோ என்று ஓடும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் வெட்கப்பட்டுக் கமக்கட்டுக்குள்ளை...தலையை மறைக்கிறது!

ஒரு ஆர்வத்துக்காக...குரானை வாசித்துக் கொண்டு போகும் போது...ஒரு பெண் தனது ஆணை மகிழ்விக்க...இப்படியான செயல்களைச் செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது!

இது எழுதப்பட்டது....கி.பி 600...!

ஒண்டு....ஒண்டாய் மினக்கெட்டு பிடுங்கி இருப்பாங்களோ..? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

காரணம் #8:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் வியர்வைப் பிசுபிசுப்பான இடங்களில் ஆனந்தமாக குடும்பம் நடத்தும் சிறு உயிரிகளான பேன், பொடுகு, கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளின் வாழ்விடத்தை அழித்த பாவம் வந்து சேரும்?

முடிக்கற்றைகளில் வாழும் அழகிய சிறு உயிரி ஒன்றைப் பாருங்கள். இதனை எப்படி அழிக்க மனம் வரும்??

Demodex-3.jpg

நான் புல் பூண்டுகளை அழிப்பதையே பாவம் என்று நினைப்பவன்......:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அஞ்சற்க! 

இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தே வாழுகின்றன.

முடிகளை வளரவிடுவதும், மழித்து மொழுமொழுவென்று வைத்திருப்பதும் ஒவ்வொரு காலத்தில் உள்ள ஃபாசனைப் பொறுத்தது.?

இதனை வாசித்து வந்த சிரிப்பை....  அடக்க முடியவில்லை கிருபன் ஜீ.   Bildergebnis für lachen animated gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

தற்ஸ் தமிழ் போன்றவற்றின் மருத்துவக் குறிப்புகளை நம்பினால் அவ்வளவுதான். மிச்சத்தினை எழுத வெக்கமாக இருக்கு tw_blush:

நிழலி,  உங்களுக்கு வெக்கமா.... எப்ப இருந்து?  நம்ப முடியவில்லை. :grin:
கிருபன் ஜீயே... கரணம்: 8 ஐ, படத்துடன் கூறியுள்ளார். 
காரணம்: 9 ஐ, நீங்களோ அல்லது மற்றவர்களோ  எழுதுங்கள்.  வெள்ளிக்கிழமை  பம்பலாக இருக்கும். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

நாங்கள் தான் வெட்கப்பட்டுக் கமக்கட்டுக்குள்ளை...தலையை மறைக்கிறது!

ஒரு ஆர்வத்துக்காக...குரானை வாசித்துக் கொண்டு போகும் போது...ஒரு பெண் தனது ஆணை மகிழ்விக்க...இப்படியான செயல்களைச் செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது!

இது எழுதப்பட்டது....கி.பி 600...!

ஒண்டு....ஒண்டாய் மினக்கெட்டு பிடுங்கி இருப்பாங்களோ..? :unsure:

Bildergebnis für  old  shaving raser

புங்கையூரான்... என்ன நீங்க, உலக வரலாறு தெரியாமல் இருக்கிறீர்கள்?
கி.பி 600´ல்  இந்த சவரக் கத்தி, புழக்கத்துக்கு வந்து விட்டது.  :grin: :D:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பு உறுப்பு... முடியை, வளர்ப்பதா... வெட்டி எறிந்து விடுவதா என்ற, திரியை 
இதுவரை...  24 மணித்தியாலத்தில்,  1000 க்கு மேற்பட்டவர்கள், பார்த்து இருக்கின்றார்கள்.
அதிலும்... இன்று பகல்,  கடந்த 12 மணித்தியாலத்தில் மட்டும்,  570   பார்வையாளர்கள்,  அமுசடக்கமாக வந்து போனது... ஆச்சரியாமாக இருக்கு.

Link to comment
Share on other sites

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
 
இக் குறக்கான எனது புதிய விளக்கம்:-
 
இன்பம் தருபவை என்று அனுபவித்தோர் வழங்கிய ஒழுக்கங்களை பேணுபவர்களுக்கு மயிரை மழித்தலும், வளர்த்தலுமாகிய வெளி வேடங்கள் வேண்டியனவல்ல.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.