Jump to content

எங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை! - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?


Recommended Posts

எங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை! - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?

அதிரடி சர்வே முடிவுகள்விகடன் டீம்படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ரமேஷ் கந்தசாமி, தே.சிலம்பரசன், அ.குரூஸ்தனம்

 

p8.jpg

`யாரோ... ஏதோ ஆட்சி செய்கிறார்கள், என்னமோ பண்ணட்டும்!' என விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்த்த காலம் இல்லை இது. `எங்களுக்கும் அரசியல் தெரியும். நாங்கள் போராடத் தயார். எதிர்த்து நிற்போம்' என நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுப் புரட்சி முதல் இப்போதைய நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் வரை அனைத்தையும் முன்னெடுத்து, அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுசெல்பவர்களும் இளைஞர்களே!

அதேசமயம், `எல்லாவற்றுக்கும் நாங்களேதான் போராட வேண்டும் எனில், எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு?' என்ற கோபமும் பெரும்பான்மையான இளைஞர்கள் மனதில் கொந்தளிக்கிறது.

தமிழக அரசியல் சூழலில் அண்மைக் காலமாக நடக்கும் எதையும், சாமான்யத் தமிழன் ரசிக்கவில்லை. மீத்தேன் திட்ட எதிர்ப்பு, குளிர்பானங்களுடன் பிணைந்திருக்கும் நீர் அரசியல், நீட் தேர்வு குறித்த சரியான விவாதங்கள் எனப் பெரும் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியதை எல்லாம், இளைஞர்கள் முன்னெடுக்கிறார்கள்.

8p2.jpg

உண்மையிலேயே நம் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன, அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளை எப்படிப் பார்க்கிறார்கள், யாரைத் தலைவராக ஏற்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள, தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் மட்டுமே  சர்வே நடத்தினோம். 

‘இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?' என்ற தலைப்பில் ஏழு கேள்விகளை முன்வைத்தோம். மொத்தம் 11,472 இளைஞர்கள் இந்த சர்வேயில் கலந்துகொண்டார்கள். இதில் பெண்கள் 4,641 பேர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள்.

 சர்வே முடிவுகள் உண்மையிலேயே நம்முடைய அத்தனை தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிடும். ஆம், தற்போதைய அரசியல் தலைவர்கள் யார் மீதும் இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. அரசியல் நடவடிக்கை என்பது நேரடியாகக் கட்சி அரசியலில் ஈடுபடுவது மட்டுமே அல்ல. ஒரு பார்வையாளனாக இருந்து அழுத்தம் கொடுப்பதும்தான் என்ற தெளிவும், இன்றைய இளைஞர்களிடம் இருக்கிறது என்பதை சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 

8p3.jpg

சர்வேயில் கலந்துகொண்ட அரவிந்த் என்கிற இளைஞர், “நாங்கள் அரசுடன் உரையாட விரும்புகிறோம். அரசியல் கட்சிகளும் தலைவர்களும் திட்டங்கள், தமிழகத்தின் அடுத்தடுத்த இலக்குகள் குறித்து எல்லாம் இளைஞர்களோடு விவாதிக்க வேண்டும். ஆனால், இங்கே இருக்கும் தலைவர்களுக்குத் தங்களின் கட்சிப் பிரச்னைகளைத் தீர்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. இடதுசாரிகளும் காலத்துக்கு ஏற்றாற்போல நவீனமாகாமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஓர் அரசியல் வெற்றிடம் இருக்கிறது” என்கிறார்.

``தமிழக அரசியல்வாதிகளில் யாரை நீங்கள் தலைவராக நினைக்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு 44.4 சதவிகிதம் பேர் ``யாருக்கும் ஆதரவு இல்லை’’ என்றே சொல்லியிருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு 16.75 சதவிகித இளைஞர்களின் ஆதரவு இருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இவருக்கு 12.91 சதவிகித இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது.

8p4.jpg

`` `நமக்கு நாமே’ என ஸ்டாலின் ஊர்ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தாலும், அவர் மக்கள் நம்பிக்கையைப் பெற இன்னும் உழைக்க வேண்டும்’’ என்கிறார்கள் இளைஞர்கள்.

``தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சிக்குள்ளும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் அவரை மீறித்தான் கட்சியின் மற்ற தலைவர்களும், கட்சிக்காரர்களும் செயல்படுகிறார்கள்'’ என்பது இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

8p5.jpg

பன்னீர்செல்வம் குறித்து பேசுகையில், ``அவர் தவறுகள் பல செய்திருக்கிறார். அ.தி.மு.க அரசின் தவறுகளில் அவருக்கும் பங்கு இருக்கிறது. முதலமைச்சர் பதவியைத் தன்னிடமிருந்து பறித்த பிறகே, சசிகலாவுக்கு எதிராகப் பொங்குகிறார் என்பதையெல்லாம் நாங்களும் புரிந்துவைத்திருக்கிறோம். அதேநேரம் மக்கள் எளிதாகச் சந்திக்கக்கூடிய மனிதராக இருக்கிறார். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு, பா.ஜ.க-வின் கைப்பிள்ளையாக இருக்கக் கூடாது’’ என்பது இளைஞர்களின் குரல்.

வாக்குவங்கி அரசியலைக் கடந்து, ஒருசமயம் நம்பிக்கையான களச்செயற்பாட்டாளராகப் பார்க்கப்பட்ட வைகோவின் இமேஜ் முற்றிலுமாகச் சரிந்திருக்கிறது. நாம் சந்தித்த 11,472 பேரில் 107 பேர் மட்டுமே வைகோவுக்கு ஆதரவு அளித்தார்கள்.

``ஒருகாலத்தில் எங்களின் பெரும் நம்பிக்கையாளராக வைகோ இருந்தார். ஆனால், இப்போது சசிகலாவுக்குத் துதிபாடுவது, மிகவும் உணர்ச்சிவயப்பட்டு மேடைகளிலும், மீடியாவிலும் முழங்குவது என தாம் எந்தத் திசையில் பயணிக்கிறோம் எனத் தெரியாமல் தடுமாறுகிறார். அவரும் குழம்பி, எங்களையும் குழப்புகிறார். அவர் வாக்குவங்கி அரசியலிலிருந்து வெளியேறி, முழுநேரக் களச் செயற்பாட்டாளராக மாற வேண்டும். இல்லை எனில், அரசியல் வரலாற்றிலிருந்து  தன் பங்களிப்புப் பக்கங்களைத் தானே கிழித்தவராக மாறிவிடுவார்” என்கிறார் கோவையைச் சேர்ந்த நவீன்.

சீமான் குறித்தும் இதேபோன்ற கருத்தைத்தான் இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். “சீமான் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படும் தலைவராக மட்டுமே இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. மக்கள் நலன்சார்ந்த விஷயங்களில் அவர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்” என்கிறார் சேலம் சுந்தர்.

``அரசியல் என்பது தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே அல்ல என்பதை, யாராவது விஜயகாந்துக்கு உணர்த்துங்கள். அவர் தேர்தல்காலத் தலைவர்’’ என்பது விஜயகாந்த் குறித்த இளைஞர்களின் விமர்சனம்.

அன்புமணி தன்னை எல்லாருக்குமான தலைவராக முன்னிறுத்த பல முயற்சிகள் எடுத்தாலும், பெருவாரியான மக்கள் அவரை இன்னும் நம்பத் தயாராக இல்லை. தர்மபுரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, ``பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாகி ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், அவர் இன்னும் நத்தம் காலனியின் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க வில்லை. அவரை எப்படி எல்லோருக்குமான தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

8p8.jpg

திருமாவளவனையும் எதிர்வினையாற்றும் தலைவராகத்தான் இளைஞர்கள் பார்க்கிறார்கள். “சமூகப் பிரச்னை எழும்போதெல்லாம் திருமாவளவனின் குரல் உரக்கக் கேட்கிறது. ஆனால், அது மட்டுமே ஒரு மக்கள் தலைவருக்குப் போதுமா? மாற்று அரசியல் கொள்கையையும், அதற்கான செயல்திட்டங்களையும் முன்வைத்து எங்களின் நம்பிக்கையைப் பெற வேண்டாமா?” எனக் கேட்கிறது இளைய தலைமுறை.

அண்மையில் எம்.ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கிய தீபா குறித்து நம்மிடம் பேசிய இளைஞர்கள், “எந்த ஓர் இலக்கும் திட்டமும் இல்லாமல் இருக்கிறார் தீபா. எதுகுறித்து கேள்வி எழுப்பினாலும், `விரைவில் இது குறித்து விளக்கமான அறிக்கை வரும்' என்கிறார். அறிக்கையும் வரவில்லை. போராட்டக் களங்களிலும் தென்படுவது இல்லை. சுயநல அரசியலின் புதுவரவு தீபா. அவரைப் பொருட்படுத்த வேண்டியது இல்லை’’ என்கிறார்கள்.

அதேநேரம், தீபாவுக்கு இருக்கும் குறைந்தபட்ச ஆதரவுகூட தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. சசிகலா, டி.டி.வி.தினகரனையும் இளைஞர்கள் முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்.

8p6.jpg

8p7.jpg

8p9.jpg

8p10.jpg

`‘இளைஞர்கள் புதிதாக  ஒரு கட்சி தொடங்க அவசியம் இருக்கிறதா?’’ என்று நாம் முன்வைத்த கேள்விக்கு,  சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் அளித்த பதில் அவ்வளவு தெளிவு.

“புதிய கட்சி தேவைதான். அதேநேரம் இருக்கிற அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்காமல் நம் இளைஞர்கள் அதில் இணைந்து செயற்குழு, பொதுக்குழு அளவுக்கு முன்னேறி, அவற்றைக் கைப்பற்ற வேண்டும். மக்களுக்கான அறம்சார்ந்த கட்சிகளாக அவற்றை மாற்ற வேண்டும். இது நீண்டகாலச் செயல்திட்டம். ஆனால், அத்தியாவசியமான ஒன்று” என ஒரு திட்டத் தையும் முன்வைக்கிறார் சிவக்குமார்.

இளைஞர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். கட்சிகளும் தலைவர்களும் அவர்களின் கருத்துக்குச் செவிசாய்த்து, அவர்களுடன் உரையாடத் தயாராக வேண்டும். இல்லையென்றால், தலைவர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். வெகுவிரைவில் அவர்கள் அரசியல் களத்திலிருந்து துடைத்தெறியப்படுவார்கள் என்பதைத்தான் இந்தச் சர்வே உணர்த்துகிறது!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.